Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிமை-Loneliness-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உதயகுமார்!
உங்கள் எழுத்து இசை சேர்ப்பு ஒளியமைப்பு அனைத்தும் மிக பிரமாதம்.

4 hours ago, uthayakumar said:

 

முதுமையில் தனிமை மிகக் கொடுமை.

அதை உருக்கும் கவி வரிகளாகத் தந்தமை அருமை, உதயன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் வரும் போதே மனதை ஏதோ செய்கிறது.கவி வரிகள் ஒரு புறம் மறு புறம் ஸிட் சிறிராமின் குரல் இரண்டும் ஒரே நேரத்தில் குரல் வளையை இறுக்குவது போல் உணர்வு.. 

இளையவர்களுக்குள் வரக் கூடிய தனிமையை ஓரளவாவது தவிர்த்து விடலாம்.. ஆனால் வயது வந்த பெற்றார் மத்தியில் ஏற்படும் தனிமையை எதைக் கொண்டும் குணப்படுத்த இயலாது..

நான் உணர்ந்து கொண்ட வரையில் எப்படி தான் நாம் பார்த்து பார்த்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தாலும் ஒருவரை இழந்த பின் மற்றவர் தனிமையை அனுபவித்து வாழ்வது கொடுமை.. 

அவர்கள் மத்தியில் அவ்வப்போது ஏற்படும் ஏக்கங்களை எந்த வார்த்தை கொண்டும் வர்ணிக்க முடியாது.. பெண்கள் தனிமையை பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் ஆண்கள் மிக இலகுவாக ஒவ்வொரு கணமும் தங்கள் இயலாமையை இழப்பை காட்டி விடுவார்கள்.. எனக்கு வீட்டில் அப்பா இருக்கிறார்.அம்மா இல்லை என்ற ஒன்றைத் தவிர மிகுதி எல்லாம் பார்த்து பார்த்து செய்து விடுவோம்.

ஆனாலும் அம்மா இல்லாத ஏக்கத்தை வெளிப்படுத்தும் விதம் ஜீரணிக்க முடியாத நிலையாக இருக்கும்.நாளாந்தம் நேரில் பார்ப்பவள் என்ற வகையில் இதை பகிர்ந்து கொள்ள முடிகிறது.

இப்போ இந்த வைரஸ் தொற்று காரணமாக எங்கும் அனுப்ப இயலாது.சொல்லப் போனால் வீட்டுக்குள்ளே நடை பயிற்சியையும் செய்ய வேண்டிய சூழ்நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்...உதயன்....!

முதுமைப் பருவம் என்பது குழந்தைப் பருவம் போல...!!!

ஆனால் பராமரிக்க...அணைக்க ஒருவருமிருக்க மாட்டார்கள்...!!!

மரத்தின் கீழே படுத்து மாடு இரைமீட்டுவது போல பழைய நினைவுகளை மெல்ல  வேண்டியது தான்...!

வரிகள்  வலிக்கின்றன....!

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2021 at 23:03, குமாரசாமி said:

உங்கள் எழுத்து இசை சேர்ப்பு ஒளியமைப்பு அனைத்தும் மிக பிரமாதம்

 

On 7/2/2021 at 00:51, மல்லிகை வாசம் said:

முதுமையில் தனிமை மிகக் கொடுமை.

அதை உருக்கும் கவி வரிகளாகத் தந்தமை அருமை, உதயன் அண்ணா.

 

On 7/2/2021 at 04:53, யாயினி said:

இதற்குள் வரும் போதே மனதை ஏதோ செய்கிறது.கவி வரிகள் ஒரு புறம் மறு புறம் ஸிட் சிறிராமின் குரல் இரண்டும் ஒரே நேரத்தில் குரல் வளையை இறுக்குவது போல் உணர்வு.. 

 

23 hours ago, புங்கையூரன் said:

வரிகள்  வலிக்கின்றன....!

 

குமாரசுவாமி,நிலாமதி அக்கா,மல்லிகை வாசம்,யாயினி,புங்கையூரான் உங்கள் அனைவரினது கருத்துக்கு மிக்க நன்றிகள்.தனிமை என்பது மிகப் பெரியதொரு துன்பவியல் வாழ்வு.இளமைக்கால நினைவுகளை  தனிமையில் இருந்து நினைக்கும் பொழுது அதை விடக் கொடுமை ஒன்றும் இல்லை.எனது வேலை அனுபவங்களினுடாக இதை நான் நன்றாக உணந்திருக்கிறேன் கதைத்திருக்கிறேன்.இவைகள் தான் என்னை இப்படி சில கவிதைகளை எழுத வைத்தது.நான் கண்ட பேசிய அனுபவங்களினுடாக என் உணர்வுகளை பகிர்ந்திருக்கிறேன்.யாயினி உங்கள் கதை எனது  குரல்வளையும் இறுக்கி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை: 
வாழ்க்கையில் எந்தப்பருவத்திலும் உணரமுடியும், கட்டாயம் அது முதுமை பருவத்தில்தான் அதிக பாதிப்பை தரும் என கூறவதற்கில்லை..
பலர் கூடும் இடத்தில், பல உறவுகள் இருந்தாலும் கூட நீங்கள் தனிமையாக/தனித்துவிடப்படுவதை உணர முடியும்.. 
நான் சில சமயங்களில் நினைப்பது தனிமையை அனுபவிக்க கூட மனத்திடம் வேண்டும்..

கவிதைக்கு பாரட்டுகளும் நன்றிகளும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2021 at 02:16, பிரபா சிதம்பரநாதன் said:

தனிமை: 
வாழ்க்கையில் எந்தப்பருவத்திலும் உணரமுடியும், கட்டாயம் அது முதுமை பருவத்தில்தான் அதிக பாதிப்பை தரும் என கூறவதற்கில்லை..
பலர் கூடும் இடத்தில், பல உறவுகள் இருந்தாலும் கூட நீங்கள் தனிமையாக/தனித்துவிடப்படுவதை உணர முடியும்.. 
நான் சில சமயங்களில் நினைப்பது தனிமையை அனுபவிக்க கூட மனத்திடம் வேண்டும்..

கவிதைக்கு பாரட்டுகளும் நன்றிகளும்

பிரபா சிதம்பரநாதன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2021 at 20:14, uthayakumar said:

 

காக்கை கத்தியதை... நம்பிய கிழவனை, யாருமே பார்க்க வரவில்லை.

மனதை நெருடிய வரிகள் உதயகுமார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.