Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் வரவேற்கின்றோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன் தனிப்பட்ட சில காரணங்களுக்காக யாழ்கரம் வராமல் இருந்த குறுக்காலபோவன் மீண்டும் வந்தமை இட்டு மகிழ்வடைகின்றேன். ஆனால் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தபோதும் கருத்துக்கள் எதனையும் எழுதவில்லை.

இன்றும் வந்திருக்கின்றார். எவ்வித கருத்துக்களையும் எழுதியதாகக் காணக்கிடைக்கவில்லை

மீண்டும் களத்தில் வந்து கலக்க அழைக்கின்றோம்.

அவ்வாறே சின்னப்பு, தமிழினி உற்பட்ட கள உறவுகளைளயும் மீண்டும் வரவேற்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு வரவேற்பு கொடுத்த தாயவனுக்கும் வரவேற்பு எண்டு சொல்வதா? ஆனாலும் முயற்சிக்கு வாழ்த்து.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவர்களுக்கு என்ன பிரச்சினை? நல்ல பண்பான முறையில் தானே கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளனர்.

அவர்களை மீண்டும் அழைப்பவர்களுடன் நானும் இணைந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவதாரங்களை வரவேற்பதில் நானும் இனைகிறன்.....

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அவர்களை வரவேற்கின்றேன்.... :lol::icon_idea:

குறுக்ஸ் மற்றும் ஏனையவர்களும் மீண்டும் வர வேண்டும்.

நானும் இருகேணப்பா!

மீள்வரவு நல்வரவாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தன் தனிப்பட்ட சில காரணங்களுக்காக யாழ்கரம் வராமல் இருந்த குறுக்காலபோவன் மீண்டும் வந்தமை இட்டு மகிழ்வடைகின்றேன். ஆனால் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தபோதும் கருத்துக்கள் எதனையும் எழுதவில்லை.

இன்றும் வந்திருக்கின்றார். எவ்வித கருத்துக்களையும் எழுதியதாகக் காணக்கிடைக்கவில்லை

மீண்டும் களத்தில் வந்து கலக்க அழைக்கின்றோம்.

அவ்வாறே சின்னப்பு, தமிழினி உற்பட்ட கள உறவுகளைளயும் மீண்டும் வரவேற்கின்றோம்

புறோ, சின்ன சந்தேகம்......

எந்த வித காரணமும் இன்றி தாங்களாக விலகி சென்றவர்களை எதற்காக வேலை இல்லாமல் கூப்பிடுகின்றீர்கள் என்பதை அறிந்துகொள்ளலாமா? சரி இவர்களின் மீள் வருகையால் (சப்போஸ் ....... இல்லாமல்) களத்துக்கு என்ன லாபம்? என்ன நட்டம் என்று அறிந்துகொள்ளலாமா?? :unsure::)

வந்தமா வடையை சா கோழி வடையை, எலி பொரியலோட சாப்பிட்டமா போனமா எண்டில்லாமல், எலி எங்க பிடிச்சது, கோழிக்கு எத்தனை வயசு எண்டு கொண்டு. :angry: :angry:

Edited by Danklas

டங்கிற்க்கு அடிக்கடி மூளை சரியா வேலைசெய்யுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புறோ, சின்ன சந்தேகம்......

எந்த வித காரணமும் இன்றி தாங்களாக விலகி சென்றவர்களை எதற்காக வேலை இல்லாமல் கூப்பிடுகின்றீர்கள் என்பதை அறிந்துகொள்ளலாமா? சரி இவர்களின் மீள் வருகையால் (சப்போஸ் ....... இல்லாமல்) களத்துக்கு என்ன லாபம்? என்ன நட்டம் என்று அறிந்துகொள்ளலாமா?? :unsure::)

வந்தமா வடையை சா கோழி வடையை, எலி பொரியலோட சாப்பிட்டமா போனமா எண்டில்லாமல், எலி எங்க பிடிச்சது, கோழிக்கு எத்தனை வயசு எண்டு கொண்டு. :angry: :angry:

ஹிஹிஹி

நீங்கள் உற்பட்ட வராமல் நின்ற அனைவரையும் தனிமடலிலும், பொதுவாகவும் இப்படித் தான் கேட்டிருக்கின்றேன். அப்போது எல்லாம் வேலையில்லாமல் தான் கூப்பிடுகின்றேன் என்றோ, கூப்பிடுவதன் பிரியோசனம் பற்றியோ நான் சிந்திக்கவில்லையப்பா!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வரவேற்புகள் தனித் தலைப்புகளில் அவசியமா..??!

இவை கருத்தாளர்களிடம் பாகுபாட்டிலான அணுகுமுறை நிலவுவதை எடுத்துக்காட்டுவதாகவே அமையும் என்பது எங்கள் கருத்து.

யாழில் உள்ள விதிமுறைகளுக்கு அமைவாக எவரும் வர முடியும் போக முடியும்.. அவர்கள் தங்கள் தங்கள் செளகரியம் அசெளகரியம் கருதி வருவார்கள் போவார்கள்.. ஒவ்வொருதடவையும் வாங்க வரவேற்கிறம் என்று உற்சாகம் அளிக்கனும் என்றில்ல..! அவர்களுக்கு மனதளவில் உற்சாகமும் அக்கறையும் நன்றியுணர்வும் இருந்தால் தாங்களா வருவார்கள்.

இப்படி சிலரை மட்டும் குறிப்பிட்டு அழைப்பதன் மூலம் அழைப்படாத பல உறவுகள் தாங்கள் தவிர்க்கப்பட்டதாக எண்ண இடமுண்டு. அது அவர்களை யாழில் இருந்து தூர வைக்கும். எல்லோரும் தாங்களும் கருத்தில் எடுக்கப்படனும் என்றுதான் விரும்புகின்றனர். பாரபட்சமான அழைப்புக்கள் வரவேற்புகள்.. சமத்துவமான உறுப்புரிமையை யாழில் பாதுகாக்காது என்பது எமது கருத்து. :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்கால்போவனே

மற்றய உறுப்பினர்களை வரவேற்க வேண்டும் என்றால் அதை மற்றவர்கள் செய்வதில் எவ்வித தடையும் இருக்கப் போவதில்லை. குறுக்காலபோவான் 2 தடவை களத்தில் நுழைந்திருந்ததை நான் அவதானித்திருந்தேன். அதனால் அவருக்கு வரவேற்புக் கொடுத்திருந்தேன். இங்கே மற்றய களவுருப்பினர்களை இப்படி வரவேற்பதோ, ஊக்குவிப்பதோ பாதிப்பு என்றால் தாரளமாக நீக்கலாம். ஆனால் அவர் வருவதையோ, அல்லது அவரின் கருத்து தங்களின் ஆளுமையை மங்கச் செய்து விடும் என்று நம்புவர்களோ தான், வரு முன்பே முடுக்குவதற்கு முயல்கின்றார்கள் என்பதை நான் அறிவேன்.

இவ்வளவு நாளும் வராத உறுப்பினர்கள் அனைவரையும் நான் தான் வரவேற்க வேண்டும் என்றில்லை. மற்றவர்களும் வரவேற்கலாம். உங்களின் எண்ணப்படி குருவிகளை வரவேற்க வேண்டும் என்ற தொனியிருப்பதாகவே உணருகின்றேன்.உங்களுக்குக் குருவிகளை வரவேற்க வேண்டுமாக இருந்தால் தாராளமாகக் குருவிகளை வரவேற்கலாம். அவரை யாரும் இங்கிருந்து போகச் சொன்னது கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் யாரும் இங்கு தடுத்து நிறுத்திட முடியும் முட்டுக்கட்டை போட்டிட முடியும் என்று நினைக்கல்ல. அது சாத்தியமற்றதும் கூட.

ஆனா யாழ் களத்தில் பாகுபாடுகள் நிலவுவதாக ஒரு நிலை தோன்றுவதைத் தவிர்க்க நாம் முனைய வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. இங்கு கருத்தாளர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. ஆகவே இவர் மங்காதவர் இவர் மிளிர்பவர் என்று நாம் தீர்மானித்து மற்றையவர்களின் திறமைகள் வெளிப்படாது போக நாமே வழி சமைக்கக் கூடாது என்பதுவே எமது விருப்பம்.

களத்தில் வியாசன்.. வந்தார்... வசம்பு வந்தார்.. விஷ்ணு வந்தார்.. இன்னும் நாம் அவதானிக்காத வேளைகளில் பலர் வந்திருப்பர்.. அவர்களுக்காக எல்லாம்.. ஏன் எங்கள் வரவேற்பில்லை. அப்போ அவர்கள் மிளிர மறுப்பவர்களா..??! நாமே நமக்குள் பாகுபாடுகளை இட்டு தலைக்கனங்கள் அதிகரிக்க உதவத்தான் வேண்டுமா..??! அப்புறம் அடுத்தவரைக் குற்றம் சொல்வதில் பயனில்லை. எல்லோரும் சமனாக மதிக்கப்படு போது.. கருத்துக்களத்தில் அநாவசிய மோதல்களும் வெளியேற்றங்களும்.. தவிர்க்கப்படும்.. என்பது எங்கள் தாழ்மையான கருத்து. உங்களுக்கு இதில் உடன்பாடு இருக்கலாம் இல்லாமல் போகலாம்..! :) :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாசனோ, வசம்புவோ, விஸ்ணுவோ, குருவிகளோ அவதானிக்காத நேரத்தில் வந்திருக்கலாம். அல்லது மறைவில் நின்றிருக்கலாம். இவ்வளவு நாளும் குறுக்ஸ்சுக்கு நான் வரவேற்பைக் கொடுக்கவில்லை. அவர் வருவதைக் கண்ட பின்னர் தான் கொடுத்தேன். இவர்கள் வருவதைக் கண்டால் கொடுப்பதில் தயக்கம் ஏதுமில்லை.

அவ்வாறு தான் அஜீவன் ஒதுங்கியபோதும் வரவேற்றிருந்தேன்.

குறுக்ஸ் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து தடாலடியா கருத்துகளால் சிந்திக்கத்த தூண்டும் ஒரு சிறந்த கருத்தாளர். அவர் இங்கு இல்லாதது என்னை பொறுத்தவரை அரசியல் மற்றும் விஞ்ஞானக் களத்திற்கு இழப்பே!

எப்போதும் அவர் சிந்தனை எல்லோரும் போகும் ஒரே ஒற்றையடிப் பாதையில் பயணிக்காது குறுக்கு வழிகளில் பயணிக்கும். அதனால் அவரும் இங்கு பல எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறார்.

இங்கு கருத்தாளர்கள் எல்லோரும் வெவ்வேறு திறமையானவர்கள். உதாரணம் குறுக்கர் ஆழமாக சிந்தித்து எழுதுவார், புலிப்பாசறை சிந்திக்காமல் எழுதுவதில் திறமைசாலி. சில கருத்துக்களின் அடிப்படையில் நாம் சிலரை ஆதரிப்பதும் சிலரை வெறுப்பதுமுண்டு. அது தவிர்க்க முடியாதது. அதற்காக கருத்தாளர் ஒருவர் அவரின் கருத்து என்பதற்காக அவரின் எல்லாக்கருத்துகளையும் எதிர்த்து, அவராக விரக்தியடைந்து வெளியேற காரணமா நான் ஒருபோதும் இருக்கக் கூடாது என்பதே என் கருத்தாகும்.

கருத்துக்களத்திற்கு அப்பால் அனைவரும் மனிதர்கள். எனவே அனைவருடனும் நட்புடன் இருக்கவே பிரியப்படுகின்றேன். கருத்தாளர்கள் அனைவரும் சமனாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை. எமது போராட்டம் கூட சம உரிமைகளுக்காகவே இடம்பெறுகின்றது!

அனைத்துக் கருத்தாளர்களையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

தூயவனின் இந்ததலைப்பு அவசிமில்லாதது எல்லோறும் சொல்கிறார்கள், தூயவன் மெஜாரிட்டி இழந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அட வரவேறப்பதுக்கும் பிரச்சனையா?நெடுக்கின் சில கருத்துக்கள் நியாமாக இருந்தாலும் தூயவனின் இந்தத்தலைப்பில் எந்தத்தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.நானும் அஞ்ஞாதவாசம் செய்யும் அனைத்து உறவுகளையும் வரவேற்றுக்கொள்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் இந்ததலைப்பு அவசிமில்லாதது எல்லோறும் சொல்கிறார்கள், தூயவன் மெஜாரிட்டி இழந்துவிட்டார்.

ஓமோம். ஆட்சியைக் கலைக்க வேண்டியது தான் பாக்கி! நானும் ஒரு வாக்கெடுப்பு நடத்திப் பார்க்க வேணும் போலக் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் தொடங்கிய இந்த கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை? ஏனெனில் யாழ்களத்தில் உதவாத கருத்துக்களுக்கென பல பக்கங்கள் திறக்கப்பட்டு, அவை இன்று 10க்கு மேற்ப்பட்ட பக்கங்களை தாண்டி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது. அதனோடு ஒப்பிடுகையில் பழைய உறுப்பினர்களை கூப்பிட்டாலாவது ஒழுங்கான, ஏதாவது ஒரு வகையில் பயன்படும் விதமான கருத்துக்கள் வந்து சேரலாம் எண்ட நட்பாசையில் றோயல் பமிலி உறுப்பினர் நினைத்து இருக்கலாம்.

நெடுக்கால போவன் சொல்வது போல வீண் பக்கம், நேர விணையம் என்று கூக்குரலிடுவது இந்த சிட்டுவேசனுக்கு பொருந்தாது கண்டியளோ, யாழ்களத்தில் ஒவ்வொரு உறுப்பினரும்ம் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கவே இந்த பிரிவு இருக்கின்றது, அதில் தூயவன் தன் கருத்தை கூறியதால், நெடுக்குக்கு நேர விரையம் ஏற்படும் என நான் கருதவில்லை, ஏனெனில் நெடுக்கின் வேலை ஒவ்வொரு களங்களில் பல பெயர்..................... இல்லை வேனாம், அதை என் வாயாலே சொல்லி எண்ட புகழை பாழ்படுத்த விரும்பவில்லை. :unsure::unsure:

ஆகவே...... வராத முக்கிய மெம்பர்களான சின்னப்பு, குறுக்கு, உட்பட்ட பெரும்புள்ளிகளை வரவேற்பதில் றோயல் பமிலி உறுப்பினர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். என தெரிவித்துக்கொள்கின்றனர். :)

தூயவனின் இந்ததலைப்பு அவசிமில்லாதது எல்லோறும் சொல்கிறார்கள், தூயவன் மெஜாரிட்டி இழந்துவிட்டார்.

3வது அணி அமைப்பமா?? :angry: :angry:

டங்கிற்க்கு அடிக்கடி மூளை சரியா வேலைசெய்யுது

ஆமாய்யா.. நேற்றுத்தான் எம்.ஒ.ரிக்கு விட்டனான்.. அதுதான் இப்ப சுப்பரா வேலை செய்யுது... :angry: :angry: :angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாய்யா.. நேற்றுத்தான் எம்.ஒ.ரிக்கு விட்டனான்.. அதுதான் இப்ப சுப்பரா வேலை செய்யுது...

எங்க கிடக்கு அது? நாங்களும் சேவிஸ் போவமல்ல

ஆறுமுகசாமி... ஒருவரை வரவேற்றதற்கு இப்புட்டு கருத்து வேறுபாடுகளா?

உலகம் கெட்டுப் போச்சு சாமி.

ஆமாய்யா.. நேற்றுத்தான் எம்.ஒ.ரிக்கு விட்டனான்.. அதுதான் இப்ப சுப்பரா வேலை செய்யுது... :angry: :angry: :angry:

முதலிலை VOSA யிலை கொண்டுபோய் காட்டி வாகனத்துக்கு புத்தகத்தை எடுங்கோ....! இப்பவும் அந்த காறைத்தானோ வச்சிருக்கிறீயள்...??? :lol:

:

ஆமாய்யா.. நேற்றுத்தான் எம்.ஒ.ரிக்கு விட்டனான்.. அதுதான் இப்ப சுப்பரா வேலை செய்யுது... :angry: :angry: :angry:

சோமாலியாவிலும் எம்.ஒ.ரி(M.O.T) செய்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இது கிட்டத்தட்ட தூயவனின் ஒரு தனிப்பட்ட ஆக்கம், இதை தள நிர்வாகிகள் தான் தீர்மானிக்கவேண்டும் அதாவது கள விதிமுறையை மீறினால் தடை செய்வார்கள்.

அடுத்ததாக இதில் சம்பத்தப்பட்டவர் குறுக்ஸ், அவர் ஏற்றுக்கொள்ள வில்லையென்றால் இதை நீக்க நிர்வாகத்தினருக்கு உரிமையுள்ளது.

மற்றும்படி உறுப்பினர்களாகிய நாங்கள் விரும்பினால் வரவேற்கலாம், அல்லது உங்களது கருத்துக்களை முன்வைக்கலாம்.

இதையிட்டு தூயவன் உணர்ச்சிவசப்படவேண்டிய அவசிமில்லை, நீங்களும் உங்கள் பதில் கருத்துக்களை முன்வைக்கலாம் இது தான் சரியான விதிமுறை என்பது எனது சொந்தக் கருத்து.

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலிலை VOSA யிலை கொண்டுபோய் காட்டி வாகனத்துக்கு புத்தகத்தை எடுங்கோ....! இப்பவும் அந்த காறைத்தானோ வச்சிருக்கிறீயள்...??? :D

அண்ணை அவர் மூளையைப் பற்றித் தான் கதைக்கின்றார்

அந்தக்காரைத் தான் வைச்சிருக்கியளோ என்றால்,........... காரின் நிலமை ரெம்பப் பரிதாபமோ? காரைச் சுத்திச் சுத்திப் படம் எடுத்து கதைகதையாக வேற நடக்குதே? :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.