Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து மத சம்பிரதாயங்களை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது - மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கம் முழு உலகிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் நவராத்திரி விரதம் மற்றும் இந்து மத சம்பிரதாயங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்றும் கடமைப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நவராத்தி விழாவை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 40 கோயில்களுக்கு 50000 ஆயிரம் ரூபா நிதியுதவி கோயில் பரிபாலனதரப்பினரடம் இன்று அலரி மாளிகையில் வைத்து பிரமதார் வழங்கி வைத்தார்.

பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,

நெருக்கடியான நிலையில் நவராத்திரி விழாவையொட்டி  தெரிவு செய்யப்பட்ட  கோயில்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இது நாட்டுக்கு  நன்மை பயக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

மத விவகாரங்ள் என்ற அடிப்படையிலும், பிரஜை என்ற அடிப்படையிலும் இந்த மத சம்பிரதாயங்களை பாதுகாப்பது   அரசாங்கத்தினது பொறுப்பாகும்.

நெருக்கடியான நிலையில் நவராத்திரி இம்முறை ஆரம்பமாகுகிறது.  முடிவுகள் நன்மை பயக்கும் விதத்தில் அமையும் என்பதில் நம்பிக்கை கொள்கிறோம்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் சுகாதார தரப்பினர் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். கோயில்களில் இடம் பெறும் பூஜை வழிபாடுகள், நிகழ்வுகள்  சுகாதார தரப்பினர் விதித்துள்ள  பாதுகாப்பு அம்சங்களை  கடைப்பிடிக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/92179

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன டியூன் செஞ்சு 
அப்படியே கையிலே 
கொஞ்சம் சினாக் எடுத்துக்கோ 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பிழம்பு said:

கொவிட்-19 வைரஸ் தாக்கம் முழு உலகிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் நவராத்திரி விரதம் மற்றும் இந்து மத சம்பிரதாயங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்றும் கடமைப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐயா நல்லவர்.

தமிழர்களை  ஏமாற்றுவதற்கு அவர்களை  தொடர்ந்தும்  முட்டாள்களக வைத்திருக்க அவசியம் உண்டு. தமிழர்களை  முட்டாள்களாக வைத்திருக்க தகுந்த  ஆயுதம் என்ன என்பதை ராஜபக்ச சரியாக புரிந்து வைத்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, tulpen said:

தமிழர்களை  ஏமாற்றுவதற்கு அவர்களை  தொடர்ந்தும்  முட்டாள்களக வைத்திருக்க அவசியம் உண்டு. தமிழர்களை  முட்டாள்களாக வைத்திருக்க தகுந்த  ஆயுதம் என்ன என்பதை ராஜபக்ச சரியாக புரிந்து வைத்திருக்கிறார். 

எனக்கு  நம்பிக்கை  இருக்கலாம் இல்லாதிருக்கலாம்

ஆனால் கடவுளை நம்பும்  கோடானுகோடி  மக்களையும்

அதற்காக  அமைக்கப்பட்டிருக்கும் கோடானுகோடி மையங்களையும் முட்டாள்கள் அல்லது  முட்டாள்தனங்கள் என்பது  தான் ஆகக்கூடிய வடி கட்டிய முட்டாள்தனம்  ராசா

12 minutes ago, விசுகு said:

எனக்கு  நம்பிக்கை  இருக்கலாம் இல்லாதிருக்கலாம்

ஆனால் கடவுளை நம்பும்  கோடானுகோடி  மக்களையும்

அதற்காக  அமைக்கப்பட்டிருக்கும் கோடானுகோடி மையங்களையும் முட்டாள்கள் அல்லது  முட்டாள்தனங்கள் என்பது  தான் ஆகக்கூடிய வடி கட்டிய முட்டாள்தனம்  ராசா

விசுகு கடவுள் இங்கு பேசு பொருள் அல்ல. இந்து மதம் பரப்பிய, பரப்பும் மூடத்தனங்கள் தான் இங்கு பேசு பொருள். மூடத்தனங்களை எத்தனை பேர் நம்பினாலும் அவை மூடத்தனங்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

விசுகு கடவுள் இங்கு பேசு பொருள் அல்ல. இந்து மதம் பரப்பிய, பரப்பும் மூடத்தனங்கள் தான் இங்கு பேசு பொருள். மூடத்தனங்களை எத்தனை பேர் நம்பினாலும் அவை மூடத்தனங்களே. 

 

இந்து மத சம்பிரதாயங்களை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது

இதில் எங்கே மூடத்தனமுள்ளது????

3 minutes ago, விசுகு said:

 

இந்து மத சம்பிரதாயங்களை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது

இதில் எங்கே மூடத்தனமுள்ளது????

அதை தெளிவாக புரிந்ததால் தான் அவர் 👑  ராஜபக்ச

  • கருத்துக்கள உறவுகள்

சரி இங்கையும் ஒன்டு வாச்சிருக்கு நடத்துங்கோ.காசா பணமா.எல்லாம்  தாயக மக்களுக்கான சேவைதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.