Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டி மாபியாக்களினால் பறிபோன வர்த்தகரின் உயிர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட்டி மாபியாக்களினால் பறிபோன வர்த்தகரின் உயிர்

sakthi-696x522.jpg

 

மட்டக்களப்பு செங்கலடி நகரில் உள்ள பிரபல வர்த்தகரான ராஜன் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செங்கலடி சக்தி ஸ்டோர்ஸ் முதலாலியான இவர் கடந்த 1990 ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்திற்கு வருகை தந்து பல சிறிய சில்லறை கடை வர்த்தகர்களை உருவாக்கி உதவி செய்தவரின் தற்கொலை செங்கலடி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகுந்த கடன் காரணமாக தன்னிடம் இருந்த மூன்று கடைகள் மற்றும் வீடு என்பவற்றை விற்பனை செய்த அவர் தான் விற்பனை செய்த வீட்டில் இருந்து இரவு முழுவதும் பொருட்களை ஏற்றியவர் இரவு வீடு செல்லாது இருந்துள்ளார்.

இன்நிலையில் காலை வீட்டின் பின்புறம் வேலைக்கு சென்றவர்கள் கதவை திறந்த போது கடையின் பின்புற அரையிறுதியில் தூக்கில் தொங்கி நிலையில் அவரது சடலத்தை கண்டு ஏறாவூர் பொலீசாருக்கு அறிவித்துள்ளனர்.

வட்டி மாபியாக்களினால் கடனுக்கு மேல் கடன் சுமையில் வீழ்த்தப்பட்ட இவருக்கு சுமார் ஐந்து கோடிக்கு மேல் இருந்த கடனை அடைப்பதற்காக தான் 30 வருடங்களாக சேர்ந்த சொத்து கடைகள் வீடு என்பவற்றை விற்பனை செய்துள்ளார்.

இதன் தாக்கமே அவரை தற்கொலைக்கு தூண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

செங்கலடி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் காணப்படும் வட்டிக்கு பணம் வேண்டுதல் அதனை அடைப்பதற்கு  வங்கியில் சொத்துக்களை வைத்து கடன் பெறுதல் என கடனுக்கு கடன் வாங்கியே பல வர்த்தகர்கள் செங்கலடி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

வட்டி மாபியாக்கள் மிகவும் திட்டமிட்டு வட்டிக்கு பணம் கொடுத்து இவ்வாறு பல வர்த்தகர்களை இல்லாமல் செய்துள்ளனர்.

வட்டிக்கு பணம் வாங்கிய பல வர்த்தகர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பல வர்த்தகர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டனர். எனவே வர்த்தகர்கள் இனியாவது இந்த வட்டி மாபியாக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செங்கலடி சக்தி ஸ்டோர் முதலாளி  மரணம் நடந்து என்ன?

rajan.jpgவங்கிகளில் வட்டிக்குப் பெறப்பட்ட பணத்தை விட பலமடங்கு வட்டியுடன் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட, தனது குடியிருந்த வீட்டையும், கடைத்தொகுதியையும் விற்று தனியார் வங்கியொன்றுக்கு பணத்தை செலுத்தியிருக்கிறார்.

75 லட்சம் ரூபா வங்கியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, 03 கோடியே 20 லெட்சம் ரூபா தனது சொத்துக்களை விற்று செலுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் மற்றுமொரு நிறுவனத்தில் வட்டிக்கு பெறப்பட்ட 75 லட்சத்துக்கும் மாதாந்தம் கட்டி வந்த தொகையைவிட இருமடங்கு கட்டிவரவேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தியதால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில், ஏற்கனவே விற்கப்பட்ட கடைத்தொகுதியின் பின்புறமாகவுள்ள ஸ்டோர் அறையின் வளையில் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி (27/08) மரணித்துள்ளார்..

விற்கப்பட்ட கடையை, வாங்கிய முதலாளி ஓடாவி மேசன்மார்களை வைத்து திருத்த வேலைகளை செய்துவருவதால், இன்று காலை திருத்த வேலைகளுக்காக வந்த ஒடாவி ஒருத்தரே ஸ்டோர் அறைக்கு சென்றபோது, .இவர் தூக்கிட்டிருப்பதை அடையாளம்கண்டு, அவரது மனைவிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.

பின்னர் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, கௌரவ நீதிபதியின் உத்தரவுக்கமைய, பிரதேச மரண விசாரனை அதிகாரி MSM நஸீர், தடயவியல் பொலிசாரின் வருகையோடு சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

http://www.ilakku.org/வட்டி-மாபியாக்களினால்-பற/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

75 லட்சம் ரூபா வங்கியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, 03 கோடியே 20 லெட்சம் ரூபா தனது சொத்துக்களை விற்று செலுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் மற்றுமொரு நிறுவனத்தில் வட்டிக்கு பெறப்பட்ட 75 லட்சத்துக்கும் மாதாந்தம் கட்டி வந்த தொகையைவிட இருமடங்கு கட்டிவரவேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தியதால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில், ஏற்கனவே விற்கப்பட்ட கடைத்தொகுதியின் பின்புறமாகவுள்ள ஸ்டோர் அறையின் வளையில் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி (27/08) மரணித்துள்ளார்..

வங்கிகள் என்பது சட்ட நியாயாதிகமும், வலுவும் அளிக்கப்பட்ட பண்பான கொள்ளைக்காரர்கள்.    

ஆனால், வங்கியில் மில்லியன் இல் கடன் வாங்கினால், அது வங்கியின் பிரச்சனை, கடன் வாங்கியவரின் பிரச்னை இல்லை பொறுப்பு கடன் வாங்கியவராயினும்.

வங்கிகள் செய்தது, psychological அழுத்தம். அநேகமாக, சட்ட விரோதமாகவே இருக்கும். 

இவர் உயிர் வாழ்வதே வங்கிகளுக்கு பிடி என்பது இவருக்கு தெரியவில்லை. ஆனால், அதற்கு சட்ட அறிவு தேவை.  

மற்றது, வணிக கடன் வாங்கும் போது, இப்படியனவர்கள் சட்டம் , மற்றும் நிதி  ஆலோசனை  இல்லாமல் எடுப்பதே  இயல்பு. இது இங்கு மேலை நாடுகளிலும் இயல்பாக நடக்கிறது.
 
இப்படி வசதி உள்ளவருக்கே கடன் பிரச்சனை என்றால், இது ஓர் வியாபார சேவை மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

அதாவது, debt counselling என்ற சேவையை ஆரம்பிப்பது.

வியாபார மற்றும் நுகர்வு  கடன் சட்ட அறிவும் மற்றும் இருக்கும் ஏனைய பொது சட்டங்களை கொண்டு எவ்வாறு கடன் சுமையை குறைப்பது, பிற்போடுவது, இருப்பதை இழக்கும்  நிலையலானும் அடிப்படை தேவைகளை (வீடு, மற்றும் தொழில்  போன்றவைகள்), உரிமத்தை கொடுத்துவிட்டு,  அவர் வாழும் வரைக்கும் வைத்திருக்கும்  (வாடகை அடைப்படையில் அல்லது amortization அடிப்படையில்) வகை செய்வது போன்றவைகள்.

இதற்கு, debt counselling,  இன்னும் சட்டங்களும் தேவை, அவற்றை கொண்டு வருவதற்கு lobby மற்றும் pressure groups, சட்ட ஆலோசனையுடன் அமைத்து அழுத்தம் வழங்குதல்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

வட்டிக்கு பணம் வாங்கிய பல வர்த்தகர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

  1. முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.
  2. வட்டிக்கு கடன் வாங்காமல் தவிர்க்க வணிகர்கள் பங்குதாரர்களை சேர்க்கின்றனர். இலாபமானாலும் நட்டமானாலும் எல்லோருக்கும் அதில் பங்கு. ஆனால் வணிகத்தை மனம் போனபடி ஒருவரே செய்து கொள்ள முடியாது. பங்குதாரர்களின் ஆலோசனையை புறக்கணித்து வணிகம் இந்த முதலாளியினது போல நட்டத்தில் ஓட முதலே பங்குதாரர்கள் முதலாளியை மாற்றிவிடுவர். 
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கற்பகதரு said:

முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.

இது முஸ்லிமாக இருக்க வேண்டும் வட்டி இல்லாமல் கடன் பெறுவதற்கு. அது ஷரியா சட்டப்படி வட்டி வாங்குவது மதத்துக்கு விரோதம் எனும் நம்பிக்கை அடிப்படையில். 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கற்பகதரு said:
  1. முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.
  2. வட்டிக்கு கடன் வாங்காமல் தவிர்க்க வணிகர்கள் பங்குதாரர்களை சேர்க்கின்றனர். இலாபமானாலும் நட்டமானாலும் எல்லோருக்கும் அதில் பங்கு. ஆனால் வணிகத்தை மனம் போனபடி ஒருவரே செய்து கொள்ள முடியாது. பங்குதாரர்களின் ஆலோசனையை புறக்கணித்து வணிகம் இந்த முதலாளியினது போல நட்டத்தில் ஓட முதலே பங்குதாரர்கள் முதலாளியை மாற்றிவிடுவர். 

ஐயா கற்பகம், மட்டக்களப்பில் முசுலிம் வங்கியில் கணக்கு திறக்கவே முசுலிம் ஆக இருக்க வேண்டும்...

இந்த வட்டி மாபியாக்களின் பின்னணி யார்??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:
  1. முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.
  2. வட்டிக்கு கடன் வாங்காமல் தவிர்க்க வணிகர்கள் பங்குதாரர்களை சேர்க்கின்றனர். இலாபமானாலும் நட்டமானாலும் எல்லோருக்கும் அதில் பங்கு. ஆனால் வணிகத்தை மனம் போனபடி ஒருவரே செய்து கொள்ள முடியாது. பங்குதாரர்களின் ஆலோசனையை புறக்கணித்து வணிகம் இந்த முதலாளியினது போல நட்டத்தில் ஓட முதலே பங்குதாரர்கள் முதலாளியை மாற்றிவிடுவர். 

 

5 hours ago, Kadancha said:

இது முஸ்லிமாக இருக்க வேண்டும் வட்டி இல்லாமல் கடன் பெறுவதற்கு. அது ஷரியா சட்டப்படி வட்டி வாங்குவது மதத்துக்கு விரோதம் எனும் நம்பிக்கை அடிப்படையில். 

தமிழர் வட்டி வாங்காமல் கடன் கொடுக்க மாட்டார்களா? 

4 hours ago, MEERA said:

ஐயா கற்பகம், மட்டக்களப்பில் முசுலிம் வங்கியில் கணக்கு திறக்கவே முசுலிம் ஆக இருக்க வேண்டும்...

இப்படியான வட்டி  வாங்காத தமிழ் வங்கிகளை ஏன் தமிழர் வைத்திருக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

அல்லஹாக்கு குல்லா போடுற கதை தெரியுமோ?

வெளியாலதான் வட்டி இல்லா இஸ்லாமிய வங்கி என்று கதை- உள்ள போனால், மாதாந்த சேவை கட்டணம், லாபத்தில் பங்கு அல்லது இது போன்ற பெயரில் வட்டிக்கு நிகரான பணத்தை கறந்துவிட்டுத்தான் விடுவார்கள்.

வட்டி இல்லாமல் வங்கி நடத்தேலுமே.

Edited by goshan_che

7 hours ago, goshan_che said:

அல்லஹாக்கு குல்லா போடுற கதை தெரியுமோ?

வெளியாலதான் வட்டி இல்லா இஸ்லாமிய வங்கி என்று கதை- உள்ள போனால், மாதாந்த சேவை கட்டணம், லாபத்தில் பங்கு அல்லது இது போன்ற பெயரில் வட்டிக்கு நிகரான பணத்தை கறந்துவிட்டுத்தான் விடுவார்கள்.

வட்டி இல்லாமல் வங்கி நடத்தேலுமே.

அதான் 😊😊. இந்த வட்டி இல்லா கதையெல்லாம் யதார்த்தம் மீறியது. வட்டி இல்லாமல் வங்கி நடத்துவதானால் பணம் எனற விடயத்தை பயன் படுத்தாமல் பண்டமாற்று முறைக்கு தான் போக வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வங்கியில் கடன் எடுத்து இவ்வாறு கடனில் மூழ்கினார் என்பதை நம்பமுடியவில்லை. வங்கியில் கடன் கிடைக்காமல் வறுமையில் வாழும் அல்லது அதனால் தற்கொலை செய்த குடும்பங்கள் எத்தனையோ. இவர் அளவுக்கு மீறி பல இடங்களிலும் காலை அகல விரித்து வைத்து அகப்பட்டு இருக்கிறார். அனுதாபப்படுவதை விட மற்றவர்களுக்கு பாடமாக தான் பார்க்கணும். 

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.