Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்பல்கலைகழத்தில் பதற்றம் பொலிஸார் குவிப்பு

Featured Replies

யாழ்பல்கலைகழத்தில் பதற்றம் பொலிஸார் குவிப்பு

யாழ் பல்கலைகழகத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்டமுறுகல் நிலையை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது,


பல்கலைகழக வாயிலில் கறுப்புடையணிந்த மாணவர்கள்காணப்பட்டவேளை காவல்துறையினர் அவர்களை உள்ளே செல்லுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்தே முறுகல் நிலை உருவானது.


மேலதிக காவல்துறையினர் அப்பகுதிக்கு அழைக்கப்பட்ட நிலையில் மேலும் குழப்பமான நிலை உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து இராணுவத்தினரும்அப்பகுதிக்கு விரைந்துள்ளதை தொடர்ந்து பதட்டமான சூழல்உருவாகியுள்ளது.


யாழ்பல்கலைகழக மாணவர்கள் இன்று திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://thinakkural.lk/article/72095

 

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸ், இராணுவம் குவிப்பு!

uni.jpg?189db0&189db0

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக திடீரென பொலிஸாரும், இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்கு உள்ளே செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தயுள்ளனர். எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, பெருமளவு பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பல்கலைகழகத்தில் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் பொலிஸார் பல்கலைகழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் மாணவர்கள் இன்று பகல் பல்கலைகழக நுழைவாயிலில் ஒன்று கூடியிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக...
25.09.2020.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:
யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக...

தமிழ் மாணவர்களுடன் இணைந்து... சிங்கள மாணவர்களும்,
காவல் துறையினருடன், வாதாடுகின்றார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் மாணவர்களுடன் இணைந்து... சிங்கள மாணவர்களும்,
காவல் துறையினருடன், வாதாடுகின்றார்கள் போலுள்ளது.

அடக்குமுறை இனப்பாகுபாடு காட்டுவதில்லை. அதற்கெதிரான போராட்டமும் இனப்பாகுபாகுபாட்டை கடந்து மேலெழும்போது வெற்றிபெறும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த மினிசுவின் தூண்டுதலால் இதை இவர்கள் செய்த்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்...படிச்சமா பட்டம் வாங்கினமா புலம்பெயர்ந்தமா என்று இருக்காமல் ...தேசிய ஒற்றுமைக்கும் தேசியபாதுக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் இவர்கள்( மாணவர்கள்) நடந்து கொண்டமை மிகவும் கவலையளிக்கின்றது....
பு.சி.த .சங்க தலைவர்..

40 வருடங்களுக்கு முன்பு பாடசாலைகள்,பல்கலை கழகங்கள் முன்பு இதே போல நடைபெற்றது நினைவில் வருகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் அரசியல் செய்வதும், ஜனநாயகம் பேசுவதும் நாட்டுக்கு கிடைத்த துரதிஷ்டம். பேச்சு சுதந்திரம், கூட்டங்கள் கூடும், அமைக்கும் உரிமை, சுதந்தரமாக நடமாடும் உரிமை போன்றவற்றை பறித்து, உண்மைகளை மறைத்து, அடிமைகளாக மக்களை மேய்த்துக்கொண்டு சுதந்திர நாடாம், ஜனநாயகம் பூத்துக்குலுங்குதாம். யுனிசெவ் பாராட்டி, கௌரவிக்குதாம். இது ஒன்று போதும், அந்த நிறுவனம் எப்படியான கொள்கை உடையது என்று விளங்கிக்  கொள்வதற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இராணுவத்தினர்

 51 Views

யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடிய மாணவர்கள் சிலரை இராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதால் குறித்த இடத்தில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,

இன்று காலை மாணவர் ஒருவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு 5 மாணவர்கள் பல்கலை முன்றலில் ஒன்று கூடியுள்ளனர். அப்போது அங்கு வந்த இரு காவல்துறை உறுப்பினர்கள் இந்த இடத்தில் நிற்க வேண்டாம் என கூறி மாணவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

அப்போ அங்கு வந்த இராணுவத்தினர் துப்பாக்கியை மாணவர்களை நோக்கி நீட்டி “நீங்கள் புலிகள் இங்கு எந்த நிகழ்வும் கொண்டாட முடியாது“ என தெரிவித்ததுடன்  அவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் அங்கு ஒன்றுகூடியதை தொடர்ந்து அப் பகுதியில்  காவல்துறையினர்  மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

மேலும் பல்கலைக்கழக பகுதியில் இருந்து காவல்துறை மற்றும் இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என மாணவர்கள் தெரிவித்த நிலையில், மாணவர்களை உள்ளே செல்லுமாறு காவல்துறையினர் மிரட்டும் தொணியில் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வழமையாக தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை நீதிமன்ற தடை உத்தரவை மதித்து நாம் அந்த நினைவு நாளை நினைவு கூரவில்லை என்றும் ஆனால்  எம் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி எம்மை விரக்தியடைய வைப்பது கண்டிக்கத்தக்கது எஎனவும்  மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

http://www.ilakku.org/university-of-jaffna-polis-tension/

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

அடக்குமுறை இனப்பாகுபாடு காட்டுவதில்லை. அதற்கெதிரான போராட்டமும் இனப்பாகுபாகுபாட்டை கடந்து மேலெழும்போது வெற்றிபெறும்.

நன்றி... கற்பகதரு. :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத் துறைகளிலும் இராணுவத்தினரை நியமித்தாயிற்று, இப்போ மாணவரை வம்புக்கிழுத்து பல்கலைக்கழகத்திற்குள்ளும்  இராணுவத்தினரை புகுத்தி தமிழரின் கல்வி முன்னிலையை தகர்த்து 
 இளைஞரிடையே விரக்தியை ஏற்படுத்தி முட்டாள் சமூகமாக உருவாக்க திட்டமிட்டு செயற்படுகிறார்கள். நீதிமன்றம் சரியாக இந்த வழக்கை கையாண்டிருந்தால் அடக்கி வாசித்திருப்பார்கள். ஆனால் நீதியை நிலைநாட்ட நம் நீதியரசர்கள் தவறியது மட்டுமல்ல, காட்டுச் சட்டத்திற்கு துணை போயுள்ளார்கள். இன்று இந்த விவகாரம்  நீதிமன்றத்திற்கு போயிருந்தால், மாணவர்களுக்கு எதிராகவே தீர்ப்பளித்திருப்பார் யாழ் நீதிமன்றில் வீற்றிருப்பவர். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, satan said:

எல்லாத் துறைகளிலும் இராணுவத்தினரை நியமித்தாயிற்று, இப்போ மாணவரை வம்புக்கிழுத்து பல்கலைக்கழகத்திற்குள்ளும்  இராணுவத்தினரை புகுத்தி தமிழரின் கல்வி முன்னிலையை தகர்த்து 
 இளைஞரிடையே விரக்தியை ஏற்படுத்தி முட்டாள் சமூகமாக உருவாக்க திட்டமிட்டு செயற்படுகிறார்கள். நீதிமன்றம் சரியாக இந்த வழக்கை கையாண்டிருந்தால் அடக்கி வாசித்திருப்பார்கள். ஆனால் நீதியை நிலைநாட்ட நம் நீதியரசர்கள் தவறியது மட்டுமல்ல, காட்டுச் சட்டத்திற்கு துணை போயுள்ளார்கள். இன்று இந்த விவகாரம்  நீதிமன்றத்திற்கு போயிருந்தால், மாணவர்களுக்கு எதிராகவே தீர்ப்பளித்திருப்பார் யாழ் நீதிமன்றில் வீற்றிருப்பவர். 

கோத்தாதான் தலைமை நீதிபதி, கோத்தா  வைத்ததுதான் சட்டம் தீர்ப்பு, இனி இதுதான் இலங்கையின் ஏதிர்காலம்

17 hours ago, கற்பகதரு said:

அடக்குமுறை இனப்பாகுபாடு காட்டுவதில்லை. அதற்கெதிரான போராட்டமும் இனப்பாகுபாகுபாட்டை கடந்து மேலெழும்போது வெற்றிபெறும்.

களனி ஆற்றில் இனியும் இரத்த ஆறு ஓட வேண்டாமே, தமிழருக்கு செய்த அத்தனை அட்டூழியங்களும் தம்மினத்துக்கே செய்த காடையர்கள்தான் இந்த சிங்கள இனம். எந்த எல்லைக்கும் போக க் கூடிய ஒரு கீழான இனம். இவர்களின் பெளத்த பிக்குகளை பார்க்க தெரியவில்லையா

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

கோத்தாதான் தலைமை நீதிபதி, கோத்தா  வைத்ததுதான் சட்டம் தீர்ப்பு, இனி இதுதான் இலங்கையின் ஏதிர்காலம்

 ஒரு நல்ல தலைவன்; மக்கள் தங்களுடைய வெற்றியை அடைய, அவர்களுக்கு உதவுவார்கள். அதேநேரம் ஒரு சர்வாதிகாரி; தன் குறிக்கோளை தான் அடைய, தன் கொள்கைகளை மக்கள் மேல் சுமத்துவான். தன் சுயநலத்தை மக்கள் கண்டிபிடிக்காமல் இருப்பதற்காக, அவர்களிடையே பிளவுகளையும், சச்சரவுகளையும் ஏற்படுத்தி, அதை கண்டும் காணாமலும் இருப்பான். அவனது தொண்டர்களும் அவ்வாறே இருப்பர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.