Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாந்தோட்டையில் 300 மில்லியன் டொலர் மதிப்புள்ள சீனாவின் டயர் தொழிற்சாலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டையில் 300 மில்லியன் டொலர் மதிப்புள்ள சீனாவின் டயர் தொழிற்சாலை

03e4b4d2267097cbbacaaf8f6b5985bb732fa8a2
 56 Views

அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே 300 மில்லியன் டொலர் (இலங்கை ரூபா 2,210கோடி) மதிப்புள்ள, இலங்கையின் மிகப் பெரிய டயர் தொழிற்சாலை ஒன்றை சீனா அமைக்கவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

சீன நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகிலேயே இந்தத் தொழிற்சாலை அமையவுள்ளது. இலங்கை பெய்ஜிங்கிடமிருந்து வாங்கிய  1.4 பில்லியன் டொலர் கடனைக் கட்டத் தவறிய காரணத்தினாலேயே இங்கு சீனா டயர் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது.

ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது, தாராளமான வரிச் சலுகைகளை அனுமதிக்கும் சட்டத்தின் கீழ் டயர் தொழிற்சாலையை அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

சாண்டோங் ஹஹுவா டயர் நிறுவனம் குறைந்தபட்சம் 80% உற்பத்தியை ஏற்றுமதி செய்யும். மீதமுள்ளவற்றை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டின் 2021 வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்ட சில வாரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கொழும்பில் ஒரு பெரிய சீனக் கட்டுமானப் பணி நிறுவனம், அபிவிருத்திக்கும், அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கும் இலங்கையின் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கும் நிதியை அறிவித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகரத்தில் 2014இல் தொடங்கிய 1.4 பில்லியன் டொலர் நில மீட்புத் திட்டம் இலங்கையின் தற்போதைய நிதி அளவை இரட்டிப்பாக்கியுள்ளது.

ராஜபக்ச 2005 – 15 ஆண்டுகளுக்கிடையில் ஜனாதிபதியாக இருந்த பொழுது கொழும்பு சீனாவிடமிருந்து பில்லியன் கணக்கான தொகையை கடன் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/அம்பாந்தோட்டையில்-300-மில்/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம்.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புக்களை வழங்கும்..👏👏👏

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, இந்திய ரயர் இறக்குமதிக்கும் ஆப்பு, இந்தியாவுக்கும் ஆப்பு...😂😂

உனக்கும் பெப்பே.. உங்கப்பனுக்கும் பெப்பே.. ...😜😜

2 hours ago, Kapithan said:

ஆக, இந்திய ரயர் இறக்குமதிக்கும் ஆப்பு, இந்தியாவுக்கும் ஆப்பு...😂😂

உனக்கும் பெப்பே.. உங்கப்பனுக்கும் பெப்பே.. ...😜😜

இந்தியாவிலிருந்து டயர் மட்டுமல்ல மற்றைய பொருட்களுமே படிப்படியாக இறக்குமதி செய்வதிலிருந்து நிறுத்தப்படுகின்றது. இப்போது இலங்கையில் மஞ்சள், பயறு, உளுந்து போன்ற உப உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு வர காரணமென்ன? இனி உள்ளூர் உட்பதிக்கு முன்னுரிமை கொடுக்கும் திடடமாம். இது மட்டுமல்ல இனி மேல் தரை ஓடுகள் (floor tiles ) , குளியலறை பைட்டிங்ஸ் என்பனவும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறார்கள். இலங்கையிலேயே உட்பதி செய்வதால் இப்படி ஒரு நடைமுறையை கொண்டுவர பார்க்கிறார்கள். ஆனால் தேவையான பொருட்களை விநியோகிக்க முடியாமல் விநியோகஸ்தர்கள் தடுமாறுகிறார்கள். இப்படியான நடவடிக்கை நல்லதுதான். ஆனால் ஒரேயடியாக செய்ய முயட்சிக்க கூடாது. இப்படியான திட்ட்ங்களால் நிர்மாணத்தொழிலில் பெரிய பிரச்சினை உருவாக்க சந்தர்ப்பம் உண்டு. பேராசை பெரும் தரித்திரம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.