Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூர் சம்பவம் - சமூக வலைத்தள பயன்பாட்டின் மறுபக்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் சம்பவம் - சமூக வலைத்தள பயன்பாட்டின் மறுபக்கம்.

hitesha chandranee, zomato executive, kamraj, bangalore zomato incident

சமூக வலைத்தளங்களில் என்ன விடயங்களை பகிர்கின்றோம் என்பதில் கவனமா இருக்காவிடில், முதலுக்கே மோசமாகிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஹிதேசா என்பவர், வட இந்திய பெண். ஒரு மாடல் அழகியான இவர், பெங்களூரில் வசிக்கிறார். இன்ஸ்டாகிராம் மூலம், மேக்கப் சம்பந்தமான விடயங்களை சொல்லி, யாவாரம் செய்பவர். ஒரு 12,000 பேர் வாடிக்கையாக தொடர்பவர்கள்.

இவர் அண்மையில் ஒரு நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்தார்.

அதனை கொண்டு வந்தவர் சோமாட்டோ எனும் நிறுவனத்தின், ஊழியர் காமராஜ், ஒரு தமிழர். உணவை கொண்டு வருவதில் தாமதமாகி விட்டது.

என்ன நடந்ததோ தெரியவில்லை, உணவு கொண்டு வந்தவர் தன்னை தாக்கியதால், மூக்கில் ரத்தம் ஓடுகிறது. எனது தொழிலும் இனி செய்ய முடியுமோ தெரியவில்லை. என்று வீடியோ போட்டு, அதனை சமூக வலைதளத்தில் போட்டு, பெங்களூர் போலீசாருக்கும், சோமாட்டோ நிறுவனத்துக்கும் அதனை அனுப்பி விட்டார்.

காமராஜ் கைதானார். சோமாட்டோ நிறுவனம், அவரை வேலையில் இருந்து தூக்கி விட்டது.

அந்த வீடியோவில், கம்பெனி பாலிசி படி, தாமதமானால், இலவசமாக கொடுக்க வேண்டும் அல்லது ஓர்டரை ரத்து பண்ணி திருப்பி அனுப்ப வேண்டும். நான், இலவசமாக கேட்டேன், அவர் மறுத்து என்னை தாக்கினார் என்று தான் புகார்.

2 கோடி 50 லட்ச்சம் பேர் அவரது வீடியோவை பார்த்து இருந்தார்கள். அய்யோ, இப்படியும் செய்வார்களா என்று எல்லோரும், வெள்ளையான அந்த மாடல் அழகிக்காக உச்சு கொட்டினார்கள்.

பம்பாய், டெல்லி என, சில பிரபலங்கள், 'கொஞ்சம் இருங்கள்', ஒரு வசதியான பெண்ணாக தெரியும் இவர் எதுக்காக அந்த உணவை இலவசமாக பெற முயன்றார் என்று சொல்ல, விவகாரம் சூடு பிடித்தது. இவரில் உண்மை இருப்பதாக தெரியவில்லையே என்று சமூக வலைத்தளத்தில் பதிவுகள் போட, சரிதானே என்று பலர் சொல்ல தொடங்கினார்கள்.

இரண்டு நாளில், காமராஜ் வீடியோவில் வந்தார். தான் 6,000 டெலிவெரிகள் செய்துள்ளதாகவும், இதுவரை எந்த முறைப்பாடுகளும் இல்லை எனவும், அந்த பெண் இலவசமாக கேட்டு மூர்க்கமாக அடம் பிடித்தார் என்றும், தாமதமான காரணம், தனது தவறு என்றும், அதனை கொம்பனி ஏற்காது என்பதால், தனது சம்பளத்தில் கழிக்கப்படும் என்பதால், அதனை கான்சல் செய்யுமாறும், அதன் மூலம், தனது சம்பளம் கழிக்கப்படாது என்று தான் கெஞ்சிய போது, தன்னை செருப்பால் தாக்கியதாகவும், அதனை தடுத்த போது, அந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரம், அவரது மூக்கினை தாக்கியது என்றும், அவர் மேலும் கோபத்தில் கத்தியால், தான் அங்கிருந்து இருந்து சென்றதாகவும், ஓட வில்லை என்றும், தனது வயதான தாயினை இந்த சம்பளத்தில் பராமரித்து வந்ததாகவும், இப்போது வேலையே போய் விட்டது, போலீஸ் வழக்கு வேறு என்று அழுதார்.

நிலைமை தலைகீழாக போவதை கண்ட அம்மணி, வீடியோவை நீக்கி விட்டார். ஆனால் too late.

அவர் சொலவ்து சரிதான், அவருக்கு வேலை மீண்டும் கொடு என்று பதிவுகள் வர,  கன்னட அமைப்புகள் காமராஜுக்கு ஆதரவாக குரல் கொடுக்க அவ்வளவுதான். இப்போது பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உள்ளதும் போச்சடா, நொள்ளை கண்ணா கதையாக, பிரபலமாகி, யாவாரத்தை பெரிசா செய்யலாம் எண்டு வீடியோ போட்டால், கடையே மூடும் அளவுக்கு போய் விட்டது அம்மணி கதை.

இலவசமாக உணவை பெற, கேவலமாக நடந்து கொண்டார் என்று அவல பெயருடன், நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்று கவலையுடன், தான் யாரை தனது ரோல் மாடலாக நினைத்து இருந்தாரோ, அவரே தன்னை குறித்து மோசமாக பதிவு செய்துள்ளார் என்று அம்மணி கவலை தெரிவித்து உள்ளார்.

முதலில் ரத்தத்தினை பார்த்து அனுதாபம் கொண்டவர்கள், பின்னர் எதுக்கு சண்டை பிடித்தார் என்று பார்த்தால், ஓசி சாப்பாட்டுக்கு என்றவுடனே, கண்ணியம் கருத்தில் எடுக்கப்படும் என்பதை மறந்து விட்டார். 

இதுதான் சமூக வலை உலகில் கவனமாக இருக்க வேண்டிய விடயம்.

** காமராசு வேலை செய்கிறார். ஆனாலும், தீடீர் அதிஸ்ட்டமாக, பண உதவிகளும் வருகின்றன.

 

  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி மூலம் எது என்று நாட்டாமை வந்து கத்தியுடன் நிற்பார் செய்திவந்த ஏதவது ஒரு தளத்தை போட்டு விடுங்க நாதமுனி .

இந்த தமிழர்க்கு இரங்கி கன்னட அமைப்புக்கள்  குரல்கொடுக்கவில்லை இயல்பாகவே வட இந்திய வெறுப்பு காமராஜருக்கு நியாயம் கிடைத்து இருக்கு இதுவே தாராவி அல்லது டெல்லி என்றால் கதைவேறு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இந்த செய்தி மூலம் எது என்று நாட்டாமை வந்து கத்தியுடன் நிற்பார் செய்திவந்த ஏதவது ஒரு தளத்தை போட்டு விடுங்க நாதமுனி .

இந்த தமிழர்க்கு இரங்கி கன்னட அமைப்புக்கள்  குரல்கொடுக்கவில்லை இயல்பாகவே வட இந்திய வெறுப்பு காமராஜருக்கு நியாயம் கிடைத்து இருக்கு இதுவே தாராவி அல்லது டெல்லி என்றால் கதைவேறு .

மொழி பெயர்ப்புகளுக்கும், சுஜ ஆக்கங்களுக்கும், நான் இணைப்பு கொடுப்பதில்லை. இவை மிக முக்கியமான செய்திகள். பிபிசி யில் கூட வந்து விட்டது. இதுக்கு மூலம் கேட்டு, நீக்கினால், நல்லது. இனிமேல் மினக்கெட்டு,மொழி பெயர்ப்பு செய்ய தேவையே இருக்காது, அல்லவா.  😁 👍

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

மொழி பெயர்ப்புகளுக்கும், சுஜ ஆக்கங்களுக்கும், நான் இணைப்பு கொடுப்பதில்லை. இவை மிக முக்கியமான செய்திகள். பிபிசி யில் கூட வந்து விட்டது. இதுக்கு மூலம் கேட்டு, நீக்கினால், நல்லது. இனிமேல் மினக்கெட்டு,மொழி பெயர்ப்பு செய்ய தேவையே இருக்காது, அல்லவா.  😁 👍

எல்லாம் மனித மனம் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிதேசா.... சாப்பாடு வரப்  பிந்தியால், காசு கொடுக்க மாட்டேன்  என்று அடம்பிடித்து... 
பசியுடனும், மூக்கில் இரத்தம் வர சமூக வலைத்தளத்தில் பதிந்து...
மூக்கு... உடை பட்டுப் போய் நிற்கிறார்.

பொறுமையாக கடைப்பிடிக்க வேண்டிய விடயத்தை....
உலகம் முழுக்க அறியச் செய்ய வெளிக்கிட்டதால்...
ஹிதேசாவுக்கு,  நடந்தது ஒரு படிப்பினை. 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஹிதேசா.... சாப்பாடு வரப்  பிந்தியால், காசு கொடுக்க மாட்டேன்  என்று அடம்பிடித்து... 
பசியுடனும், மூக்கில் இரத்தம் வர சமூக வலைத்தளத்தில் பதிந்து...
மூக்கு... உடை பட்டுப் போய் நிற்கிறார்.

பொறுமையாக கடைப்பிடிக்க வேண்டிய விடயத்தை....
உலகம் முழுக்க அறியச் செய்ய வெளிக்கிட்டதால்...
ஹிதேசாவுக்கு,  நடந்தது ஒரு படிப்பினை. 

காசு கொடுக்காவிடில், திருப்பி கொண்டு போய் விடு என்று சொல்லி இருக்கலாம். இலவசமாக தா என்று சொல்ல, அவர் மறுக்க, அடித்து, பறித்து வைத்துக்கொண்டு வீடியோ போட்டிருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிதேஷா, எங்கே என்றே தெரியவில்லை, தலைமறைவு. 

போலீசார், அவர் சென்ற வைத்தியசாலையிடம் அறிக்கை கோர, அவர்களோ, அவரது காயம், கை குத்தினால் வந்தது என்பதை உறுதிப்படுத்தாதலால், காமராஜ் மீதான புகார், மேல் கொண்டு விசாரணை நடாத்த முகாந்திரம் இல்லை என்று சொல்லி விட்டனர்.

அதேவேளை, காமராஜின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் பேரில் ஆளை தேடினால், தலைமறைவு.

அம்மையார் வேகமாக வந்து, காமராஜிடம் மன்னிப்பு கோரி, புகாரை வாபஸ் வாங்க வைத்தால், தப்பலாம்.

இல்லாவிடில், பார்ப்பன அக்கிரகார களி தான். (அதுதான், சசிகலா புகழ் சிறை)

  • கருத்துக்கள உறவுகள்

கோபி சுதாகர் வெற லெவல் தோழர் ..😂

https://m.youtube.com/watch?v=iFNXobuK2hM 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சில காணொளிகளைப் பார்த்தேன்.

காமராஜ் மிகவும் பரிதாபமாக தெரிந்தார்.

உங்கள் வர்ணனை அருமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.