Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குகிழக்கை இணைப்பது திராவிடதேசமொன்றிற்கு வழிவகுக்கும் என்பதை இந்தியா உணரவேண்டும்- சரத்வீரசேகர

Featured Replies

வடக்குகிழக்கை இணைப்பது திராவிடதேசமொன்றிற்கு வழிவகுக்கும் என்பதை இந்தியா உணரவேண்டும்- சரத்வீரசேகர

13வது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவதற்கு இந்தியாவிற்கு எந்ததார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைநாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் 13 வது திருத்தம் இந்திய இலங்கை உடன்படிக்கையின் வெளிப்பாடு என அர்த்தப்படுத்தப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

sarath-weerasekara.jpg
இந்தியா தனது கடப்பாடுகளை நிறைவேற்றாததன் காரணமாகஉடன்படிக்கை குறித்த இந்தியாவின் பங்களிப்பு பற்றி கேள்விகள் உள்ளன எனவும் அவர்தெரிவித்துள்ளார்
13வது திருத்தம் இலங்கையின் உள்விவகாரம் என்பதை புறக்கணித்துவி;ட்டு இந்தியபிரதமர் எங்கள் பிரதமரிடம் 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரியிருக்கின்றார் என சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் தனது அரசமைப்பின் 370 பிரிவினை இரத்து செய்தமை குறித்து வெளிநாட்டு அரசாங்கங்கள் இந்திய அரசாங்கத்தினை கண்டித்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினைக்குரிய காஸ்மீர் பிராந்தியத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை இரத்துசெய்தமை குறித்து வெளிநாட்டுஅரசாங்கங்கள் இந்திய அரசாங்கத்தின் மீதுகுற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில் இது பற்றி கருத்து கூறுமாறு கோரப்பட்டவேளை எங்கள்பிரதமர் அது உள்நாட்டு விவகாரம் என தெரிவித்துள்ளார் என சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

mahinda-modi.jpg
13வது திருத்தம் இந்தியாவின் உள்விவகாரம் என்பதை தெரிந்துவைத்துள்ள இந்திய பிரதமர் அதனை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளார் என தெரிவித்துள்ள சரத்வீரசேகர இது மகிந்த ராஜபக்ச கடைப்பிடித்த நிலைப்பாட்டிற்கு கைமாறு செய்யும் விதத்தில் அமைந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இலங்கை உடன்படிக்கையின் ஆணைப்படியே மோடி இந்த கோரிக்கையை விடுத்தார் என சிலர் அர்த்தப்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்திய இலங்கை உடன்பாடு குறித்த தனது அர்ப்பணிப்புகளை இந்தியா நேர்மையாக நிறைவேற்றியதா என்ற கேள்வியை எழுப்புகின்றது என தெரிவித்துள்ளார்.
இந்திய இலங்கை உடன்படிக்கையி;ல 13 வது திருத்தம் குறி;;த்து குறிப்பிடப்படவில்லை அது எங்கள் மீதுதிணிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கு இந்த உடன்படிக்கை குறித்து மாற்றுக்கருத்துக்கள் உள்ளன ,உடன்படிக்கை குறித்த தனது கடப்பாட்டை இந்தியா மதித்ததா?இந்திய இலங்கைஉடன்படிக்கையின் படி முன்னர் வடபகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் முஸ்லீம்கள் அங்கு திரும்பி சுதந்திரமாக வாக்களிப்பதற்கான நிலைiயை ஏற்படுத்துவதாக இந்தியா வாக்குறுதியளித்தது,

indo-lanka1.jpg
இந்திய இலங்கை உடன்படிக்கைஅழுத்தத்தின் மத்தியில்கைச்சாத்திடப்பட்டதா அதில் இடம்பெற்றுள்ள விடய ங்கள் இலங்கையின் இறைமைக்கு பாதகமானவையா என்பது குறித்து சந்தேகம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் எங்கள் படையினர் விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வடமராட்சியில் கைதுசெய்யவிருந்த தருணத்தில் இந்தியா எங்கள் வான்வெளியை மீறி யாழ்ப்பாணத்தில் உணவுமருந்தினை போட்டது என அவர்தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்த வடக்குகிழக்கு இணைப்பை இலங்கை நீதிமன்றங்கள் இரத்துச்செய்துவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே இந்த உடன்படிக்கையின் செல்லுபடியாகும் தன்மை குறித்த கேள்வி உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இது செல்லுபடியற்றது என்றால் இந்தியாவிற்கு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட உரிமையில்லை எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின்னர் திராவிடர்களின் பிரிவினை இயக்கமொன்று உருவாகியது என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர ஈவேஆர் பெரியார் நாஜி பாணியில் பிரமாணர்களுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்தார் இதன் காரணமாகவே நேரு இந்தியாவை 28 மொழிவாரி மாநிலங்களாக பிரித்தார் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிலும் ரோம கிரேக்க சாம்ராஜ்யங்களிலும் பிராந்திய அரசுகள் வலுவடைந்த போது சாம்ராஜ்ஜியங்கள் சிதைவடைந்தன என தெரிவித்துள்ள அவர் மொழிவாரி மாநிலங்களும் அரசியல் கட்டமைப்புகளும் பிரிவினைக்கான படிக்கல்லாக அமையும் என அம்பேத்கார் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக வடக்குகிழக்கை இணைப்பதால்அல்லது வடக்கிற்கு சுயநிர்ணய உரிமையை வழங்குவதால் அது திராவிடதேசமொன்றிற்கான படிக்கல்லாக பயன்படுத்தப்படும் என்பதை இந்தியா கருத்தில்கொள்ளவேண்டும்.
அல்லது அவர்கள் தமிழ்நாட்டுடன் இணைந்துகொள்ளக்கூடும் எனவும்அவர்தெரிவித்துள்ளார்.
ஆகவே இலங்கையை 13வது திருத்தத்தின் மூலம் மாகாணங்களாக துண்டாடுவது இந்தியாவின் ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஊக்குவிப்பவர் இறுதியில்பாதிக்கப்படுவார் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/78257

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட தேசமா ..? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திராவிட தேசமா ..? 

கர்நாடகம்,  ஆந்திரம், மலையாளம்,  தமிழ் நாடு,  தமிழ் ஈழம்  எல்லாம் சேர்ந்து....  
ஒரெயொரு  ஜனாதிபதி,  ஒரெயொரு  பிரதமரை... 
தேர்ந்து,  எடுக்கப் போகிறார்கள் என்று.... வீரசேகரா பயப்பிடுகிறார். :grin: 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் வீரசேகர,

இதெல்லாம் நீங்க சொல்லித்தானா மோடி ஜிக்கு தெரியணும்🤣

47 ல வெள்ளைகாரன்கிட்ட இருந்து வாங்கி கொள்ளைகாரன்கிட்ட கொடுக்கும் இந்த சுதந்திரம் வேண்டாம் என்று பெரியார் சொன்னபோதே இந்த ஆபத்தை விளங்கி கொண்டு விட்டது டெல்லி.

அதனால்தான், இப்போ தாம் நியமித்த தகரகர்களை வைத்தே தமிழ்நாட்டில் பிரிவினையும், தமிழ் தேசியமும் பேசுகிறார்கள்.

அதனால்தான் கஸ்மீரில் ஊர்வலம் போன வீதியில் டீ விற்றவன் மீது பாயும் குண்டாஸ் சட்டமும் தேசிய பாதுகாப்பு சட்டமும், தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. முன் ஜாமினே தேவையில்லை எனும் அளவுக்கு.

ஆகவே தமிழ் நாட்டில் பிரிவினையை எப்படி காயடிப்பது என்பது மோடிக்கு நல்லாவே தெரியும்.

இந்த டகால்டி விளையாட்டை இன்னும் தமிழர்களே புரிந்துகொள்ளவில்லை. இதில நீங்க என்னத்த விளங்குறது🤣.

ஆனால் இப்படி பொது வெளியில் பேசுவதை பார்த்தால்- இந்திய அழுத்தம் இல்லாட்டிலும் இவரே கூப்பிட்டு வாங்குவார் போல இருக்கு🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தக் கோருவதற்கு இந்தியாவிற்கு உரிமையும் இல்லை – சரத்வீரசேகர

 

13 வது திருத்தம், இந்திய இலங்கை உடன்படிக்கையின் வெளிப்பாடாக அர்த்தப்படுத்தப்படுகின்றது எனக் கூறிய அமைச்சர் சரத்வீரசேகர, இத் திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவதற்கு இந்தியாவிற்கு உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

“இந்தியா தனது கடப்பாடுகளை நிறைவேற்றாததன் காரணமாக உடன்படிக்கை குறித்த இந்தியாவின் பங்களிப்பு பற்றி கேள்விகள் உள்ளன. 13வது திருத்தம் சிறீலங்காவின் உள்விவகாரம் என்பதை புறக்கணித்துவிட்டு இந்திய பிரதமர் எங்கள் பிரதமரிடம் 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரியிருக்கின்றார்.

இந்திய அரசாங்கம் தனது அரசமைப்பின் 370 பிரிவினை இரத்து செய்தமை குறித்து வெளிநாட்டு அரசாங்கங்கள் இந்திய அரசாங்கத்தினை கண்டித்துள்ளன. பிரச்சினைக்குரிய காஸ்மீர் பிராந்தியத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை இரத்துசெய்தமை குறித்து வெளிநாட்டுஅரசாங்கங்கள் இந்திய அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில் இது பற்றி கருத்து கூறுமாறு கோரப்பட்டவேளை எங்கள்பிரதமர் அது உள்நாட்டு விவகாரம் என தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் இந்தியாவின் உள்விவகாரம் என்பதை தெரிந்துவைத்துள்ள இந்திய பிரதமர், அதனை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளார்.  இது மகிந்த ராஜபக்ச கடைப்பிடித்த நிலைப்பாட்டிற்கு கைமாறு செய்யும் விதத்தில் அமைந்திருக்கவில்லை.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் ஆணைப்படியே மோடி இந்த கோரிக்கையை விடுத்தார் என சிலர் அர்த்தப்படுத்துகின்றனர். இந்திய இலங்கை உடன்பாடு குறித்த தனது அர்ப்பணிப்புகளை இந்தியா நேர்மையாக நிறைவேற்றியதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

இந்திய இலங்கை உடன்படிக்கையில் 13 வது திருத்தம் குறித்து குறிப்பிடப்படவில்லை. அது எங்கள் மீதுதிணிக்கப்பட்டது. எனக்கு இந்த உடன்படிக்கை குறித்து மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. உடன்படிக்கை குறித்த தனது கடப்பாட்டை இந்தியா மதித்ததா? இந்திய இலங்கை உடன்படிக்கையின் படி முன்னர் வடபகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் முஸ்லீம்கள் அங்கு திரும்பி சுதந்திரமாக வாக்களிப்பதற்கான நிலையை ஏற்படுத்துவதாக இந்தியா வாக்குறுதியளித்தது.

இந்திய இலங்கை உடன்படிக்கை அழுத்தத்தின் மத்தியில் கைச்சாத்திடப்பட்டதா? அதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் இலங்கையின் இறைமைக்கு பாதகமானவையா? என்பது குறித்து சந்தேகம் உள்ளது.

ஏனென்றால் எங்கள் படையினர் விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வடமராட்சியில் கைது செய்யவிருந்த தருணத்தில் இந்தியா எங்கள் வான்வெளியை மீறி யாழ்ப்பாணத்தில் உணவுமருந்தினை போட்டது.

உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்த வடக்குகிழக்கு இணைப்பை இலங்கை நீதிமன்றங்கள் இரத்துச்செய்துவிட்டன. ஆகவே இந்த உடன்படிக்கையின் செல்லுபடியாகும் தன்மை குறித்த கேள்வி உள்ளது.  இது செல்லுபடியற்றது என்றால், இந்தியாவிற்கு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட உரிமையில்லை.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின்னர் திராவிடர்களின் பிரிவினை இயக்கமொன்று உருவாகியது. ஈவேஆர் பெரியார் நாஜி பாணியில் பிரமாணர்களுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்தார். இதன் காரணமாகவே நேரு இந்தியாவை 28 மொழிவாரி மாநிலங்களாக பிரித்தார்.

சீனாவிலும் ரோம கிரேக்க சாம்ராஜ்யங்களிலும் பிராந்திய அரசுகள் வலுவடைந்த போது, சாம்ராஜ்ஜியங்கள் சிதைவடைந்தன. மொழிவாரி மாநிலங்களும் அரசியல் கட்டமைப்புகளும் பிரிவினைக்கான படிக்கல்லாக அமையும் என அம்பேத்கார் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வடக்குகிழக்கை இணைப்பதால் அல்லது வடக்கிற்கு சுயநிர்ணய உரிமையை வழங்குவதால் அது திராவிடதேசமொன்றிற்கான படிக்கல்லாக பயன்படுத்தப்படும் என்பதை இந்தியா கருத்தில்கொள்ளவேண்டும்.
அல்லது அவர்கள் தமிழ்நாட்டுடன் இணைந்துகொள்ளக்கூடும்.

ஆகவே இலங்கையை 13வது திருத்தத்தின் மூலம் மாகாணங்களாக துண்டாடுவது இந்தியாவின் ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஊக்குவிப்பவர் இறுதியில்பாதிக்கப்படுவார்” என்றார்.

https://www.ilakku.org/13வது-திருத்தத்தினை-நடைமு/

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திராவிட தேசமா ..? 

தமிழ் என்பதற்கு பதிலீடாக  திரவிட என்ற வார்ததை சிங்களத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்பதற்கு “எக்ஸத் திரவிட விமுக்தி பெரமுன” என்றும் அகில இலங்கை தமிழ்க்கங்கிரஸ் என்பதற்கு “சமஸ்தலங்கா திரவிட சங்கமய” என்ற வார்த்தையும் நீண்டகாலமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.  

அதையே வீரசேகரா குறிப்பிட்டார். அதாவது தமிழ் தேசம் என்பதையே அப்படிக் குறிப்பிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழ் என்பதற்கு பதிலீடாக  திரவிட என்ற வார்ததை சிங்களத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்பதற்கு “எக்ஸத் திரவிட விமுக்தி பெரமுன” என்றும் அகில இலங்கை தமிழ்க்கங்கிரஸ் என்பதற்கு “சமஸ்தலங்கா திரவிட சங்கமய” என்ற வார்த்தையும் நீண்டகாலமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.  

அதையே வீரசேகரா குறிப்பிட்டார். அதாவது தமிழ் தேசம் என்பதையே அப்படிக் குறிப்பிட்டார். 

சிங்களத்தில் தமிழர்களை மரியாதை நிமித்தம் அழைத்தால் -“திரவிட”.

சற்றே மரியாதை குறைவாக அழைத்தால் “தெமள”.

அதிகம் மரியாதை குறைவாய் அழைத்தால் “பற தெமள”.

இந்த பற என்பது சாதி வசை இல்லை என்றும் வெளி (புற) என்பதே அதன் அர்த்தம் என்றும் பசில் முன்பு சப்பை கட்டு கட்டியது நியாபகம் இருக்கலாம்.

 

நினைத்துப் பார்த்தால், black, coloured, nigger உடன் பொருந்தி வருகிறது இந்த பகுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தக் கோருவதற்கு இந்தியாவிற்கு உரிமையும் இல்லை – சரத்வீரசேகர

இந்திய உயர்ஸ்தானிகர் சந்திச்சு கதைத்த போது நேரே சொல்லியிருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழ் என்பதற்கு பதிலீடாக  திரவிட என்ற வார்ததை சிங்களத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்பதற்கு “எக்ஸத் திரவிட விமுக்தி பெரமுன” என்றும் அகில இலங்கை தமிழ்க்கங்கிரஸ் என்பதற்கு “சமஸ்தலங்கா திரவிட சங்கமய” என்ற வார்த்தையும் நீண்டகாலமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.  

அதையே வீரசேகரா குறிப்பிட்டார். அதாவது தமிழ் தேசம் என்பதையே அப்படிக் குறிப்பிட்டார். 

ஏனென்டா, தாங்கள் ஆரியர்கள் என்று அல்லவா நினைத்துக் கொண்டிருக்கினம், இந்த காட்டுச் சிங்கத்தின்ரை வம்சம்... 😛

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.