Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.

spacer.png

22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ  தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.

 

யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் பெரும்பாலும் படையினருக்குத்தேவையான பொருட்களை கொண்டுவருவதற்காகப் பயண்படுத்தப்பட்டதுடன் .துறைமுகப்பகுதிக்கு சீமெந்துத் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை எடுத்துவர மற்றும் சீமெந்துகளை கொழும்புக்கு அனுப்பும்வகையில் பாரவூர்திகளில் செல்லுபவர்களிடம் தங்ககவிடுதிகளில் உள்ள படையினரும் துறைமுகப்பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட காவலரனில் உள்ள படையினரும் பல்வேறு தொந்தரவுகளில் ஈடுபட்டனர்.

இப்படையினர் மீது ஒருதாக்குதல் நடாத்தவேண்டிய நிலைக்கு விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர்.

அதற்கமைவாக அப்போதைய யாழ்மாவட்டத்தளபதி ராதா அவர்களினால் துரிதகதியில் வேவுத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வேவுத்தரவுகளை தலைவர் அவர்களிடம் கொடுத்தார்.தளபதி ராதா அவர்கள். வேவுத்தரவுகளை பார்த்து அதன் சாதக பாதக நிலைகளை தளபதி ராதா அவர்களிடம் கூறியதோடு மட்டுமல்லாமல் தனது மெய்பாதுகாப்பாளர்களில் பெரும்பாலானவர்களை இத்தாக்குதலுக்கு  அனுப்பிவைத்ததுடன் இத்தாக்குதலுக்கான பயிற்சிகளை வடமராட்சியில் நடாத்தும்படி தளபதி ராதா அவர்களிடம் கூறிப்பிட்டார் தலைவர் அவர்கள்.அதற்கமைவாக பயிற்சிகள் வடமராட்சியில் நடைபெற்றன பயிற்சிகளை  தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன்

ஆலோசனைகளையும் வழங்கினார்.

பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதலுக்கான திட்டம் தளபதி ராதா அவர்களினால் விளங்கப்படுத்தப்பட்டன.

அதற்கமைவாக இரண்டு பாரவூர்தியில் சென்று திகைப்பூட்டும் தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பிவருவதே திட்டமாகும் .ஒரு பாரவூர்தியில்  சொர்ணம் (சொா்ணம் அவர்கள் அந்தக்காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் பிரிவிற்க்கு இரண்டாவது பொறுப்பாளாரக இருந்தார் இவரே பிரிகேடியர் சொர்ணம் ஆவார் வீரச்சாவு 15.05.2009)அவர்கள் தலைமையில் செல்லும் போராளிகள 

படையினர் தங்கும் தங்ககம் (விடுதி)மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதேசமயம் மற்றுமொரு பாரவூர்தியில் கப்டன் ஐயா தலைமையில் செல்லும் போராளிகள் காவலரன்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதற்கமைவாக 22.04.1987 அன்று இரவு 10.00 மணியளவில் ஆரம்பித்த இத்தாக்குதல் குறிப்பிட்ட நிமிடத்திற்க்குள்  காவலரன்கள் முழுமையான கைப்பற்றப்பட்டதுடன் அக்காவலரனில் உள்ள ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டன .அதே சமயம் கண்காணிப்புகோபுரத்திலிருந்த படையினர் இவர்கள்மீது   தாக்குதல் நடாத்த இதைக் கவனித்த சுபன்(மன்னார் மாவட்டச் சிறப்புத்தளபதி வீரச்சாவு.25.09.1992 )இன்னொரு போராளியிடம் கூற அவரோ படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆர்.பி.ஐி எடுத்து கண்காணிப்புக்கோபுரத்தின் மீது குறிதவறாமல் தாக்குதல் மேற்கொள்ள கண்காணிப்புக்கோபுரம் தகர்த்தெறியப்பட்டது.அன்று அப்போராளி அக்கண்காணிப்புக்கோபுரத்தின் மீது மேற்கொண்டதாக்குதல் தவறினால் நிலைமை மோசமாகியிருக்கும்.இன்னொரு காவலரனில் போராளிக்கும் படையினருக்கும் கைகலப்பில் படையனரைக் கொன்றான் அப்போராளி இப்படியான பல்வேறு சாகசங்களையும் நிகழத்திய வெற்றிகரத்தாக்குதலில் பன்னிரன்டிற்க்கும் மேற்பட்ட படையினர் கொல்லபபட்டதுடன்  அதி நவீன ஆயதங்களும் கைப்பற்ப்பட்ட இவ்வெற்றிகரத்தாக்குதலில்.ஆறு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

இவ் வெற்றிகரகொமாண்டோத்தாக்குதலை

அப்போதைய யாழ்மாவட்டத் தளபதி ராதா அவர்கள் காங்கேசன்துறையிலிருந்து வழிநடாத்தினார்.

இச்சம்பவமானது அக்களமுனையில் களமாடியவரின் உள்ளத்திலிருந்து.

இச்சமரில் வீரச்சாவடைந்தவர்கள் விபரம் வருமாறு.

கப்டன் பவான்( ஐயா).

லெப்ரினன்ட் கிர்மானி.

2ம் லெப்டினன்ட் குணம்.

2ம் லெப்ரினன்ட் குலம்.

வீரவேங்கை தாஸ்.

வீரவேங்கை சுவர்ணன்.

 

3Di4DSOGF2fj19sUkeF3.jpg

 

cJ3vmxvGefdhwmBVeejt.jpg

 

Clpt8ZblIPRH7sCtJwRQ.jpg

 

hHljY8wP8WzF4W00dKxN.jpg

 

 

 

VJ8OOWjEkRMsMSL59GU9.jpg

https://www.thaarakam.com/news/a8d19f17-1c32-4753-8c38-089c69ea3c29

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதல் சிறிது காலத்தில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசனை தொடங்கி வலிகாமம் வடக்கு மக்களை தெல்லிப்பளைக்கு எல்லைக்கு வெளியில் அகதிகளாக அனுப்பி வைக்க வழிகோலியது. தாக்குதலை நடாத்திய புண்ணியவான்கள் தப்பி சென்றுவிட்டார்கள். ஆனால், இராணுவம், கடற்படையின் கடுமையான எறிகணை தாக்குதலில், உலங்கு வானூர்தி தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், காயம் அடைந்தார்கள். மக்களுக்கு அன்று இரவு தொடங்கிய அவலம்தான்... காங்கேசன்துறை இன்று சுடுகாடு ஆகியுள்ளது. அழகிய, அமைதியான பூமி இன்று இராணுவத்தின் கைவசம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்த தாக்குதல் சிறிது காலத்தில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசனை தொடங்கி வலிகாமம் வடக்கு மக்களை தெல்லிப்பளைக்கு எல்லைக்கு வெளியில் அகதிகளாக அனுப்பி வைக்க வழிகோலியது. தாக்குதலை நடாத்திய புண்ணியவான்கள் தப்பி சென்றுவிட்டார்கள். ஆனால், இராணுவம், கடற்படையின் கடுமையான எறிகணை தாக்குதலில், உலங்கு வானூர்தி தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், காயம் அடைந்தார்கள். மக்களுக்கு அன்று இரவு தொடங்கிய அவலம்தான்... காங்கேசன்துறை இன்று சுடுகாடு ஆகியுள்ளது. அழகிய, அமைதியான பூமி இன்று இராணுவத்தின் கைவசம். 

போராட்டமே நடாத்தி இருக்க கூடாது. அடிமைகளாக இருந்திருக்க வேண்டும்.
போராட்டம் அவர்கள் நடாத்தா விட்டால் இப்போ கனடாவில் எப்படி ஓகோ என இருக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

போராட்டமே நடாத்தி இருக்க கூடாது. அடிமைகளாக இருந்திருக்க வேண்டும்.
போராட்டம் அவர்கள் நடாத்தா விட்டால் இப்போ கனடாவில் எப்படி ஓகோ என இருக்க முடியும்?

எல்லா விந்தணுவும் பிள்ளைகளை உருவாக்குவதில்லை 
அப்படியாக்கினாலும் எல்லாம்மும் பிள்ளையாகி பிறப்பதும் இல்லை 
அப்படி பிறந்தது எல்லாம் பிள்ளையாக வளர்வதும் இல்லை 
வளர்ந்தது எல்லாம்  வாழ்க்கையை புரிவதும் இல்லை 
 
அதுக்காக  நாம் விந்தணுவையா  நோக வேண்டும்?
அந்த அளவு அடிமட்ட அறிவு உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்று 
பூமியைத்தான் நோக வேண்டுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பல இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். மயிர்கூச்செரியும் தாக்குதல் நடாத்தப்பட்டது. கொப்பேகடுவ துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓட்டம். சிங்களத்திற்கு பேரிழப்பு. 

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, அழிவுகளை, அலசவேண்டிய, நினைவுகூர வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் பத்திரமாய் காங்கே சன்துறை துறைமுகத்தில் கப்பல் ஏறி கனடாவுக்கு அகதிகளாய் வந்துவிட்டார்கள். ஆஹா ஓஹோ என்று வாழ்கின்றார்கள்.

வேறென்ன வேண்டும்? எமக்கே இறுதி வெற்றி.

வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மண்டையில்  வலப்பக்க மூளை இருக்க வாய்ப்பிருக்கு 
ஆனால் செயல்படும் என்பதுக்கு உத்திரவாதம் இல்லை.

அதுக்கான உதாரணங்கள் உங்களை சுற்றி இருக்கும்போது 
அதுபற்றிய தேடலுக்கு தேவையும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பல இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். மயிர்கூச்செரியும் தாக்குதல் நடாத்தப்பட்டது. கொப்பேகடுவ துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓட்டம். சிங்களத்திற்கு பேரிழப்பு. 

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, அழிவுகளை, அலசவேண்டிய, நினைவுகூர வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் பத்திரமாய் காங்கே சன்துறை துறைமுகத்தில் கப்பல் ஏறி கனடாவுக்கு அகதிகளாய் வந்துவிட்டார்கள். ஆஹா ஓஹோ என்று வாழ்கின்றார்கள்.

வேறென்ன வேண்டும்? எமக்கே இறுதி வெற்றி.

வணக்கம்.

கனடாவில்  புலிகளால் பிரச்சனை என்று சொல்லி அகதி கோரி ஆகா ஓகோ என வாழ்கிறோம் என்றூ சொல்ல வெட்கம்  விடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1948 இல் இருந்து தமிழரின் தாயகம் சூறையாடப்பட்டுக்கொண்டுதான் வருகிறது. தமிழர் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்டுக்கொண்டுதான் வருகிறார்கள். 1955 இலிருந்து தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டு வருகிறார்கள். அதே போல 2009 இற்குப்பிறகு வடக்கிலும் கிழக்கிலும் தமிழரின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இக்காலங்களில் ராணுவமும் கொல்லப்படவில்லை, கொப்பேக்கடுவவும் ஓடித்திரியவில்லை, நவீன ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், தமிழர்கள் துரத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

நியாயத்தைப் புடுங்குபவர்கள் இதுபற்றி என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்று அறிய ஆசை. 
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பல இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். மயிர்கூச்செரியும் தாக்குதல் நடாத்தப்பட்டது. கொப்பேகடுவ துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓட்டம். சிங்களத்திற்கு பேரிழப்பு. 

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, அழிவுகளை, அலசவேண்டிய, நினைவுகூர வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் பத்திரமாய் காங்கே சன்துறை துறைமுகத்தில் கப்பல் ஏறி கனடாவுக்கு அகதிகளாய் வந்துவிட்டார்கள். ஆஹா ஓஹோ என்று வாழ்கின்றார்கள்.

வேறென்ன வேண்டும்? எமக்கே இறுதி வெற்றி.

வணக்கம்.

ஏனுங்கோ..

ஏனுங்கோ வேலைக்குப் போறனீங்களே..

இல்லச் சும்மா கேட்டனான். ஏனெண்டா உங்கட எழுத்தில இயலாமை தெரியுதுங்கோ... அதுதான்....சும்மாமாமா..

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் யாழ் இணையம் கருத்துக்கள நிர்வாகத்தில் மட்டும் அல்ல கனடா குடிவரவுத்துறை நிர்வாகத்திலும் உள்ளார் என்று அறியும்போது பெருமையாக உள்ளது. வேலியே பயிரை மேய்ந்தால் யாழ் கருத்துக்களம் உருப்படும்.
 
வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நுணாவிலான் யாழ் இணையம் கருத்துக்கள நிர்வாகத்தில் மட்டும் அல்ல கனடா குடிவரவுத்துறை நிர்வாகத்திலும் உள்ளார் என்று அறியும்போது பெருமையாக உள்ளது. வேலியே பயிரை மேய்ந்தால் யாழ் கருத்துக்களம் உருப்படும்.
 
வாழ்த்துக்கள்!

ஜேர்மனியிலும் விடுதலைப்புலிகளால் பிரச்சனை என்று சொல்லி அகதி விண்ணப்பம் கோரியவர்கள் இருக்கின்றார்கள்.

இதனை எழுதும் நான் குடிவரவுதுறையில் இருக்கின்றேன் என சான்றிதழ் தருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம், குமாரசாமி ஜேர்மனி குடிவரவுத்துறை நிர்வாகக்தில் உள்ள சமூகஆர்வலர் என மெய்ச்சி பெருமைப்பட்டு கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்த தாக்குதல் சிறிது காலத்தில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசனை தொடங்கி வலிகாமம் வடக்கு மக்களை தெல்லிப்பளைக்கு எல்லைக்கு வெளியில் அகதிகளாக அனுப்பி வைக்க வழிகோலியது. தாக்குதலை நடாத்திய புண்ணியவான்கள் தப்பி சென்றுவிட்டார்கள். ஆனால், இராணுவம், கடற்படையின் கடுமையான எறிகணை தாக்குதலில், உலங்கு வானூர்தி தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், காயம் அடைந்தார்கள். மக்களுக்கு அன்று இரவு தொடங்கிய அவலம்தான்... காங்கேசன்துறை இன்று சுடுகாடு ஆகியுள்ளது. அழகிய, அமைதியான பூமி இன்று இராணுவத்தின் கைவசம். 

1987 இல் சிறீரங்கா இராணுவம் தந்தை செல்வா பாடாசாலை வரை முன்னேறி நின்றது.

மேலும் ஒபரேசன் லிபரேசன் வடமராட்சியை நோக்கிய படை நகர்வு

1990 யூன் நடுப்பகுதியிலிருந்தே பலாலி மயிலிட்டி காங்கேசன்துறை என படிப்படியாக (?)  மக்கள் வெளேயேறினர்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆமாம், குமாரசாமி ஜேர்மனி குடிவரவுத்துறை நிர்வாகக்தில் உள்ள சமூகஆர்வலர் என மெய்ச்சி பெருமைப்பட்டு கொள்ளலாம்.

மனதிலை இருக்கிற கோவம் எல்லா இடமும் வெளிப்படுது..😁

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி நகர்வின் ஏக காலத்தில் காங்கேசன்துறை, பலாலியில் தொடங்கி தெல்லிப்பழை பகுதி நோக்கி இராணுவம் முன்னேற தொடங்கியது. ஆனால், வடமராட்சி பிரச்சனை பெரிதாகும் முன்னரே காங்கேசன்துறை இலகுவாக இராணுவத்தின் வசமாகிவிட்டது. பொதுமக்கள் இராணுவத்துக்கு தண்ணி காட்டிவிட்டு உள் பாதைகளால் இரகசிமாக தமது வீடுகள் பார்க்க சென்று வந்தார்கள். இராணுவத்திடம் பிடிபட்டவர்கள், தாக்குதல்களுக்கு உள்ளானவர்களும் உண்டு.

இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர் மக்கள் மீண்டும் தமது பகுதிகளுக்கு சென்றார்கள். இந்திய இராணுவம் வெளியேறி போர் தொடங்கியதும் மீண்டும் 1990 பாரிய இடம்பெயர்வு. ஆனால் அது நிரந்தரமானது.

முன்பு அவ்வப்போது காங்கேசன்துறை பலாலி இராணுவ முகாம்களின் போக்குவரத்தை வழிமறித்து கண்ணிவெடி தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. அதன் விளைவுகளை மக்கள் சமாளித்தார்கள்.

ஆனால், 1987 ஹாபர் வியூ  அடியுடன் காங்கேசன்துறை அவல பூமி ஆகிவிட்டது. கடற்படை, விமானப்படை, தரைப்படை சேர்ந்து ( காங்கேசன்துறை முகாம், பலாலி முகாம் இராணுவம்) அந்த பகுதியை துவம்சம் செய்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

1948 இல் இருந்து தமிழரின் தாயகம் சூறையாடப்பட்டுக்கொண்டுதான் வருகிறது. தமிழர் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்டுக்கொண்டுதான் வருகிறார்கள். 1955 இலிருந்து தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டு வருகிறார்கள். அதே போல 2009 இற்குப்பிறகு வடக்கிலும் கிழக்கிலும் தமிழரின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இக்காலங்களில் ராணுவமும் கொல்லப்படவில்லை, கொப்பேக்கடுவவும் ஓடித்திரியவில்லை, நவீன ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், தமிழர்கள் துரத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

நியாயத்தைப் புடுங்குபவர்கள் இதுபற்றி என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்று அறிய ஆசை. 
 

சட்டி சுட்டதும் கையை விடுவது மனித மூளை முடிவெடுக்க முன்னரே கண் இமைத்ததை போல தானாக நடப்பது.

சூடான சட்டி சுடும் என்பதை இரண்டாம் முறையும் ஞாபகத்தில் வைத்திருக்க 
வலப்பக்க மூளை செயல்பாட்டில் இருக்கவேண்டும். 


 அது பற்றாக்குறையான இடங்களில் பரிதாபப்படுவதை விடுத்து 
வேறு வழி ஏதும் இல்லை 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.