Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்!

 

நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாம் இந்த நாட்டுக்கான அழிவின் பாதையாகவே நாம் பார்க்கிறோம்.

துறைமுக நகரத்திட்டமானது, எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சக்தி என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

எவ்வாறாயினும், இந்த சட்டமூலமானது தேசத் துரோகத்தின் வெளிப்பாடாகவே காணப்படுகின்றது.

இன்று கொரோனா பெருந்தொற்று நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், இவற்றைக் கருத்திற்கொள்ளாமல்தான் நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது.

இது சரியானதா என்பதை நான் அரசாங்கத்திடம் கேட்கிறேன். இன்று இந்த விவாதம் நடைபெறுகிறது என்பதால் கொரோனா தொற்று குறையப்போகிறதா? மரணங்களில் எண்ணிக்கை குறைவடையப் போகிறதா? தடுப்பூசிகள் கிடைக்கப் போகின்றதா? வைத்திய வசதிகள் நாட்டுக்கு வரப்போகிறதா? ஒன்றுமில்லை.

வாழ்வாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை. சலுகைகள் தொடர்பாக தீர்வொன்று இல்லை.

இந்த நிலையில்தான், துறைமுக நகரத்திட்டம் தொடர்பாக அரசாங்கம் கதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியுமா? – இல்லை.

இது முற்றுமுழுதாக நாட்டை காட்டிக்கொடுக்கும் ஒரு சட்டமூலமாகும். இது பெற்றுக் கொண்ட சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் ஆபத்தான ஒன்றாகும்.
அரசமைப்பை இந்த சட்டமூலம் முழுமையாக மீறியும் அரசாங்கம் இதனை நிறைவேற்றவே ஈடுபாடு காட்டிக்கொண்டிருக்கிறது.

இதனால்தான் உயர்நீதிமன்றம் இதனை நிராகரித்துள்ளது. அரசாங்கம் இது தொடர்பாக இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் அரசாங்கம் உள்வாங்க வேண்டும். சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மக்களின் கருத்துக்களுக்கும் அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்.

அதனைவிடுத்து அவசரப்பட்டு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் இந்த செயற்பாட்டுக்கு உடன்படக்கூடாது.

நாடு அபிவிருத்தி அடைவதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். இதற்கான ஒத்துழைப்பை நாம் என்றும் வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.

எனினும், அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக் கொடுக்க நாம் தயாரில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்! – Athavan News

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, nunavilan said:

அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்!

சஜித் சொல்லுற "காட்டிக்கொடுக்க தயாரில்லை" எண்டதின்ரை அர்த்தம் என்னங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பெருவாரியாக வாக்களித்த சஜித் பிரமேதாசாவே அபிவிருத்தி என்ற போன்ற போர்வையில் நாட்டைக் காட்டீக்கொடுக்கின்ற வேலை நடைபெறுகிறது என்கிறார் எங்கடை கூத்தமைப்பு எம்பிமாரும் அபிவிருத்தி என்ற போர்வையில் இதைத்தான் செய்தார்களா?செய்கின்றார்களா?செய்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சஜித் சொல்லுற "காட்டிக்கொடுக்க தயாரில்லை" எண்டதின்ரை அர்த்தம் என்னங்கோ?

அவர் சொல்ல வருவது துறைமுக அபிவிருத்தி ஓகே. ஆனால் அது சீனாவின் கைகளில் செல்வது தவறு.... என்றுதான் எனக்கு விளங்குகின்றது.
மேற்குலகின் சக்திகள் சீனாவின் கொள்கையினை எதிர்க்கும் நிலையில் அவர்களுடைய....மேற்குலகின்... பிரதிநிதி இப்படிக் கூறுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அவர் ஆட்சிக்கு  வந்தாலும் அவருடைய பிரதிநிதிகள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை.
தமிழர்களின்  விடுதலை... இலங்கையில்.... தமிழர்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது
மேய்ப்பவன் யாரோ?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2021 at 07:04, குமாரசாமி said:

சஜித் சொல்லுற "காட்டிக்கொடுக்க தயாரில்லை" எண்டதின்ரை அர்த்தம் என்னங்கோ?

சீனாவுக்கு ஒரு சுயாட்சி பிராந்தியம்

ஆனால் இலங்கைக்கு எந்தவித தொடர்புமே இல்லாத நாடுபிடி வேட்கையில் நுழைந்த சீனாவுக்கு சுயாட்சி தேசமாக ஒரு நகரையே தங்க தாம்பாளத்தில் தாரைவார்த்து கொடுத்திருக்கிறது சிங்களம். இதற்கான ஒப்புதலை இலங்கை நாடாளுமன்றமும் வழங்கிவிட்டது. கடந்த 20 ஆண்டுகால இந்திய மத்திய அரசுகள் வெளியுறவுக் கொள்கையில் எப்படி கோட்டை விட்டிருக்கிறது என்பதற்கு இந்த சீனாவின் சுயாட்சி நகரமே நல்ல எடுத்துக்காட்டு. இந்த சுயாட்சி நகரத்துக்குள் சீனா, ஆங்கிலம், சிங்களம்தான் மொழிகளாம். இங்கே தமிழுக்கு இடம் இல்லை. என்னதான் இலங்கைக்கு சொந்தமானதாக கொழும்பு நகரம் இருந்தாலும் கொழும்பு துறைமுக நகரம் என்பது சீனாவுக்கு சொந்தமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆட்சியாளர்கள் நினைத்திருப்பார்கள் ,சீனாக்காரன் மண்ணை போட்டு தீவை உருவாக்கட்டும் அதன் பிறகு சீனாக்காரனை ,தமிழர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியது போல ஒர் இனக்கலவரத்தை உண்டாக்கி போர்ட் சிற்றியிலிருந்து சீனாக்காரனை வெளியேற்றலாம் என்று....அல்லது பெரிய இராணுவ நடவடிக்கை மூலமாக‌ வ்ன்னியை விடுவித்த மாதிரி போர்ட் சிற்றியையும் விடுவிக்கலாம் என்று...

உருவாக்கிய தீவை நிச்சயம் சீனா தூக்கி கொண்டு செல்லாது தானே....சிங்களவ்ன் புத்திசாலியுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன..... புலிகளை, கொரோனாவை அழிச்ச சிங்கள இராணுவம் இதையும் விரட்டும் பாருங்கோ! அப்ப தெரியும் வாய்வீரம்....... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.