Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்- அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்- அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை வளாகத்தில் 2009க்கு முன்னர் கடற்புலிகளின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த வளாகத்தில் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் பிரமாண்டமாக இடம்பெற்றன

இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதி வீதியெங்கும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியை விடவும் முல்லைத்தீவு நகருக்குள் திரும்பும் இடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு, வீதியில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/155082?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

குறித்த பகுதியை விடவும் முல்லைத்தீவு நகருக்குள் திரும்பும் இடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு, வீதியில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் மக்கள் அச்சத்தில் உறையவில்லை. இன்றைய சிங்கள அரசும் அதன் பாதுகாப்புப் படைகளுமே அச்சத்தில் உறைந்துள்ளதைக் கூர்ந்து கவனித்தால் புரியும்.🧐

  • கருத்துக்கள உறவுகள்

முல்லையில் வர்த்தக நிலையங்களை திறக்குமாறு இராணுவம் மிரட்டல்!

IMG_20201127_152602.jpg?189db0&189db0

 

முல்லைத்தீவு – நகரம் மற்றும் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில் இன்று (27) பெருமளவான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் அவற்றை திறக்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் நிர்ப்பந்திப்பதாக வர்த்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக கணிசமான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல புதுக்குடியிருப்பிலும் விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை திறக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்குச் சென்ற இராணுவம் மற்றும் பொலிஸார் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களை தொடர்புகொண்டும் அந்தப் பகுதியில் நின்றிருந்தவர்களைக் கொண்டும் உடனடியாக விற்பனை நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்திவருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

  • IMG_20201127_152605-1024x768.jpg?189db0&
  • IMG_20201127_152554.jpg?189db0&189db0

இது தொடர்பில் வர்த்தகர் ஒருவர் வெளியிட்ட கருத்து கீழே

 

 
 

https://newuthayan.com/முல்லையில்-வர்த்தக-நிலைய/

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் மூடப்பட்ட கடைகளை திறக்கும் நடவடிக்கையில் இராணுவம்

http://athavannews.com/wp-content/uploads/2020/11/army-1-1.jpg

மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் மற்றும் புதுக்குடியிருப்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) வணிக நிலையங்கள் அனைத்தும்  மூடப்பட்டு மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக மக்களால் அனுஷ்ட்டிக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை உடனடியாக திறக்குமாறு வலியுறுத்தி, பலவந்தமாக திறக்கும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக  வர்த்தகர்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும், முல்லைத்தீவு நகரிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களும் கடைகளைப் பூட்டியே இருந்தனர். முல்லைத்தீவு மாத்திரமின்றி புதுக்குடியிருப்பிலும் விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை திறக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களை தொடர்புகொண்டும், அந்தப் பகுதியில் நின்றிருந்தவர்களைக் கொண்டும் உடனடியாக விற்பனை நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்தியதாகவும்   வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சுயவிருப்பின் பெயரில் கடைகளை பூட்டிய உரிமையாளர்களுக்கு தனிமனித சுதந்திரம்கூட இல்லாத நிலை காணப்படுகின்றதாக  என வர்த்தகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு நகரங்களில் பூட்டியிருக்கும் கடைகளை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/wp-content/uploads/2020/11/army-2-1.jpg

முல்லைத்தீவில் மூடப்பட்ட கடைகளை திறக்கும் நடவடிக்கையில் இராணுவம் | Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் தடைகளையும் மீறி நினைவேந்தல்

முல்லைத்தீவில் - தடைகளை மீறி பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.

 

spacer.png

 

தமிழரசுக் கட்சியினுடைய மத்தியகுழு உறுப்பினர்களுள் ஒருவரான அன்ரனிநாதன் பீற்றர் இளஞ்செளியன் என்பவராலேயே இவ்வாறு இறந்தவர்களுக்கான நினைவேந்தல் அவருடைய இல்லத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spacer.png

நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொள்ளும்போது, இளஞ்செளியனுடைய வீட்டைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதேவேளை அங்கு சூழ்ந்திருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்களால் அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள், காணொளிகள் எடுக்கப்பட்டன.

இருப்பினும் தடைகளையும் அச்சுறுத்தல் நிலைமைகளையும் தாண்டி அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spacer.png

இதே வேளை, முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில், உறவினர்களால், போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

spacer.pngspacer.png

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ மக்கள் விடுதலைப் போராட்டத்தையும், போராளிகளையும் வெறுக்கிறார்கள். நாங்கள் பிஷா கொடுத்தோம், தென்னிலங்கையோடு கைகோத்தோம், றெயின் ஓடினோம் என்றெல்லாம் பீலா விட்டார்கள். என்ன நடக்கும் என்று தெரிந்தும் நாங்கள் அவர்களை மறக்கத் தயாரில்லை என்று அவர்களை நினைவு கூர தங்களால் இயன்றவரை போராடுகிறார்கள். அவர்களை, உணர்வுகளை  நீதிமன்றமோ, அரசோ தடுத்து நிறுத்த முடியாது. விடுதலையும், போராளிகளும் நம் மூச்சோடு கலந்து விட்டவர்கள். தியாகி திலீபனுக்காக ஒருநாள் உண்ணாவிரதமிருக்க குறைகூறியவர்கள் அத்தனைபேரும் தலைகுனிய, இராணுவம் புடைசூழ இன்று அந்த தியாகிகளுக்காக தம்மை முடக்கிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். தடை  போடப்போட உடைத்தெறியும் வல்லமை, வீரியம் அடையும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.