Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும் மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!

 

1604130621126116.jpg

தனக்கு மற்றோருவருடன் காதல் இருப்பதாக கூறி மண மேடையிலேயே மணமகனை மணமகள் நிராகரித்த சம்பவம் உதகையில் நிகழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஆனந்த் என்பவருக்கும் கோத்தகிரி அருகேயுள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் கடந்த 29 -ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். திருமணத்துக்காக மட்டக்கண்டி கிராமத்தில் உற்றார், உறவினர்கள் கூடியிருந்தனர். இவர்கள் படுகர் இனத்தை சேர்ந்தவர்கள்.

படுகர் இன மக்களின் சம்பிரதாயப்படி, தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன் மூன்று முறை 'திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என்று கேட்க வேண்டும் . மணப்பெண் 'சம்மதம்' என்று தெரிவித்தால் மட்டுமே மணமகன் தாலியை கட்ட முடியும்.

அதன்படி, மணமகன் ஆனந்த், மணப்பெண் பிரியதர்ஷினியிடத்தில் 'தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என இருமுறை கேட்ட போது அவர் மௌனமாக இருந்தார். மூன்றாவது முறையாக மணமகன் கேட்ட போது வெடித்து அழுது 'எனக்கு சம்மதமில்லை' என்று பிரியதர்ஷினி உரக்க கூற, திருமண பந்தலில் பதற்றம் தொற்றிக் கொண்டது. பிரியதர்ஷினியை சமாதானப்படுத்த பெற்றோர்கள் முயன்றனர், ஆனாலும் பலன் இல்லை.

மணமகள் பிரியதர்ஷினி மணப்பந்தலில் கூறுகையில், ''தன்னை திருமணம் செய்து கொள்ள வேறு ஒருவர் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுத்திருங்கள். அவர் எனக்காக தனது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். என் காதலரின் குழந்தைகளை நான்தான் பார்த்துகொள்ள வேண்டும். இவரை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். எனக்கு இந்த திருமணம் வேண்டாம்" என்றவாறே அங்கிருந்து செல்ல முற்பட்டார். 🤭

இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன மாப்பிள்ளை தாலி கட்டாமல் மண மேடையை விட்டு இறங்கி சென்று விட்டார்.

பின்னர், பெற்றோர் மணமகள் பிரியதர்ஷினியை காரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். மேலும், இனி வீட்டுக்கு வர வேண்டாம் எங்கேயாவது சென்று விடும்படி கூறி அவரை அனுப்பி விட்டு பெற்றோர் மட்டும் வீட்டுக்கு அழுதபடி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, 'இத்தனை நாள் பொறுத்து இருந்து விட்டு மண நாள் வரை காத்திருந்து அந்த பெண் ஏன் சொல்ல வேண்டும். திருமண கனவில் இருந்த மற்றோரு ஆணை ஏன் அவமதிக்க வேண்டுமென்றும்..?' சமூகவலைத் தளங்களில் அந்த பெண்ணுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.                    

பாலிமர் செய்திகள்

 

டிஸ்கி:

இதை சொல்ல, இந்தப் பொண்ணு மணமேடை வரை வந்திருக்க வேண்டிய தேவையே இல்லையே..!

பாவம் மாப்பிள்ளையாக வந்தவர்..! ☹️

 

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

1604154021126173.jpg

சென்னையில் இருந்து வருவதாக வாக்குறுதி அளித்த காதலன் அரை மணி நேரத்தில் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஊட்டியில் நடக்க விருந்த திருமணத்தை நிறுத்திய மணமகள் நாள் முழுக்க காத்திருந்தும் காதலன் வராத நிலையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சூர் பகுதியில் உள்ள மட்டகண்டி கிராமத்தில் நடக்க இருந்த திருமணத்தை, மணமேடையில்..., தாலிகட்டும் நேரத்தில்..., மணமகனை தடுத்து 'தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை'யென போர்க்கொடி உயர்த்தி திருமணத்தை நிறுத்தியவர் மணப்பெண் பிரியதர்சினி..!

"ஊரார் சுற்று போட்டாலும்...தாயார் அடிக்க பாய்ந்தாலும்... அஞ்சாமல் தன்னை தேடி தனது காதலர் இன்னும் அரைமணி நேரத்தில் இங்கு வருவார்" என்று கூறி திருமணத்தை நிறுத்திய மணமகள் பிரியதர்ஷினி, காதலனையாவது கரம் பிடித்தாரா ? என்பது பலரது கேள்வியாக இருந்தது.

மணமகளின் கலாட்டாவால் கல்யாணம் நிறுத்தப்பட்டது கடந்த 29ந்தேதி...! அன்று முழுவதும் பிரியதர்ஷனி இலவுகாத்த கிளியாக காத்திருந்தும் கடைசிவரை அவரது சென்னை காதலன், அங்கு வரவில்லை...

இதையடுத்து தங்களது மகளை காரில் அழைத்துச்சென்ற மணமகளின் பெற்றோர் அவரை 'லவ்டேல்' என்று அழைக்கப்படும் சுற்றுலா பகுதியில் சாலையில் இறக்கிவிட்டு, "இனி வீட்டிற்கு வரக்கூடாது" என்று எச்சரித்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

திருமணத்துக்கு முன்பாக தான் அங்கு வந்து விடுவதாக வாக்குறுதி அளித்த காதலன், டாடா காட்டிய நிலையில், காதலனை தேடிச்சென்று கரம் பிடிப்பது என்ற லட்சியத்துடன் அந்தப் பெண் சென்னைக்கு புறப்பட்டதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே திருமணத்தை நிறுத்திய தங்களது மகளால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக மனம் நொந்த பெற்றோர், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் 'மணப்பெண் பியதர்ஷினி காதலிக்கும் நபர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், முறைப்படி மனைவியை விவாகரத்து செய்து கொண்டால் மட்டுமே பியதர்ஷினியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளமுடியும் என்பதால், காதலனுக்காக இலவு காத்த கிளியாக பட்டணத்தில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், திருமணத்தை நிறுத்திய மணமகள் பிரியதர்ஷினி..' என்கின்றனர் அவரது உறவினர்கள்.

பாலிமர் செய்திகள்

டிஸ்கி:

இதைத்தான் அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை என்பார்களோ..? கொடுமை..!  ☹️  

துணிவோடு நல்லா வாழ்ந்தால் சரிதான், வாழ்த்துக்கள்.. 💐                 

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை  சகோ

இப்படி  பல .....???

8 hours ago, ராசவன்னியன் said:

''தன்னை திருமணம் செய்து கொள்ள வேறு ஒருவர் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுத்திருங்கள். அவர் எனக்காக தனது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். என் காதலரின் குழந்தைகளை நான்தான் பார்த்துகொள்ள வேண்டும். இவரை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். எனக்கு இந்த திருமணம் வேண்டாம்"

 

 

8 hours ago, ராசவன்னியன் said:

பாவம் மாப்பிள்ளையாக வந்தவர்..!

இந்த கதையில் ஏற்கனவே குழந்தைகளுடன் இருந்த ஒருபெண்ணின் தாலி அறுககப்பட்டிருக்கு. அதை கடைசிநேரத்தில் என்றாலும் வெளிப்படுத்திய பெண்ணிடம் ஒரு நியாயம் இருக்கு. அந்த வகையில் மாப்பிள்ளை கொடுத்துவைத்தவர்தான். எல்லாம் தாலி கட்டியபின் தெரியவந்திருந்தால் மாப்பிள்ளை நிலை பரிதாபமாக இருந்திருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சண்டமாருதன் said:

இந்த கதையில் ஏற்கனவே குழந்தைகளுடன் இருந்த ஒருபெண்ணின் தாலி அறுககப்பட்டிருக்கு. அதை கடைசிநேரத்தில் என்றாலும் வெளிப்படுத்திய பெண்ணிடம் ஒரு நியாயம் இருக்கு. அந்த வகையில் மாப்பிள்ளை கொடுத்துவைத்தவர்தான். எல்லாம் தாலி கட்டியபின் தெரியவந்திருந்தால் மாப்பிள்ளை நிலை பரிதாபமாக இருந்திருக்கும். 

அட ஏன் சார், நீங்க வேறை..!

ஏற்கனவே திருமணமானவரை குழப்பத்தில் ஆழ்த்தி, வரவிருந்த மாப்பிள்ளைக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, இப்பொழுது வீதியில் நிற்கும் பெண்ணின் செயலில் நியாயமும், தர்மமும் இருப்பதாக தெரியவில்லை.

மாப்பிள்ளை தப்பித்தார் என சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

படுகர் இன மக்களின் சம்பிரதாயப்படி, தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன் மூன்று முறை 'திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என்று கேட்க வேண்டும் . மணப்பெண் 'சம்மதம்' என்று தெரிவித்தால் மட்டுமே மணமகன் தாலியை கட்ட முடியும்.

மணமகன் மணமகளிடம் கேட்பதை விட பெற்றோர்களே ஒன்றுக்கு 100 தடவை தங்கள் பிள்ளைகளிடம் கேட்டு முடிவெடுக்கலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியாண பேச்சுக்கால் நடக்கேக்கையே பெட்டை இதை சொல்லியிருக்கலாமெல்லோ?
நான் பெட்டைக்கு தகப்பனாயோ இல்லை அண்ணனாயோ இருந்தால் மணமேடையிலையே வைச்சு எலும்பை நொருக்கியிருப்பன்...😡

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற செய்திகள் இன்னமும் நிறைய வரலாம் 
இப்போதைய இளைஞர் யுவதிகளிடம் புரிதல் இல்லாமையே 
இதற்கு அடிப்படை காரணம். இதுக்கு ஒரே வழி 
எல்லோரும் காஜலிசம் பழகுவதுதான்... காஜலிசம் இந்த 
பிரபஞ்ச கோட்ப்பாடுகளை எளிதாக புரிய வைக்கிறது 
அந்த புரிதல் மகிழ்வான வாழ்வுக்கு வழி சமைக்கிறது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"பொய் கூறி திருமணத்தை நிறுத்தினேன்"-திருமணம் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!

100875.webp

கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்துக்கும், தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமக்கள் மணக்கோலத்தில் மேடையில் வீற்றிருந்தனர். படுகர் இன மரபுப்படி, மணமேடையில் மணப்பெண் 3 முறை சம்மதம் தெரிவித்த பின்பே தாலிகட்ட வேண்டும்.

அதன்படி சம்மதம் கேட்டபோது மௌனம் காத்த பிரியதர்ஷினி, மூன்றாவது முறை கேட்கையில் "சம்மதமில்லை" என்று கூறி, ஆனந்தின் கைகளை தடுத்தார். தான் விரும்பும் ஒருவர், "ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார்" என்று கூறியவாறே, எழுந்து அங்கிருந்து செல்ல முற்பட்டார். இதை மறுத்து தடுத்த பிரியதர்ஷினியின் உறவினர்கள், அவரை தாக்க முற்பட்டனர். இவை ஒருபுறம் நடக்க மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த ஆனந்தோ, செய்வதறியாமல் சங்கடத்தில் தவித்தார்.

இந்நிலையில் மணப்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றியதாகவும், அவர் காதலனை தேடி சென்னை வந்தததாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், தான் எங்கும் செல்லவில்லை, தனது பெற்றோருடன் தான் இருப்பதாக அப்பெண் விளக்கம் அளித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞர் மீது பல்வேறு தவறான தகவல்கள் வந்ததாகவும் அதனாலேயே பொய் கூறி திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

புதிய தலைமுறை

 

நம்புகிற மாதிரி இருக்கிறதா..? எதை நம்புவது..?? 😜

1 hour ago, Maruthankerny said:

இதுபோன்ற செய்திகள் இன்னமும் நிறைய வரலாம் 
இப்போதைய இளைஞர் யுவதிகளிடம் புரிதல் இல்லாமையே 
இதற்கு அடிப்படை காரணம். இதுக்கு ஒரே வழி 
எல்லோரும் காஜலிசம் பழகுவதுதான்... காஜலிசம் இந்த 
பிரபஞ்ச கோட்ப்பாடுகளை எளிதாக புரிய வைக்கிறது 
அந்த புரிதல் மகிழ்வான வாழ்வுக்கு வழி சமைக்கிறது 

இந்த அண்டா சராசரமே "அக்கா" கஜா அகர்வாலால் தான் இயங்குகிறது சாமி..! ஆளை விடுங்கள்..!! 😜🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

இந்த அண்டா சராசரமே "அக்கா" கஜா அகர்வாலால் தான் இயங்குகிறது சாமி..! ஆளை விடுங்கள்..!! 😜🙏

இந்த பிரபஞ்சத்தின் மொத்த அசைவுமே 
கண்ணுக்கு தெரியாத சின்ன அணுவின் அசைவில்தான் தொடங்குகிறது 
இந்த சூட்ஷமத்தை நாம் முதலில் புரிய வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

123307959_2231027677041126_3838828468307522744_n.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Stg_QDav174AX-u4T6S&_nc_ht=scontent-frx5-1.xx&oh=172f6dea8963032f47dbdae21df5f451&oe=5FC7472C

மணமகள்: நான் பார்த்த எல்லா படத்திலேயும்... 
காதலன். கடைசி நேரத்தில்.. வந்துதான், கூட்டிக்  கொண்டு போவார். 😜

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2020 at 02:47, தமிழ் சிறி said:

123307959_2231027677041126_3838828468307522744_n.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Stg_QDav174AX-u4T6S&_nc_ht=scontent-frx5-1.xx&oh=172f6dea8963032f47dbdae21df5f451&oe=5FC7472C

மணமகள்: நான் பார்த்த எல்லா படத்திலேயும்... 
காதலன். கடைசி நேரத்தில்.. வந்துதான், கூட்டிக்  கொண்டு போவார். 😜

மணமகள்: நான் பார்த்த எல்லா படத்திலேயும்... காதலன். கடைசி நேரத்தில்.. வந்துதான், கூட்டிக்  கொண்டு போவார். 

 

அங்கும் இங்கும் விதைப்பவைகளையே பின்பு அறுவடை செய்கிறோம் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.