Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாணந்துரையில் கரையொதுங்கிய சுமார் 100 திமிங்கலங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாணந்துரை கடற்கரையில் இன்று சுமார் 100 திமிகங்கலங்கள் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ள நிலையில் அவற்றை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை பொலிஸார், இலங்கை கடலோர காவல்படையினரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

spacer.png

கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்கள் 10 முதல் 25 அடி நீளமுடையவை என்றும் கூறப்படுகிறது.

இந் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் திமிங்கலங்களை பார்வையிட மக்கள் கடற்கரையில் கூடியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/93493

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

பாணந்துறையில் கரையொதுங்கின 100 திமிங்கிலங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பாடசாலை காலங்களில் இவ்வாறான திமிங்கில வருகை எல்லாம் நடந்து நினைவில்லை. இருபது முப்பது வருடங்களில் எவ்வளவு மாற்றங்கள். சூழல் மனிதனால் எவ்வளவு சீர்குலைந்து விட்டது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுக்கள் ஆகலாம். இனி வேறு என்ன எல்லாம் வருமோ.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய 120 திமிங்கிலங்கள்

 
af_whales-sri-lanka_031120_afp-696x464.j
 21 Views

கொழும்பு கடற்கரையில் திடீரென 120 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு கடற்கரைக்கு தெற்கே 25 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று (02) பனடூரா பகுதியில் குட்டை துடுப்புகளைக் கொண்ட  சுமார் 120 ‘முன்னோடித் திமிங்கிலங்கள்’  கரை ஒதுங்கின. 6மீற்றர் நீளமும் ஒரு தொன் எடையும் கொண்ட இந்தத் திமிங்கிலங்களை கடலில் விட கடற்படையினர் முடிவெடுத்தனர்.

இதற்காக கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் இன்று காலை (03) அவற்றை கடலில் விடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 3 திமிங்கிலங்கள் கரையை அடையும் போது ஏற்பட்ட காயத்தினால் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான மிகப்பெரிய எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் கரையை அடைவது அசாதாரணமானது” என்று இலங்கையின் கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையத் தலைவர் தர்ஷினி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/கொழும்பு-கடற்கரையில்-கரை/

  • கருத்துக்கள உறவுகள்

தாருக்கு தெரியும்.... கடலுக்க.... கலவரமோ... காயப்பட்டு.... அகதியா ஓடி வந்ததுகளோ....  🥴

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2020 at 05:34, Nathamuni said:

தாருக்கு தெரியும்.... கடலுக்க.... கலவரமோ... காயப்பட்டு.... அகதியா ஓடி வந்ததுகளோ....  🥴

கூட்டு கடற்படைப் பயிற்சியினாலேயே பாணந்துறையில் திமிங்கலங்கள் கரையொதுங்கின – நயனக ரன்வெல்ல

af_whales-sri-lanka_031120_afp.jpg

இந்தியப் பெருங்கடலில் பல நாடுகள் நடத்திய கூட்டு கடற்படைப் பயிற்சியின் காரணமாகவே அண்மையில் பாணந்துறை கடற்கரையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கியதாக தற்போது சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய “மலபார்” என்ற கடற்படை பயிற்சியால் திமிங்கலங்கள் சிக்கித் தவித்ததாகவும், இதன் காரணமாகவே அவை கரையொதுங்கியதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்தார்.

2 ஆம் திகதி மதியம் பாணந்துறை கடற்கரையில் சுமார் 100 திமிங்கலங்கள் கரையொதுங்கி இருந்தன.

பின்னர், கடற்படை, காவல்துறை, மக்கள் என அனைவரும் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thamilkural.net/newskural/news/88837/

டிஸ்கி 

வாயில்லா சீவனை வதம் செய்கினம் . 😢

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிட்ட குடுத்திருந்தா வெட்டி கறியாவது. வச்சிருப்பான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

சீனாவிட்ட குடுத்திருந்தா வெட்டி கறியாவது. வச்சிருப்பான் 

அதுதான் அவர்களை இந்த விளையாட்டில் சேர்க்கவில்லை.......!   😂 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.