Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினத்திற்கு எதிரான தடைஉத்தரவை பெற்றுள்ளோம்- பொலிஸ் பேச்சாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்திற்கு எதிரான தடைஉத்தரவை பெற்றுள்ளோம்- பொலிஸ் பேச்சாளர்

 

விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்திற்கு எதிரான தடையுத்தரவை பொலிஸார் பெற்றுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மன்னாரிலும் வவுனியாவிலும் மாவீரர் தினத்தினை தடை செய்யும் உத்தரவினை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன என அஜித்ரோகன தெரிவித்துள்ளார்.

ajith-rohana-300x150.jpg
மன்னாரில் ஐந்துபேருக்கு எதிராகவும் வவுனியாவில் எட்டுபேருக்கு எதிராகவும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினத்திற்கான நடவடிக்கைகளில் குறிப்பிட்ட நபர்கள் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்தே இந்த உத்தரவினை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தடைஉத்தரவை மீறுபவர்களிற்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் சிங்கள மக்களிற்கு எதிரான பிரிவினையை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Rajeevan Arasaratnam 

https://thinakkural.lk/article/90762

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் சிங்கள மக்களிற்கு எதிரான பிரிவினையை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆக.. தமிழ் சிங்கள மக்களிடையே பிரிவினை உள்ளது இந்த நாட்டில்.. புரிந்துணர்வு இன ஐக்கியம் போன்ற பசப்பு வார்த்தைகளுக்கு அவசியம் இல்லை என்பதை இவர் தெளிவாக்கி உள்ளார்.

உலகத்தார் இதனை உணர்ந்து கொண்டு.. இலங்கைத் தீவில் இரண்டு தேசங்களை உருவாக்க உதவி செய்ய வேண்டும். ஒரு இலங்கைத் தீவில்.. இரண்டு தேசங்கள். இதனால்.. பூமிக்கோ.. உலகத்தாருக்கோ.. ஒரு தீங்கும் நேராதே. 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஐவருக்கு தடை உத்தரவு

November 19, 2020

1-3-1.jpgமன்னார் நிருபர்

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (19) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர் வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மன்னார் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து குறித்த கட்டளையை பெற்றுள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டிணேசன் கருத்து தெரிவிக்கையில்;

1-2-7-1024x683.jpgமன்னார் பொலிஸார் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் எதிர் வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் மாவீரர் தினத்தை நினைவு கூறக் கூடாது எனவும், மன்னார் நீதிமன்ற நியாயதிக்க எல்லைக்குள் மாவீர் தினத்தை நினைவு கூறுவதை தடுக்கும் வகையில், மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் வெய்து தடை உத்தரவை பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சுரேந்திரன் ரவல்,அன்ரன் றொஜன் ஸ்ராலின்,வி.எஸ்.சிவகரன் மற்றும் அலக்ஸ் றொக்ஸ் ஆகிய 5 பேரூக்கும் எதிராக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் எதிர் வருகின்ற 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாவீரர் தினத்தை நினைவு கூறக் கூடாது எனவும், மாவீரர் தினத்தில் பொது மக்களை ஈடுபடுத்துவதை தடுக்கும் வகையிலும் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவானது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மற்றும் இலங்கை தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகள்,மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் சட்டத்திற்கு அமைவாக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.என சட்டத்தரணி எஸ்.டிணேசன் மேலும் தெரிவித்தார்.
 

 

https://thinakkural.lk/article/90797

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளை நினைவு கூர நீதி மன்றங்கள் ஊடாக தடை

 
1-95.jpg
 42 Views

மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று முடிவு செய்துள்ள நிலையில், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி இரு மாவட்ட நீதிமன்றங்களிலும் பொலிஸார் இன்று விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாளை நினைவேந்துவதை தடுப்பதற்கு அரசும், இராணுவமும் முயற்சிக்கும் நிலையில் அதனை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் நேற்று மாலை, வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றுகள் ஒத்திவைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/மாவீரர்-நாளை-நினைவு-கூர-ந/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களும் நினைவுகூரல் உரிமையும் 

நினைவுகூர்தல் உரிமை என்பது நிலைமாறுகால நீதிக்கு கீழ் இழப்பீட்டு நீதிக்குள் உலக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு உரிமை. ஒவ்வொருவருக்கும் தன்னுடையவரை நினைவு கூர உரிமை உள்ளது. இந்த இடத்தில் நினைவு கூர்தலின் பல்வகைமையை நாங்கள் ஏற்க வேண்டும். 

2009 க்குப் பின் புலிகள் அல்லாத ஏனையவர்களை நினைவு கூர்வதில் பிரச்சினை இல்லை. புலிகளை நினைவு கூர்வதில் தான் பிரச்சினை இருக்கிறது. ஆனால், நிலைமாறுகால நீதிக்கு கீழ் அது நினைவு கூர்தல் என்று தான் பார்க்கின்றதே ஒழிய யார் இயக்கம் என்று பார்க்கவில்லை. யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூர்தல் என்று தான் அது பார்க்கின்றது. நினைவு கூரும் உரிமை நிலைமாறுகால நீதிக்கு கீழ் இருந்தது. இப்போது அது மறுக்கப்படுகின்றது. என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்தார். 

விடுதலைப்புலிகள் மட்டும் தான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஏனைய இயக்கங்களும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களையெல்லாம் நினைவு கூருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. 

ஜே.வி.பி கூட தன்னுடைய தோழர்களின் நினைவு கூர்தலை பிரமாண்டமாக செய்யும். இதற்கெல்லாம் அவர்கள் எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. மாவீரர்களை நினைவு கூர்வதில் தான் இங்கே பிரச்சினை.     

நினைவு கூர்தல் உரிமை என்பது ஐக்கியநாடுகள் சபையால் கூட அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால், இலங்கை அரசாங்கம் அதற்கு தடை விதிக்கின்றது. இதன்மூலம் அரசாங்கம் தமிழ்மக்களுடன் நல்லிணக்கத்துக்கு தயார் இல்லை  என்பதனையும் வெளிக்காட்டுகின்றது. 

நல்லிணக்கம் என்பதன் முதல் விடயமே இறந்தவர்களை நினைவு கூருவதற்கு அதற்கான வழிவகைகளை செய்து கொடுப்பதாகும். தங்களது துயரங்கள் தொடர்பாக அவர்கள் அழுது உளவியல் நெருக்கடிகளை வெளிப்படுத்துவதற்கு இடம் கொடுக்க வேண்டும். அந்த இடம் பலவந்தமாக இங்கே மறுக்கப்படுகின்றது. இது மிகவும் கவலைக்குரிய விடயம். நினைவு கூரல் உரிமை மறுக்கப்படுவது ஒரு மனித உரிமை மீறல். என அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்  தெரிவித்தார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியிலும் மாவீரர் நாளை நினைவு கூர நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியினால் இத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/138982/IMG20201120104453.jpg

குறித்த தடை உத்தரவானது பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு எதிராக பெறப்பட்டு இன்று (20) அவரிடம் பொலிஸாரினால் கையளிக்கபபட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள  கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களை நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது  என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது

http://cdn.virakesari.lk/uploads/medium/file/138984/letter.jpg

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679 /20 என்ற வழக்கின் பிரகாரம் 21.112020 தொடக்கம் 27.11.2020  வரையான நாட்களில் எந்த விதமான அஞ்சலி நிகழ்வுகள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கட்டளையை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பரிசோதகரால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கட்டளையை இன்று காலை 9.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/94829

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசயம் விளங்கவில்லை தடை செய்வதற்குநீதிமன்றத்துக்கு உரிமையிருக்கு எண்டால்  ஏன் தடை செய்யக்கூடாது என்பதை விசாரிக்க ஏலாது?

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு. மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நிகழ்வு நடத்த தடை உத்தரவு

November 20, 2020

பா.மோகனதாஸ்

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதை தடுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளை, கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் இலங்கைத் தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்தினின் வீட்டுக்கு சென்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று(20) வழங்கியுள்ளனர்.

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%

21/11/2020 தொடக்கம் எதிர்வரும் 27/11/2020 வரை மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் அரியநேத்திரனோ அவர் கட்சி சார்ந்தவர்களோ ஏனையோர்களோ அவ்வாறான நினைவு நடத்தக்கூடாது எனவும், விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் 26 ஆம் திகதியை அனுஷ்டிக்க வேண்டாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பா.அரியநேத்திரனுடன் அரசடித்தீவை சேர்ந்த நடராசா சுரேஷ், கொக்கட்டிச்சோலை குகதாஷ் முத்துலிங்கம், களுவாஞ்சிகுடி நாகலிங்கம் சங்கரப்பிள்ளை, நொச்சிமுனை சசிகரன் நிஷாந்தன் ஆகியவர்களுக்கு எதிராகவும் இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது,

 

https://thinakkural.lk/article/91294

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

இந்த நிமிஷம் வரை எந்த நீதி மன்றமும் ( யாழ்ப்பாணத்தில் ) தடை விதிக்கவில்லை...மணிவண்ணன்

https://www.facebook.com/senthurs1/videos/4043612245683005

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/AnanthAravinthan/videos/3390287674423760

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் மாவீரர் தினத்தை கொண்டாட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நாடு இருக்கும் நிலையில் மாவீரர் தினமோ எந்த ஒரு நிகழ்ச்சியோ மக்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றாககூடுவது சமூகத்துக்கு பேராபத்து.. அறிவியலுக்கு எதிரானது.. நோய் நிகழ்ச்சிகளை பிரித்து பார்த்து தொற்றுவதல்ல.. வீடுகளில் இருந்தவாறு நினைவுகூருவதே பாதுகாப்பானது.. ஏற்கனவே அழிந்து போயிருக்கும் எம்மினத்துக்கு இன்னும் ஒரு இழப்பு தேவையா என்பதை தமிழ் அரசியல் வாதிகள் சிந்திக்கவேண்டும்.. வழிநடத்தவேண்டிய தமிழ் தலைவர்களே தமது அரசியல் லாபத்திற்காக மக்களை தூண்டிவிடும் வேலை செய்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.