Jump to content

தலைமன்னாரில் கோரம்: 10 பேர் காயம்


Recommended Posts

தலைமன்னாரில் கோரம்: 10 பேர் காயம்

 

 

தலைமன்னாருக்கு அருகில் ரயிலுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில்  10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_42d2996885.jpg

Tamilmirror Online || தலைமன்னாரில் கோரம்: 10 பேர் காயம்

மன்னாரில் ரயிலுடன் மோதி பேருந்து விபத்து – 20இற்கும் மேற்பட்டோர் காயம்

 

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/IMG-20210316-WA0009.jpg

மன்னார் – தலைமன்னார் ரயில் கடவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தும் கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த ரயிலும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அதிகமாக மாணவர்களே காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் காயமடைந்த அனைவரும் மன்னார் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக செய்திகளுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள்..

Accident-mannar-1.jpg

Accident-mannar-2.jpg

Accident-mannar-3.jpg

Accident-mannar-4.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... மிகவும்,  சோகமான செய்தி. சம்பவ இடத்தில் உள்ள படங்களைப் பார்க்கும் போது... தமிழர்கள் தான் பாதிக்கப் பட்டுள்ளார்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் – தலைமன்னார், பியார் பகுதி ரயில் கடவையில் இன்று (16) சற்றுமுன் 2 மணியளவில் பஸ் ஒன்றுடன் ரயில் மோதிய விபத்தில் 9 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து 24 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 9 வயது மாணவன் பலியானதுடன், ஏனைய 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரயில் கடவையை கடந்து பணித்த பஸ்ஸின் பின் பகுதியிலேயே ரயில் மோதியுள்ளது.

பஸ்சுடன் ரயில் மோதிய விபத்து; மாணவன் பலி- 23 பேர் படுகாயம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Accident-mannar-3.jpg

ஓ  இதுக்கு பெயர்தான் ரயிலா? சீன தயாரிப்பு போல.

இந்திய ஆட்டோக்கள்கூட கொஞ்சம் உறுதியா இருக்கும்போல கிடக்கு,

சிறுபான்மை இனங்களுடன் சொறிஞ்சு கொண்டு கிடப்பது மட்டுமே இலங்கையின் பொருளாதார தொழில்நுட்ப அபிவிருத்தி வளர்ச்சி .

என்னமோ புலி பயங்கரவாதம் மட்டும் இல்லாவிட்டால் நாடு அசுர வளர்ச்சி காணும் என்று ஒருகாலம் அடிச்சுவிட்டுக்கொண்டிருந்தாங்கள்?

Link to comment
Share on other sites

2 minutes ago, valavan said:

Accident-mannar-3.jpg

ஓ  இதுக்கு பெயர்தான் ரயிலா? சீன தயாரிப்பு போல.

இந்திய ஆட்டோக்கள்கூட கொஞ்சம் உறுதியா இருக்கும்போல கிடக்கு,

 

இது மாணவர்கள் பயணித்த விபத்துக்குள்ளான பேரூந்து.

டெய்லி மிரரில் சிறு வீடியோவும் வந்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.