Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

20வது திருத்தத்துக்கு எதிராக சம்பந்தனும் மனு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Rajavarothayam-Sampanthan-Opposition-Lea

20வது அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்பியும் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் இதுவரை ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி மேலும் கொள்கை மாற்றங்களுக்கான மையம் சார்பில் பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி நாகந்த கொடித்துவக்கு, அனில் காரியவசம் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

https://newuthayan.com/20வது-திருத்தத்துக்கு-எதி-2/

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்..... 🤥

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்..... 🤥

இதுக்குப்பிறகும் மனுஷன் படுத்திருக்குமா? தலீவ......ர்ர்ர்       

5 hours ago, Kapithan said:

நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்..... 🤥

குறைந்த பட்ச்சம் எதிப்பு மனு தாக்கல் செய்ததே பெரிய காரியம் என்று இருக்கவேண்டியதுதான். என்ன வாதங்கள் மனுவில் உள்ளன என்ற விபரங்களை பத்திரிகை துறை வினவி எழுதினால் எமக்கு பயன் தரும். கட்டாயமாக இந்த மனு இலங்கையின் போலி ஜநாயக கட்டமைப்புகளை வெளிக்கொணர தொடரும் முயறசிகளுக்கு பலம் சேர்க்கவேண்டும். எமது நீண்டகால நலன்களுக்கு இது மிக முக்கியமானது.

ஐயா காணும் ஐயா, ஒதுங்கிவிடுங்கள், நிம்மதியா சாமியை கும்பிட்டமா பேரபிள்ளைகளுடன் விளையாடினமா என்று காலத்தை கழியுங்கள், நிம்மதி எங்களுக்கு

எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளி ஒரு யாப்பை அரசால் உருவாக்க முடியாது: சுமந்திரன் நேர்காணல் – காணொளி

 

  • கருத்துக்கள உறவுகள்

20 வது திருத்தத்துக்கு எதிராக நாடாளாவிய ரீதியில் பாரிய போராட்டம்; ராஜித சேனாரட்ண

20வது திருத்தத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் இணைந்து பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

மாதுளவாவே சோபித தேரரின் சிலைக்கு முன்னாள் உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சி 20வது திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஓக்டோபர் ஐந்தாம் திகதி நாடாளவியரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் கறுப்புகொடி ஏற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் 20வது திருத்தம் குறித்து மக்களுக்கு துண்டுபிரசுரத்தை விநியோகிக்கும் நடவடிக்கையும் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளாவியரீதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ள என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.ilakku.org/20-வது-திருத்தத்துக்கு-எதி/

20’ க்கு திருத்தங்களை அரசாங்கம் முன்வைக்கும்; சட்டமா அதிபர் தெரிவிப்பு

 

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு சில திருத்தங்களை முன்வைக்கவுள்ளது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குழு நிலை விவாதத்தின்போது அந்தத் திருத்தங்களை முன் வைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. 20ஆவது திருத்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனுக்கள் நேற்று உயர்நீதிமன் றத்தில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டபோதே சட்டமா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று 7 மனுக்கள் மாத்திரமே ஆராயப்பட்டுள்ளன. மற்றைய மனுக்கள் இன்று ஆராயப்படவுள்ளன.

http://www.ilakku.org/20-ஆவது-திருத்தத்துக்கு-தி/

மக்களின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணையவேண்டிய தருணம் வந்துள்ளது- ரஞ்சித் மத்துபண்டார

20வது திருத்தத்தின் மூலம் அரசாங்கம்ஜனநாயகத்தினை குழப்புவதற்கு முயல்கின்றது என ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மக்களின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணையவேண்டிய தருணம் வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

20th-Amendment-300x153-1.jpg
20வது திருத்தம் பெற்றோர்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை போல உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நீதியமைச்சர் பிரதமர் அமைச்சர்களுககு கூட தெரியாமல் அதனை உருவாக்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியையும் அரசாங்கத்தினையும் சர்வாதிகாரிகளாக மாற்றும் நோக்கத்துடனேயே 20வது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது என ரஞ்சித்மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மக்களின் இறைமை நாடாளுமன்றத்தின் ஊடாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது தற்போது மக்களின் இறைமை அழிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளை கருத்தில்கொள்ளாமல் முடியாட்சியை ஏற்படுத்த 20வது திருத்தம் முயல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

https://thinakkural.lk/article/74540

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.