Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது

Featured Replies

23 minutes ago, விசுகு said:

நீங்கள் அல்லது உங்கள் போன்றோரின் இதுவரையான கருத்துக்களின் அவை அனைத்தையும் பதிந்து விட்டீர்கள் 

மனச்சாட்சி இருந்தால் இந்த திரியிலாவது இந்திய சர்வதேச சிறீலங்காவின் தவறுகளை பதிவிடுங்கள்.

அதைவிடுத்து தொடர்ந்து புலிகள் மீதான குறை காணல் அல்லது குற்றம் காணல் அடுத்த தலைமுறைக்கு புலிகளை தீண்டத்தகாதவர்களாகவே கொண்டு செல்லும்.

இது தான் உங்களது நோக்கம் என்று இங்கே பல உறவுகளால் தொடர்ந்து குற்றச்சாட்டும் உங்கள் மேல் உண்டு. அதிலிருந்து நீங்கள் வெளியே வரவும் முயற்சிக்கலாமே? 

உங்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டையே ஏற்காத அல்லது நிரூபிக்க முடியாத நீங்கள் எப்படி மற்றவரை நோக்கி சுட்டு விரல் நீட்ட முடியும்??

விசுகு, முதலில் என் மீது என்ன குற்றச்சாட்டை வைத்தீர்கள். வெளிப்படையாக ஒரு பொது தளத்தி்ல் அரசியல் கருத்துக்களை வைப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா?  இங்குள்ள உறவுகள் எவரும் என் மீது குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. பதிலாக வழமையான வசைமாரிகளை தான் பொழிந்தார்கள். அதற்கு நான் என்ன பதில் கூற? 

எம்மை அழிப்பதற்கு எதிரி தனது உச்ச பட்ச ராஜதந்திரத்தை பயன்படுத்தினான் என்ற போது எம்மை காப்பாற்றுவதாக முழு பொறுப்பும் எடுத்தவர்கள் அதற்காகவே மற்றய தரப்பினர் எல்லோரையும் தமது பலத்தை பிரயோகித்து அரசியல் அரங்கில் இருந்து அகற்றியவர்களில்  அரசியல்   தவறுகளையும் தரப்பு தான் மீள ஆராயவதே நன்மை தரும் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை. 

 விசுகு அவர்களே எனது கருத்துக்கள் வெளிப்படையானவை. இதில் மறைப்பதறகு ஏதுமில்லை. இலங்கைத் தீவில் ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் நன்மை குறித்து சிந்திக்கப்போகின்றோமா அல்லது நாம் விசுவாசம் வைத்து ஒரு அமைப்பைப்பற்றி மட்டும் சிந்திக்க போகின்றோமா என்பதே எனது கேள்வி. அதற்காக எமது கருத்துகளை மட்டும் இங்கு வைக்கிறோம். அதில் எந்த தவறும் இல்லை. நீங்களும் உங்கள் கருத்துக்களை வையுங்கள். இவ்வாறான விவாதங்கள் எதிர் கால சந்ததியே என்றடையும் போது அவர்கள் சுயமாக தமது பாதையை தீர்மானிப்பார்கள். எப்படியும் எமது தலைமுறையால்  எதையும் மாற்றமுடியாது. எம்மால் செய்யக்கூடியது எமது காலத்தில் நடைபெற்ற உண்மையான விடங்களை ஒளிவு மறைவு இன்றி கூறுவதே.  

  • Replies 130
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

உதாரணத்துக்கு நாலு ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதிக்காட்டினால் தானே நாங்களும் எழுதலாம்?

(1) தன் கையே தனக்கு உதவி

(2) பிறரை நம்பாதே அது தமிழனாகயிருத்தால்கூட

(3) தமிழ்ஈழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்பதை பிரபாகரன் செயல்முறையில் வெற்றிகரமாக நிருபித்து கட்டியுள்ளர்.எனவே அவரது போராட்டம் பூரண தோல்வியில்லை.

(4) தமிழ்ஈழத்தமிழருக்குள்ள ஒரேவழி இலங்கைப்பராளுமன்றத்தில் 3|1 பங்கு அங்கத்தவர்களைப்பெற முயற்ச்சிப்பது அதாவது தமிழ்ஈழத்தில் அதிக.  குழந்தைகளைப்பெற்றுக் கொள்வது.

(5) தமிழ்ஈழத்தில் இரண்டு குழந்தைகளுக்குமேல்லுள்ள குடும்பங்களுக்கு பொருளாதர உதவிசெய்வது .

குறிப்பு:_இக்கருத்துக்கள் உங்களுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களாய் தெரியாதுயிருக்கலாம். 

 

6 minutes ago, Kandiah57 said:

(1) தன் கையே தனக்கு உதவி

(2) பிறரை நம்பாதே அது தமிழனாகயிருத்தால்கூட

(3) தமிழ்ஈழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்பதை பிரபாகரன் செயல்முறையில் வெற்றிகரமாக நிருபித்து கட்டியுள்ளர்.எனவே அவரது போராட்டம் பூரண தோல்வியில்லை.

(4) தமிழ்ஈழத்தமிழருக்குள்ள ஒரேவழி இலங்கைப்பராளுமன்றத்தில் 3|1 பங்கு அங்கத்தவர்களைப்பெற முயற்ச்சிப்பது அதாவது தமிழ்ஈழத்தில் அதிக.  குழந்தைகளைப்பெற்றுக் கொள்வது.

(5) தமிழ்ஈழத்தில் இரண்டு குழந்தைகளுக்குமேல்லுள்ள குடும்பங்களுக்கு பொருளாதர உதவிசெய்வது .

குறிப்பு:_இக்கருத்துக்கள் உங்களுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களாய் தெரியாதுயிருக்கலாம். 

 

கந்தையா,

கற்பனைக்கோட்டையில்  வாழாமல் எம்மால் முடிந்தவற்றை திட்டமிடுவதும் அவற்றை செயற்படுத்துவதும் நிச்சயமாக ஆக்கபூர்வமான கருத்துக்கள் தான்.👍

போராட்டம் எமக்கு கற்று கொடுத்த பாடங்கள் அவை தான். ஆனால் அதற்கு தமிழர்கள் கொடுத்த Lektion tarif தான் மிக மிக  அதிகம். 😭

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

அண்ணா வணக்கம்,

லோங் டயிம் நோ ஸீ? எப்படி இருக்கிறியள்?
 

 

வணக்கம்....ரஞ்சித்...!

நலமாக  உள்ளேன்..!

நன்றி..!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

கந்தையா,

கற்பனைக்கோட்டையில்  வாழாமல் எம்மால் முடிந்தவற்றை திட்டமிடுவதும் அவற்றை செயற்படுத்துவதும் நிச்சயமாக ஆக்கபூர்வமான கருத்துக்கள் தான்.👍

போராட்டம் எமக்கு கற்று கொடுத்த பாடங்கள் அவை தான். ஆனால் அதற்கு தமிழர்கள் கொடுத்த Lektion tarif தான் மிக மிக  அதிகம். 😭

துல்பன் அவர்களே என்னுடைய பார்வையில் நீங்கள் தமிழ்ஈழப்போராட்டம்பற்றி சரிவரப்புரிந்து கொள்ளவில்லை . என்பேன். என்னெனில் நீங்கள் குறிப்பிட்டபடி இப்போராட்டம் நடத்திருத்தால்கூட தோல்வி தான் முடிவு ..ஒருபோதும் வெற்றிபெற்றுயிருக்கமுடியாது..காரணம்..இப்போராட்டம் தொடக்கமுதலே. இதன் முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டது..இது தமிழ்ஈழத்தமிழர் எவருக்கும் முன்பு தெரியவில்லை..ஆனால் இந்த உண்மையை பிரபாகரன் போராடியதான் முலம் நிருபித்துக்கட்டியுள்ளார்.அவர்நிருபித்த உண்மை இதுதான்,. ஈழத்தமிழர்களே. நீங்கள்  எவ்வகையில்..எவ்வளவு பலம் கொண்டு போராடினாலும் ..தமிழ்ஈழம் அமைவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது..இது ஒரு வெற்றி  இராண்டவது..வெல்ல முடியாத போராட்டம் என்று செல்லவைப்பது ஒரு வெற்றி மூன்றாவது.இந்தியா உதவியபடியால் தான் நாங்கள் வென்றோம் என்று செல்வதுகூட புலிகளின் வெற்றி  இலங்கையரசு செல்லியுள்ளது ..இந்தியா உதவிசெய்யாவிடின் பிரபாகரன் வெற்றிபெற்றுயிருப்பார்.என்று ஏன்? கருதக்கூடாது..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

உதாரணத்துக்கு நாலு ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதிக்காட்டினால் தானே நாங்களும் எழுதலாம்?

 

2 hours ago, விசுகு said:

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது

Rate this topic

எவ்வாறு உதவியது?

யாரை எல்லாம் கூட்டுச் சேர்த்தது?

அதற்காக என்ன என்ன ஆயுதங்களை வழங்கி இருந்தனர்?

இறுதி கட்டத்தில் வெளியே இருந்து பாதுகாக்க வந்த சர்வதேச கரங்களை எவ்வாறு தடுத்தார்கள்??

இன்னும் இன்னும் எவ்வளவோ விடயங்களை பதியலாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம்.

1. எவ்வாறு உதவியது?

இலங்கை அரசு ஈழத்தமிழரை வெல்ல இந்தியா மிகவும் சூட்சுமமாக உதவியது. இதற்கு வை. கோ. முக்கியமாக பயன்படுத்தப்பட்டார். சிதம்பரம், கருணாநிதி, தேன்மொழி ஆகியோரும் பயன்படுத்தப்பட்டார்கள். ஈழத்தமிழர் இந்திய அரசியல்வாதிகளை நம்பும்வரை ஈழத்தமிழர் தனிநாடு அமைப்பதை தம்மால் தடுக்க முடியும் என்று இந்தியா மிகச்சரியாக கணக்கிட்டு வைத்திருந்தது. அமெரிக்க அரசின் பசிபிக் கொமாண்ட் கப்பலில் மக்களும் விடுதலைப்புலிகளும் காப்பாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதற்கான ஏற்பாட்டை செல்வாக்குள்ள இந்தியத் தமிழ் அமெரிக்கரூடாக தான்  செய்திருப்பதாக வை. கோ. விடுதலைப்புலிகளை நம்பவைத்தார். அவரும் அதை நம்பியிருக்கலாம். இந்திய அரசு அந்த நம்பிக்கையை ஏற்படுத்தியதன் மூலம் போராட்ட வலுவை குறைத்து அனைவரையும் திட்டமிட்ட வகையில் கொன்றழித்தது.

2. யாரை எல்லாம் கூட்டுச் சேர்த்தது?

1. வை. கோ. - அமெரிக்க அரசின் கப்பல் ஏற்பாடு என்ற மாயையை உருவாக்க உதவினார்.

2. பழ. நெடுமாறன். - திரெண்டெழுந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த இந்திய காங்கிரஸ் அரசுக்கு உதவினார்.

3. கருணாநிதி - தேன்மொழி -   தமிழக மக்களை கிளர்ந்தெழாமல் தடுக்க  உண்ணாவிரத நாடகம்.

கற்றுக்கொண்ட பாடம்

இலங்கைத்தீவில் ஈழத்தமிழர் தமது எதிர்காலத்தை திட்டமிட்டு செயற்படுத்தும் போது, தமது உண்மையான நோக்கம், திட்டம் ஆகியவற்றை எந்தவொரு தமிழ்நாட்டு தமிழருடனுமோ, இந்தியருடனுமோ பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஆனால் இந்திய அரசின் திட்டங்களை அறிந்துகொண்டு, இந்திய எதிர்ப்பை பலமிழக்க செய்ய தமிழ்நாட்டினரை தாராளமாக பயன்படுத்த வேண்டும்.

Edited by கற்பகதரு

2 minutes ago, Kandiah57 said:

துல்பன் அவர்களே என்னுடைய பார்வையில் நீங்கள் தமிழ்ஈழப்போராட்டம்பற்றி சரிவரப்புரிந்து கொள்ளவில்லை . என்பேன். என்னெனில் நீங்கள் குறிப்பிட்டபடி இப்போராட்டம் நடத்திருத்தால்கூட தோல்வி தான் முடிவு ..ஒருபோதும் வெற்றிபெற்றுயிருக்கமுடியாது..காரணம்..இப்போராட்டம் தொடக்கமுதலே. இதன் முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டது..இது தமிழ்ஈழத்தமிழர் எவருக்கும் முன்பு தெரியவில்லை..ஆனால் இந்த உண்மையை பிரபாகரன் போராடியதான் முலம் நிருபித்துக்கட்டியுள்ளார்.அவர்நிருபித்த உண்மை இதுதான்,. ஈழத்தமிழர்களே. நீங்கள்  எவ்வகையில்..எவ்வளவு பலம் கொண்டு போராடினாலும் ..தமிழ்ஈழம் அமைவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது..இது ஒரு வெற்றி  இராண்டவது..வெல்ல முடியாத போராட்டம் என்று செல்லவைப்பது ஒரு வெற்றி மூன்றாவது.இந்தியா உதவியபடியால் தான் நாங்கள் வென்றோம் என்று செல்வதுகூட புலிகளின் வெற்றி  இலங்கையரசு செல்லியுள்ளது ..இந்தியா உதவிசெய்யாவிடின் பிரபாகரன் வெற்றிபெற்றுயிருப்பார்.என்று ஏன்? கருதக்கூடாது..

கந்தையா, 

இந்தியா ஒருபோதும் தமிழ் ஈழம் அமைவதை அனுமதிக்காது என்பது 1980 களின் ஆரம்பத்தில் எமக்கு உதவி செய்யும் போதே தெளிவாக இந்தியாவால் தெரிவிக்கப்பட்டுவிட்டது. 1987 ல் அது  மிக உறுதியாக உறுதிப்ப்படுத்தபட்டது. அப்படியானால் அது யுத்தத்தில் இலங்கை அரசுக்கு உதவி செய்தவது என்பது ஜதார்த்தமானது.

அதை போலவே உலக நாடுகளிலும் எமது போராட்டத்திற்கு  பயங்கரவாத பட்டம் கொடுப்பதற்கு  விடுதலைபுலிகளே யுத்த களத்திற்கு அப்பாற்பட்ட பல தாக்குதல்களை செய்த‍தன்  மூலமும் தனி நபர்களை கொலை செய்த‍த்தன் மூலமும்  உதவி செய்தார்கள். 

2002 உலகின் மனப்போக்கை உணர்ந்து 2002 பேச்சுவாரத்தையில்  எமது தேசியத்தை ஒரு பாதுகாப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சக்தியை விடுதலைபுலிகள் கொண்டிந்தார்கள். அதை அவர்கள் செய்யாமல் வழமையான இராணுவ மேலாண்மையால் சாதிக்கலாம் என்று மக்களை அழிவுக்குள்ளாக்கியதோடு சிங்கள தரப்பிலும் வெற்றி திமிரை பரிசளித்து எம்மை மேலும் அடக்க உதவினார்கள் என்பதே எனது கருத்து. இதற்கு மாற்று கருத்து தெரிவிப்பவர்களும் இருக்கலாம். கருத்து என்ற ரீதியில் அதை நான் வரவேற்கிறேன். ஆனால் பொது தளத்தில் வெளிப்படை தன்மையுடன் கருத்துக்களை சொல்வது சிறப்பானது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கற்பகதரு said:

 

1. எவ்வாறு உதவியது?

இலங்கை அரசு ஈழத்தமிழரை வெல்ல இந்தியா மிகவும் சூட்சுமமாக உதவியது. இதற்கு வை. கோ. முக்கியமாக பயன்படுத்தப்பட்டார். சிதம்பரம், கருணாநிதி, தேன்மொழி ஆகியோரும் பயன்படுத்தப்பட்டார்கள். ஈழத்தமிழர் இந்திய அரசியல்வாதிகளை நம்பும்வரை ஈழத்தமிழர் தனிநாடு அமைப்பதை தம்மால் தடுக்க முடியும் என்று இந்தியா மிகச்சரியாக கணக்கிட்டு வைத்திருந்தது. அமெரிக்க அரசின் பசிபிக் கொமாண்ட் கப்பலில் மக்களும் விடுதலைப்புலிகளும் காப்பாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதற்கான ஏற்பாட்டை செல்வாக்குள்ள இந்தியத் தமிழ் அமெரிக்கரூடாக தான்  செய்திருப்பதாக வை. கோ. விடுதலைப்புலிகளை நம்பவைத்தார். அவரும் அதை நம்பியிருக்கலாம். இந்திய அரசு அந்த நம்பிக்கையை ஏற்படுத்தியதன் மூலம் போராட்ட வலுவை குறைத்து அனைவரையும் திட்டமிட்ட வகையில் கொன்றழித்தது.

2. யாரை எல்லாம் கூட்டுச் சேர்த்தது?

1. வை. கோ. - அமெரிக்க அரசின் கப்பல் ஏற்பாடு என்ற மாயையை உருவாக்க உதவினார்.

2. பழ. நெடுமாறன். - திரெண்டெழுந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த இந்திய காங்கிரஸ் அரசுக்கு உதவினார்.

3. கருணாநிதி - தேன்மொழி -   தமிழக மக்களை கிளர்ந்தெழாமல் தடுக்க  உண்ணாவிரத நாடகம்.

இது உங்கள் பார்வை.

முரணாக எதிர்மறையான கருத்துக்களும் சாட்சியங்களும் கோடி உள்ளன.

பேசலாம். 

இதன் உண்மை அறிவதே எமது அடுத்த தலைமுறைக்கு நன்மை பயக்கும்.

தொடருங்கள்.

Edited by விசுகு

2 minutes ago, விசுகு said:

இது உங்கள் பார்வை.

முரணாக எதிர்மறையான கருத்துக்களும் சாட்சியங்களும் கோடி உள்ளன.

பேசலாம். 

இதன் உண்மை அறிந்தே எமது அடுத்த தலைமுறைக்கு நன்மை பயக்கும்.

தொடருங்கள்.

வரவேற்கிறேன். உண்மை தொடர்வோம். கருத்துகள் சாட்சிகள் பல உள்ளன. தர்க்க ரீதியில்  நேர்மையாக அதை அணுகுவோம்.  நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

அதை போலவே உலக நாடுகளிலும் எமது போராட்டத்திற்கு  பயங்கரவாத பட்டம் கொடுப்பதற்கு  விடுதலைபுலிகளே யுத்த களத்திற்கு அப்பாற்பட்ட பல தாக்குதல்களை செய்த‍தன்  மூலமும் தனி நபர்களை கொலை செய்த‍த்தன் மூலமும்  உதவி செய்தார்கள். 

விடுதலைப்புலிகள் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவல்ல. 1985 காலப்பகுதியிலேயே அமெரிக்கா விடுதலைப்புலிகளை அமெரிக்கசார்பு போராளிகளாக இயங்க வைக்க முயற்சித்தது. உதாரணமாக, குர்திஷ் போராளிகளுக்கு பயிற்சி வழங்குமாறு கேட்டபோது விடுதலைப்புலிகள் மறுத்துவிட்டார்கள் - காரணம், இந்திய அரசு அதை விரும்பாது என்றே எனக்கு சொல்லப்பட்டது. அமெரிக்காவை பொறுத்தளவில் அமெரிக்க நலன்களுக்கு உதவ மறுக்கும் போராளிகளும் நாடுகளும் பயங்கரவாதிகள்.

Edited by கற்பகதரு

Just now, கற்பகதரு said:

விடுதலைப்புலிகள் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவல்ல. 1985 காலப்பகுதியிலேயே அமெரிக்கா விடுதலைப்புலிகளை அமெரிக்கசார்பு போராளிகளாக இயங்க வைக்க முயற்சித்தது. உதாரணமாக, குர்திஷ் போராளிகளுக்கு பயிற்சி வழங்குமாறு கேட்டபோது விடுதலைப்புலிகள் மறுத்துவிட்டார்கள் - காரணம், இந்திய அரசு அதை விரும்பாது என்றே எனக்கு சொல்லப்பட்டது.

நான் கூறியது விடுதலைபுலிகளை ஏன் பயங்கரவாத பட்டியல் சேர்த்தார்கள் என்பதல்ல.  அப்படி பயங்கரவாத பட்டியில்  சேர்ப்பதற்கு மேற்குலகுக்கு தேவையாக காரணங்களை அவர்களை கஷ்ரப்படுத்தப்படுத்த கூடாது என்ற நல்லெணத்தில் விடுதலைப்புலிகளே தாராளமாக வழங்கினார்கள் என்பதே. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, tulpen said:

கந்தையா, 

இந்தியா ஒருபோதும் தமிழ் ஈழம் அமைவதை அனுமதிக்காது என்பது 1980 களின் ஆரம்பத்தில் எமக்கு உதவி செய்யும் போதே தெளிவாக இந்தியாவால் தெரிவிக்கப்பட்டுவிட்டது. 1987 ல் அது  மிக உறுதியாக உறுதிப்ப்படுத்தபட்டது. அப்படியானால் அது யுத்தத்தில் இலங்கை அரசுக்கு உதவி செய்தவது என்பது ஜதார்த்தமானது.

அதை போலவே உலக நாடுகளிலும் எமது போராட்டத்திற்கு  பயங்கரவாத பட்டம் கொடுப்பதற்கு  விடுதலைபுலிகளே யுத்த களத்திற்கு அப்பாற்பட்ட பல தாக்குதல்களை செய்த‍தன்  மூலமும் தனி நபர்களை கொலை செய்த‍த்தன் மூலமும்  உதவி செய்தார்கள். 

2002 உலகின் மனப்போக்கை உணர்ந்து 2002 பேச்சுவாரத்தையில்  எமது தேசியத்தை ஒரு பாதுகாப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சக்தியை விடுதலைபுலிகள் கொண்டிந்தார்கள். அதை அவர்கள் செய்யாமல் வழமையான இராணுவ மேலாண்மையால் சாதிக்கலாம் என்று மக்களை அழிவுக்குள்ளாக்கியதோடு சிங்கள தரப்பிலும் வெற்றி திமிரை பரிசளித்து எம்மை மேலும் அடக்க உதவினார்கள் என்பதே எனது கருத்து. இதற்கு மாற்று கருத்து தெரிவிப்பவர்களும் இருக்கலாம். கருத்து என்ற ரீதியில் அதை நான் வரவேற்கிறேன். ஆனால் பொது தளத்தில் வெளிப்படை தன்மையுடன் கருத்துக்களை சொல்வது சிறப்பானது. 

நீங்கள் சொல்லும் கருத்து தோல்வியை அடிப்படையாக வைத்து சொல்லப்படுகிறது.ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு பேயில் பண்ணினால்  அந்த மாணவன் பள்ளிக்கூடம்..போய்யிருக்கக்கூடாது..என்பிர்கள் போலுள்ளது.சும்மாயிருத்தவர்களை எல்லாம் புலிகள் கொலை செய்யவில்லை..எதிர்த்தவர்களை தான் எதிர்த்தார்கள் .இதில் தமிழன்  ..தமிழரல்லாதவர் என வேறுபாடு பார்க்கமுடியாது ..பயங்கரவாதத்தடை பெறும்பாலும். 09-11-1991 க்கு பிற்பாடு தான் ..புலிகள் பிழைவிட்டுள்ளார்கள்..இல்லை என்று கூறவில்லை..(1) இலங்கையுடன் பேச்சுவார்த்தைக்கு போனது..

(2)கருணா..பிள்ளையான்....போன்றேருக்கு பயிற்ச்சி அளித்தது..

போராட்டம் என்பது .ஒரு பொருளை உற்பத்தி  செய்வது போன்றது இல்லை..அதாவது ஒரே செயல் முறையில்லை  களநிலைமைக்கு எற்ப்ப வேறுபடும்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அவர்களை கஷ்ரப்படுத்தப்படுத்த கூடாது என்ற நல்லெணத்தில் விடுதலைப்புலிகளே தாராளமாக வழங்கினார்கள் என்பதே. 

இது தான் நீங்கள் விமர்சனம் வைக்கும் பாங்கு.

இது எதற்கும் உதவப்போவதில்லை. ***

2 hours ago, Kandiah57 said:

நீங்கள் சொல்லும் கருத்து தோல்வியை அடிப்படையாக வைத்து சொல்லப்படுகிறது.ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு பேயில் பண்ணினால்  அந்த மாணவன் பள்ளிக்கூடம்..போய்யிருக்கக்கூடாது..என்பிர்கள் போலுள்ளது.சும்மாயிருத்தவர்களை எல்லாம் புலிகள் கொலை செய்யவில்லை..எதிர்த்தவர்களை தான் எதிர்த்தார்கள் .இதில் தமிழன்  ..தமிழரல்லாதவர் என வேறுபாடு பார்க்கமுடியாது ..பயங்கரவாதத்தடை பெறும்பாலும். 09-11-1991 க்கு பிற்பாடு தான் ..புலிகள் பிழைவிட்டுள்ளார்கள்..இல்லை என்று கூறவில்லை..(1) இலங்கையுடன் பேச்சுவார்த்தைக்கு போனது..

(2)கருணா..பிள்ளையான்....போன்றேருக்கு பயிற்ச்சி அளித்தது..

போராட்டம் என்பது .ஒரு பொருளை உற்பத்தி  செய்வது போன்றது இல்லை..அதாவது ஒரே செயல் முறையில்லை  களநிலைமைக்கு எற்ப்ப வேறுபடும்..

அதே.

நன்றி.

2 hours ago, Kandiah57 said:

நீங்கள் சொல்லும் கருத்து தோல்வியை அடிப்படையாக வைத்து சொல்லப்படுகிறது.ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு பேயில் பண்ணினால்  அந்த மாணவன் பள்ளிக்கூடம்..போய்யிருக்கக்கூடாது..என்பிர்கள் போலுள்ளது.சும்மாயிருத்தவர்களை எல்லாம் புலிகள் கொலை செய்யவில்லை..எதிர்த்தவர்களை தான் எதிர்த்தார்கள் .இதில் தமிழன்  ..தமிழரல்லாதவர் என வேறுபாடு பார்க்கமுடியாது ..பயங்கரவாதத்தடை பெறும்பாலும். 09-11-1991 க்கு பிற்பாடு தான் ..புலிகள் பிழைவிட்டுள்ளார்கள்..இல்லை என்று கூறவில்லை..(1) இலங்கையுடன் பேச்சுவார்த்தைக்கு போனது..

(2)கருணா..பிள்ளையான்....போன்றேருக்கு பயிற்ச்சி அளித்தது..

போராட்டம் என்பது .ஒரு பொருளை உற்பத்தி  செய்வது போன்றது இல்லை..அதாவது ஒரே செயல் முறையில்லை  களநிலைமைக்கு எற்ப்ப வேறுபடும்..

கந்தையா, 

1. இலங்கை அரசுடன் பேச்சுவாரத்தைக்கு போகாமல் யாருடன் பேச்சுவார்த்தைக்கு போவது அமேரிக்க அரசுடனா? 

2. கருணா பிள்ளையான்  யுத்தத்தில் இறந்திருந்தால் இதை கூறி இருக்க மாட்டீர்கள்.

3. அந்த வேறுபாடுகளை விமர்சிக்க கூடாது என்று நினைப்பது எந்ந வகையில் தவறு? 

தம்மை தவிர வேறு எவரும் ஆயுத ரீதியிலோ அரசியல் ரீதியிலோ போராடக்கூடாது என்று தாமே தீர்மானித்து அவர்களை தமது ஆயுத பலத்தினால் அடக்கி போராட்டத்தை தமது ஏக போக குத்தக்கை எடுத்த புலிகளுக்கு அதன் விளைவுகளுக்கு பொறுப்பு கூறவும் வேண்டும் என்பத நீதி.  பொறுப்பு கூற அவர்கள் இன்று இல்லை. ஆனால் அந்த அரசியல் நடைமுறைகள் எல்லாம் சரி என்று எதிர்கால சந்த‍திக்கு பாடம் எடுப்பது மிக பெரிய துரோகத்தனம். அதனால் வெளிப்படையாக கருத்துகளை வைக்கிறோம். 

2 hours ago, விசுகு said:

இது தான் நீங்கள் விமர்சனம் வைக்கும் பாங்கு.

இது எதற்கும் உதவப்போவதில்லை. ***

 

விசுகு நான் வைத்த‍து அரசியல் கருத்து.  இதில் எந்த தவறும் இல்லை.  ஆனால் நீங்கள் வைத்த‍து உங்கள் வழமையான தேசியப்பாணியிலான ஒருவரை நோக்கிய  வசை மொழி.  நான் தொடர்ந்தும் பொதுவான அரசியல் விமர்சனங்களை வைப்பேன்.  அதற்கு பதிலளிக்க முடியாமல் நீங்கள் கூறும் வசைபொழிக்காக நான் உங்கள் மீது திருப்பி  வசைமொழி வைக்க முடியாது. என் மீது மேலும் வசை மொழிகளை பொழிவதற்கான் சக்தியை பெறுவதற்காக சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

கந்தையா, 

1. இலங்கை அரசுடன் பேச்சுவாரத்தைக்கு போகாமல் யாருடன் பேச்சுவார்த்தைக்கு போவது அமேரிக்க அரசுடனா? 

2. கருணா பிள்ளையான்  யுத்தத்தில் இறந்திருந்தால் இதை கூறி இருக்க மாட்டீர்கள்.

3. அந்த வேறுபாடுகளை விமர்சிக்க கூடாது என்று நினைப்பது எந்ந வகையில் தவறு? 

தம்மை தவிர வேறு எவரும் ஆயுத ரீதியிலோ அரசியல் ரீதியிலோ போராடக்கூடாது என்று தாமே தீர்மானித்து அவர்களை தமது ஆயுத பலத்தினால் அடக்கி போராட்டத்தை தமது ஏக போக குத்தக்கை எடுத்த புலிகளுக்கு அதன் விளைவுகளுக்கு பொறுப்பு கூறவும் வேண்டும் என்பத நீதி.  பொறுப்பு கூற அவர்கள் இன்று இல்லை. ஆனால் அந்த அரசியல் நடைமுறைகள் எல்லாம் சரி என்று எதிர்கால சந்த‍திக்கு பாடம் எடுப்பது மிக பெரிய துரோகத்தனம். அதனால் வெளிப்படையாக கருத்துகளை வைக்கிறோம். 

விசுகு நான் வைத்த‍து அரசியல் கருத்து.  இதில் எந்த தவறும் இல்லை.  ஆனால் நீங்கள் வைத்த‍து உங்கள் வழமையான தேசியப்பாணியிலான ஒருவரை நோக்கிய  வசை மொழி.  நான் தொடர்ந்தும் பொதுவான அரசியல் விமர்சனங்களை வைப்பேன்.  அதற்கு பதிலளிக்க முடியாமல் நீங்கள் கூறும் வசைபொழிக்காக நான் உங்கள் மீது திருப்பி  வசைமொழி வைக்க முடியாது. என் மீது மேலும் வசை மொழிகளை பொழிவதற்கான் சக்தியை பெறுவதற்காக சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். 

நீங்கள் திருந்த இடமில்லை

புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்தவன் என்றவன் என்றரீதியில் உங்கள் போன்ற நண்டுகள் மீதான தாக்குதல்களையும் ஆதரித்தவன் ஆதரிப்பவன். ஏனெனில் உங்களை வெட்டாமல் அவர்கள் நகரவே முடியாது. இது எனது அனுபவத்தில் இருந்து வந்ததும் கூட. சக்கை மாதிரி கொல்லும் வரை விடமாட்டீர்கள்.

நன்றி. டொட் 

 

9 minutes ago, விசுகு said:

நீங்கள் திருந்த இடமில்லை

புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்தவன் என்றவன் என்றரீதியில் உங்கள் போன்ற நண்டுகள் மீதான தாக்குதல்களையும் ஆதரித்தவன் ஆதரிப்பவன். ஏனெனில் உங்களை வெட்டாமல் அவர்கள் நகரவே முடியாது. இது எனது அனுபவத்தில் இருந்து வந்ததும் கூட. சக்கை மாதிரி கொல்லும் வரை விடமாட்டீர்கள்.

நன்றி. டொட் 

 

யாரை யார் கொல்லுவது விசுகு? எனக்கு புரியவில்லை.  அப்படியானால்  கொல்லுவது தான் இறுதித்தீர்வா? அப்படி கொல்லும் இறுதி தீர்வை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா?

விசுகு என்ன நீங்கள்! 

 கோட்டபாயவும், மகிந்தவும்  கொல்லுவது தான் இறுதி தீர்வாக சிந்தித்தார்கள்.  ஆனால் அது தவறல்லவா?  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நீங்கள் திருந்த இடமில்லை

புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்தவன் என்றவன் என்றரீதியில் உங்கள் போன்ற நண்டுகள் மீதான தாக்குதல்களையும் ஆதரித்தவன் ஆதரிப்பவன். ஏனெனில் உங்களை வெட்டாமல் அவர்கள் நகரவே முடியாது. இது எனது அனுபவத்தில் இருந்து வந்ததும் கூட. சக்கை மாதிரி கொல்லும் வரை விடமாட்டீர்கள்.

நன்றி. டொட் 

 

இது நீங்கள் வெளிப்படையாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை விசுகர்! ஒரு அமைப்பின் விசுவாசத்திற்காக கொலைவெறியைக் கூட அடுத்த தலைமுறைக்குக் கடத்துவீர்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே!

இதனால் தான் உங்கள் போன்றோரின் வாசனையே ஈழத்தமிழரின் அடுத்த தலைமுறை மீது படுவது இனத்திற்குப் பேரழிவு என்று கருதுகிறேன்!

தாயகத்தில் இருக்கும்  தமிழ் தேசிய அரசியல் நிலை உங்கள் போன்றோரை நூதனசாலையில் வைத்து அழகுபார்க்கும் நிலையை இப்போது ஏற்படுத்தி வருகிறது!

நம்பிக்கை தரும் மாற்றங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, tulpen said:

கந்தையா, 

1. இலங்கை அரசுடன் பேச்சுவாரத்தைக்கு போகாமல் யாருடன் பேச்சுவார்த்தைக்கு போவது அமேரிக்க அரசுடனா? 

2. கருணா பிள்ளையான்  யுத்தத்தில் இறந்திருந்தால் இதை கூறி இருக்க மாட்டீர்கள்.

3. அந்த வேறுபாடுகளை விமர்சிக்க கூடாது என்று நினைப்பது எந்ந வகையில் தவறு? 

தம்மை தவிர வேறு எவரும் ஆயுத ரீதியிலோ அரசியல் ரீதியிலோ போராடக்கூடாது என்று தாமே தீர்மானித்து அவர்களை தமது ஆயுத பலத்தினால் அடக்கி போராட்டத்தை தமது ஏக போக குத்தக்கை எடுத்த புலிகளுக்கு அதன் விளைவுகளுக்கு பொறுப்பு கூறவும் வேண்டும் என்பத நீதி.  பொறுப்பு கூற அவர்கள் இன்று இல்லை. ஆனால் அந்த அரசியல் நடைமுறைகள் எல்லாம் சரி என்று எதிர்கால சந்த‍திக்கு பாடம் எடுப்பது மிக பெரிய துரோகத்தனம். அதனால் வெளிப்படையாக கருத்துகளை வைக்கிறோம். 

விசுகு நான் வைத்த‍து அரசியல் கருத்து.  இதில் எந்த தவறும் இல்லை.  ஆனால் நீங்கள் வைத்த‍து உங்கள் வழமையான தேசியப்பாணியிலான ஒருவரை நோக்கிய  வசை மொழி.  நான் தொடர்ந்தும் பொதுவான அரசியல் விமர்சனங்களை வைப்பேன்.  அதற்கு பதிலளிக்க முடியாமல் நீங்கள் கூறும் வசைபொழிக்காக நான் உங்கள் மீது திருப்பி  வசைமொழி வைக்க முடியாது. என் மீது மேலும் வசை மொழிகளை பொழிவதற்கான் சக்தியை பெறுவதற்காக சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். 

இலங்கையரசிடம் எந்தத் தீர்வுமில்லை..  இலங்கையரசிடம் தீர்வுத்திட்டமிருந்தால்..ஏன் பேச வேண்டும் ..அதனை நடைமுறைப்படுத்தியிருக்கலாம்  தமிழ்மக்கள் இலங்கையரசை ஆதரித்து இருப்பார்கள்..புலிகளைக் காட்டிக்கொடுத்திருப்பாரகள்..புலிகள் வளர்த்திருக்கமுடியாது..தீர்வு இல்லாதவனிடம் பேசி என்ன பலன் .?எந்த ஒரு காலத்திலும் இலங்கையரசுடன் பேசி தமிழர்கள் தீர்வுபெறமுடியாது..இது என் உறுதியான கருத்து.. நான் சொல்ல வந்தது  யாரகவிருந்தாலும் விடுதலைப்போரைக்கட்டிக்கொடுப்போருக்கு .பயிற்ச்சியளித்திருக்கக்கூடாது..

நன்றாகவே விமர்ச்சிக்கலாம்..ஆனால்.எந்தப்பிரயோசனமுமில்லை ..இனி ஒரு பிரபாகரன் உருவகமாட்டான்..போற்றுவதலோ..துற்றுவதலோ ..விடுதலை கிடைக்கப்போவதில்லை..சரியோ..பிழையோ...ஒரு மனிதன் தன் எண்ணம்..சிந்தனை..விருப்படி தன் செயல்புரிய முடியும்.மறாக மற்றவரகள் எண்ணம் போல்லில்லை.நீங்கள் உங்கள் விருப்பப்படி சிறந்த போர்வீரரை உருவாக்கி போராடலாம். எனக்கு ஆட்சேபனையில்லை..பிரபாகரன் பற்றி பேசும்போது நானும் என கருத்தை முன் வைப்பேன்..எனவே ..இது ஒரு தொடராகும் ..தேவையா? 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

இது நீங்கள் வெளிப்படையாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை விசுகர்! ஒரு அமைப்பின் விசுவாசத்திற்காக கொலைவெறியைக் கூட அடுத்த தலைமுறைக்குக் கடத்துவீர்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே!

இதனால் தான் உங்கள் போன்றோரின் வாசனையே ஈழத்தமிழரின் அடுத்த தலைமுறை மீது படுவது இனத்திற்குப் பேரழிவு என்று கருதுகிறேன்!

தாயகத்தில் இருக்கும்  தமிழ் தேசிய அரசியல் நிலை உங்கள் போன்றோரை நூதனசாலையில் வைத்து அழகுபார்க்கும் நிலையை இப்போது ஏற்படுத்தி வருகிறது!

நம்பிக்கை தரும் மாற்றங்கள் தான்.

களை எடுப்பதை எவரும் கொலை என்பதில்லை.

நல்ல விளைச்சலை எதிர்பார்க்கும் எந்த விவசாயியும் களை எடுப்பதை நிறுத்துவது இல்லை.

என்னைப் பொறுத்தவரை இறுதிக்காலத்தில் பிரபாகரன் மகாத்மா ஆகியதே இன்றைய தோல்விக்கு காரணம் என்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

இலங்கையரசிடம் எந்தத் தீர்வுமில்லை..  இலங்கையரசிடம் தீர்வுத்திட்டமிருந்தால்..ஏன் பேச வேண்டும் ..அதனை நடைமுறைப்படுத்தியிருக்கலாம்  தமிழ்மக்கள் இலங்கையரசை ஆதரித்து இருப்பார்கள்..புலிகளைக் காட்டிக்கொடுத்திருப்பாரகள்..புலிகள் வளர்த்திருக்கமுடியாது..தீர்வு இல்லாதவனிடம் பேசி என்ன பலன் .?எந்த ஒரு காலத்திலும் இலங்கையரசுடன் பேசி தமிழர்கள் தீர்வுபெறமுடியாது..இது என் உறுதியான கருத்து.. நான் சொல்ல வந்தது  யாரகவிருந்தாலும் விடுதலைப்போரைக்கட்டிக்கொடுப்போருக்கு .பயிற்ச்சியளித்திருக்கக்கூடாது..

நன்றாகவே விமர்ச்சிக்கலாம்..ஆனால்.எந்தப்பிரயோசனமுமில்லை ..இனி ஒரு பிரபாகரன் உருவகமாட்டான்..போற்றுவதலோ..துற்றுவதலோ ..விடுதலை கிடைக்கப்போவதில்லை..சரியோ..பிழையோ...ஒரு மனிதன் தன் எண்ணம்..சிந்தனை..விருப்படி தன் செயல்புரிய முடியும்.மறாக மற்றவரகள் எண்ணம் போல்லில்லை.நீங்கள் உங்கள் விருப்பப்படி சிறந்த போர்வீரரை உருவாக்கி போராடலாம். எனக்கு ஆட்சேபனையில்லை..பிரபாகரன் பற்றி பேசும்போது நானும் என கருத்தை முன் வைப்பேன்..எனவே ..இது ஒரு தொடராகும் ..தேவையா? 

பிரபாகரனை, புலிகளை நோக்கி பழைய தவறுகளைச் சுட்டிக் காட்டுவது , இன்னொரு புலிகள் 2.0 இனை திறமாக உருவாக்கும் நோக்கத்தில் அல்ல! அது இனி எப்போதும் நடக்காது! 

பின் ஏன் விமர்சனம்? புலிகளின் அதே தவறுகள், சில மடமைகள் ஆயுதம் மூலம் அல்லாமல் வேறு வழிகளில் இன்றும் புலிகளின் தீவிர ஆதரவாளர்களால் தற்போதைய அரசியலில் பயன்படுத்தப் படுகின்றன. எனவே அந்த தவறுகள் சுட்டிக் காட்டப் படுவது மிகவும் முக்கியம் எனக் கருதுகிறேன்!

ஒரு உதாரணம்: புலிகளை நேரடியாக ஆதரிக்காத சுமந்திரன் "புலி நீக்கம்" செய்கிறார் என்ற பொய்ப்பிரச்சாரம் எவ்வாறு தாயகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்று பார்க்கிறோம். அமீரை வழிக்கு வராததால் கொலை செய்தார்கள்; "புலிகளை invoke செய்து வாக்குக் கேட்காமல் வெல்வேன்" என்று சொன்னதால் சும் என்ற மிதவாத, தமிழ் ஆதரவு அரசியல் வாதியை வீழ்த்தப் போய் இன்று யாழில் அங்கஜன்  என்கிற துரையப்பா 2.0 ஆட்சி செய்கிறார். 

எனவே, புலிகள் தங்கள் தவறுகளால் சர்வதேச நாடுகள் பாதகமான நிலை எடுக்க பெருமளவு உதவினர் என்பதை ஒழிவு மறைவின்றிச் சொல்ல வேண்டியது அவசியம்!  

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

இலங்கையரசிடம் எந்தத் தீர்வுமில்லை..  இலங்கையரசிடம் தீர்வுத்திட்டமிருந்தால்..ஏன் பேச வேண்டும் ..அதனை நடைமுறைப்படுத்தியிருக்கலாம்  தமிழ்மக்கள் இலங்கையரசை ஆதரித்து இருப்பார்கள்..புலிகளைக் காட்டிக்கொடுத்திருப்பாரகள்..புலிகள் வளர்த்திருக்கமுடியாது..தீர்வு இல்லாதவனிடம் பேசி என்ன பலன் .?எந்த ஒரு காலத்திலும் இலங்கையரசுடன் பேசி தமிழர்கள் தீர்வுபெறமுடியாது..இது என் உறுதியான கருத்து.. நான் சொல்ல வந்தது  யாரகவிருந்தாலும் விடுதலைப்போரைக்கட்டிக்கொடுப்போருக்கு .பயிற்ச்சியளித்திருக்கக்கூடாது..

நன்றாகவே விமர்ச்சிக்கலாம்..ஆனால்.எந்தப்பிரயோசனமுமில்லை ..இனி ஒரு பிரபாகரன் உருவகமாட்டான்..போற்றுவதலோ..துற்றுவதலோ ..விடுதலை கிடைக்கப்போவதில்லை..சரியோ..பிழையோ...ஒரு மனிதன் தன் எண்ணம்..சிந்தனை..விருப்படி தன் செயல்புரிய முடியும்.மறாக மற்றவரகள் எண்ணம் போல்லில்லை.நீங்கள் உங்கள் விருப்பப்படி சிறந்த போர்வீரரை உருவாக்கி போராடலாம். எனக்கு ஆட்சேபனையில்லை..பிரபாகரன் பற்றி பேசும்போது நானும் என கருத்தை முன் வைப்பேன்..எனவே ..இது ஒரு தொடராகும் ..தேவையா? 

நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

களை எடுப்பதை எவரும் கொலை என்பதில்லை.

நல்ல விளைச்சலை எதிர்பார்க்கும் எந்த விவசாயியும் களை எடுப்பதை நிறுத்துவது இல்லை.

என்னைப் பொறுத்தவரை இறுதிக்காலத்தில் பிரபாகரன் மகாத்மா ஆகியதே இன்றைய தோல்விக்கு காரணம் என்பேன்.

இப்போது காலம் மாறி விட்டது விசுகர்!

இங்கே யாழில் பேசும் இந்தக் களையெடுத்தலை ஒரு தடவை யாழில், வன்னியில், கிழக்கில் இருக்கும் இளைய தலைமுறையிடம் அல்லது யுத்தம் மீண்ட மக்களிடம் ஒரு தடவை சொல்லிப் பாருங்கள்! என்ன வரவேற்புக் கிடைக்கிறது என்று பாருங்கள்! 

எனவே, நான் சொன்னது போல உங்கள் போன்றோருக்கு தமிழ் தேசியத்தின் எதிர்காலத்தில் பெரிய வேலை இருக்கப் போவதில்லை! இருப்பதாக நினைத்துக் கொண்டு நீங்கள் மிதப்பில் இருக்கலாம், தவறில்லை!

ஏனெனில், நீங்களே இப்போது "களைகள்" - ஆனால் உங்களை அகற்றும் படி யாரும் கோரப் போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

இப்போது காலம் மாறி விட்டது விசுகர்!

இங்கே யாழில் பேசும் இந்தக் களையெடுத்தலை ஒரு தடவை யாழில், வன்னியில், கிழக்கில் இருக்கும் இளைய தலைமுறையிட ம்ம்ம் அல்லது யுத்தம் மீண்ட மக்களிடம் ஒரு தடவை சொல்லிப் பாருங்கள்! என்ன வரவேற்புக் கிடைக்கிறது என்று பாருங்கள்! 

எனவே, நான் சொன்னது போல உங்கள் போன்றோருக்கு தமிழ் தேசியத்தின் எதிர்காலத்தில் பெரிய வேலை இருக்கப் போவதில்லை! இருப்பதாக நினைத்துக் கொண்டு நீங்கள் மிதப்பில் இருக்கலாம், தவறில்லை!

ஏனெனில், நீங்களே இப்போது "களைகள்" - ஆனால் உங்களை அகற்றும் படி யாரும் கோரப் போவதில்லை!

நானும் அதைத் தான் சொல்கிறேன்

நீங்கள் மேலே கூறியது போல

புலி நீக்கம் செய்ய முனைந்த சுமேந்திரன் களைகளாலா தூக்கி எறியப்பட்டார்????

உங்கள் அரசியலை நீங்கள் எப்படியும் எங்கேயும் செய்யுங்கள்.

அதற்குள் புலிகளை இருக்காதீர்கள்

யாழில் வன்னியில் கிழக்கில் இங்கே பேசுவது போல் சந்தியில் நின்று பேசிப் பாருங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

கோட்டபாயவும், மகிந்தவும்  கொல்லுவது தான் இறுதி தீர்வாக சிந்தித்தார்கள்.  ஆனால் அது தவறல்லவா?

அதுதவறல்ல புலிகள் செய்தவை மட்டும்தான் தவறு 
புலிகள் செய்தால் தற்காப்பு கூட தவறாகும், மஹிந்த கோத்தா செய்தால் ethnic cleansing கூட சரியாகும்,
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை எரித்துக்கொன்றால்  அது சரியாகும், அதே என் மீனவனை தொட்டால் உன் மாணவனை தொடுவேன் என்று சீமான் பேசினால் அது பாசிசமும் சாவனிசமும் சேர்ந்த தவறாகும், பொன்சேகாவுக்கு வாக்கு குத்தினால் சரியாகும், அதே கோத்தாவுக்கு குத்தினால் வெள்ளை வான் வரும் நொள்ளை வான் வரும் தவறாகும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

(1) தன் கையே தனக்கு உதவி

(2) பிறரை நம்பாதே அது தமிழனாகயிருத்தால்கூட

(3) தமிழ்ஈழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்பதை பிரபாகரன் செயல்முறையில் வெற்றிகரமாக நிருபித்து கட்டியுள்ளர்.எனவே அவரது போராட்டம் பூரண தோல்வியில்லை.

(4) தமிழ்ஈழத்தமிழருக்குள்ள ஒரேவழி இலங்கைப்பராளுமன்றத்தில் 3|1 பங்கு அங்கத்தவர்களைப்பெற முயற்ச்சிப்பது அதாவது தமிழ்ஈழத்தில் அதிக.  குழந்தைகளைப்பெற்றுக் கொள்வது.

(5) தமிழ்ஈழத்தில் இரண்டு குழந்தைகளுக்குமேல்லுள்ள குடும்பங்களுக்கு பொருளாதர உதவிசெய்வது .

குறிப்பு:_இக்கருத்துக்கள் உங்களுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களாய் தெரியாதுயிருக்கலாம். 

நீங்கள் மேலே இறுதியில் கூறியுள்ள விடயங்கள் சிலவற்றை எனது ஊரில் செய்கின்றோம்

வயதானவர்களுக்கு ஓய்வூதியம்

அதிக பிள்ளைகளை கொண்ட குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள்

முன் பள்ளிகளை தரமுயர்த்துதல் 

பாடசாலைகள் கோயில்கள் மற்றும் வீடுகளில் மழைத்தண்ணீரை சேகரித்தல்

இப்படி பல.

ஆனால் தேசிய மட்டத்தில் இதனை ஒருங்கிணைத்து செய்யத்தான் எந்த கட்டமைப்புகளும் இல்லை.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.