Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவ பலத்துடனேயே தமிழருடன் இணக்கப்பாடு - சிங்களவர் மனதை வென்றெடுப்பது அவசியம்; வாஷிங்டனில் பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ பலத்துடனேயே தமிழருடன் இணக்கப்பாடு - சிங்களவர் மனதை வென்றெடுப்பது அவசியம்; வாஷிங்டனில் பீரிஸ்

[24 - June - 2007]

சிறுபான்மை தமிழ் சமூகத்தினருடன் அரசியல் ரீதியான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இராணுவ ரீதியில் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்வது தேவையானதென்றும் இதன்மூலமே பெரும்பான்மை சிங்கள மக்களின் அரசியல் ரீதியான ஆதரவை வென்றெடுக்க முடியுமெனவும் ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியிலேயே பீரிஸ் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இலங்கை இராணுவ ரீதியில் தனது பலத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவையிருப்பதாக பீரிஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசியல் ரீதியான இணக்கப்பாட்டுக்கு செல்வதற்கு அரசாங்கம் வலுவான நிலைப்பாட்டிலிருந்தே பேசுகின்றது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

`பயங்கரவாதத்துக்கு உண்மையில் இராணுவ ரீதியிலேயே பதிலளிக்க வேண்டியுள்ளது. ஆயினும், அரசியல் நடவடிக்கைகள் அவசியமானவையென்ற உண்மையை நாம் தெளிவான முறையில் ஏற்றுக்கொண்டுள்ளோம். எமது இந்த நிலைப்பாட்டுக்கும் பயங்கரவாதத்துக்கு யுத்த ரீதியில் பதிலளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கும் இடையில் எந்தவொரு முரண்பாடும் இல்லை' என்று பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார்.

சீர்குலைந்திருக்கும் போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி

கடைசியில் பீரிஸ் ஜயாவும் குப்பைகுள்ல விழுந்திட்டார் இராணுவ மேலான்மையை நிலைநாட்ட முன்னெடுக்கும் அத்தனை நடவடிக்கையும் புலிகளுக்கே சாதகமாய் இருந்தது இதுவரை காலமும் இனியும் அது புலிகளுக்கே சாதகமாக இருக்கும்

விடுதலைப்புலிகளினால் தாக்குதல்களுக்குள்ளாகி தாங்கள் பலவீனமானவர்களாக இருக்கின்றனர் என்ற அச்சம் மக்கள் மனதில் இல்லாதிருப்பது அவசியமானதாகும். பாதுகாப்புத் தொடர்பான உணர்வு மக்கள் மனதில் ஏற்படுத்தப்படுவது அவசியமானதாகும். அரசியல் ரீதியான ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் இது தேவையானது என்றும் பீரிஸ் கூறியுள்ளார்.

இதே எண்ணம் தமிழர் தரப்புக்கும் பொருந்துமல்லவா?

அரசபடைகளால் தாக்குதலுக்குள்ளாகி தமிழர்தரப்பு பலவீனமானவர்களாகஇருக்கின்றன

சிங்கள அரசியல்வாதிகள எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

இதுகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்லுறத்தவிட ,"கூள்முட்டைகள்" என்று சொல்லுறதுதான் பொருத்தமாயிருக்கும்

பீரிஸ் ஏதோ நியாயவான்மாதிரி முன்னர் கதைச்சுக்கொண்டு திரிந்தமாதிரி தெரிந்தது கடைசியில இவரும் இப்படியா? சிங்கள அரசியல்வாதிகள எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

எல்லாம் சேர்க்கையால் வந்த வினை!

நாய்க்கு வாழ்க்கைப்பட்டால் குரைக்கத்தானே வேண்டும்!

சந்தர்ப்பவாதத்திற்கு பெயர் போனவர்கள் அரசியல் வாதிகள்! அதிலும் இவர்கள் மிகக்குறுகிய காலத்தில் சொல்லிலும் செயலிலும் எதிர்மறையாக மாறவேண்டிய கட்டாயம். மகிந்த வேறு தேர்தல் ஆட்சியை கலைப்பேன் என்று பயமுறுத்துகின்றான். தேர்தல் வந்தால் தேசியப்பட்டியல்தான் கதி இவர்களுக்கு. ஆகவே ஏதாவது பெரிதாக குரைத்து மகிந்தவை குளிர்விப்பதில் இவர்களுக்குள் போட்டி.!

  • கருத்துக்கள உறவுகள்

புத்திஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிங்களவர்களும் தமிழர்களை சம உரிமையுடன் சிறிலங்காவில் வாழ விருப்பப்படவில்லை என்பதையே இது உணர்த்துகின்றது.. இதை நம்மவர்கள் சிலர் இன்னமும் புரியாமல் அரசியல் தீர்வு மூலம் ஏதாவது சலுகைகளைத் தமிழர்கள் பெறலாம் என்று நம்பிக்கொண்டு திரிகின்றனர். :angry:

  • கருத்துக்கள உறவுகள்

1990-2000 இடைபட்ட காலங்களில் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பாட்ட ஆயுதங்கள் ஈராக் ஆப்கானிஸ்தான் போருக்கு உபயோகமற்ற நிலையில் அமெரிக்கா ஆயுத நிறுவனங்களில் தேங்கி கிடக்கின்றன. அவர்களின் உந்துதால்களால்தான் பல நாடுகளுக்கான ஆயுத விற்பனை வரையறையை அமெரிக்க அரசு பலமடங்காக அதிரித்திருக்கின்றது அதில் சிறிலங்கா சிங்கள அரசிற்கு பல அமெரிக்க சட்டங்களுக்கு எரிரான முறையில் பல மில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அது தவிர 2008ம் ஆண்டு அதாவது அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜோர்ஜ் புஸ்ஸின் ஆட்சி காலம் முடிவடைவதோடு அவரது கட்சியும் தோல்வி கண்டு ஜனநாயக கட்சி ஆட்சி ஏறினால் இப்போதைய இந்த ஆயுத விற்பனை வரையறை குறைக்கப்பட்டலாம் என்ற அச்சம் ஆயுத தயாரிப்பு நிறுவனங்களிடம் அதிகமாகவே காண கூடியதாக இருக்கின்றது.

ஆதலால்தான் அமெரிக்காவிற்கு வரும் சிறிலங்கா அரசியல்வதிகளிடம் அவர்கள் புலிகளை பலவீனபடுத்துங்கள் ஆயுதங்களை நாங்கள் தருகிறோம் என்ற விற்பன்ன வியாக்கின வாக்கியங்களை வாரி வழங்குகின்றார்கள். அமெரிக்கா வந்து செல்லும் யாபரும் அதைதான் திருப்பி திருப்பி சொல்லுகின்றார்கள் இதை அண்மைகாலங்களில் நீங்கள் அவாதானித்திருக்க கூடும். சுனாமியின் போது அமெரிக்கா கொடுத்த தொகையை சிறிலங்கா அரசு அப்படியே திரு;பி கொடுத்துவிட்டு ஆயுதங்களையும் பயிற்சியையும் பெற்றிருக்கின்றது அனி எல்லாம் கடன்தான். எல்லாம் வாசிங்டனில் இருந்து கொழும்பு ஊடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தால்...............................

கிட்டு பீரங்கி படையணியை சந்திரிகாவும் கதிர்காமரும் சேர்ந்து உருவாக்கியது போல. மகிந்தரும் ஆட்சியை இழக்கு முன்பு ஒரு நவீன ஆயுத படையணியை புலிகளுக்க உருவாக்கி கொடுக்கதற்கு நிறையவே சாத்தியமிருக்கிறது. இது அமெரிக்காவிற்கும் நன்கு தெரியும்...................... புலிகள் அப்படி ஒரு நவீன படையணியை உருவாக்கிய பின்பு அதனுடன் போரிட தேவையான ஆயுதங்களை தங்களிடம் கொள்வனவு செய்ய சிறிலங்கா வரும் அப்போது......... இப்போது ஈராக்கில் பாவிப்பதை எண்ணை பூசி துடைத்துவிட்டு தட்டிவிடலாமென்பதே அவர்களின் நோக்கம்.

கடைசியில் பீரிஸ் ஜயாவும் குப்பைகுள்ல விழுந்திட்டார் இராணுவ மேலான்மையை நிலைநாட்ட முன்னெடுக்கும் அத்தனை நடவடிக்கையும் புலிகளுக்கே சாதகமாய் இருந்தது இதுவரை காலமும் இனியும் அது புலிகளுக்கே சாதகமாக இருக்கும்

மிகத்தவறு

பீரிஸ் அய்யா குப்பைக்குள் விழவில்லை. அவரும் ஒரு குப்பைதான். படித்த சிங்களனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி அவர்கள் இந்த ஒரு விடயத்தில் மிகத்தெளிவாக இருக்கின்றனர்.

மிகத்தவறு

பீரிஸ் அய்யா குப்பைக்குள் விழவில்லை. அவரும் ஒரு குப்பைதான். படித்த சிங்களனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி அவர்கள் இந்த ஒரு விடயத்தில் மிகத்தெளிவாக இருக்கின்றனர்.

என்ன பீரிஸ் ஜயா. இந்த குப்பை பாலாவுடன் பேச்சு வார்த்தைக்கு போகேக்க வாலை சுருட்டிக்கொண்டு வந்தவர், தெரியும் பாலாவிடம் எங்கட பருப்பெல்லாம் அவியாது என்று. இப்ப குரைக்குது இவரே இப்படி சொன்னதால் இதுக்கு மேல் படித்த சிங்கள மொக்குகள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை

பீரிஸ் தமிழர் தரப்பை ஒரு பலம் பொருந்திய சக்தியாக பார்க்கிறார் என்பது வெளிப்படை... என்னதான் இனவாதத்தை கக்கினாலும்... ஒரு வெளிநாட்டு ஊடகத்திடம் ஒண்றுபட்ட இலங்கை எண்டது ஒண்று இல்லை என்பது போலவும், அங்கு இரண்டு இராணுவமும், இனங்களும் உண்டு.... அதில் எனது தரப்பான சிங்கள இனத்தின் கை ஓங்கினால்த்தான் பேச உதவியாக இருக்கும் என்பதை ஒத்துக் கொண்டு இருக்கிறார்...

புலிகள் பலவீனமாகி விட்டார்கள் எண்று பிரச்சாரம் செய்யும் சிங்கள இராணுவ , அரசியல் கோமாளிகள் பீரிசின் கூற்றை கவனிப்பார்கள் என்று நம்பலாம்... வருங்காலத்தில் பீரிஸ் மீது எகிறி குதிச்சு மனுசனை ஓரம் கட்டுவார்கள்...!

இராச தந்திரிகளுக்கு மட்டும் தனிமையாக சொல்லி இருக்க வேண்டிய பொருளாதாரத்தை பற்றிபேசி தங்களின் பலவீனத்தை வெளிச்சம் வேற போடுறார்....! இது எங்கை போய் முடியுமோ...???

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியரின் சிந்தனை மாற்றம்

[25 - June - 2007]

தற்போது வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் சனிக்கிழமை ராய்ட்டர் செய்திச் சேவைக்கு அளித்திருந்த பேட்டியொன்றில் இலங்கை இனநெருக்கடியின் தற்போதைய நிலை தொடர்பிலான அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து தெரிவித்த கருத்துக்கள் எமது கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. அரசாங்கம் இராணுவ ரீதியில் பலம்வாய்ந்த நிலையில் இருந்தால் மாத்திரமே இனநெருக்கடிக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பது சாத்தியமாகும் என்ற தொனியில் பேராசிரியர் கருத்தைத் தெரிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

`இனநெருக்கடித் தீர்வுக்கான முயற்சிகளின்போது என்றாவது ஒருநாள் அரசியல் ரீதியில் விட்டுக் கொடுப்புகளைச் செய்வதற்கு தயாராகும்போது பலம்வாய்ந்த ஒரு நிலையில் இருந்து கொண்டே அரசாங்கம் பேசுகின்றது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே விடுதலைப் புலிகளுக்கு எதிராக தற்போது இராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Thu Jun 28 7:41:59 EEST 2007

இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் கிழக்கு அரசின் கட்டுப்பாட்டின் கீழ்! வாஷிங்ரனில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

எமது இராணுவத்தினர் இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களில் கிழக்கு மாகாணம் முழுவதையும் தமது அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விடுவர்.

இவ்வாறு இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இங்கு தெரிவித் திருக்கிறார்.

கிழக்கை அரசின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதானது, அரசியல், இராணுவ, சமூக மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக ஓர் உபாயத்தை முன்வைத்து தீர்வு முயற்சியை முன்தள்ளுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதே ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவி செய்ய ஆதரவு திரட்டும் தமது பிரசாரத்தின் போதே அவர் இவ்வாறு சொன்னார்.

கிழக்கு மாகாணம் முழுவதையும் கைப் பற்றக்கூடிய நிலையில் நாம் இருப்பதால், அமைதிக்கும் அபிவிருத்திக்கும் அடிப்படைப் பணிகளை செய்வதற்கு நாம் முயற்சித்துக்கொண்டிருக்கும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.