Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிராமத்து விடியல்

Featured Replies

மண்டும் இருள் கலைந்து செங்கொண்டைச் சேவல் சிலிர்த்தெழுந்து கொக்கரக்கோவென்று தொண்டை கிழியத் துயிலெழுப்பும்! தோட்டத்தே கறவை மாடும் மடி நிரம்பி அம்மா என்றழைக்கும்!

காக்கை கரையும் கருவானம் வெளுக்கும் பறவையினங்கள் சிறகடிக்கும் வண்டினங்கள் ரீங்காரமடிக்கும் குயிலினங்கள் பாட்டிசைக்கும்!

மேற்கில் மதி மறையும்... கீழ்க் கதிரும் மேலெழும்பும் விளக்குமாற்றோசை தெருவெல்லாம் இரையும் கேணிக் கரையில் வளைக் குடங்கள் கிண்கிணிக்கும் அதிகாலைத் துயிலெழுந்து தையலும் கெண்டைக்கால் தெரிய கண்டாங்கி சேலை கட்டி துளசிமாடம் வலம் வரும்!

விண்ணும் மண்ணும் உறவென வாழ்ந்து மண்ணின் சுவாசமே உயிர் சுவாசமாய் நேசித்து கதிரெழு முன் இருளுடையில் நீர் குடைந்திட முத்து மணிகளைப் போல் நெல்மணிகளை விதைத்திட பல மாந்தரும் சோற்றில் கை வைக்க தமை வருத்தி சேற்றில் கை வைத்து ஏறு பூட்டி வயலில் உழவர் பெருமக்காள் இறங்குவார்!

பொழுது மைகரைந்து தெளிவாகப் புலரும் இதமான தென்றல் காற்று முகத்தில் ஓங்கி அறையும் மாணிக்கச் செம்பரிதி நீலக்கடலை விட்டெழும்பும் தோணி வலை வீசி தோய் துறைக்கு மீண்டு வரும்!

சீருடையில் தேன் சிட்டுக்களாக தேனிதழ் குறுநகையுடன் சிட்டென இளையோர் செந்தமிழாம் மால் மொழியை பயில சின்னச் சுட்டு விரல் பிடித்து ஆனா எழுதி உள்ளத்தில் அறிவு விதைக்க இளங் காலையிலே கள்ளமில்லா ஞானச்சாலை செல்லுவார்!

சோர்வுற்ற பொழுதிலேயோர் இயற்கை அழகில் முகிழ்த்து ஈடற்றுப் பொலிந்த உயிர்ப்புடன் கூடிய கிராமத்து அழகிய சீர்வுற்ற விடியலைக் காண்மின் நேர்வுற்ற துயரால் நைவுற்ற உள்ளம் இன்பம் பெறும் கோடி... உளத்தினில் நீடிய இன்பம் துய்த்துப் போம்!

-தமிழ்நிலா.

Edited by தமிழ்நிலா

  • கருத்துக்கள உறவுகள்

வரிகள் அழகாக வர்ணிக்க பட்டுள்ளன பாராட்டுக்கள்  👏

14 hours ago, தமிழ்நிலா said:

சோர்வுற்ற பொழுதிலேயோர் இயற்கை அழகில் முகிழ்த்து ஈடற்றுப் பொலிந்த உயிர்ப்புடன் கூடிய கிராமத்து அழகிய சீர்வுற்ற விடியலைக் காண்மின் நேர்வுற்ற துயரால் நைவுற்ற உள்ளம் இன்பம் பெறும் கோடி... உளத்தினில் நீடிய இன்பம் துய்த்துப் போம்!

தமிழ்நிலா,

கிராமத்தில் பிறந்து எனது பதின்ம வயது முழுவதையும் அங்கேயே கழித்தவன் என்ற வகையில் உங்கள் கவி வரிகள் என்னை 20,  30 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. 🌱

அந்த இன்பநிலை தற்போது அங்கு போனால் கிடைக்குமோ என்பது சந்தேகமே. அந்நாட்கள் மீண்டும் வராதா என ஏங்க வைத்தது உங்கள் கவிதை. என் வாழ் நாளை இப்படி ஒரு கிராமத்தில் நிறைவு செய்தால் நன்றாக இருக்குமே என்றும் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். பார்ப்போம். 😊

வரிகளும், வர்ணனைகளும் சிறப்பு. நல்ல நினைவுகளை மீளவும் நினைத்து இன்புறச்செய்த உங்கள் கவிதைக்கு நன்றி தமிழ்நிலா! 🙏😊

இப்படி நல்ல கவிதைகளைத் தாருங்கள். அதில் மூழ்கித் திளைக்க ஆவலாயுள்ளோம்! 

(பிற்குறிப்பு: இந்தக் கவிதைக்குத் தகுந்த வரவேற்பு இங்கு யாழில் இன்னமும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.)

  • தொடங்கியவர்
3 hours ago, மல்லிகை வாசம் said:

தமிழ்நிலா,

கிராமத்தில் பிறந்து எனது பதின்ம வயது முழுவதையும் அங்கேயே கழித்தவன் என்ற வகையில் உங்கள் கவி வரிகள் என்னை 20,  30 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. 🌱

அந்த இன்பநிலை தற்போது அங்கு போனால் கிடைக்குமோ என்பது சந்தேகமே. அந்நாட்கள் மீண்டும் வராதா என ஏங்க வைத்தது உங்கள் கவிதை. என் வாழ் நாளை இப்படி ஒரு கிராமத்தில் நிறைவு செய்தால் நன்றாக இருக்குமே என்றும் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். பார்ப்போம். 😊

வரிகளும், வர்ணனைகளும் சிறப்பு. நல்ல நினைவுகளை மீளவும் நினைத்து இன்புறச்செய்த உங்கள் கவிதைக்கு நன்றி தமிழ்நிலா! 🙏😊

இப்படி நல்ல கவிதைகளைத் தாருங்கள். அதில் மூழ்கித் திளைக்க ஆவலாயுள்ளோம்! 

(பிற்குறிப்பு: இந்தக் கவிதைக்குத் தகுந்த வரவேற்பு இங்கு யாழில் இன்னமும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.)

உங்கள் அன்பான அழகான பாராட்டுக்கு மிக்க நன்றிகள்🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2021 at 16:16, தமிழ்நிலா said:

சீருடையில் தேன் சிட்டுக்களாக தேனிதழ் குறுநகையுடன் சிட்டென இளையோர் செந்தமிழாம் மால் மொழியை பயில சின்னச் சுட்டு விரல் பிடித்து ஆனா எழுதி உள்ளத்தில் அறிவு விதைக்க இளங் காலையிலே கள்ளமில்லா ஞானச்சாலை செல்லுவார்

தமிழீழ வாழ்வியலை படம் பிடித்து காட்டிய கவிதை பகிர்விற்கு நன்றி .👍

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகிய கிராமத்தின் காலைப் பொழுது உங்களின் தூரிகையால் துலங்கி நிக்கிறது அதே பொழுதில் எதையோ தொலைத்து விட்டு தவிக்கும் ஏக்கமும் மனதில்......பாராட்டுக்கள் நிலா .....!  👍

  • தொடங்கியவர்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழீழ வாழ்வியலை படம் பிடித்து காட்டிய கவிதை பகிர்விற்கு நன்றி .👍

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்🙏

  • தொடங்கியவர்
On 1/4/2021 at 00:33, நிலாமதி said:

வரிகள் அழகாக வர்ணிக்க பட்டுள்ளன பாராட்டுக்கள்  👏

மிக்க நன்றிகள் நிலாக்கா🙂

On 1/4/2021 at 12:45, suvy said:

ஒரு அழகிய கிராமத்தின் காலைப் பொழுது உங்களின் தூரிகையால் துலங்கி நிக்கிறது அதே பொழுதில் எதையோ தொலைத்து விட்டு தவிக்கும் ஏக்கமும் மனதில்......பாராட்டுக்கள் நிலா .....!  👍

மிக்க நன்றிகள்🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.