Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை

ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை

 

நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒரு விருது விழாவில் பேசிய ஜோதிகா, “கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. 

நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை” என கூறினார். ஜோதிகாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது.

பின்னர், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை சீரமைக்க தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை ஜோதிகா வழங்கி இருந்தார்.
 

தஞ்சை அரசு மருத்துவமனை

 

இந்நிலையில், ஜோதிகா கொடுத்த நிதியின் மூலம் மருத்துவமனை சீரமைக்கப்பட்டு புதிய வடிவம் பெற்றுள்ளது. இதுகுறித்து புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் இரா.சரவணன், “எங்கள் படப்பிடிப்புக்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. மனம் கசிந்தவராக தன்னால் முடிந்த உதவியைச் செய்து மருத்துவமனையை எப்படி மாற்றி இருக்கிறார் பாருங்கள்... அன்பில், அக்கறையில் வியக்க வைக்கும் எங்கள் மாதங்கி வாழ்க பல்லாண்டு” என பதிவிட்டுள்ளார்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/19123053/1985582/Thanjavur-govt-hospital-renovated-with-Jyothikas-financial.vpf

2 hours ago, உடையார் said:

“கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. 

நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். 

 

ஒரு சில ஆயிரம் வசிக்கும் எனது ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களும் திருவிழாக்களும் ஆனால் ஊரில் இருக்கும் ஒரே ஒரு வைத்தியசாலையில் ஒன்றுமே ஒழுங்காக இல்லை.

எம் ஊரிலும் ஒரு யோதிகா தேவை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, manimaran said:

ஒரு சில ஆயிரம் வசிக்கும் எனது ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களும் திருவிழாக்களும் ஆனால் ஊரில் இருக்கும் ஒரே ஒரு வைத்தியசாலையில் ஒன்றுமே ஒழுங்காக இல்லை.

எம் ஊரிலும் ஒரு யோதிகா தேவை

எல்லாவற்றிற்கும் மற்றவர்களையே எதிர்பார்க்கும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் கோவில்களுக்கு கொடுப்பதை திட்டுவதை விடுத்து (கோவில்களுக்கு கொடுப்பதும் ஏதோ ஒரு வகையில் சமூகத்தை அடைவதுண்டு_.. இப்படி நேரடியாக உதவி செய்து தரமுயர்த்துவதும் சாத்தியமே.. ஜோதிகாவை.. சிந்தித்து செயற்பட வைத்த அனைவருக்கும் நன்றி.

அடுத்தவரின் சிந்தனையை உள்வாங்கிச் செயற்பட்ட ஜோதிகாவுக்கும் நன்றி. 

கோவில்களும்... தமக்குக் கிடைக்கும் நிதிப்பங்களிப்பில் ஒரு பகுதியை எதிர்காலத்தில் சமூக மற்றும் அரச கவனிப்பாரற்ற பொதுத்துறைகளை மறுசீரமைக்க வழங்குவது நல்லது. ஜோதிகா போன்று பிற நடிகை நடிகர்களும் ஜோதிகாவின் இந்த முன்மாதிரியை பின்பற்றலாமே..!! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, manimaran said:

ஒரு சில ஆயிரம் வசிக்கும் எனது ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களும் திருவிழாக்களும் ஆனால் ஊரில் இருக்கும் ஒரே ஒரு வைத்தியசாலையில் ஒன்றுமே ஒழுங்காக இல்லை.

எம் ஊரிலும் ஒரு யோதிகா தேவை

😄  ஒரு ஜோதிகாவும் வரமாட்டார்கள்.

கோவிலை பராமரிப்பதை போல் மருத்துவமனைகள் பராமரிக்கப்பட வில்லை என்று ஜோதிகா நியாயத்தை சொன்னதால் சீமான் கூட அவரை தாக்கி பேசவில்லை  ஆனால் ஈழத்து சீமான் கட்சி தலைவர் தொடங்கி வெளிநாடுகளில் உள்ள சீமானின் ஈழத்து இரசிகர்கள் எல்லாம் ஜோதிகா மீது தாக்குதல் தான்.Tulpen , கபிதனும் நியாயத்தை எடுத்து சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, manimaran said:

 

எம் ஊரிலும் ஒரு யோதிகா தேவை

பாதுகாப்பு 
எதிர்கால கும்ப வளர்ச்சி என்று 
ஜோதிகாவுக்கு ஒரு ஆண் துணை தேவை என்பதையும் 
மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

இதில் சூர்யாவின் பங்கு நிற்சயம் இருக்க வாய்ப்பு இருக்கிறது 

                                                             இப்படிக்கு தாழ்மயையுடன் 
                                                                   முரட்டு சிங்கிள் 

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

😄  ஒரு ஜோதிகாவும் வரமாட்டார்கள்.

  ஆனால் ஈழத்து சீமான் கட்சி தலைவர் தொடங்கி வெளிநாடுகளில் உள்ள சீமானின் ஈழத்து இரசிகர்கள் எல்லாம் ஜோதிகா மீது தாக்குதல் தான்.

சீமான் அவர்கள் ஜோதிகாவை வறுத்தெடுக்கும் ஆதாரங்கள் 
எப்போதான் திருந்துவார்களோ சீமானும் அவர் எடுபிடிகளும் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.