Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -அமெரிக்கா

 
1-220.jpg
 44 Views

சிறீலங்காவில், கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி  இம்முறை கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்த அமெரிக்க மீண்டும் பேரவையில் இணைவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, உலக நாடுகளின் மனித உரிமைகளை ஊக்கப்படுத்துவதிலும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதிலும் அமெரிக்க நீண்ட ஈடுபாட்டுடன் செயற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், மீண்டும் இணைந்து அந்த பணிகளை ஊக்கப்படுத்த அமெரிக்கா ஆர்வத்துடன் உள்ளது.

பல நாடுகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அடிப்படை தன்மையை  வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துவதோடு மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு அமெரிக்கா முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=43084

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை நம்பலாமா, உடையார்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தோணி ...ஆட்டம் பாம் அந்தோணி
பெத்த பெத்த ஓடர் பாவா , உள்ள புகுந்து காட்டு காட்டு எண்டு காட்டு பாவா 
தேசிக்காய்ஸ் பிழைப்பே உன்ன நம்பித்தான் இருக்கு, ஏற்கனவே நகல்  அறிக்கையை பார்த்து பேதி புடுங்கிப்போய் இருக்கினம் நீ தான்பா வந்து குளுக்கோஸ் ஏற்றி தேத்தி நடக்க விடவேண்டும் ,
அடுத்த வருஷம் அம்பிகாவை ஜெனீவாவிற்கு கொண்டுவர வேணுமுன்னா நீ இல்லாட்டி நடக்காது நைனா 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை ; எனவே கொண்டுவரப்படும் பிரேரணையை ஆதரியுங்கள் - அமெரிக்கா

(நமது நிருபர்)

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறவில்லை. பொறுப்புக்கூறலில்  முன்னேற்றம் இல்லை. எனவே   இலங்கை குறித்து கொண்டுவரப்படும்  பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க  வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.  

இது இவ்வாறிருக்க இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. எனவே இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக கனடா  அறிவித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது  கூட்டத் தொடரின் நேற்றைய பிரதான அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்காவின் இராஜாங்க செயலர் அன்டனி பிலிங்கன்  மற்றும் கனடாவின் வெளியுறவு  அமைச்சர் மார்க் கார்னு ஆகியோர் இவற்றை வலியுறுத்தினர்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்  நேற்று பிற்பகல் வரை 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வுகள் நடைபெற்றன.  இதில் பல்வேறு உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்புரிமையற்ற நாடுகளும்  உரையாற்றின. 

அந்த வகையில் நேற்றைய தினம் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் உரையாற்றின.  இலங்கை தொடர்பான விவாதம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில் அதற்கு முன்னதான பிரதான அமர்விலேயே அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் இவ்வாறு உரையாற்றின. 

 அமெரிக்கா 

ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராஜாங்க செயலர்  அன்டனி பிலிங்கன் தனது பிரதான உரையில்  இலங்கை தொடர்பாக  குறிப்பிடுகையில்,

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறாமல் இருப்பதால் இலங்கை குறித்து கொண்டுவரப்படும்  பிரேரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க  வேண்டும்.   முக்கியமாக கடந்தகால அட்டூழியங்கள் குறித்த பொறுப்புக்கூறல்கள் போதுமானதாக இல்லை என்றார். 

கனடா 

இதேவேளை கனடாவின் வெளியுறவு அமைச்சர் மார்க் பிரதான அமர்வில் உரையாற்றுகையில்,

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. குறிப்பாக மனித உரிமை காப்பாளர்கள் சிவில் சமூக அமைப்புகள் போன்றன அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றமை தொடர்பில் கரிசனை செலுத்தி இருக்கின்றோம்.

அதுமட்டுமன்றி நினைவுகூரல் தொடர்பான அடக்குமுறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி இருக்கின்றோம். மேலும் சிறுபான்மை மத மக்களின்   சடலங்களை எரிப்பது தொடர்பான தீர்மானம் குறித்தும் சட்டத்தின் ஆட்சி படுத்தல் மோசமடைகிறது செல்கின்றமை தொடர்பாகவும் நாங்கள் அவதானம் செலுத்தி வருகின்றோம். 

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை  ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை  இந்த மனித உரிமைப் பேரவை இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டி இருக்கிறது.  அந்த வகையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.  

இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை ; எனவே கொண்டுவரப்படும் பிரேரணையை ஆதரியுங்கள் - அமெரிக்கா | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இந்தியாக்காரனும், சீனாக்காரனும் ஒன்றாக  ஸ்ரீ லங்காவுக்கு ஆதரவு வழங்குவாங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2021 at 23:11, Nathamuni said:

இவர்களை நம்பலாமா, உடையார்?

அதற்கு அப்பால், பெயருக்காவது தீர்மானம் வேண்டும்.

மற்ற திரியில் நான் சொல்ல்லியது. 

முக்கியமாக, கிந்தியாவினதும், அமெரிக்காவினதும் முற்றான முரண்பட்ட நிலைப்பாடு. இதுவரையில், அமெரிக்காவே ஆகக்குறைந்தது குறியீடு ஆக சர்வேந்திரா சில்வாவை பயண தடையில் வைத்து உள்ளது.  

சிங்களம் அனுபிபியை கடிததிற்கு, ஹிந்தியா  பதில் இல்லை என்பது வெறும் பிரச்சாரம்.

(பறையா (சாதி அல்ல) டெமுலு) Dr .ஜெய்சங்கர், உரையில் சொல்லிய நிலைப்பாடு முற்றுமுழுதாக சொறி சிங்கள அரசுக்கு சார்பானது என்பதை இங்கு ஒருவரும் கவனிக்கவில்லை.  

எனவே எந்த தீர்மானமும், சொறி சிங்களத்துக்கு முக்கிய பின்னடைவு. சர்வதேச விசாரணை இல்லாத தீர்மானம் தமிழர் தரப்புக்கு தற்கலிக பின்னடைவு. 

தமிழர்கள் எல்லோரும் இந்த விடயத்தை,  நீதி என்ற அடிப்படையில் சிங்களத்தை தண்டிக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்க்க , சிங்களம் அதன் அரசியலுக்கான இறுதி படியான பாதுகாப்பு சபையில் (unsc) கையாள்வதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறது.

இந்த ஏற்பாட்டை ரணில், சீனாவுக்கு அம்பாந்தோட்டையை,port-city எல்லாம் கொடுத்தது பழைய கதை.

சிங்களம், தேயிலை வர்த்தகத்தின் பெரும்பதியை சீனாவின் சந்தைக்கு கொண்டு போயுள்ளது, சர்வதேச தடைகள் வந்தால் வெட்டி ஆட வசதி வேண்டும் என்று.

எனவே தீர்மானம் என்பது, வெறுமனே மனித உரிமை, நீதி அல்ல.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.