Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் வரும் ‘கொரோனா’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அடுத்த வரவு செலவுத்துண்டு  விழும் தொகைக்கு பிச்சைக்கு  எங்கு  போவது????

இவர்களிடம் போகலாமே......!!!! 👇😋

Forbes தனது இணைய தளத்தில் இலங்கையின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸக்கு முதலிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

10. அமைச்சர் ALM. அதாவுல்லா – LKR 131,444,985.60 ($810,000)

09. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – LKR 134,690,540.80 ($830,000)

08. அமைச்சர் AHM. பௌசி – LKR 178,505,536.00 ($1.1 மில்லியன்)

07. அமைச்சர் அநுர குமார திஸ்ஸநாயக்க – LKR 210,961,088.00 ($1.3 மில்லியன்)

06. சந்திரிகா குமாரதுங்க – LKR 227,188,864.00 ($1.4 மில்லியன்)

05. விநாயகமூர்த்தி முரளிதரன் – 276,111,688.00 ($1.7 மில்லியன்)

04. ஆறுமுகம் தொண்டமான் – LKR 308,595,416.00 ($1.9 மில்லியன்)

03. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – LKR 2,273,860,960.00 ($14 மில்லியன்)

02. அர்ஜுன ரணதுங்கா – LKR 11,044,467,520.00 ($ 68 மில்லியன்)

01. முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ – LKR 2,923,535,520,000.00 ($18 பில்லியன்)

  • Replies 81
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

இங்கு எதிர்வு கூறல் சொல்லி கவலைப்படுவது மலையக வடகிழக்கு தமிழ் மக்களை நினைத்து ****** உங்களின் ஸ்ரீலங்கா விஜயம் நாலு பேர் பொறாமைப்படும்படி ****** பெருமையுடன் போய்  வருவதுக்கு .எங்களுக்கு கொரனோ வால்  ஒரு தமிழ் உயிரும்  போகக்கூடாது அதுதான் முக்கியம் .

டொட் 

அடிக்கடி சிறிலங்கா போய் "சூரியன் கண்ணுக்க குத்துதெண்டு" கறுப்புக் கண்ணாடியோடு படம் காட்டும் ஆட்களிடம் தான் இதை நீங்கள் சொல்ல வேண்டும்! "நான் அவன் அல்ல"!

மற்றபடி கொரனா வந்தால் சிங்களவன் தமிழன் முஸ்லிம் என்று பார்த்தல்ல வருவது! எனவே இருக்கிற கட்டுப்பாடுகளை (அது இனப்படுகொலையாளி கோத்தா விதித்த கட்டுப்பாடுகளாக இருந்தாலும்) எல்லாரும் பின்பற்ற ஊக்குவியுங்கள்! அது நல்ல பணி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

மகிழ்ச்சியாக இருக்கிறதோ
உங்கள் நாடு யேர்மனியில் கொரோனா வைரஸ் அழிந்து கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நாடு என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறதாமே

 உங்களுக்கு நான் சொன்ன அந்த கருத்தில் அப்படி என்ன பிரச்சனை இருக்கின்றது? 
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பு பட்டம் கொடுக்கப்பட்ட சிறிலங்காவிற்கும் கொரோனா உக்கிரம் அதிகரித்து விட்டது என மட்டும் தானே குறிப்பிட்டேன்.
அது ஏன் உங்களுக்கு குத்திக்குடையுது ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தேர்தலை அவசரமாக நடாத்தி முடிக்கும் நோக்கில், தான், கொரோனா உண்மை நிலைகள் குறித்து தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன என்றும், இப்போது 20ஏ யும் பாராளுமன்றில் நிறைவேறிய பின்னர்,  ஒவ்வொரு அதிர்ச்சி செய்திகளாக வெளியே கசிகின்றன என்று கொழும்பு டாக்டர் நண்பர் சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இலங்கையில் தேர்தலை அவசரமாக நடாத்தி முடிக்கும் நோக்கில், தான், கொரோனா உண்மை நிலைகள் குறித்து தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன என்றும், இப்போது 20ஏ யும் பாராளுமன்றில் நிறைவேறிய பின்னர்,  ஒவ்வொரு அதிர்ச்சி செய்திகளாக வெளியே கசிகின்றன என்று கொழும்பு டாக்டர் நண்பர் சொல்கிறார்.

இலங்கை சுதந்திரமடைந்து சிங்களவர் அரசபீடம் ஏறியபின் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பையும் மறைப்பதற்கு, இந்தியக் கறுப்புக் கண்ணாடியை உலகத்தின் கண்களுக்கு அணிவித்துவிட்டதாக எண்ணிவரும் சிங்கள அரசு... தான் எது செய்தாலும் உலகம் கண்டுகொள்ளாது என்ற மமதையில் உள்ளது. வரும் செய்திகளை நோக்கக் கண்ணாடி உடையும்போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

இலங்கையில் தேர்தலை அவசரமாக நடாத்தி முடிக்கும் நோக்கில், தான், கொரோனா உண்மை நிலைகள் குறித்து தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன என்றும், இப்போது 20ஏ யும் பாராளுமன்றில் நிறைவேறிய பின்னர்,  ஒவ்வொரு அதிர்ச்சி செய்திகளாக வெளியே கசிகின்றன என்று கொழும்பு டாக்டர் நண்பர் சொல்கிறார்.

ஒரேயொரு டாக்டர் நண்பர் சொன்னால் கொஞ்சம் "உப்பு" சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் அதை!😁ஏனெனில் மாவட்ட வைத்திய சாலைகளில் இருக்கும் வைத்தியர்கள் தாதியர் எல்லோரும் ஒருமித்து ரகசியம் காக்கும் நிலை சிறி லங்காவில் இல்லை!

 வெவ்வேறு மாகாணங்களில் இருக்கும் சுகாதாரத் திணைக்களங்களில் இருப்போரின் தகவல் படி இலங்கையில் ஆரம்பக் கட்டுபாடுகள் தளர்த்தப் பட்ட பின்னர், மக்கள் கொஞ்சம் அசட்டையாக இருந்து விட்டனர். பலர் சாதுவான இருமல் இருக்கும் போதே தாங்கள் செய்ய வேண்டிய தொழில் கருதி வேலைக்குச் சென்று வந்திருக்கின்றனர். பரிசோதித்தால் தனிமைப் பட்டு வேலைக்குப் போக இயலாது என்று பரிசோதனைக்கே போகாமல் விட்டிருக்கின்றனர். இதனால் தான் இப்போது அதிக பரவல். ஆனாலும் இயன்றளவு தெரிந்த கேசுகளை பின் தொடர்ந்து கட்டுப் படுத்த முயல்கிறது சுகாதாரத் துறை, மறைப்பு ஒழிப்பெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

01. முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ – LKR 2,923,535,520,000.00 ($18 பில்லியன்)

18 பில்லியன் என்பது கொஞ்சம் அதிக தொகை ஓரளவு கருப்பு பணத்தில் வைத்து கொள்ளலாம் 
இப்படி போர்ப்ஸ் போடும் அளவுக்கு 18 பில்லியன் இருக்கிறது என்பது மிகவும் அச்சுறுத்தல் ஆனது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Paanch said:

இவர்களிடம் போகலாமே......!!!! 👇😋

Forbes தனது இணைய தளத்தில் இலங்கையின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸக்கு முதலிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

10. அமைச்சர் ALM. அதாவுல்லா – LKR 131,444,985.60 ($810,000)

09. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – LKR 134,690,540.80 ($830,000)

08. அமைச்சர் AHM. பௌசி – LKR 178,505,536.00 ($1.1 மில்லியன்)

07. அமைச்சர் அநுர குமார திஸ்ஸநாயக்க – LKR 210,961,088.00 ($1.3 மில்லியன்)

06. சந்திரிகா குமாரதுங்க – LKR 227,188,864.00 ($1.4 மில்லியன்)

05. விநாயகமூர்த்தி முரளிதரன் – 276,111,688.00 ($1.7 மில்லியன்)

04. ஆறுமுகம் தொண்டமான் – LKR 308,595,416.00 ($1.9 மில்லியன்)

03. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – LKR 2,273,860,960.00 ($14 மில்லியன்)

02. அர்ஜுன ரணதுங்கா – LKR 11,044,467,520.00 ($ 68 மில்லியன்)

01. முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ – LKR 2,923,535,520,000.00 ($18 பில்லியன்)

பாஞ்ச், இந்தப் பட்டியல் வந்த Forbes இணைப்பை இங்கே தர முடியுமா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பாஞ்ச், இந்தப் பட்டியல் வந்த Forbes இணைப்பை இங்கே தர முடியுமா? 

பழைய பேப்பர் வித்தாச்சு..😂

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

பழைய பேப்பர் வித்தாச்சு..😂

 

அப்படித் தான் நினைக்கிறேன். Forbes இல் இப்படியொரு பட்டியல் இல்லை! Asian World News என்ற ஒரு முகநூலில் ஐந்து பேர் "விருப்பம்" போட்டிருக்கிற தளத்தில் ஒரு மூலமும் இல்லாமல் யாரோ போன வருடம் இப்படியொரு பட்டியலைப் போட்டிருக்கிறார்கள்! 

புலம் பெயர் தமிழருக்கு சுகமாக முதுகு சொறிந்து விடும் செய்திகள் போட்டால் தங்கள் வாசகர் வட்டம் கூடும் என்று அந்த இலையான் கலைக்கும் ஊடகம் நினைத்திருக்கிறது போலும்!:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பாஞ்ச், இந்தப் பட்டியல் வந்த Forbes இணைப்பை இங்கே தர முடியுமா? 

 

58 minutes ago, கிருபன் said:

பழைய பேப்பர் வித்தாச்சு..😂

 

இது பொய் என்றால்..... பொய்தான் என்பதற்கான சான்றுகளை, ஊகங்கள், கற்பனைகள் இன்றி உங்களால் தர முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

Forbes இல் இப்படியொரு பட்டியல் இல்லை!

இந்தப் பட்டியலைப் பற்றி முன்னர் நானும் கருத்து எழுதிய நினைவு இருக்கு.  யாரோ 2018 மார்ச்சில் புரளியாக ஆங்கிலத்தில் விட்டிருந்தார்கள்.

 

22 minutes ago, Paanch said:

இது பொய் என்றால்..... பொய்தான் என்பதற்கான சான்றுகளை, ஊகங்கள், கற்பனைகள் இன்றி உங்களால் தர முடியுமா?

இந்த இணைப்பில் போய்ப் பார்த்தால் அதில் சிறிலங்காவே இல்லை!

https://www.forbes.com/billionaires/

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

ஒரேயொரு டாக்டர் நண்பர் சொன்னால் கொஞ்சம் "உப்பு" சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் அதை!😁ஏனெனில் மாவட்ட வைத்திய சாலைகளில் இருக்கும் வைத்தியர்கள் தாதியர் எல்லோரும் ஒருமித்து ரகசியம் காக்கும் நிலை சிறி லங்காவில் இல்லை!

 வெவ்வேறு மாகாணங்களில் இருக்கும் சுகாதாரத் திணைக்களங்களில் இருப்போரின் தகவல் படி இலங்கையில் ஆரம்பக் கட்டுபாடுகள் தளர்த்தப் பட்ட பின்னர், மக்கள் கொஞ்சம் அசட்டையாக இருந்து விட்டனர். பலர் சாதுவான இருமல் இருக்கும் போதே தாங்கள் செய்ய வேண்டிய தொழில் கருதி வேலைக்குச் சென்று வந்திருக்கின்றனர். பரிசோதித்தால் தனிமைப் பட்டு வேலைக்குப் போக இயலாது என்று பரிசோதனைக்கே போகாமல் விட்டிருக்கின்றனர். இதனால் தான் இப்போது அதிக பரவல். ஆனாலும் இயன்றளவு தெரிந்த கேசுகளை பின் தொடர்ந்து கட்டுப் படுத்த முயல்கிறது சுகாதாரத் துறை, மறைப்பு ஒழிப்பெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை!

உங்கள் கேள்வியில், நீங்கள் சொல்வதில் நியாயம் இருந்தாலும், மறுபுறம் என்று ஒன்று உண்டு.

சொன்னவர் உண்மையான மருத்துவர், மாவட்ட மருத்துவ அதிகாரி. அதே நாட்டில் முள்ளி வாய்க்காலில் நடந்த உண்மையினை சொன்ன நாலு டாக்டர்கள் உள்ளே தூக்கி போட்ட அதே நிர்வாகமே இன்று ஆட்சியில்.

கொரோன நிர்வாகம், ஒரு மருத்துவ அதிகாரியிடம் இல்லை. ராணுவத்தளபதியிடம் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Paanch said:

 

இது பொய் என்றால்..... பொய்தான் என்பதற்கான சான்றுகளை, ஊகங்கள், கற்பனைகள் இன்றி உங்களால் தர முடியுமா?

பாஞ்ச், உங்கள் "பொய் என்று ஆதாரத்துடன் நிரூபி" என்கிற சவால் உங்களுக்கே வடிவேலுத்தனமாகத்தெரியவில்லையா?🤔

1. ஒரு தகவலை நீங்கள் Forbes இல் வந்தது என்று பதிகிறீர்கள்

2. அது Forbes இல் இல்லை என்று நானும் கிருபனும் (போய்ப் பார்க்கும் எவரும்) கண்டு கொண்டு இங்கே சொல்கிறோம்

3. அதன் படி நீங்கள் தந்த தகவல் பொய் என்று நிரூபணமாகிறது

இந்த logical படிமுறையின் படி, இனி ஆதாரம் தர வேண்டியது நீங்களல்லவா? 

16 hours ago, Nathamuni said:

உங்கள் கேள்வியில், நீங்கள் சொல்வதில் நியாயம் இருந்தாலும், மறுபுறம் என்று ஒன்று உண்டு.

சொன்னவர் உண்மையான மருத்துவர், மாவட்ட மருத்துவ அதிகாரி. அதே நாட்டில் முள்ளி வாய்க்காலில் நடந்த உண்மையினை சொன்ன நாலு டாக்டர்கள் உள்ளே தூக்கி போட்ட அதே நிர்வாகமே இன்று ஆட்சியில்.

கொரோன நிர்வாகம், ஒரு மருத்துவ அதிகாரியிடம் இல்லை. ராணுவத்தளபதியிடம் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.
 

நோயாளிகள் நோய்க்குணங்குறி காட்டியபின்னர், அல்லது நோயாளிகளின் தொடர்பிலிருந்தோர் பி.சி.ஆர் மூலம் பரிசோதிக்கப்படுவது எங்கே என்று தெரியுமா உங்களுக்கு? இராணுவமுகாமிலா, கொழும்பிலா, தியத்தலாவையிலா?

இது மாவட்ட மட்டத்தில் நடக்கிறது. மாகாண மட்டத்தில் தான் தகவல் வெளிவருகிறது. சத்தியமூர்த்தி நாளாந்தம் யாழ்ப்பாண நிலவரம் சொல்வது போல கீழ் மட்டத்தில் நடக்கிறது! தேசிய ஒருங்கிணைப்புத் தான் பாதுகாப்பு அமைச்சிடம்.

மாவட்ட, மாகாண அதிகாரிகள் எல்லாரும் சேர்ந்தா நோயாளிகள், மரணிப்போர் எண்ணிக்கை மறைக்கப் படுகிறது என்கிறீர்கள்? 🤔
 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

இது மாவட்ட மட்டத்தில் நடக்கிறது. மாகாண மட்டத்தில் தான் தகவல் வெளிவருகிறது. சத்தியமூர்த்தி நாளாந்தம் யாழ்ப்பாண நிலவரம் சொல்வது போல கீழ் மட்டத்தில் நடக்கிறது! தேசிய ஒருங்கிணைப்புத் தான் பாதுகாப்பு அமைச்சிடம்.

மாவட்ட, மாகாண அதிகாரிகள் எல்லாரும் சேர்ந்தா நோயாளிகள், மரணிப்போர் எண்ணிக்கை மறைக்கப் படுகிறது என்கிறீர்கள்? 

ஏனையா, சத்தியமூர்த்திய இங்க இழுகிறீர்கள்.?

முக்கியமாக, நீஙகளும், வெளியே, நானும் வெளியே.... இருவருக்கும் கிடைக்கும் தகவல் அடிப்படையில் பேசுகிறோம்.

நீஙகள் சொல்லும் விடயங்களில் சாதாரண அரசியல்வாதியின் ஆட்சியில் நடக்கக் கூடிய வகையில், சரியாக இருந்தாலும், இலங்கையில் மலர்ந்து கொண்டு இருப்பது, இராணுவ ஆட்சி.

இராணுவமே குவாரிண்டீன் நிலையங்களை நடாத்துகிறது.

முக்கியமாக நீங்கள் சொல்ல வருவது, கொரணா தடுப்பு நடவடுக்கைகள் குறித்து. நான் சொல்ல வருவது, கொரோணா பாதிப்பு செய்திகள் தேர்தல் நோக்கில், இருட்டடிப்பு செய்யப்பட்டது குறித்தும், இப்போது தான், செய்திகள் முறையாக வருகிறது குறித்தும்.

இரண்டையும் குழப்புகிறோம் போலுள்ளது.

தேர்தலை விடுங்கள்.... மக்கள் பதற்றம் அடையக்கூடாது என்று செய்திகளை மட்டுப் படுத்துவது, இருட்டடிப்பு செய்வது வழமை. இலங்கையில் இது அதிகம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ஏனையா, சத்தியமூர்த்திய இங்க இழுகிறீர்கள்.?

முக்கியமாக, நீஙகளும், வெளியே, நானும் வெளியே.... இருவருக்கும் கிடைக்கும் தகவல் அடிப்படையில் பேசுகிறோம்.

நீஙகள் சொல்லும் விடயங்களில் சாதாரண அரசியல்வாதியின் ஆட்சியில் நடக்கக் கூடிய வகையில், சரியாக இருந்தாலும், இலங்கையில் மலர்ந்து கொண்டு இருப்பது, இராணுவ ஆட்சி.

இராணுவமே குவாரிண்டீன் நிலையங்களை நடாத்துகிறது.

முக்கியமாக நீங்கள் சொல்ல வருவது, கொரணா தடுப்பு நடவடுக்கைகள் குறித்து. நான் சொல்ல வருவது, கொரோணா பாதிப்பு செய்திகள் தேர்தல் நோக்கில், இருட்டடிப்பு செய்யப்பட்டது குறித்தும், இப்போது தான், செய்திகள் முறையாக வருகிறது.

இரண்டையும் குழப்புகிறோம் போலுள்ளது.

தேர்தலை விடுங்கள்.... மக்கள் பதற்றம் அடையக்கூடாது என்று செய்திகளை மட்டுப் படுத்துவது, இருட்டடிப்பு செய்வது வழமை. இலங்கையில் இது அதிகம்.

நாதம், மாவட்ட/மாகாண அதிகாரிகள் தான் தகவல் வெளியிடப் பொறுப்பு என்பதை உதாரணத்துடன் சுட்டிக் காட்டவே சத்தியமூர்த்தியை குறிப்பிட்டேன். உங்களுக்கு இப்ப புரிகிறதா சத்தியமூர்த்தி தகவல்களை மறைக்க இயலாதென்று?

தடுப்பு நிலையங்களை நடத்துவது இராணுவம். ஆனால் கொரனா நிலைமையை காட்டும் மூன்று அளவீடுகள் (எந்த நாட்டிலும்):

1. தொற்றுக்காளானோர் எண்ணிக்கை (positive cases)

2. வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவோர் எண்ணிக்கை (hospitalization)

3. நோயினால் மரணிப்போர் எண்ணிக்கை (case fatality rate) 

இவற்றை வெளியிடுவது யார் இலங்கையில்? இதற்குப் பதில் தெரிந்தால் இருட்டடிப்பு சாத்தியமா என்பது தெரிந்து விடும். யார் இந்த அளவீடுகளை வெளியிடுவது என்று தெரியுமா உங்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நாதம், மாவட்ட/மாகாண அதிகாரிகள் தான் தகவல் வெளியிடப் பொறுப்பு என்பதை உதாரணத்துடன் சுட்டிக் காட்டவே சத்தியமூர்த்தியை குறிப்பிட்டேன். உங்களுக்கு இப்ப புரிகிறதா சத்தியமூர்த்தி தகவல்களை மறைக்க இயலாதென்று?

தடுப்பு நிலையங்களை நடத்துவது இராணுவம். ஆனால் கொரனா நிலைமையை காட்டும் மூன்று அளவீடுகள் (எந்த நாட்டிலும்):

1. தொற்றுக்காளானோர் எண்ணிக்கை (positive cases)

2. வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவோர் எண்ணிக்கை (hospitalization)

3. நோயினால் மரணிப்போர் எண்ணிக்கை (case fatality rate) 

இவற்றை வெளியிடுவது யார் இலங்கையில்? இதற்குப் பதில் தெரிந்தால் இருட்டடிப்பு சாத்தியமா என்பது தெரிந்து விடும். யார் இந்த அளவீடுகளை வெளியிடுவது என்று தெரியுமா உங்களுக்கு?

http://www.dailymirror.lk/breaking_news/Failure-to-make-appropriate-decision-deteriorated-situation-GMOA/108-198845
 

please see the comment to this too!

http://www.dailymirror.lk/breaking_news/New-Health-DG-confident-of-combating-Covid-19-soon-in-Sri-Lanka/108-198897

 

and what this guy know about medical field?

http://www.dailymirror.lk/breaking_news/Jpura-Uni-to-examine-rapid-spread-of-Covid-19/108-198899

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

சரி, மேலே நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன? இந்தக் கட்டுரையிலும் நீங்கள் சொல்லும் இருட்டடிப்புக்கு ஆதாரம் இல்லை. பெயர் தெரியாத ஒருவர் கட்டுரைக்கு இட்ட பின்னோட்டத்திலும் ஆதாரம் இல்லை!

அப்ப வழமை போல கற்பனையில் ஒன்றை எழுதி விட்டு பிறகு ஆதாரம் தேடுகிறீர்களா நாதம்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

சரி, மேலே நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன? இந்தக் கட்டுரையிலும் நீங்கள் சொல்லும் இருட்டடிப்புக்கு ஆதாரம் இல்லை. பெயர் தெரியாத ஒருவர் கட்டுரைக்கு இட்ட பின்னோட்டத்திலும் ஆதாரம் இல்லை!

அப்ப வழமை போல கற்பனையில் ஒன்றை எழுதி விட்டு பிறகு ஆதாரம் தேடுகிறீர்களா நாதம்?

இதென்ன வில்லங்கமா கிடக்குதய்யா, இவரோட... அடம் பிடிக்கிறியள்....

அங்க... தேர்தல் நோக்கத்தோட இருட்டடிப்பு செய்திருக்கினம் எண்டு எழுதி, உள்ள போய் குந்த, அங்க இருக்கிற ஆக்களுக்கு விசரே?

சரி அய்யா, வயசுக்கு மூத்தனியள்.. நீஙகள் சொல்லுறது தான் சரி.... விடுங்கோ.... அடம் பிட்யாதீங்கோ அய்யா!

மகிழ்ச்சி தானே... 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

இதென்ன வில்லங்கமா கிடக்குதய்யா, இவரோட... அடம் பிடிக்கிறியள்....

அங்க... தேர்தல் நோக்கத்தோட இருட்டடிப்பு செய்திருக்கினம் எண்டு எழுதி, உள்ள போய் குந்த, அங்க இருக்கிற ஆக்களுக்கு விசரே?

சரி அய்யா, வயசுக்கு மூத்தனியள்.. நீஙகள் சொல்லுறது தான் சரி.... விடுங்கோ.... அடம் பிட்யாதீங்கோ அய்யா!

மகிழ்ச்சி தானே... 😂

மன்னிக்க வேண்டும் நாதம்: இது வில்லங்கமும் அல்ல பிடிவாதமும் அல்ல! 

பொய்யான தகவல்களால் கொரனா தடுப்புகளில் ஈடுபட்ட நிர்வாகங்களை சந்தேகத்துக்குள்ளாக்கியதால் தான் பரவல் கூடி மக்கள் இறந்தனர் மேற்கு நாடுகளில். உலக சுகாதார ஸ்தாபனம் இதை ஜூன் மாதத்திலேயே சொல்லி விட்டது!

எனவே நீங்கள் இப்படி பொய்யான தகவல்களைப் பரப்பும் போது அதன் உண்மைத் தன்மையை யாழில் இருப்போருக்கு சுட்டிக் காட்டவே கேட்டேன். மரணம் தரும் வைரசு விடயத்திலும் நாங்கள் அசட்டையாக பொய்களை உண்மை போல பரப்புவது பொறுப்பற்ற செயல்! 


 (அனேகமாக நான் உங்கள் வயதுக்கு மூத்தவனும் அல்ல!, ஆனால் உங்களுக்கு சுத்த அப்படியொரு காரணம் தேவையென்றால் என்னை "தாத்தா" என்றே வைத்துக் கொள்ளுங்கள்!😊

 

http://www.dailymirror.lk/breaking_news/Jpura-Uni-to-examine-rapid-spread-of-Covid-19/108-198899

வழமை போல வாசிக்காம நீங்க இணைத்த இந்த இணைப்பின் படி ஒவ்வொரு மாவட்ட மருத்துவப் பிரிவில் இருந்து தான் பி.சி.ஆர் பரிசோதனை தகவல் சவேந்திர சில்வாக்குப் போகுது  என்று தெளிவா இருக்குது. எனவே கேஸ்களை மறைக்க மாவட்ட மருத்துவப் பிரிவும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்! 

Edited by Justin
நாதம் மாற்றிய மேல் பதிவுக்கான பதில் சேர்க்கப் பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

மன்னிக்க வேண்டும் நாதம்: இது வில்லங்கமும் அல்ல பிடிவாதமும் அல்ல! 

பொய்யான தகவல்களால் கொரனா தடுப்புகளில் ஈடுபட்ட நிர்வாகங்களை சந்தேகத்துக்குள்ளாக்கியதால் தான் பரவல் கூடி மக்கள் இறந்தனர் மேற்கு நாடுகளில். உலக சுகாதார ஸ்தாபனம் இதை ஜூன் மாதத்திலேயே சொல்லி விட்டது!

எனவே நீங்கள் இப்படி பொய்யான தகவல்களைப் பரப்பும் போது அதன் உண்மைத் தன்மையை யாழில் இருப்போருக்கு சுட்டிக் காட்டவே கேட்டேன். மரணம் தரும் வைரசு விடயத்திலும் நாங்கள் அசட்டையாக பொய்களை உண்மை போல பரப்புவது பொறுப்பற்ற செயல்! 


 (அனேகமாக நான் உங்கள் வயதுக்கு மூத்தவனும் அல்ல!, ஆனால் உங்களுக்கு சுத்த அப்படியொரு காரணம் தேவையென்றால் என்னை "தாத்தா" என்றே வைத்துக் கொள்ளுங்கள்!😊

 

http://www.dailymirror.lk/breaking_news/Jpura-Uni-to-examine-rapid-spread-of-Covid-19/108-198899

வழமை போல வாசிக்காம நீங்க இணைத்த இந்த இணைப்பின் படி ஒவ்வொரு மாவட்ட மருத்துவப் பிரிவில் இருந்து தான் பி.சி.ஆர் பரிசோதனை தகவல் சவேந்திர சில்வாக்குப் போகுது  என்று தெளிவா இருக்குது. எனவே கேஸ்களை மறைக்க மாவட்ட மருத்துவப் பிரிவும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்! 

தாத்தா,

பிரிட்டனில் கூட, சரியான பாதிப்பு விபரங்கள் தரப்படவில்லை.

வைத்தியசாலைக்கு மருத்துவ ஊழியர்கள் வருவது தடைபடும் என்பதால், எங்கே, எந்த வைத்தியசாலையில், எந்த ஊரில் எவ்வளவு பேர் மரணம் அடைந்தார்கள் என்று அரசு விபரமாக சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாகவே சொன்னார்கள். மக்களும் பதறலாம் என்பதால், இதை ஒரு வித இருட்டடிப்பு என்று சொல்லலாம்.

மே மாதம் எமக்கு பக்கத்தில் உள்ள வைத்திய சாலையில், அறை அறையாக கறுப்புப் பைகளில் கொரோணாவால் இறந்த பிணங்கள் இருப்பதாக காண்பித்தார்கள். ஒருவர், அதனூடு நடந்து போய் படம் பிடிப்பது போல் இருந்தது. வாற்சப்பில் வீடியோ வந்தது.

அரத்துப் பரத்து விசாரித்தால், பொய்.... அப்படி இருந்திருந்தால், சீல் பண்ணி இருந்திருப்போம், தொற்றால் இறந்த சீல் பண்ணப் படாத உடல்கள் மத்தியில், யாராவது போய் படம் எடுத்திருக்க முடியுமே... என்று பதற்றத்தை தணித்தார்கள்.

பதட்டம் தணிக்க, செய்தித்தணிக்கை அல்லது செய்தியை மட்டுப்படுத்தல் முக்கியமானது.

உங்க ஊரில.... பதட்டம் தணிக்க, டிரம்பர், முகமூடி போடாமல், அலம்பறை பண்ணிணாரே.

இலங்கையில், தேர்தல் வைத்து முடித்து, அரசமைபைப்பை மாத்த அவசரப்பட்டார்கள்.

அதனால்.... கோரணாவை கட்டுப்படுத்தி விட்டோம்.... தேர்தலை பயமில்லாமல் வைக்கலாம் என்று சொல்லி நடாத்தி முடித்து விட்டார்கள்.

இனி, கொரோணாவாலும், பொருளாதாரத்தாலும் நாடு எக்கேடு கெட்டாலும் அவர்களுக்கென்ன?

இதில பொய் செய்தி சொல்ல வேண்டிய தேவையும் எனக்கில்ல தாத்தா.

ரேக் இட் ஈசி தாத்தா.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2020 at 17:08, Justin said:

திறமையான கல்விப் பெற்ற ராஜதந்திரிகள் தான் அந்த பல வீடுகளை ஒரே நேரத்தில் சமாளிக்க காரணம்!

எழுதி ஒரு நாள் ஆகவில்லை சொறிலங்கா அரசியல்வாதிகளே அமெரிக்காவுக்கு எதிராகவும் சைனாவுக்கு ஆதரவு  நிலையிலும் மாறி விட்டனர் .

9 minutes ago, Nathamuni said:

பிரிட்டனில் கூட, சரியான பாதிப்பு விபரங்கள் தரப்படவில்லை.

வைத்தியசாலைக்கு மருத்துவ ஊழியர்கள் வருவது தடைபடும் என்பதால், எங்கே, எந்த வைத்தியசாலையில், எந்த ஊரில் எவ்வளவு பேர் மரணம் அடைந்தார்கள் என்று அரசு விபரமாக சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாகவே சொன்னார்கள். மக்களும் பதறலாம் என்பதால், இதை ஒரு வித இருட்டடிப்பு என்று சொல்லலாம்.

வளர்ந்த பெரிய நாடுகளே சரியான தரவுகள் கொடுக்காமல் இருக்கின்றனர் .

இங்கு நம்ம பெரியவர் பிடித்த மயில் நாலுகாலம் மல்லுக்கட்டுவது நேர விரயம் .

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

தாத்தா,

பிரிட்டனில் கூட, சரியான பாதிப்பு விபரங்கள் தரப்படவில்லை.

வைத்தியசாலைக்கு மருத்துவ ஊழியர்கள் வருவது தடைபடும் என்பதால், எங்கே, எந்த வைத்தியசாலையில், எந்த ஊரில் எவ்வளவு பேர் மரணம் அடைந்தார்கள் என்று அரசு விபரமாக சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாகவே சொன்னார்கள். மக்களும் பதறலாம் என்பதால், இதை ஒரு வித இருட்டடிப்பு என்று சொல்லலாம்.

மே மாதம் எமக்கு பக்கத்தில் உள்ள வைத்திய சாலையில், அறை அறையாக கறுப்புப் பைகளில் கொரோணாவால் இறந்த பிணங்கள் இருப்பதாக காண்பித்தார்கள். ஒருவர், அதனூடு நடந்து போய் படம் பிடிப்பது போல் இருந்தது. வாற்சப்பில் வீடியோ வந்தது.

அரத்துப் பரத்து விசாரித்தால், பொய்.... அப்படி இருந்திருந்தால், சீல் பண்ணி இருந்திருப்போம், தொற்றால் இறந்த சீல் பண்ணப் படாத உடல்கள் மத்தியில், யாராவது போய் படம் எடுத்திருக்க முடியுமே... என்று பதற்றத்தை தணித்தார்கள்.

பதட்டம் தணிக்க, செய்தித்தணிக்கை அல்லது செய்தியை மட்டுப்படுத்தல் முக்கியமானது.

உங்க ஊரில.... பதட்டம் தணிக்க, டிரம்பர், முகமூடி போடாமல், அலம்பறை பண்ணிணாரே.

இலங்கையில், தேர்தல் வைத்து முடித்து, அரசமைபைப்பை மாத்த அவசரப்பட்டார்கள்.

அதனால்.... கோரணாவை கட்டுப்படுத்தி விட்டோம்.... தேர்தலை பயமில்லாமல் வைக்கலாம் என்று சொல்லி நடாத்தி முடித்து விட்டார்கள்.

இனி, கொரோணாவாலும், பொருளாதாரத்தாலும் நாடு எக்கேடு கெட்டாலும் அவர்களுக்கென்ன?

இதில பொய் செய்தி சொல்ல வேண்டிய தேவையும் எனக்கில்ல தாத்தா.

ரேக் இட் ஈசி தாத்தா.

 

 

 

பேராண்டி:grin:

நாதம் எதையாவது எழுதினால் அதில் உண்மையான தகவலை/ஆதாரத்தை பூதக் கண்ணாடி வைத்துத் தான் தேட வேணுமென்பது யாழ் வாசகர்களுக்கு பல காலமாகத் தெரிந்தது தானே பேராண்டி!

வட்சப்பில் வருவதையும், டெய்லி மிரரில் செய்திக்கு வரும் பின்னோட்டத்தையும் வைத்து ஒரு கற்பனையை உருவாக்குவது கற்பனை வளத்தை வளர்க்கும்! ஆனால் செய்தி இருட்டடிப்பெல்லாம் இலங்கையில் கொரனாவைப் பொறுத்த வரை நடக்கவில்லை என்பது தான் சாதாரணமாக செய்தி ஊடகங்களைப் பார்போருக்கும் , ஊரில் வசிப்போருடன் தொடர்பில் இருப்போருக்கும் தெரிந்தது!

ஆனால் , நீங்களும் பெருமாளும் "சாதாரண ஆட்கள்" கிடையாது என்பதும் யாழில் தெரிந்த செய்தி தானே? 

24 minutes ago, பெருமாள் said:

எழுதி ஒரு நாள் ஆகவில்லை சொறிலங்கா அரசியல்வாதிகளே அமெரிக்காவுக்கு எதிராகவும் சைனாவுக்கு ஆதரவு  நிலையிலும் மாறி விட்டனர் .

வளர்ந்த பெரிய நாடுகளே சரியான தரவுகள் கொடுக்காமல் இருக்கின்றனர் .

இங்கு நம்ம பெரியவர் பிடித்த மயில் நாலுகாலம் மல்லுக்கட்டுவது நேர விரயம் .

பெருமாள், ஏனைய சில இடங்களில் உங்கள் கருத்துப் படி ஏனையோருக்குத் தெரியாத பல விடயங்கள் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்று அறிகிறேன்😊! எடுத்து விடுங்கோவன், பிரிட்டனில் உண்மையான மரணம்/தொற்று இலக்கங்கள் என்ன எண்டு? 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

எழுதி ஒரு நாள் ஆகவில்லை சொறிலங்கா அரசியல்வாதிகளே அமெரிக்காவுக்கு எதிராகவும் சைனாவுக்கு ஆதரவு  நிலையிலும் மாறி விட்டனர் .

 

25 minutes ago, Justin said:

பெருமாள், ஏனைய சில இடங்களில் உங்கள் கருத்துப் படி ஏனையோருக்குத் தெரியாத பல விடயங்கள் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்று அறிகிறேன்😊! எடுத்து விடுங்கோவன், பிரிட்டனில் உண்மையான மரணம்/தொற்று இலக்கங்கள் என்ன எண்டு? 

திசை திருப்ப வேண்டாம் சார் விடயத்துக்கு வாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்களுக்காக சுமத்திரன் ஸ்டைலில் 

  படித்து தெரிந்து கொள்ளுங்க 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.