Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ததேகூ இல் இருந்து வெளியேறியவர்கள் சின்ன சின்னக் கட்சிகளை உருவாக்கினாலும்  தேர்தலில் கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவார்கள் ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பாரென கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது பெயர்கள் பிரேரரிக்கப்பட்ட நிலையில், முரண்பாடுகள் ஏற்பட்டமை காரணமாக பேச்சாளர் தெரிவு நேற்றைய தினம் நடைபெறவில்லை என கூறப்படுகின்றது.

பேச்சாளர் தெரிவு காலவரையறையின்றி ஒத்திவைக்கப் பட்டிருப்பதால் எம்.ஏ.சுமந்திரனே அதுவரை தொடர்ந்தும் பேச்சாளராகச் செயற்படுவார் என கூறப்படுகின்றது.

எனினும், கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சுமந்திரன் தனது பேச்சாளர் பதவியினை இராஜினாமா செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-10/

############   ############   ##############  ###########  ##########

 🇸 🇭 🇪 🇮 🇰 🇳 🇪 🇭 🇷 🇺 on Twitter: "வருங்கால ஜனாதிபதி நயன்தாரா  வாழ்க.. வாழ்க.. https://t.co/tVQetNR1lw"

வாழ்நாள் தலைவர், சம்பந்தன் ஐயா.... வாழ்க.

Edited by தமிழ் சிறி

நல்லது. உங்கள் பிரச்சனையையே உங்களால் தீர்க்கமுடியாதவிடத்து தமிழரின் பிரச்சனையை தீர்க்க நீங்கள் முயல்வது மிகப்பெரிய நகைப்பிடிக்குரிய விடயம். 😁

உங்களது மாறாத செயல்பாடுகளால் உங்களையும் தொடர்ந்து உங்களை நம்பி வாக்களித்தவர்களையும் அழித்துக்கொண்டு நீங்கள் மற்றவர்கள் மீது பழிபோடுவது அயோக்கியத்தனம்.

சாகும்வரை தலைமை கதிரை அதட்குள் ராஜபக்சக்கள் அரசியலமைப்பை திருத்தி அதேகனவை நிறைவேற்ற முயல்வதை கண்டு நீங்கள் கொதித்தெழுவது சுத்த பாசாங்குத்தனம் (pure hypocrisy). அவர்களுக்கும் அது தெரியும்.அதனால் தான் அவர்கள் உங்களை கணக்கிலும் எடுப்பதில்லை. 

அதுசரி எப்பவாம் புதுசா வேண்டின பிரெஞ்சு Rafale போர் விமானத்தில வந்திறங்கப்போகினம்?

Indien Ambala | Indisch-französische Fighter Jets | Air Force Station

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தலைமைகளுடன் பேசியே அடுத்த கட்ட தீர்மானம் – மாவையிடம் நேரில் வலியுறுத்தினார் சம்பந்தன்.

N_4b4be476-5image_story.png

தமிழ் மக்களின் பொது விடயங்களுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் தவறு இல்லை. அதற்கும் அப்பால் கட்சி ரீதியான முடிவுகளுக்குக் கூட்டமைப்பின் தலைமைகளுடன் பேசிய பின்பே அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் .

நேற்றுப் பகல் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இரவு சம்பந்தனின் இல்லத்தில் இடம் பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், யாழ்ப்பாணத்தில் கூடும் 10 தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பினார். அதில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அது தொடர்பான நிலைப்பாடுகள் குறித்த கேள்விகளை அடுக்கினார்.

இதன் போது கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதனின் விடயத்தை ஆமோதித்து உரையாற்றினார்.

குறித்த விடயத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா, “தற்போது நாட்டிலுள்ள நெருக்கடிகள் மற்றும் தமிழ் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்காக உருவான அமைப்பே 10 தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டணி” என்று பதிலளித்தார்.

“தமிழ் மக்களின் பொது விடயங்களுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் தவறு இல்லை. அதற்கும் அப்பால் கட்சி ரீதியான – முடிவுகளுக்குக் கூட்டமைப்பின் தலைமைகளுடன் பேசிய பின்பே அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்” – என்று இதன்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தினார்.

https://thamilkural.net/newskural/leadnews/78368/

34 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அதற்கும் அப்பால் கட்சி ரீதியான – முடிவுகளுக்குக் கூட்டமைப்பின் தலைமைகளுடன் பேசிய பின்பே அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்”

உங்களை கூட்டி முடிவெடுக்க முதல் அடுத்த திலீபன் அண்ணரின் உண்ணாவிரதமும் வந்து போய்விடும்!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் தமிழன வரலாற்றில் இடம் பிடிப்பீர்கள் ஐயா - கருணாநிதி மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பாரென கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

தமிழருக்கு விடிவே இல்லையென்று முடிவு பண்ணிவிட்டார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

தமிழருக்கு விடிவே இல்லையென்று முடிவு பண்ணிவிட்டார்கள். 

அவர்களுக்கு மட்டும், விடிவு கிடைத்தால் காணும் என்று நினைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"சங்கூதற வயசுல சங்கீதா .."

memees.php?w=240&img=Z291bmRhbWFuaS9zYW5 

இளைஞர் அணிக்கு வயதை 80 இல் இருந்து 90க்கு எக்ஸ்ரன் பண்ணுங்கப்பா .. எப்போ அவர்கள் எல்லாம் பதவிக்கு வாறாது.? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, உடையார் said:

நீங்களும் தமிழன வரலாற்றில் இடம் பிடிப்பீர்கள் ஐயா - கருணாநிதி மாதிரி

தமிழ்நாட்டு அரசியல் திருந்த ஈழத்தமிழ் அரசியல் தானாக திருந்தும். 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.