Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம்  புறப்பட்ட நடிகை குஷ்பு கைது!! | Dinakaran

தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது

நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்புவை பொலிஸார் கைது செய்தனர்.

பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதாக பா.ஜ.க.வினர் மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர்.

அதற்கமைய கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனைக் கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜ.க.வின் நிர்வாகிகள் கலந்துகொள்ளவிருந்தனர். எனினும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் தடை விதித்தது.

இதேநேரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவோர் மீது சிதம்பரம் உதவி ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரத்தில் பா.ஜ.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தடையை மீறிச் சென்ற குஷ்புவை பொலிஸார் முட்டுக்காடு அருகே கைது செய்தனர்.

http://athavannews.com/தடையை-மீறி-பா-ஜ-க-ஆர்ப்பாட/

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு கைது:தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்!

 

spacer.png

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மனுதர்மம் பற்றிய பேச்சைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று (அக்டோபர் 27) குஷ்பு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்துக்காக சிதம்பரம் புறப்பட்ட குஷ்புவை வழியிலேயே போலீஸார் கைது செய்தனர்.

மனுதர்மத்தில் பெண்கள் பற்றி குறிப்பிட்டிருப்பதை சுட்டிக் காட்டி திருமாவளவன் பேசியதைக் கண்டித்து சில நாட்களுக்கு முன்பு, பேட்டி கொடுத்த குஷ்பு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த நிலையில்தான் தமிழகம் முழுக்க பாஜக சார்பில் திருமாவளவனை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிதம்பரத்தில் குஷ்பு, மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு போலீஸார் நேற்று தடை விதித்த நிலையில் குஷ்புவோ, ‘நீங்கள் ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். நான் எப்படியாவது சிதம்பரம் வந்துவிடுவேன். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ என்று மாவட்ட பாஜகவினரிடம் கூறியிருந்தார்.

 

இதை அறிந்த போலீஸார் குஷ்புவை இன்று அதிகாலை முதலே கண்காணித்தனர். இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து வழக்கமாக, தான் பயன்படுத்தும் கார் அல்லாமல் வேறுகாரில் சிதம்பரத்தை நோக்கி ஈசிஆர் சாலையில் பயணப்பட்டார் குஷ்பு. சென்னை போலீஸார் உடனடியாக காஞ்சிபுரம் போலீஸுக்கு தகவல் கொடுக்க, மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீஸ் டீம் முட்டுக்காடு அருகே வந்துகொண்டிருந்த குஷ்புவின் வாகனத்தை மறித்து அவரைக் கைது செய்தது. அவர் வந்த காரில் இருந்து அவரை இறக்கி, போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர் போலீஸார்.

அதேபோல செங்கல்பட்டில் வசிக்கும் பாஜக பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு திண்டிவனம் தொழிற்பேட்டை டோல்கேட் அருகே செல்லும்போது கைது செய்யப்பட்டார். ராகவனை அவரது காரிலேயே அழைத்துச் சென்றனர் போலீஸார்.

போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தால், “சிதம்பரத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தால், அங்கே வலுவாக இருக்கக்கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் திட்டமிட்டிருந்தார்கள். குஷ்பு ஒருவேளை தாக்கப்படக் கூடும். அப்படித் தாக்கப்பட்டால் பாஜக அதை வைத்தே மிகப்பெரிய அரசியல் செய்வார்கள். இது பெரிய அளவுக்கான சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் இருந்தன. எனவேதான் குஷ்புவுக்கு பாதுகாப்பு அளிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது”என்கிறார்கள்.


https://minnambalam.com/politics/2020/10/27/16/kushbu-arrest-law-and-order-issue-chidambaram

 

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு தங்கவைக்கப்பட்ட விடுதி முன்பு விசிக தர்ணா: போலீஸ் தடியடி!

spacer.png

 

விசிக தலைவர் திருமாவளவனின் மனு தர்மம் பற்றிய பேச்சைக் கண்டித்து அவரது மக்களவைத் தொகுதியான சிதம்பரத்தில் குஷ்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தார். அதற்கு காவல் துறையினர் தடை விதித்தனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து கார் மூலமாக சென்ற குஷ்புவை, முட்டுக்காடு அருகே காவல் துறையினர் கைது செய்தனர். குஷ்பு உள்ளிட்ட 20 பேரை காவல் துறை வேனில் ஏற்றிய போலீசார், கேளம்பாக்கம் பையூர் பகுதியிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் தடுத்துவைத்தனர்.

அப்போது பேசிய குஷ்பு, சிதம்பரம் செல்வதற்கு தடை இருந்தாலும், குறைந்தபட்சம் கடலூர் வரையாவது அனுமதிப்பார்கள் என எதிர்பார்த்ததாகவும், ஆனால், செங்கல்பட்டு எல்லை ஆரம்பித்ததும் தங்களை கைதுசெய்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதற்காகத்தான் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். அவரை அண்ணன் திருமாவளவன் என்று அழைக்கும் அளவுக்கு மரியாதை வைத்திருந்தேன். பெண்களுக்கு எதிராக பேசியிருக்கும்போது எவ்வாறு அவரை அண்ணன் என அழைக்க முடியும் என்று தெரியவில்லை என்று கூறிய குஷ்பு,

 

“திருமாவளவன் சொன்னது 3,000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. தற்போது, அம்பேத்கர் எழுதிய சட்டம்தான் நடைமுறையில் இருக்கிறது. தேவையில்லாத விஷயத்தை இப்போது ஏன் பேசுகிறார். திருமாவளவன் மன்னிப்பு கேட்கும் வரை சும்மா விடப்போவதில்லை. கைது செய்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

spacer.png

குஷ்பு மீது ஐபிசி பிரிவுகள் 151, 7(1)(a) ஆகியவற்றின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குஷ்பு கைது செய்யப்பட்ட தகவலறிந்த அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குஷ்பூ தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விடுதியின் கேட்டை உடைத்து விசிகவினர் உள்ளே செல்ல முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் குஷ்புவுக்கு ஆதரவாக பாஜகவினரும் கூறினர்.

பாஜக மற்றும் விடுதலைச் சிறுத்தையினர் இடையே தள்ளுமுள்ளு போராட்டம் நடைபெற்றதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

https://minnambalam.com/politics/2020/10/27/19/vck-protest-against-kushboo-on-his-arrested-hotel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

குஷ்பு தங்கவைக்கப்பட்ட விடுதி முன்பு விசிக தர்ணா: போலீஸ் தடியடி!

கைது செய்த  குஷ்புவை... சிறைக்கு கொண்டு போகாமல்....

விடுதிக்கு.... ஏன், கொண்டு போனவர்கள்? 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

கைது செய்த  குஷ்புவை... சிறைக்கு கொண்டு போகாமல்....

விடுதிக்கு.... ஏன், கொண்டு போனவர்கள்? 😎

சரி...சரி  விடுங்க சிறித்தம்பி. ****.

Bild Bild

Bild Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

சரி...சரி  விடுங்க சிறித்தம்பி. ****.

Bild Bild

Bild Bild

குமாரசாமி அண்ணை... யார் பார்த்த வேலை இது? 😅

படங்கள்..... நல்லாய் இருக்கு. 😁 😂

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த திரைப்பட படப்பிடிப்பு ...

 

Edited by பராபரன்

  • கருத்துக்கள உறவுகள்

Hello...அறிவுஜீவிகளே..பதில் சொல்லிட்டு போங்க.. | செந்தில் வேல்-வீச்சு (Does Kushboo knew this..?)

 

  • கருத்துக்கள உறவுகள்

நியாஞமான கேள்விகள்.
இணைப்புக்கு நன்றி உடையார்.

1 hour ago, உடையார் said:

Hello...அறிவுஜீவிகளே.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நியாஞமான கேள்விகள்.
இணைப்புக்கு நன்றி உடையார்.

 

 

ஆகா காமடி 4.20 இல் இருந்து பாருங்கள், சும்ம சூட்டிங் நடந்திருக்கு 😂🤣

 

கேவலமான அரசியல் அஸ்கு புஸ்கு குஸ்பு

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை அவமன்படுத்தினரா திருமாவளவன் ll BJP குற்றச்சாட்டு என்ன ll திசைகள் எட்டு

 

  • கருத்துக்கள உறவுகள்

மனு தர்மம் மாயைனா.!? ஏன் உங்களுக்கு எறியுது.!? கலையரசி அம்மாள் எதிர் கேள்வி

 

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை மிகவும் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும், அத்துடன் தமிழரைத் தாழ்த்தி பிராமணரை உயர்த்தும் மனுதர்ம சாத்திரம் பற்றிப் பட்டி தொட்டிகளில் உள்ளோரும் அறியும்படி செய்து விழிப்புற வைத்த குசுப்புவுக்கு வாழ்த்துக்கள்,!!

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்து மாணவர்களுக்கு எப்போ போராட போறீங்க?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.