Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்சின் உற்பத்தி பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஸ்கரிக்க வேண்டும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

PicsArt_10-28-02.28.43.jpg

 

ஊடக பிரிவு

முஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைதூதர் 

முஹம்மது நபியைக் கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஷ்கரிக்க வேண்டும் எனஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் வேண்டுகோள்

விடுத்துள்ளார்.

 

 

கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ள ஐரோப்பா, மத நிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சியுறுவது கவலையளிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

 

 

பிரான்ஸில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நடந்து கொண்ட விதம் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கள் குறித்து ஹாபிஸ் நஸீர்அஹமட் எம்பி தெரிவித்துள்ளதாவது;

தங்களது உயிரை விடவும் இறைதூதர் முஹம்மது நபியை முஸ்லிம்கள் மேலாக மதிக்கின்றனர். இஸ்லாம் வலியுறுத்தும் மறுவுலக வாழ்வின் ஈடேற்றத்துக்கு முஹம்மது நபியின் "ஷபாஅத்" பரிந்துரை அவசியம் என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கை. இதற்காகத்தான் நாளாந்தமும் ஐவேளைத் தொழுகையிலும் நபிமீது ஸலவாத்துச் சொல்கிறோம்.அருள்மறை விளக்காகத் திகழும் இத்தனை முக்கியம் வாய்ந்த இறைத்தூதரை ஐரோப்பா தொடர்ந்தும் கேலி செய்தே வருகிறது.

சிலுவை யுத்த தோல்வியாளார்களின் மன விகாரங்கள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் வெளிப்படுவதாகவே முஸ்லிம் உலகம் இதைக் கருதுகிறது.

 

 

மனிதர்களிடையே மோதலைத் தூண்டி இரத்தத்தை ஓடச் செய்யும் இவ்வாறான கருத்துச் சுதந்திரங்கள் அவசியம்தானா, இதுபற்றி ஐரோப்பா ஏன் சிந்திக்கவில்லை? சத்திய இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களே இவ்வாறான இழி செயலைப் புரிகின்றனர்.

இதிலிருந்தாவது இஸ்லாம் வாளாலும் பலவந்தத்தாலும் பரப்பப்படவில்லை என்பதை ஐரோப்பா குறிப்பாக டென்மார்க் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். மிகப் பெரிய கலாசார மோதல்களுக்குத் தூபமிடும் இவ்வாறான இழி நோக்குடைய கருத்துச் சுதந்திரத்தை பிரான்ஸ் உடனடியாக நிறுத்துவது அவசியம்.நிறுத்தும் வரைக்கும் அந்நாட்டின் உற்பத்திப் பொருட்களை முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன.

 

 

இதைப் பின்பற்றி இலங்கை முஸ்லிம்களும் பிரான்ஸின் பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும்.மொழி,நிறம்,பிரதேசம் கடந்து மதத்தால் ஒன்றிணைந்த முஸ்லிம்களின் உணர்வுகள் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளதுதான் எமது பலம். கொரோனாவின் கொடிய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது முஸ்லிம் உலகம் ஒன்று கூடிப் பிரான்ஸைக் கண்டிக்கின்றமை, உயிரை விடவும் முஸ்லிம்கள் இறைதூதர் முஹம்மது நபியை நேசிக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.madawalaenews.com/2020/10/blog-post_687.html

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் வசிக்கும்.... இலங்கை முஸ்லீம்களுக்கும் இது பொருந்துமா?

பிரான்ஸ் பொருட்கள் என்று தனித்தனியாக புறக்கணிக்காமல்  ஒட்டு மொத்தமாக பிரான்ஸ் நாட்டையே  எல்லா முஸ்லீம் மதவாதிகளும்  புறக்கணித்து பிரான்ஸில் இருந்து வெளியேறலாமே!  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

பிரான்ஸ் பொருட்கள் என்று தனித்தனியாக புறக்கணிக்காமல்  ஒட்டு மொத்தமாக பிரான்ஸ் நாட்டையே  எல்லா முஸ்லீம் மதவாதிகளும்  புறக்கணித்து பிரான்ஸில் இருந்து வெளியேறலாமே!  

ருல்பன்... அடி மடியில், கைவைக்கக் கூடாது. 😀

40 minutes ago, colomban said:

மத நிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சியுறுவது கவலையளிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஆள்கின்ற நாடுகளில் மற்ற மதங்களுக்கு எதிரான செயல்பாடுகளை கண்டு நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம். 

48 minutes ago, colomban said:

மனிதர்களிடையே மோதலைத் தூண்டி இரத்தத்தை ஓடச் செய்யும் இவ்வாறான கருத்துச் சுதந்திரங்கள் அவசியம்தானா,

உங்களுக்கு அது அவசியம் இல்லை. எனவே தான் உங்களுக்கு உரிய நாட்டில் முழு உரிமையுடன் நீங்கள் தலைகீழா இருக்க உரிமையுண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

பிரான்ஸ் பொருட்கள் என்று தனித்தனியாக புறக்கணிக்காமல்  ஒட்டு மொத்தமாக பிரான்ஸ் நாட்டையே  எல்லா முஸ்லீம் மதவாதிகளும்  புறக்கணித்து பிரான்ஸில் இருந்து வெளியேறலாமே!  

இவர்கள் பிரான்ஸ் நாட்டையே புறக்கணிப்பது தான் சரியான முடிவு. பிரான்ஸ் நாட்டைவிட்டு வெளியேறி தங்கள் மதவாத நாட்டில் குடியேறி கல்லால் எறிந்து கொல்லுதல் கழுத்துக்கு கத்தி வைத்தல் இப்படி தங்கள் மத கட்டளைகளை நிறைவேற்றி மகிழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதத்துக்கும் தீவிரவாதத்துக்கு தொடர்பு இல்லை 
இஸ்லாமை தீவரவாதத்துடன் இணைத்து மேற்கு நாட்டு மக்களை 
முஸ்லிகளின் எதிரிகள் ஆக்கியத்தில் பெரும்பங்கு யூதர்களை சாரும். 

தமிழர்களின் நீதியான போராட்டம் எவ்வாறு தீவிரவாத முத்திரை 
குத்தி உலக சண்டியர்களால் முடிக்கபட்டதோ அதிலும் கீழான 
நிலையில் அரபு நாடுளின் இயற்கை வளங்களை அவர்களை அடித்து 
துன்புறுத்திவிட்டு மேற்கு  உலகம் அள்ளிக்கொண்டு போகிறது.

பிரான்ஸ் அதிபரின் கடந்தவார பேச்சு மிகவும் கண்டிக்கதக்கது 
ஒரு மதத்தை சார்ந்த மக்களை சாடி ஒரு நாட்டின் அதிபர் பேசுவது 
முறையற்ற செயல். அவருடைய பேச்சை தீவிரவாதிகளுக்கு எதிரானதாக 
உள்ளடக்கி வைத்திருக்க வேண்டும். 

இங்கு கருத்து எழுதும் சிலர் சிந்திக்க வேண்டியது 
பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகள் தங்கள் வேலையை தமது 
சொந்த நாடுகளில் வைத்திருப்பின்  முஸ்லிம்களுக்கு தமது சொந்த நாட்டை 
விட்டு அகதிகளாக பிரான்சுக்கு வரவேண்டிய தேவையே வந்திருக்காது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.