Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரும் கனவான் பில் கேட்ஸ் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் கனவான் பில் கேட்ஸ் 

Head and shoulders photo of Bill Gates

அண்மையில் விவாகரத்து பெற்று இருந்தார் பில்லர். ஆனால் இப்போது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, அவர் ஒரு பெரும் வில்லர் என்பதை வெளிவரும் பல விவகாரங்கள் வெளிக்காட்டுகின்றன.

இவரை பார்க்கும்போது, ஒரு கனவான் (ஒரு கவுரவமான மனிதர் போல முக அமைப்பு) போல, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர் நினைவு வரும். அவரும் ஒரு கனவான் போலவே தோன்றுவார். 

ஆனால், ஜான் மேஜர், வில்லங்கமான ஆள் என்று வெளியே தெரிய வந்தது, அவரது அமைச்சரவையில் பெண் அமைச்சராக இருந்த எட்வீனா காரீ, ஓய்வு பெற்ற பின்னர், தனது டயரி குறிப்பினை வெளியிட்ட போது, தான் பிரதமரை ஏதோ கேட்க அவரது அறைக்கு போனபோது, தன்னை கட்டி அனைத்து, முத்தம் தந்தார் என்றும், (அம்மா, எதார்த்தமா சொன்னாலும், பதார்த்தமா புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள், புரியாதவர்களுக்கு புரிய வையுங்கோ) அன்றில் இருந்து அடுத்த 4 வருடங்கள், தாம் ரகசிய காதல் தொடர்பில் இருந்தோம் என்று சொன்ன போது தான், அட, இந்த பூனையும் பால் குடிக்குமோ என்று பிரித்தானியாவே அதிர்ந்து போனது.

photograph of a 52-year-old Major

Edwina currie nightingale house cropped.jpg

இப்போது பில்லர்.

இவரது பல பாலியல் சித்து வேலைகளில் முக்கியமானது பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்பானது.

இவர் பெரிய இடத்து மாமா. இளம் வயது கன்னிப்பெண்களை பெரிய பசை பாட்டிகளுக்கு காணிக்கையாக்குவது இவரது வேலை. பெண்களுக்கும், பெரும் கோடிகளில் பணம் கொட்டுவதால், வெளியே தெரியாது. ஆனாலும், இவரது வாடிக்கையாளராக இருந்த, பிரித்தானியா ராணியம்மாவின் இரண்டாவது மகன், ஆண்டுரூ இவர் மூலம் சேவை பெற்றுக் கொண்டிருந்தார்.

அந்த பெண்ணோ, பல ஆண்டுகள் பின்னர், அந்த தகவல்களை வெளியே சொன்னால், பெரும் காசு பார்க்கலாம் என்று வெளியே சொல்ல, பத்திரிகைகள் அவரை பிடிக்க, மாமா கைதாகி, உள்ளே இருக்கும் போதே தற்கொலை செய்து கொண்டார். எனினும் பெரிய இடத்து விவகாரங்கள் என்பதால், அது கொலையாக கூட இருக்கலாம்.

அமெரிக்க நீதி துறை இளவரசர் தொடர்பினை விசாரிக்க துடித்தாலும், அது பொய் என்று இளவரசரும், அரச குடும்ப கவுரவம் கருதி பிரித்தானிய அரசும் ஒத்துழைக்க வில்லை.

இன்று, பில் கேட்ஸ் அதே ஆள் உடன் தொடர்பு இருந்ததாக தெரிய வருகிறது. விவகாரம் எப்படி முடியப்போகிறது என்று தெரியவில்லை.

மெலின்டா, இவருடன் வேலை செய்த பிரெஞ்சு பெண்மணி. கலியாணத்தில் முடிந்தது, ஆனாலும், அங்கே பல பெண்களின் தொடர்பில் இருந்திருக்கிறார் அவர்.

இது தொடர்பில் வந்த ஒரு கட்டுரை கிழே:

பில் கேட்ஸ் மரியாதை காலி: பெண் ஊழியருடன் தவறான உறவு, பாலியல் குற்றவாளி உடன் தொடர்பு, இன்னும் பல!!

உலகளவில் டெக் நிறுவனங்களின் தலைவர்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஆனால் டெக் நிறுவனத் தலைவர்கள் பலரின் வாழ்க்கையில் சில கருப்புப் பக்கங்கள் உள்ளது அனைவருக்கும் தெரியும் குறிப்பாக ஸ்டீவ் ஜாப்ஸ், எலான் மஸ்க் என இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த வேளையில் டெக் தலைவர்கள் மத்தியில் பில் கேட்ஸ் மட்டும் மிகவும் சிறந்த மனிதராகக் கருதப்பட்டு வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக இவர் குறித்து வெளியாகும் தகவல்கள் டெக் துறையை மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன செய்தார்...? இதேபோல் இவரின் புகழின் வீழ்ச்சிக்கு விவாகரத்து மட்டும் காரணமில்லை.. பாலியல் குற்றச்சாட்டு முதல் பல உள்ளது..!

புகழின் உச்சியில் இருந்து வீழ்ந்த பில்கேட்ஸ்

சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில் பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருக்கும் பெண் இன்ஜினியர்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 2020ல் பில் கேட்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகி சுகாதாரம், நன்கொடை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல பிரிவுகளில் பணியாற்றத் துவங்கினார். இவரது பதவி விலகல்-க்குப் பின் மிகப்பெரிய விஷயம் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பில் கேட்ஸ்-ன் முறையற்ற உறவு

பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஒரு பெண் ஊழியர்களிடம் முறையற்ற உறவு வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்த போது, மைக்ரோசாப்ட் நிர்வாக உறுப்பினர்கள் 2019ல் ஒரு சட்ட நிறுவனத்தை நியமித்து விசாரணையைத் துவங்கியது. இந்த விசாரணையில் பெண் ஊழியர் பில் கேட்ஸ் உடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட தகவல் வெளியானது.

மைக்ரோசாப்ட் நிர்வாகக் குழு

இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்த உடனேயே மைக்ரோசாப்ட் நிர்வாகக் குழு பில் கேட்ஸ் தனது பதவியை விட்டு விலகுவது தான் அவருக்கும், நிறுவனத்திற்கும் சரியானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது. இதை ஏற்காத பில் கேட்ஸ் தொடர்ந்து தனது பதவியில் தொடர்ந்தார். இதற்கிடையில் நிறுவனத்தில் செய்யப்பட்டு வரும் விசாரணை தொடர்ந்து பில் கேட்ஸ்-க்கு எதிராகத் திரும்பியது.

பதவி விலகினார் பில் கேட்ஸ் இதனால் அவசர அவசரமாக விசாரணை முழுமையாக முடியும் முன்னரே தனது பதவியை விட்டு விலகினார் பில் கேட்ஸ். இதனால் இந்த விசாரணையின் முடிவுகள் வெளிச்சத்திற்கு வராமலேயே போனது. இதேவேளையில் இந்தக் குறிப்பிட்ட பெண் ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிர்வாகம் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மெலிண்டா கேட்ஸ் முடிவு

இந்தப் பிரச்சனை பெரியதாக வெடிக்கத் துவங்கிய நிலையில் 2019லேயே மெலிண்டா கேட்ஸ் விவாகரத்துச் செய்ய முடிவு செய்து சட்ட ஆலோசகரைச் சந்திக்கத் துவங்கினார். மெலிண்டாவின் இந்த முடிவுக்கு மிக முக்கியக் காரணம் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ்-க்கு இருந்த நட்பு தான் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. யார் இந்தப் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன்..?

நியூயார்க் டைம்ஸ்-ன் அதிர்ச்சி செய்தி

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கடந்த வருடம் வெளியிட்ட செய்தியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் பல முறை சந்தித்துள்ளார். பல முறை இரவு நேரத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நியூயார்க் டவுன்ஹவுஸ்-ல் தங்கியுள்ளார் என்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி பில் கேட்ஸ்-ன் மரியாதையைப் பெரிய அளவில் பாதித்தது எனக் கூறலாம்,

யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?

ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவின் பல பகுதிகளில் இளம் வயது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகவும், இதற்காக அவர் கைது செய்யப்பட்டார். 66 வயதான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த போது சிறையிலேயே ஆகஸ்ட் 2019ல் இறந்தார். இதன் வாயிலாகப் பில் கேட்ஸ் செய்தி தொடர்பாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் - பில் கேட்ஸ் சந்திப்பு நன்கொடை பற்றியது என விளக்கம் அளித்தார்.

யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?

பில் கேட்ஸ்-ன் மரியாதை

இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் மக்கள் மறக்கும் அளவிற்கு நன்கொடை, மக்களின் நில திட்டங்கள், அடுத்தடுத்த வர்த்தக வளர்ச்சிக்கான முதலீடுகள் எனப் பலவற்றைச் செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் பில் கேட்ஸ்-ன் மரியாதை கப்பல் ஏற துவங்கியது. இதற்குக் காரணம் கொரோனாவும், கொரோனா வேக்சினும் தான்.

பில் கேட்ஸ்-ன் நன்கொடை பணிகள்

கடந்த சில வருடங்களாகவே பில் கேட்ஸ்-ன் நன்கொடை பணிகளின் உண்மைத் தன்மையைப் பதம் பார்க்கும் ஒரு விஷயம், உலகில் பல நாடுகளில் போலியோ முதல் அனைத்து விதமான நோய்களைத் தடுக்கத் தடுப்பு மருந்தைத் தனது அறக்கட்டளை வாயிலாக அளித்து வருகிறார். இந்த வேக்சின் அளிக்கும் போது மக்களின் உடம்பில் மைக்ரோ சிப் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கொரோனா வேக்சின்

இந்த வேளையில் தான் கொரோனா உலகைத் தாக்கியது, கொரோனாவிற்கு வேக்சின் கண்டுபிடிக்கப்பட்ட போது இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கருத்து நிலவிய போது பில் கேட்ஸ் இதற்குக் கடுமையாக மறுப்பு தெரிவித்தார்.

வேக்சின் இனவெறியாளன் பில் கேட்ஸ்

இதன் வாயிலாகப் பில் கேட்ஸ்-ஐ அனைவரும் Vaccine Racist என அழைக்கத் துவங்கினர், இதேபோல் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஒரு லாபம் பார்க்கும் நிறுவனம் என்று விமர்சனங்கள் காட்டுத் தீயாய் பரவியது.

முடியாது, முடியவே முடியாது

இதோடு நிற்காத பில் கேட்ஸ் ஒரு நிகழ்ச்சியில் வளரும் நாடுகளுக்கு வேக்சின் தொழில்நுட்பத்தை அளிப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக 'NO' எனப் பதில் அளித்து உலக நாட்டு மக்களின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து

இந்தப் பிரச்சனைகள் எல்லாம் முழுமையாகத் தணிவதற்குள், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தங்களது 27 வருடத் திருமண வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ள செய்தி உலக நாடுகளில் பிரேகிங் செய்தியாக வெளியானது.

வெள்ளை சட்டை போட்டவன்

பில்கேட்ஸ் குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி அளிக்கும் அதேவேளையில், இவரின் நன்கொடைகள் அதிகப்படியான கேள்விகளை எழுப்பியுள்ளது அனைத்தும் லாபத்திற்காகவா என்றும் தோன்றுகிறது. இதேபோல் வெள்ளை சட்டை போட்டவன் எல்லாம் நல்லவன் இவ்லை என்றும் உணர்த்தியுள்ளார் பில் கேட்ஸ்.

Read more at: https://tamil.goodreturns.in/news/fall-of-bill-gates-covid19-vaccine-views-divorce-epstein-link-alleged-affairs-with-microsoft-employe/articlecontent-pf119628-023647.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பல் இருப்பவன் பகோடா மெல்லுவான்.

ஆனால் இதையும் தாண்டி ஆண்மையை நிரூபிப்போரே மனிதனாக ஏற்கப்படுகிறார் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

பல் இருப்பவன் பகோடா மெல்லுவான்.

ஆனால் இதையும் தாண்டி ஆண்மையை நிரூபிப்போரே மனிதனாக ஏற்கப்படுகிறார் 

பல்லு இருப்பவன் பக்கோடா சாப்பிடலாம்.... சட்டத்துக்கு அமைவாக.

இல்லாவிடில், பல்லே போகும்.... இப்படிதான்....

உங்களுக்கு கொழும்பு ஆர்மர் வீதி சரஸ்வதி மஹால் சைவ கடை தெரிந்திருக்கும்.

முனா... 62 வயதில, இரண்டாவது, ஒரு இளம் பெண்ணை கட்டினார்... ஆண்மையை நிரூபிக்க பெண் குழந்தை ஒன்றினை பெற்றுக் கொண்டார். 

ஆனாலும் பெண் படி தாண்ட, கொலையே செய்தார். பணத்தை கொடுத்து, தற்கொலை என்று போலீசை சொல்ல வைத்தார். 

ஆக... சட்ட  ரீதியில்லா வேலை செய்து அவமான படுவதிலும் பார்க்க, பணம் இருந்தால், முகமது போதனை ஏற்று, ஒன்றல்ல, 7 கட்டி கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

பில் கேட்ஸ் விவகாரம்: இதனால்தான் விவாகரத்து முடிவு எடுத்தாரா மெலிண்டா? - வெளிவரும் புதிய தகவல்கள்

Bill Gates

Bill Gates ( AP Photo/Elaine Thompson )

2019-ம் ஆண்டே மெலிண்டா கேட்ஸ் விவாகரத்துக்காகத் திட்டமிட்டிருக்கிறார். அவர் ஏன் அப்படித் திட்டமிட்டார்?

பில் கேட்ஸ் என்றாலே பெரும் பணக்காரர்; மிகப் பெரும் கொடையாளி என்கிற எண்ணம்தான் எல்லோரும் நினைவுக்கு வரும். ஆனால், கடந்த சில வாரங்களாக வரும் செய்திகள், பில் கேட்ஸின் இன்னொரு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், அவரது இமேஜை சுக்குநூறாக உடைக்கிற மாதிரி உள்ளன.

கடந்த மே 3-ம் தேதி பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. திருமணம் நடந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவாகரத்து அறிவிக்கப்பட்டது. அதே சமயம், இந்த விவாகாரத்தால் அறக்கட்டளை செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Bill and Melinda Gates
 
Bill and Melinda Gates AP Photo / Elaine Thompson

27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் திடீரென பிரிய என்ன காரணம் என்பதற்கு பலரும் பல காரணங்களைச் சொன்னார்கள். வெல்த் டாக்ஸைக் குறைப்பதற்காக இருவரும் விவாகரத்து செய்திருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாயின. சுமார் 125 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துகள், பங்குகள், ரியல் எஸ்டேட்கள் பில்கேட்ஸுக்கு இருக்கின்றன. இந்தச் சொத்துகளைக் குறைந்த வரியில் பிரித்துக்கொள்வதற்காக விவாகாரத்து செய்யப்படுகிறது என்றும் அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்கள் விரைவில் இதுபோன்ற விவாகாரத்துகளில் ஈடுபடக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.

 

2019-லேயே விவாகரத்து?

ஆனால், இப்போது வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. 2019-ம் ஆண்டே மெலிண்டா கேட்ஸ் விவாகரத்துக்காகத் திட்டமிட்டதே அந்தக் காரணம். அவர் ஏன் அப்படித் திட்டமிட்டார்?

2000-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் பில்கேட்ஸ் நெருக்கமாக இருந்ததாகவும், 2019-ம் ஆண்டு இந்த நெருக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பில்கேட்ஸ் திட்டமிட்டதாகவும், இதைத் தொடர்ந்து மெலிண்டா விவாகரத்துக்குத் தயாரானதாகவும் மைக்ரோசாப்ட் இயக்குநர் குழுவுக்கு கடிதம் கிடைத்திருக்கிறது.

இந்தப் புகார் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் இயக்குநர் குழு பிரத்யேக சட்ட நிறுவனத்தை அழைத்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணைக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கிறது. ஆனால், இந்த விசாரணையின் முழுமையான முடிவு கிடைப்பதற்கு முன்பே மைக்ரோசாஃப்ட் இயக்குநர் குழுவில் இருந்து பில்கேட்ஸ் வெளியேறிவிட்டார்.

மைக்ரோசாப்ட்
 
மைக்ரோசாப்ட்

இயக்குநர் குழுவிலிருந்து வெளியேக் காரணம்?

பில்கேட்ஸ் மீது இப்படியொரு குற்றச்சாட்டு வந்த பிறகு, அவர் இயக்குநர் குழுவில் தொடர்ந்து இருப்பது சரியாக இருக்காது என சில இயக்குநர்கள் சொன்னதால்தான் பில் கேட்ஸ் இயக்குநர் குழுவைவிட்டு வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், பில்கேட்ஸின் தகவல் தொடர்பு அதிகாரி இதை மறுத்திருக்கிறார். ``இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொடர்பு அது. தவிர, அவர்கள் சுமுகமாகப் பிரிந்துவிட்டனர். பில்கேட்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறுவதற்கும், இந்தப் பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூக சேவைகள் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவே தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். அதில் அதிக கவனம் செலுத்துவதற்காகத்தான் இயக்குநர் குழுவில் இருந்தும் விலகினார். அதே நாளில்தான் வாரன் பஃபெட்டின் நிறுவனமான பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்தும் ராஜினாமா செய்தார்’’ என்று சொல்லியிருக்கிறார்.

இதில் மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம், பில்கேட்ஸுக்கும் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கும் இடையேயான உறவுதான்.

 

பாலியியல் குற்றவாளியுடன் தொடர்பு

பில்கேட்ஸ் மனைவி கூறியிருக்கும் மற்றொரு குற்றச்சாட்டு பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரே எப்ஸ்டீன் (jeffrey Epstein) உடனான நட்பு. இவர், 2019-ம் ஆண்டு சிறையில் இருக்கும்போதே தற்கொலை செய்துகொண்டவர். இவருடன் பில்கேட்ஸ் நட்பாக இருந்ததுடன், அடிக்கடி சந்திக்கவும் செய்திருக்கிறார்கள் என மெலிண்டா கருதினார். தங்கள் திருமண உறவில் இருந்து வெளியே வருமாறு ஆலோசனை கூறியவரே ஜெஃப்ரே எப்ஸ்டீன்தான் என்கிற கருத்தையும் பலர் சொல்கிறார்கள்.

ஆனால், இந்தக் கருத்தையும் பில்கேட்ஸின் தகவல் தொடர்பு அதிகாரி மறுத்திருக்கிறார். ``சமூக சேவைக்காக மட்டுமே ஜெஃப்ரே எப்ஸ்ச்டனைச் சந்தித்தார். பின்னாள்களில் அவரைச் சந்தித்தற்காக பில் கேட்ஸ் வருத்தப்பட்டார். இதில் உண்மை இல்லை. இதுபோல தவறான தகவல் பரப்படுவது துரதிர்ஷ்டவசமானது’’ என்று சொல்லியிருக்கிறார்.

Bill and Melinda Gates in 1994
 
Bill and Melinda Gates in 1994 AP Photo / DAVE WEAVER

இந்தியாவுக்கு எதிரான கருத்து!

கோவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் காப்புரிமையை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று சொன்னார் பில் கேட்ஸ். அவரது இந்தக் கருத்தும் மிகப் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அறக்கட்டளை மூலம் அவர் லாபம் சம்பாதிப்பதையும், தடுப்பூசி மருந்தை இந்தியா போன்ற நாடுகளுக்குத் தராமல் அமெரிக்கா தான் மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறது எனப் பலரும் பில் கேட்ஸ் மீது கரித்துக் கொட்டியிருக்கிறார்கள்.

ஆக, விவாகரத்து, பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு, இந்தியாவுக்கு எதிரான கருத்து என அடுத்தடுத்து பல சிக்கல்கள் பில்கேட்ஸை சூழ்ந்த வண்ணம் உள்ளன. என்றாலும், இந்த நடவடிக்கைகளால் மைக்ரோசாஃப்ட் பங்குகளில் எந்த விதமான தாக்கமும் இல்லை. ஆனால், ஆனால், பில்கேட்ஸ் என்னும் நாயக பிம்பத்தை இந்த செய்திகள் கடுமையாகப் பாதித்திருக்கின்றன.

 

https://www.vikatan.com/business/news/new-reports-says-melinda-gates-planned-for-divorce-in-2019-itself

இந்தியாவுக்கு மரணம் என்பது இயற்கையானது. 
இந்தியா உயிர்வாழ முடியாத அளவுக்கு பழையது.
இந்தியா ஊழல் நிறைந்தது, இந்தியா மரணம் நிறைந்தது, 
இந்தியா பொய்கள் நிறைந்தது.
இந்தியா போலியானது.
இந்தியா பொய் குருவால் நிறைந்துள்ளது.
போலி அரசியல்வாதிகள் நிறைந்த இந்தியா.
இந்த கோவிட் -19 இல் அனைத்து இந்திய சத்தங்களும் அழிந்து போகின்றன.
இது உலகின் பிற பகுதிகளுக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

பெரும் கனவான் பில் கேட்ஸ் 

Head and shoulders photo of Bill Gates

அண்மையில் விவாகரத்து பெற்று இருந்தார் பில்லர். ஆனால் இப்போது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, அவர் ஒரு பெரும் வில்லர் என்பதை வெளிவரும் பல விவகாரங்கள் வெளிக்காட்டுகின்றன.

இவரை பார்க்கும்போது, ஒரு கனவான் (ஒரு கவுரவமான மனிதர் போல முக அமைப்பு) போல, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர் நினைவு வரும். அவரும் ஒரு கனவான் போலவே தோன்றுவார். 

ஆனால், ஜான் மேஜர், வில்லங்கமான ஆள் என்று வெளியே தெரிய வந்தது, அவரது அமைச்சரவையில் பெண் அமைச்சராக இருந்த எட்வீனா காரீ, ஓய்வு பெற்ற பின்னர், தனது டயரி குறிப்பினை வெளியிட்ட போது, தான் பிரதமரை ஏதோ கேட்க அவரது அறைக்கு போனபோது, தன்னை கட்டி அனைத்து, முத்தம் தந்தார் என்றும், (அம்மா, எதார்த்தமா சொன்னாலும், பதார்த்தமா புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள், புரியாதவர்களுக்கு புரிய வையுங்கோ) அன்றில் இருந்து அடுத்த 4 வருடங்கள், தாம் ரகசிய காதல் தொடர்பில் இருந்தோம் என்று சொன்ன போது தான், அட, இந்த பூனையும் பால் குடிக்குமோ என்று பிரித்தானியாவே அதிர்ந்து போனது.

photograph of a 52-year-old Major

Edwina currie nightingale house cropped.jpg

இப்போது பில்லர்.

இவரது பல பாலியல் சித்து வேலைகளில் முக்கியமானது பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்பானது.

இவர் பெரிய இடத்து மாமா. இளம் வயது கன்னிப்பெண்களை பெரிய பசை பாட்டிகளுக்கு காணிக்கையாக்குவது இவரது வேலை. பெண்களுக்கும், பெரும் கோடிகளில் பணம் கொட்டுவதால், வெளியே தெரியாது. ஆனாலும், இவரது வாடிக்கையாளராக இருந்த, பிரித்தானியா ராணியம்மாவின் இரண்டாவது மகன், ஆண்டுரூ இவர் மூலம் சேவை பெற்றுக் கொண்டிருந்தார்.

அந்த பெண்ணோ, பல ஆண்டுகள் பின்னர், அந்த தகவல்களை வெளியே சொன்னால், பெரும் காசு பார்க்கலாம் என்று வெளியே சொல்ல, பத்திரிகைகள் அவரை பிடிக்க, மாமா கைதாகி, உள்ளே இருக்கும் போதே தற்கொலை செய்து கொண்டார். எனினும் பெரிய இடத்து விவகாரங்கள் என்பதால், அது கொலையாக கூட இருக்கலாம்.

அமெரிக்க நீதி துறை இளவரசர் தொடர்பினை விசாரிக்க துடித்தாலும், அது பொய் என்று இளவரசரும், அரச குடும்ப கவுரவம் கருதி பிரித்தானிய அரசும் ஒத்துழைக்க வில்லை.

இன்று, பில் கேட்ஸ் அதே ஆள் உடன் தொடர்பு இருந்ததாக தெரிய வருகிறது. விவகாரம் எப்படி முடியப்போகிறது என்று தெரியவில்லை.

மெலின்டா, இவருடன் வேலை செய்த பிரெஞ்சு பெண்மணி. கலியாணத்தில் முடிந்தது, ஆனாலும், அங்கே பல பெண்களின் தொடர்பில் இருந்திருக்கிறார் அவர்.

இது தொடர்பில் வந்த ஒரு கட்டுரை கிழே:

பில் கேட்ஸ் மரியாதை காலி: பெண் ஊழியருடன் தவறான உறவு, பாலியல் குற்றவாளி உடன் தொடர்பு, இன்னும் பல!!

உலகளவில் டெக் நிறுவனங்களின் தலைவர்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஆனால் டெக் நிறுவனத் தலைவர்கள் பலரின் வாழ்க்கையில் சில கருப்புப் பக்கங்கள் உள்ளது அனைவருக்கும் தெரியும் குறிப்பாக ஸ்டீவ் ஜாப்ஸ், எலான் மஸ்க் என இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த வேளையில் டெக் தலைவர்கள் மத்தியில் பில் கேட்ஸ் மட்டும் மிகவும் சிறந்த மனிதராகக் கருதப்பட்டு வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக இவர் குறித்து வெளியாகும் தகவல்கள் டெக் துறையை மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன செய்தார்...? இதேபோல் இவரின் புகழின் வீழ்ச்சிக்கு விவாகரத்து மட்டும் காரணமில்லை.. பாலியல் குற்றச்சாட்டு முதல் பல உள்ளது..!

புகழின் உச்சியில் இருந்து வீழ்ந்த பில்கேட்ஸ்

சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில் பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருக்கும் பெண் இன்ஜினியர்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 2020ல் பில் கேட்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகி சுகாதாரம், நன்கொடை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல பிரிவுகளில் பணியாற்றத் துவங்கினார். இவரது பதவி விலகல்-க்குப் பின் மிகப்பெரிய விஷயம் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பில் கேட்ஸ்-ன் முறையற்ற உறவு

பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஒரு பெண் ஊழியர்களிடம் முறையற்ற உறவு வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்த போது, மைக்ரோசாப்ட் நிர்வாக உறுப்பினர்கள் 2019ல் ஒரு சட்ட நிறுவனத்தை நியமித்து விசாரணையைத் துவங்கியது. இந்த விசாரணையில் பெண் ஊழியர் பில் கேட்ஸ் உடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட தகவல் வெளியானது.

மைக்ரோசாப்ட் நிர்வாகக் குழு

இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்த உடனேயே மைக்ரோசாப்ட் நிர்வாகக் குழு பில் கேட்ஸ் தனது பதவியை விட்டு விலகுவது தான் அவருக்கும், நிறுவனத்திற்கும் சரியானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது. இதை ஏற்காத பில் கேட்ஸ் தொடர்ந்து தனது பதவியில் தொடர்ந்தார். இதற்கிடையில் நிறுவனத்தில் செய்யப்பட்டு வரும் விசாரணை தொடர்ந்து பில் கேட்ஸ்-க்கு எதிராகத் திரும்பியது.

பதவி விலகினார் பில் கேட்ஸ் இதனால் அவசர அவசரமாக விசாரணை முழுமையாக முடியும் முன்னரே தனது பதவியை விட்டு விலகினார் பில் கேட்ஸ். இதனால் இந்த விசாரணையின் முடிவுகள் வெளிச்சத்திற்கு வராமலேயே போனது. இதேவேளையில் இந்தக் குறிப்பிட்ட பெண் ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிர்வாகம் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மெலிண்டா கேட்ஸ் முடிவு

இந்தப் பிரச்சனை பெரியதாக வெடிக்கத் துவங்கிய நிலையில் 2019லேயே மெலிண்டா கேட்ஸ் விவாகரத்துச் செய்ய முடிவு செய்து சட்ட ஆலோசகரைச் சந்திக்கத் துவங்கினார். மெலிண்டாவின் இந்த முடிவுக்கு மிக முக்கியக் காரணம் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ்-க்கு இருந்த நட்பு தான் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. யார் இந்தப் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன்..?

நியூயார்க் டைம்ஸ்-ன் அதிர்ச்சி செய்தி

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கடந்த வருடம் வெளியிட்ட செய்தியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் பல முறை சந்தித்துள்ளார். பல முறை இரவு நேரத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நியூயார்க் டவுன்ஹவுஸ்-ல் தங்கியுள்ளார் என்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி பில் கேட்ஸ்-ன் மரியாதையைப் பெரிய அளவில் பாதித்தது எனக் கூறலாம்,

யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?

ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவின் பல பகுதிகளில் இளம் வயது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகவும், இதற்காக அவர் கைது செய்யப்பட்டார். 66 வயதான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த போது சிறையிலேயே ஆகஸ்ட் 2019ல் இறந்தார். இதன் வாயிலாகப் பில் கேட்ஸ் செய்தி தொடர்பாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் - பில் கேட்ஸ் சந்திப்பு நன்கொடை பற்றியது என விளக்கம் அளித்தார்.

யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?

பில் கேட்ஸ்-ன் மரியாதை

இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் மக்கள் மறக்கும் அளவிற்கு நன்கொடை, மக்களின் நில திட்டங்கள், அடுத்தடுத்த வர்த்தக வளர்ச்சிக்கான முதலீடுகள் எனப் பலவற்றைச் செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் பில் கேட்ஸ்-ன் மரியாதை கப்பல் ஏற துவங்கியது. இதற்குக் காரணம் கொரோனாவும், கொரோனா வேக்சினும் தான்.

பில் கேட்ஸ்-ன் நன்கொடை பணிகள்

கடந்த சில வருடங்களாகவே பில் கேட்ஸ்-ன் நன்கொடை பணிகளின் உண்மைத் தன்மையைப் பதம் பார்க்கும் ஒரு விஷயம், உலகில் பல நாடுகளில் போலியோ முதல் அனைத்து விதமான நோய்களைத் தடுக்கத் தடுப்பு மருந்தைத் தனது அறக்கட்டளை வாயிலாக அளித்து வருகிறார். இந்த வேக்சின் அளிக்கும் போது மக்களின் உடம்பில் மைக்ரோ சிப் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கொரோனா வேக்சின்

இந்த வேளையில் தான் கொரோனா உலகைத் தாக்கியது, கொரோனாவிற்கு வேக்சின் கண்டுபிடிக்கப்பட்ட போது இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கருத்து நிலவிய போது பில் கேட்ஸ் இதற்குக் கடுமையாக மறுப்பு தெரிவித்தார்.

வேக்சின் இனவெறியாளன் பில் கேட்ஸ்

இதன் வாயிலாகப் பில் கேட்ஸ்-ஐ அனைவரும் Vaccine Racist என அழைக்கத் துவங்கினர், இதேபோல் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஒரு லாபம் பார்க்கும் நிறுவனம் என்று விமர்சனங்கள் காட்டுத் தீயாய் பரவியது.

முடியாது, முடியவே முடியாது

இதோடு நிற்காத பில் கேட்ஸ் ஒரு நிகழ்ச்சியில் வளரும் நாடுகளுக்கு வேக்சின் தொழில்நுட்பத்தை அளிப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக 'NO' எனப் பதில் அளித்து உலக நாட்டு மக்களின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து

இந்தப் பிரச்சனைகள் எல்லாம் முழுமையாகத் தணிவதற்குள், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தங்களது 27 வருடத் திருமண வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ள செய்தி உலக நாடுகளில் பிரேகிங் செய்தியாக வெளியானது.

வெள்ளை சட்டை போட்டவன்

பில்கேட்ஸ் குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி அளிக்கும் அதேவேளையில், இவரின் நன்கொடைகள் அதிகப்படியான கேள்விகளை எழுப்பியுள்ளது அனைத்தும் லாபத்திற்காகவா என்றும் தோன்றுகிறது. இதேபோல் வெள்ளை சட்டை போட்டவன் எல்லாம் நல்லவன் இவ்லை என்றும் உணர்த்தியுள்ளார் பில் கேட்ஸ்.

Read more at: https://tamil.goodreturns.in/news/fall-of-bill-gates-covid19-vaccine-views-divorce-epstein-link-alleged-affairs-with-microsoft-employe/articlecontent-pf119628-023647.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

அண்ணே,
இப்படி யார் எவருடன் படுத்தார்
எழும்பினார், கள்ள உறவு வைத்தார்
மாமா வேலை பார்த்தார்
எந்த புருசன் மனுசியை ஏமாற்றினார்
எந்த மனிசி எவருடன் ஓடினார்
போன்ற
தமிழ் கூறும் நல்லுலகுக்கு
மிகத் தேவையான கட்டுரைகளை
தேடித் தேடி
கொசிப் தளங்களில் இருந்து
கொண்டு வந்து இணையுங்கோ
அண்ணே

உங்கள் கொள்ளளவுக்கு
இப்படியான கட்டுரைகள்
தான் அண்ணே சரிப்படும்

சும்மா அரசியல் எதிர்வு கூறுதல்,
அரசியல் ஆய்வுகள்
எல்லாம் கஷ்டம் அண்ணே
அதுக்கு நீங்கள் சரிவர மாட்டியள்

இப்படி கொசிப்
டாப்லாயிட் மீம்ஸ்
பதிவுகளை கொண்டு
வந்து கொட்டுங்கோ
பிரதர்

நாங்களும் நாக்கை தொங்கப்
போட்டுக் கொண்டு
வாசிப்பம்ல

அப்ப நான் வரட்டா

 

Edited by வைரவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, வைரவன் said:

அண்ணே,
இப்படி யார் எவருடன் படுத்தார்
எழும்பினார், கள்ள உறவு வைத்தார்
மாமா வேலை பார்த்தார்
எந்த புருசன் மனுசியை ஏமாற்றினார்
எந்த மனிசி எவருடன் ஓடினார்
போன்ற
தமிழ் கூறும் நல்லுலகுக்கு
மிகத் தேவையான கட்டுரைகளை
தேடித் தேடி
கொசிப் தளங்களில் இருந்து
கொண்டு வந்து இணையுங்கோ
அண்ணே

உங்கள் கொள்ளளவுக்கு
இப்படியான கட்டுரைகள்
தான் அண்ணே சரிப்படும்

சும்மா அரசியல் எதிர்வு கூறுதல்,
அரசியல் ஆய்வுகள்
எல்லாம் கஷ்டம் அண்ணே
அதுக்கு நீங்கள் சரிவர மாட்டியள்

இப்படி கொசிப்
டாப்லாயிட் மீம்ஸ்
பதிவுகளை கொண்டு
வந்து கொட்டுங்கோ
பிரதர்

நாங்களும் நாக்கை தொங்கப்
போட்டுக் கொண்டு
வாசிப்பம்ல

அப்ப நான் வரட்டா

 

உங்களுக்கு சீமான் விசயம் தானே தேவை. இதுக்குள்ள வந்து தேடினால், இல்லாவிடில் எரிச்சல் தானே வரும்...

எந்த நேரமும், அதையே எழுத எனக்கென்ன விசரே?

போகிற போக்கிலே உபதேசம் வேற.... எங்களுக்கு உங்கள் உபதேசம் தேவையில்லை... அப்பப்ப வந்து, வாசித்து, டென்ஷனை குறைத்து போகலாமே.

உங்கள் முதலாவது கள பெயரை சொல்லவா பிரதர்? 🧐

முடிந்தால், நான் எழுதினத்தை உங்கள் கொள்ளளவுக்கு, ஆங்கிலத்திலை மொழி பெயர்த்து தாருங்கோவன்.... வாசித்து ஆங்கில அறிவை வளர்க்கிறேன். பெரிய உதவியா போகும்.

அவனவன், உலகின் பெரும் பணக்காரரான இந்த மனிதனின் வண்டவாளத்தால் ஸ்டாக் மார்க்கெட் போட்ட பங்குகள், கொரோனா தடுப்பு மருந்து இவரது முதலீடு குறித்து அல்லாடிக்கொண்டு இருக்கிறான். இவர் பிபிசி, நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், லண்டன் டைம்ஸ்,  பத்திரிகைகளையே கோசிப் தளங்கள் என்று சொல்லும், பெரிய அறிவாளி.

சும்மா போவியளே.... வையிரவரே....போய், துன்னூரை அள்ளி, நெத்தி நிறைய பூசிக்கொண்டு, படுங்கோவன்.🤦‍♂️

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

jeffrey Epstein  யின் தற்கொலையோடு பல விடயங்கள் வெளி உலகிற்கு வராமல் போகின்றது. பலர் நிம்மதி பெருமூச்சு விடவும் வாய்ப்புள்ளது.

Epstein: Neue Dokumente zeigen, wie seine Sex-Partys abliefen | STERN.de

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

jeffrey Epstein  யின் தற்கொலையோடு பல விடயங்கள் வெளி உலகிற்கு வராமல் போகின்றது. பலர் நிம்மதி பெருமூச்சு விடவும் வாய்ப்புள்ளது.

Epstein: Neue Dokumente zeigen, wie seine Sex-Partys abliefen | STERN.de

ஜெஃப்ரி எப்ஸ்டீன் நேரடியாக செய்யார். (இப்போது கைதாகி உள்ள, இந்த படத்தில் இருக்கும் பெண்) செயலாளராக இருந்த ஒரு பெண், இளம் பெண்கள், maid பெண்களாக, பணக்காரர்கள் தங்கும் தனி தீவுகளில் உள்ள பெரும் பங்களாக்களுக்கு வேலைக்கு தேவை என்று விளம்பரம் செய்து, அவர்களை தானே தேர்வு செய்து, அவர்களுக்கு ஆண் நண்பர்கள் இருந்திருக்க வில்லை என்பதை உறுதி செய்து, பெரும் சம்பளத்தில் வேலைக்கு எடுத்து, தனி விமானத்தில், ஏத்தி இறக்கி, ஆடம்பரத்தை பழக்கி, தொழிலுக்கு தயாராக்கி, பெரும் பணம் படைத்தவர்களுடன் பழக அனுப்புவார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Nathamuni said:

சும்மா போவியளே.... வையிரவரே....போய், துன்னூரை அள்ளி, நெத்தி நிறைய பூசிக்கொண்டு, படுங்கோவன்.🤦‍♂️

ஊரிலையெல்லாம் வைரவருக்கு ரெஞ்சன் எண்டால் வடைமாலை போட்டு குளிர்ச்சியடைய வைப்பம். 🥥 💐🔥  🙏🏽

இந்த வைரவரை குளிர்ச்சியாக்க அந்த குட்டித்தீவுக்கு அனுப்புவமா? 😂

Neue Klage zu Epsteins Missbrauchssystem | Aktuell Amerika | DW | 16.01.2020

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 

உங்களுக்கு சீமான் விசயம் தானே தேவை. இதுக்குள்ள வந்து தேடினால், இல்லாவிடில் எரிச்சல் தானே வரும்...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

ஊரிலையெல்லாம் வைரவருக்கு ரெஞ்சன் எண்டால் வடைமாலை போட்டு குளிர்ச்சியடைய வைப்பம். 🥥 💐🔥  🙏🏽

இந்த வைரவரை குளிர்ச்சியாக்க அந்த குட்டித்தீவுக்கு அனுப்புவமா? 😂

Neue Klage zu Epsteins Missbrauchssystem | Aktuell Amerika | DW | 16.01.2020

ஆள் பணத்தில் பிரளும் முதலை வேற...  வடை மாலை செய்து, சாத்த... வேலைக்கு, இளம் பெண்மணி தேவை என்று கேட்டால், நான் என்ன செய்வேன்... அந்தாளும் செத்து போட்டுது. அந்தம்மாவும் உள்ள... ஐயகோ... வையிரவா.... காப்பாத்தப்பா ... (நான் கடவுளை கூப்பிட்டேன்)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

பில் கேட்ஸ் விவகாரம்: இதனால்தான் விவாகரத்து முடிவு எடுத்தாரா மெலிண்டா? - வெளிவரும் புதிய தகவல்கள்

Bill Gates

Bill Gates ( AP Photo/Elaine Thompson )

2019-ம் ஆண்டே மெலிண்டா கேட்ஸ் விவாகரத்துக்காகத் திட்டமிட்டிருக்கிறார். அவர் ஏன் அப்படித் திட்டமிட்டார்?

பில் கேட்ஸ் என்றாலே பெரும் பணக்காரர்; மிகப் பெரும் கொடையாளி என்கிற எண்ணம்தான் எல்லோரும் நினைவுக்கு வரும். ஆனால், கடந்த சில வாரங்களாக வரும் செய்திகள், பில் கேட்ஸின் இன்னொரு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், அவரது இமேஜை சுக்குநூறாக உடைக்கிற மாதிரி உள்ளன.

கடந்த மே 3-ம் தேதி பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. திருமணம் நடந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவாகரத்து அறிவிக்கப்பட்டது. அதே சமயம், இந்த விவாகாரத்தால் அறக்கட்டளை செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Bill and Melinda Gates
 
Bill and Melinda Gates AP Photo / Elaine Thompson

27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் திடீரென பிரிய என்ன காரணம் என்பதற்கு பலரும் பல காரணங்களைச் சொன்னார்கள். வெல்த் டாக்ஸைக் குறைப்பதற்காக இருவரும் விவாகரத்து செய்திருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாயின. சுமார் 125 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துகள், பங்குகள், ரியல் எஸ்டேட்கள் பில்கேட்ஸுக்கு இருக்கின்றன. இந்தச் சொத்துகளைக் குறைந்த வரியில் பிரித்துக்கொள்வதற்காக விவாகாரத்து செய்யப்படுகிறது என்றும் அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்கள் விரைவில் இதுபோன்ற விவாகாரத்துகளில் ஈடுபடக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.

 

2019-லேயே விவாகரத்து?

ஆனால், இப்போது வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. 2019-ம் ஆண்டே மெலிண்டா கேட்ஸ் விவாகரத்துக்காகத் திட்டமிட்டதே அந்தக் காரணம். அவர் ஏன் அப்படித் திட்டமிட்டார்?

2000-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் பில்கேட்ஸ் நெருக்கமாக இருந்ததாகவும், 2019-ம் ஆண்டு இந்த நெருக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பில்கேட்ஸ் திட்டமிட்டதாகவும், இதைத் தொடர்ந்து மெலிண்டா விவாகரத்துக்குத் தயாரானதாகவும் மைக்ரோசாப்ட் இயக்குநர் குழுவுக்கு கடிதம் கிடைத்திருக்கிறது.

இந்தப் புகார் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் இயக்குநர் குழு பிரத்யேக சட்ட நிறுவனத்தை அழைத்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணைக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கிறது. ஆனால், இந்த விசாரணையின் முழுமையான முடிவு கிடைப்பதற்கு முன்பே மைக்ரோசாஃப்ட் இயக்குநர் குழுவில் இருந்து பில்கேட்ஸ் வெளியேறிவிட்டார்.

மைக்ரோசாப்ட்
 
மைக்ரோசாப்ட்

இயக்குநர் குழுவிலிருந்து வெளியேக் காரணம்?

பில்கேட்ஸ் மீது இப்படியொரு குற்றச்சாட்டு வந்த பிறகு, அவர் இயக்குநர் குழுவில் தொடர்ந்து இருப்பது சரியாக இருக்காது என சில இயக்குநர்கள் சொன்னதால்தான் பில் கேட்ஸ் இயக்குநர் குழுவைவிட்டு வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், பில்கேட்ஸின் தகவல் தொடர்பு அதிகாரி இதை மறுத்திருக்கிறார். ``இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொடர்பு அது. தவிர, அவர்கள் சுமுகமாகப் பிரிந்துவிட்டனர். பில்கேட்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறுவதற்கும், இந்தப் பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூக சேவைகள் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவே தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். அதில் அதிக கவனம் செலுத்துவதற்காகத்தான் இயக்குநர் குழுவில் இருந்தும் விலகினார். அதே நாளில்தான் வாரன் பஃபெட்டின் நிறுவனமான பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்தும் ராஜினாமா செய்தார்’’ என்று சொல்லியிருக்கிறார்.

இதில் மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம், பில்கேட்ஸுக்கும் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கும் இடையேயான உறவுதான்.

 

பாலியியல் குற்றவாளியுடன் தொடர்பு

பில்கேட்ஸ் மனைவி கூறியிருக்கும் மற்றொரு குற்றச்சாட்டு பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரே எப்ஸ்டீன் (jeffrey Epstein) உடனான நட்பு. இவர், 2019-ம் ஆண்டு சிறையில் இருக்கும்போதே தற்கொலை செய்துகொண்டவர். இவருடன் பில்கேட்ஸ் நட்பாக இருந்ததுடன், அடிக்கடி சந்திக்கவும் செய்திருக்கிறார்கள் என மெலிண்டா கருதினார். தங்கள் திருமண உறவில் இருந்து வெளியே வருமாறு ஆலோசனை கூறியவரே ஜெஃப்ரே எப்ஸ்டீன்தான் என்கிற கருத்தையும் பலர் சொல்கிறார்கள்.

ஆனால், இந்தக் கருத்தையும் பில்கேட்ஸின் தகவல் தொடர்பு அதிகாரி மறுத்திருக்கிறார். ``சமூக சேவைக்காக மட்டுமே ஜெஃப்ரே எப்ஸ்ச்டனைச் சந்தித்தார். பின்னாள்களில் அவரைச் சந்தித்தற்காக பில் கேட்ஸ் வருத்தப்பட்டார். இதில் உண்மை இல்லை. இதுபோல தவறான தகவல் பரப்படுவது துரதிர்ஷ்டவசமானது’’ என்று சொல்லியிருக்கிறார்.

Bill and Melinda Gates in 1994
 
Bill and Melinda Gates in 1994 AP Photo / DAVE WEAVER

இந்தியாவுக்கு எதிரான கருத்து!

கோவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் காப்புரிமையை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று சொன்னார் பில் கேட்ஸ். அவரது இந்தக் கருத்தும் மிகப் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அறக்கட்டளை மூலம் அவர் லாபம் சம்பாதிப்பதையும், தடுப்பூசி மருந்தை இந்தியா போன்ற நாடுகளுக்குத் தராமல் அமெரிக்கா தான் மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறது எனப் பலரும் பில் கேட்ஸ் மீது கரித்துக் கொட்டியிருக்கிறார்கள்.

ஆக, விவாகரத்து, பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு, இந்தியாவுக்கு எதிரான கருத்து என அடுத்தடுத்து பல சிக்கல்கள் பில்கேட்ஸை சூழ்ந்த வண்ணம் உள்ளன. என்றாலும், இந்த நடவடிக்கைகளால் மைக்ரோசாஃப்ட் பங்குகளில் எந்த விதமான தாக்கமும் இல்லை. ஆனால், ஆனால், பில்கேட்ஸ் என்னும் நாயக பிம்பத்தை இந்த செய்திகள் கடுமையாகப் பாதித்திருக்கின்றன.

 

https://www.vikatan.com/business/news/new-reports-says-melinda-gates-planned-for-divorce-in-2019-itself

அடடா அருமை அருமை.

எமது இளமை காலத்தில் நாம் வாசித்த “சரோஜாதேவி” “பருவகாலம்” போன்ற புத்தகங்களில் இருப்பதை ஒப்ப மிக கிளுகிளுப்பாக எழுதியுள்ளார் நாதமுனி எனும் உறவு.

சதா நேரமும் அரசியல், அரசியல் என சிடுசிடுக்காமல் இப்படியான பலான மேட்டரை பற்றி எழுதுவதும் நல்லதுதான்.

8 hours ago, Sean said:

இந்தியாவுக்கு மரணம் என்பது இயற்கையானது. 
இந்தியா உயிர்வாழ முடியாத அளவுக்கு பழையது.
இந்தியா ஊழல் நிறைந்தது, இந்தியா மரணம் நிறைந்தது, 
இந்தியா பொய்கள் நிறைந்தது.
இந்தியா போலியானது.
இந்தியா பொய் குருவால் நிறைந்துள்ளது.
போலி அரசியல்வாதிகள் நிறைந்த இந்தியா.
இந்த கோவிட் -19 இல் அனைத்து இந்திய சத்தங்களும் அழிந்து போகின்றன.
இது உலகின் பிற பகுதிகளுக்கு நல்லது.

நாம் தமிழர் எமது கட்சி

தமிழ் தேசியம் எமது கொள்கை

அதே போல் இந்திய ஒன்றியம் எமது நாடு.

எந்த கொம்பன் என்ன சாபமிட்டாலும் இதில் மாற்றமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2021 at 00:21, குமாரசாமி said:

ஊரிலையெல்லாம் வைரவருக்கு ரெஞ்சன் எண்டால் வடைமாலை போட்டு குளிர்ச்சியடைய வைப்பம். 🥥 💐🔥  🙏🏽

இந்த வைரவரை குளிர்ச்சியாக்க அந்த குட்டித்தீவுக்கு அனுப்புவமா? 😂

Neue Klage zu Epsteins Missbrauchssystem | Aktuell Amerika | DW | 16.01.2020

யோசித்துப் பார்த்தபோது, போனமுறை சீமான் விசயம் குறித்து மட்டுமே எழுத என்று ஒரு தனி கணக்கே வைத்திருக்கும் ஒரே ஒருவர் இவர் மட்டுமே என்று சொல்லி இருந்தேன்.

அதை மறுக்கிறாராம் என்று தான், இங்க வந்து, சும்மா, சன்னதம் வந்த மாதிரி ஆடி காட்டிப்போட்டு போயிருக்கிறார்.

எத்தனை பேரை பார்த்திருக்கின்றோம்....   🤗

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.