Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

 

"இதுவரை ஈழத்தமிழர்கள் எவரும் சிரித்தது கிடையாது!
நாம் அழுதிடும் பொழுது பெருகிய கண்ணீர் அளவுகள் கிடையாது!

இனிமேல் அழுதிட விழியில்லை - படும்
இழிவுகள் சொல்லிட மொழியில்லை!

தனியே பிரிந்திட விடவில்லை - அட 
தமிழருக் கானதைத் தரவில்லை!"

                                                                           --> "விடுதலை எவரும் தருவதுமில்லை"  பாடலிலிருந்து...

 

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 661
  • Views 152.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும்   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"    

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    எமது 'தாகம்'   தமிழருக்கு தமிழீழமே தணியாத தாகம் என்ற பொருள் பட்ட முழக்கங்கள் முதன் முதலில் ஒலித்த இடங்கள் : "தமிழீழம் தமிழர் தாகம்" - 19/05/1972 மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில் "பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும்

 

"மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"

 

 

Edited by நன்னிச் சோழன்
பதிவாகயிருந்தது 4 ஆண்டுகளின் பின்னர் விரிவாக்கப்பட்டு தனிக் கட்டுரையாக்கப்பட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எமது 'தாகம்'

 


தமிழருக்கு தமிழீழமே தணியாத தாகம் என்ற பொருள் பட்ட முழக்கங்கள் முதன் முதலில் ஒலித்த இடங்கள் :

  • "தமிழீழம் தமிழர் தாகம்" - 19/05/1972 மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில்

  • "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" - 70களின் இறுதியில் அம்பகாமம் பண்ணைப் பயிற்சி முகாமில் (தமிழீழத் தேசியத் தலைவர்)

  • "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" - 1989ம் ஆண்டு இறுதியில் வன்னியில் துண்டு கொடுத்த அரசியல்துறைப் போராளியின் கடிதத்தின் இறுதி வரி [ஆதாரம்: கண்கண்ட பெண் புலனாய்வுத்துறை போராளி (விலத்தியவர்) எனக்கு வழங்கிய வாக்குமூலம்]

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
  • சிங்களவரை எதிர்ப்பதெற்கென்று முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு: அடங்காத் தமிழர் முன்னணி (1958)

  • தமிழீழத்தின் விடுதலைக்காக முதன் முதலில் தோன்றிய அமைப்பு: புலிப்படை (1961)

என்னால் 2021ம் ஆண்டு எழுதப்பட்ட "மாமனிதர் ஆ. இராசரத்தினம் வாழ்க்கை வரலாறு" என்ற ஆவணக்கட்டின் பின்னிணைப்பு - 2லிருந்து:

"திருகோணமலை கச்சேரியின் வாயிலில் 1961 மார்ச் 4இல் சிங்களத்தின் "ஸ்ரீ" என்ற எழுத்துக்கு எதிராக மறியல் செய்த சத்தியாக்கிரகிகள் மீது காவல்துறையினர் இரக்கமற்ற முறையில் தடியடி நடத்தினர். இந்நிகழ்வில் காயமடைந்த மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் 23 மார்ச் 1961 அன்று காலமானார். உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்தேறிய இவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட உணர்வாளர்கள் சிலர் தமிழரசுக் கட்சியின் அகிம்சை வழியில் நம்பிக்கையிழந்ததால் தீவிரவாதப் பாதையில் "புலிப்படை" என்னும் அமைப்பைத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் கோணேஸ்வரத்தில் உறுதியெடுத்துக்கொண்டனர். இதில் 'மாமனிதர்' ஆ. இராசரத்தினம், வட்டுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அமிர்தலிங்கம், சாவகச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் நவரத்தினம், தமிழ் எழுதுவினைஞர் சங்கத் தலைவர் 'மாமனிதர்' சிவானந்தசுந்தரம் மற்றும் வவுனியாவின் முன்னாள் அரச அதிபரான இராசதுரை என்போர் குறிப்பிடத்தக்கவராவர். இதில் ஏறத்தாள 20 பேர் உறுப்பினர்களாய் இருந்தனராம் (ஆதாரம்: மூத்த செய்தியாளர் சபாரத்தினம்). இதில் இணைந்திருந்த இளையோர் சிலர் கண்டிக்குச் சென்று ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தனர். அத்துடன் கொழும்பு கொட்டாஞ்சேனையில் தற்பாதுகாப்பு பயிற்சிகளையும் பயின்றனர். எனினும் 1965 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன் குறிப்பிட்ட புலிப்படை கலைந்து போனது. அமிர்தலிங்கம் மற்றும் நவரத்தினம் என்போர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த கூட்டாச்சியில் சிங்கள அரசுடன் சோரம்போயினர். ஆயினும் இராசதுரை, சிவானந்தசுந்தரம் மற்றும் இராசரத்தினம் ஆகியோர் ஒடுவில் வரை தனித் தமிழரசு என்ற நோக்கத்துடன் வாழ்ந்து இறந்தனர் (ஆதாரம்: வர்ணகுலத்தான் அவர்கள் எழுதிய 'புலிப்படைமுதல் விடுதலைப்புலிகள்வரை புலிகளின் வரலாறு!')."

--> இவ் ஆவணமானது வெளியக அழுத்தம் காரணமாக 2025ம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நீக்கப்பட்டது.

  • இறுதிவரை விடுதலைக்காக போராடிய அமைப்பு: தமிழீழ விடுதலைப் புலிகள்/ தவிபு

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெத்தக்கடை சந்தி, பருத்தித்துறை

2004/11/01

 

FTrdFpiWQAEzs2G.jpg

 

23674716_10214881383890846_3362352256318056691_o.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெத்தக்கடை சந்தி, பருத்தித்துறை

1/1/1992

 

 

jaffna 1990s.jpg

 

1992 jf.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வரைபடங்கள் | Tamil eelam maps:

 

கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் முதலாவது வரைபடம். இது பிரித்தானியாவின் அரோசிமித்தின் வரைபடத்தை அடிப்படையாக வைத்து வரையப்பட்டது. இது வரையப்பட்ட காலத்தில் இதில் காட்டப்பட்டுள்ள தென் பகுதிகளில் தமிழர் வாழ்ந்திருந்தாலும் நடைமுறையில் பல சிக்கல்களைக் கொண்ட சாத்தியமில்லாத வரைபடம் ஆகும்.

இவ்ரைபடத்தை முதன் முதன் முதலில் காட்டியவர் "அடங்காத் தமிழர்" செ.சுந்தரலிங்கம் ஆவார். இவரே முதன் முதலில் தமிழீழத்தை கோரிய தமிழரும் ஆவார் (அதற்காக இவரொன்றும் உத்தமர் அன்று. இவர் சொந்த இனத்தின் ஆசைகளை புறந்தள்ளி தன் தன்னிச்சைகளுக்காக செயற்பட்ட காலங்களும் உண்டு, கோருவதற்கு முன்னர், என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்).

large.89638639_2741012092634861_42254424

படிமப்புரவு: fb

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
  • தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps:

 

கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் இரண்டாவது வரைபடம். இது கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் காட்டப்பட்ட வரைபடம். இங்கு கதை என்னென்றால் இந்த வரைபடத்தினை விடுதலைப்புலிகள் இறுதி வரை பயன்படுதினர் என்பதே ஆகும். பாடசாலைகளுக்கும் ஜெனிவா உடன்படிக்கை காலத்தில் இவையே வழங்கப்பட்டன. ஏனென்று எனக்குத் தெரியவில்லை.

மேலும், சிறிலங்காவின் நில அளவைத் திணக்களத்தின் பிரதிமா அதிபராக பணியாற்றி இளைப்பாறிய ஜே.ஆர் சின்னத்தம்பி அவர்கள் 1977 வெளியிட்ட "தமிழ் ஈழம் - நாட்டு எல்லைகள்" என்னும் நூலிலும் இதே வரைபடமே பாவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 7 மண்டலங்களாவன (இடமிருந்து வலமாக) :

  1. முத்து மண்டலம் ,

  2. மேல் மண்டலம்,

  3. யாழ் மண்டலம்,

  4. வன்னி மண்டலம்,

  5. நடு மண்டலம்,

  6. கிழக்கு மண்டலம்,

  7. தென் மண்டலம்.

என்பனவாகும். எனக்கு இதுதான் பிடிக்கும். ஏனென்றால் தலைநகரத்தைச் சுற்றிலும் நிறைய ஆட்புலங்கள் உண்டு. நேரடி ஊறு எதுவும் ஏற்படாது. மேலும் இதில் காட்டப்பட்டுள்ள கிழக்குதான் மெய்யான கிழக்கு மாகாணம்; ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்டது. பதவிக்குளம் எல்லாம் தமிழரின் தோற்றுவாய் நிலங்களே. இதில் உள்ள பல நிலங்கள் பிடுங்கப்பட்டு சுற்றியிருந்த சிங்கள் மாகாணங்களோடு இணைக்கப்பட்டு விட்டன.

Tamil Eelam - தமிழீழம் - 3500x5000 pixels

 

 

Pix: 3500x5000:  https://srilankancivilwar.quora.com/The-proposed-third-map-of-Tamil-Eelam

 

 

2002/ 2003/ 2004 இல் எடுக்கப்பட்ட இப்படத்தில் தலைவர் மாமாவிற்கு பின்னால் இவ்வரைபடம் தெரிவதை கவனிக்குக:

fil3908.jpg

 

இதேபோல இன்னுமொரு படிமம் வைத்திருந்தனான். அதில் தலைவர் மாமா இந்த வரைபடத்தை தனது கையால் சுட்டிக் காட்டுவது போன்று(இதே பின்புலத்தில்). அதை எங்கோ தொலைத்து விட்டேன்.

 

கீழ்கண்டது தவிபு இன் ஒரு படைத்தளத்தில் இருந்து 2009 சிங்களவன் எடுத்தது. (3 திரைப்பிடிப்புகளை ஒன்றாக்கியுள்ளேன்)

ewf.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வரைபடங்கள் | Tamil eelam maps:

 

இலங்கையிலுள்ள தொழிற்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருஷ்ண வைகுந்தன் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய போது சமர்ப்பித்த தமிழீழத்தின் வரைபடம் 

 

5 ஒக். 1978

 

கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் மூன்றாவது வரைபடம். இதில் தற்போதைய புத்தளத்தின் சில பகுதிகள் இல்லாமலும் - பழைய சிலாபம் மாவட்டம் 1953இல் மீண்டும் இணைக்கப்பட்டது. - அதே நேரம் தலைநகரில் அதிகளவான ஆட்புலத்துடனும், வில்பத்து அடவியை மன்னாருடனும் பதவிக்குளத்தை வவுனியாவுடனும் சேர்க்கப்பட்டதாக தமிழீழத்தின் ஆட்புலமாக உள்ளடங்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Different map - A map by Krishna Vaikundan, former secretrary general of the Trade union in ceylon - who spoke in UN GA on 5-oct-1978.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
  • தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps:

 

கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் நான்காவது வரைபடம்.  இதுதான் உலகத் தமிழர்களின் கனவுத் தமிழீழம். இதைத்தான் தவிபுவினர் எல்லா இடங்களிலும் பயன்படுத்தினர். ஆனால்...

(ஐந்தாவதைக் காணவும்)

முதலாவது "மாமனிதர்" ஆ. இராசரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட "Tamil Need a Nation, Why" என்ற நூலின் அட்டையில் இதே வரைபடத்திற்கு கூடுதலாக ஒட்டுமொத்த அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதை அவர் சேர்த்ததிற்கான காரணம் சோழர்களின் தொடர்ச்சியாக பேண விரும்பியமையாக இருக்கலாம் என்பது என் துணிபு!

tamil eelam Atmin.jpg

படிமப்புரவு(Image Courtesy) : நோர்வேயில் உள்ள தமிழர் ஒருவர். பெயர் ஞாபகமில்லை

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps:

 

கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் ஐந்தாவது வரைபடம். புத்தளத்தை கழற்றிவிடுவதா இல்லையா எனப் புலிகள் சிந்தித்ததால் வெளியான வரைபடமிது. சமாதான காலத்தில் வெளியானது.

இறுதிவரை புத்தளத்தை சேர்ப்பதா இல்லையா எனப் புலிகள் சிந்தித்தனர். ஏனெனில் அது முற்றிலும் ஒரு சிங்கள மயப்படுத்தப்பட்ட இடமாக மாறிவிட்டதாலும்(கற்பிட்டி மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் மட்டுமே தமிழர்கள் வாழ்கின்றனர் என அறிகிறேன். குறிப்பாக அந்த கச்சாயப்(cape) பகுதியானது தமிழர்கள்/முஸ்லிம்கள் ஐதாக வாழும் ஒரு இடம்.) அதை உள்வாங்குவதால் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதாலும் அதை கழற்றி விட்டனர்(சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் என்பதே என்னைப் பொறுத்தமட்டில் நல்லம்) அவர்கள் ஒப்பந்தக் காலத்தில் கூட புத்தளத்தை ஆட்சி வரையறைக்குள் சேர்க்கவில்லை. எனவே அப்போதே தமிழீழ-புத்தளம் மீதான புலிகளின் பார்வை மாறத்தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tamil_eelam_map.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத் தேசப்படம்

 

படிமப்புரவு: "பள்ளி மாணவர்களுக்கான நிலவரை இலங்கை", tamilnation.org வழியாக

 

 

"பச்சை வயலே பனங் கடல்வெளியே  - எங்கள்
மட்டு. நகர் வாவியிலே பாடுமகளே

வன்னி அழகே, மன்னாரின் நிலமே - தமிழ் 
ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!"

--> தாயகத்திடமிருந்து விடைபெற்று விடைதரும் கரும்புலிகளின் மனவரிகள்

 

 

Tamileelam - Tamil Eelam map - தமிழீழம் வரைபடம், தேசப்படம்

 

Taamileelam Jaffna, Killinochchi map - தமிழீழம்  யாழ்ப்பாணம் _ கிளிநொச்சி வரைபடம்

 

Tamileelam Mullaitivu map - தமிழீழம் முல்லைத்தீவு வரைபடம்

 

Tamileelam Vavuniya map - தமிழீழம் வவுனியா வரைபடம்

 

Tamileelam, Mannar map - தமிழீழம்  மன்னார் வரைபடம்

 

Tamileelam Puttalam map - தமிழீழம் புத்தளம் வரைபடம்

 

Capital of Tamileelam Trincomale map - தமிழீழத் தலைநகர்  திருக்கோணமலை, திருகோணமலை, திருமலை வரைபடம்

 

Tamil eelam Batticaloa map - தமிழீழம் மட்டக்களப்பு வரைபடம்

 

Tamil Eelam Amparai map - தமிழீழம் அம்பாறை வரைபடம்

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
  • தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps:

 

கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் ஆறாவது மற்றும் கடைசி  வரைபடம். புத்தளத்தை கழற்றிவிட்ட பின்னர் விடுதலைப் புலிகளால் அலுவல்சாராக வெளியிடப்பட்ட வரைபடமிது. எனினும் 11/07/1995 அன்று வெளியான களத்தில் இதழிலும் இப்படம் தமிழீழத்தைக் குறிக்க புலிகளால் பாவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரைபடமானது விடுதலைப்புலிகளின் ''சமாதானச் செயலகத்தின்" வலைத்தளமான 'www.ltteps.org' இல் 2007 ஆம் ஆண்டு வாகரையினை சிங்களம் கைப்பற்றிய பின்னர் 'Flushing out the tigers – About Vaharai' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஓர் படவில்லையில்(Slide) இருந்து எடுக்கப்பட்டதாகும். தவிபு-இன் அலுவல்சாரான வலைத்தளத்திலே இவ்வாறான வரைபடம் வெளியிடப்பட்டிருப்பதால் இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டியது தேவையாகும். ஏனெனில் விடுதலைப் புலிகளே புத்தளத்தினை தமிழீழத்தின் ஒரு மாவட்டமாக கொள்ளாமல் கழற்றிவிட்டிருக்கின்றனர்.  

சிங்களத்தின் தொடர் குடியேற்றங்களாலும், தம்மை தமிழர் என்றோ இல்லை தமிழ் பேசும் முசிலீம்கள் என புலிகளே வரையறுத்த அடிப்படையிலோ ஏற்காமல் 'சோனகர்கள்' என்ற புதுவிதமான கொள்கையின்(மத அடிப்படையில்) அடிப்படையில் தம்மை தனியினமாக அறிவித்துக்கொண்ட தமிழர் அல்லாதவர்கள்(அவர்கள் மொழியில்) மிக அதிகமாக வாழும் இம்மாவட்டத்தினை உள்வாங்குவதால் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதாலும் அதை கழற்றி விட்டனர்.

மேலும், 2006 தவிபுஇன் சமாதான அறிக்கைகளிலும் வடகிழக்கு என்றுதான் குறிபிடப்பட்டது. புத்தளம் என்ற சொல் குறிப்பிடப்படவில்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் புத்தளத்தினை இழந்தது வேதனையே. பொம்பரிப்பு முதலான பண்டைய தமிழர்களின் வாழ்விடங்களைக் கொண்ட புத்தளத்தின் சில பகுதிகளையாவது எதிர்காலத்தில் அமையப்போகும் தமிழீழத் திருநாட்டின் ஒரு பகுதியாக கொண்டிருத்தல் இன்றியமையாததாகும். வரலாற்றை இழந்தால் வரலாறே இல்லாமல் போய்விடுவோம் என்பது ஞாபகமிருக்கட்டும்.

 

Untitled.jpg

படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2007

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1996 ஆம் ஆண்டு உண்மைவெற்றி (சத்ஜெய) நடவடிக்கை தொடங்கும் முன்னர் வரை வன்னிப் பெருநிலப்பரப்பில் தவிபு-இன் கட்டுப்பாட்டு ஆட்புலங்கள்

 

இதில் 1997 வரையான மாற்றங்கள் என்னவெனில் உண்மைவெற்றி (சத்ஜெய) தொடர் நடவடிக்கைகளுக்கெதிரான எதிர்ச்சமரின் போது கிளிநொச்சி ஏ9 வீதியை அண்டிய பரப்புகள் சிங்களவரிடம் பறிகொடுக்கப்பட்டன. அதே சமயம் முள்ளிவாய்க்கால் மற்றும் அண்டிய பரப்புகள் 'ஓயாத அலைகள் - 1' நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டன. உண்மைவெற்றிக்குப் பின்னர் சிங்களப் படையினர் தாமாகவே பூநகரியிலிருந்து பின்வாங்கிட அப்பரப்பு தமிழரால் கைக்கொள்ளப்பட்டது. 

இந்த வரைபடத்தோடு தொடர்பற்றது, எனினும் மன்னார் தொடர்பான இன்னுமொரு விடையம் என்னவென்றால், 1991 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளால் தலைமன்னார் பழையபாலம் படைமுகாம், இறங்குதுறை தாக்கியழிக்கப்பட்டு தலைமன்னார் தீவு முற்றாக மீட்கப்பட்டது. ஆனால் இரு மாத (சரியாக ஞாபகம் இல்லை) இடைவெளியில் அத்தீவு சிறிலங்காப் படைகளால் மீளவும் வன்வளைக்கப்பட்டது. இதன் பின்னர் ஒருபோதும் அது தமிழர் ஆட்சியின் ஆளுகைக்குள் வரவில்லை!

 

 

16-31 may 1996 vp - ltte controlled regiions in Northern Tamil eelam.jpg

'படிமப்புரவு: விடுதலைப்புலிகள், 16-31 வைகாசி, 1996'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வட தமிழீழம் மற்றும் தென் தமிழீழத்தில் நான்காம் ஈழப்போரின் போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்புலங்கள்

 

 

"தமிழீழ மாமண்ணில் என்றென்றும்
புலிவீரர் நடந்த கால்தட மிருக்கும்
தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்
அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும்"

 

 

வட தமிழீழத்தின் தென்பரப்பில் விடுதலைப்புலிகளின் ஆட்புலத்தின் எல்லைக்கோடு (2001-2006 வரை)

பழந்தமிழ் ஊரும் பின்னாளில் சிங்களக் குடியேற்றத்திற்கு உள்ளானதுமான பதவிக்குளத்தின் ஒரு பகுதியிலும் நடைமுறையரசின் எல்லைக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மன்னாரில் ஏ14 சாலையைத் தாண்டி உயிலங்குளத்திலிருந்து எமது தரை ஆட்புலப் பரப்பு தொடங்குகிறது. மன்னாரில் கடல்வெளி எல்லை மாந்தைக்கு மேலே மாதோட்டத்திலிருந்தும் முல்லைத்தீவில் கருநாட்டுக்கேணியிலிருந்தும் தொடங்குகிறது.

Vanni's southern FDL is marked in red and blue lines.jpg

'வன்னியின் தென் பரப்பின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் சிவப்பு மற்றும் நீலக் கோடுகளால் கீறிக் காட்டப்பட்டுள்ளது. | தகவல் கீறியவர்: நன்னிச் சோழன்'

 

 

 

வடபோர்முனையில் எமது முன்னணி நிலைகள், சூனியப் பரப்பு, பகைவரின் முன்னரங்க நிலைகள், மற்றும் பகைவரின் சிறிய, பெரிய படைமுகாம்கள் ஆகியவற்றைக் காட்டும் வரைபடம்

 

HLFA.png

VADAPOORMUNAI.png

படிமப்புரவு: த.தே.தொ., 2007

 

 

தென் தமிழீழத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த சில இடங்களான சம்பூர், மூதூர், இலக்கந்தை, மலைமுந்தல், தோப்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல் ஆற்றுப் பகுதிகள், கதிரவெளி, வாகனேரி, பனிச்சங்கேணி  மற்றும் வாகரை ஆகிய பரப்புகளைக் காட்டும் வரைபடம்:

திருகோணமலையில் துறைமுகத்தைச் சூழ விடுதலைப்புலிகளின் படைத்தளங்களும் சிறிலங்கா அரசின் படைத்தளங்களும் அமைக்கப்பட்டிருந்த இடங்களைக் காட்டும் வரைபடம்:

சம்பூர் கடல்வெளி சூடைக்குடா, கெவுளிமுனை ஆகிய்வற்றிலிருந்து தொடங்குகிறது. அதேநேரம் மூதூர் கடல்வெளியை கண்காணிக்க கங்கையிலும் கடற்புலிகளின் தளமிருந்தது.

LTTE controlled areas in Trinco.jpg

படிமப்புரவு: சன்டே ரைம்ஸ், ஓகஸ்ட் 3, 2006

 

  • குறிப்பு: 2006 செப்டெம்பர் மாதமளவில் சூடைக்குடா, இலக்கந்தை, சம்பூர், டொபின் உட்பட பல பகுதிகள் சிங்களப் படைகளால் மீண்டும் வல்வளைக்கப்பட்டுவிட்டன.

vaharai.png

படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, திசம்பர்

 

மகிந்தபுரத்திற்கும் மாங்கேணிக்கும் இடைப்பட்ட தவிபுவின் ஆளுகைக்குட்பட்ட பரப்புகளைக் காட்டும் வரைபடம். இதுவே எமது தலைநகரில் புலிகளிடமிருந்த இறுதி நிலப்பரப்புகள்.

ltte in batti north.jpg

படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, திசம்பர்

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சியில் புலிகளின் பணியாளர் ஒருவர் ஆழிப்பேரலை தணிப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுகிறார்

 

 

A Tamil Tiger (LTTE) official in Kilinochchi town discusses tsunami relief in the northeastern coast of Sri Lanka, an area also ravaged by civil war.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வடமராட்சி மாலுச்சந்தியில் நிழலுருப்படம்

1991-1995

 

1995.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சுவர் ஓவியம்

 

யாழ்

2003

 

Sri-Lanka-232.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அலுமினியத்தில் இருந்து ஒரு செயற்கைக் காலை உருவாக்குகிறார், வெண்புறா பணியாளர்

 

A technician from White Pigeon, a local NGO, fashions an artificial leg out of aluminiu.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எரிபொருள் விநியோக அட்டை

 

FQMgyyVaAAEU2fz.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

போராளி ஒருவரின் நினைவாய் பெயர் சூட்டப்பட்ட வீதியின் பெயர்ப் பலகை

 

 

1441402_10202524151767766_788361277_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Tank View விடுதி/ ராங் வியூ விடுதி

கிளிநொச்சி 

 

இவ்விடுதியை அண்டியதாக ஏ9 சாலையில் பொருண்மிய நடுவப்பணியகம் அமைந்திருந்தது. அதை அண்மித்ததாக பொருண்மியம் நிறுவகம் அமைந்திருந்தது.

large.TankviewhotelfromartistPukazhenthi

large.HiswifeandkidsneartheKanakampikaik

ராங் வியூ விடுதிக்கு எதிர்புறத்திலமைந்திருந்த கனகாம்பிகைக்குளத்தின் முன்னால் நிற்கும் ஓவியர் புகழேந்தியின் மக்களும் மனைவியும். இக்குளத்திற்கு அங்கால் தான் தமிழீழ நாடாளுமன்ற மாதிரி கட்டடம் கட்டியிருந்தனர்..

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வீரவணக்க நினைவாலயம்

மல்லாவி

2004

 

 

மல்லாவி.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தேசியக்கவி 

புதுவை இரத்தினதுரை

 

 

பிறந்த திகதி: டிசம்பர் 3, 1947

 

1463036_10202615112241721_1516155841_n.jpg

 

29541040_1628356357285000_6157336946163611656_n.jpg

 

large.puthuvai.jpg.da424b7fdf1376af8e5a3

 

29542364_1628356430618326_6167213831807370237_n.jpg

 

29595269_1628356407284995_4089170108130844033_n.jpg

 

pasted image 0 (42).png

 

29571421_1628356460618323_7469686196817856065_n.jpg

 

29513277_1628356537284982_8592167992534216292_n.jpg

 

photo_69750351_1.jpg

 

Puthuvai_ratnathurai.jpg

 

puthuvai-ratnathurai-74.jpg

 

puthuvai-ratnathurai-6.jpg

 

29595240_1628356497284986_2059588947912848604_n.jpg

 

puthuvai-ratnathurai-44.jpg

 

images (1).jpg

 

Puthuvai born on dec-3 73 old.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ அரச கவிஞர்

புதுவை இரத்தினதுரை

 

 

இவர் தமிழீழ கலை பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளர் ஆவார்.

 

images.jpg

 

puthuvai_patnathurai.jpg

 

29571451_1628379690616000_831886855818926945_n.jpg

 

songrel2.jpg

 

2776219306_1.jpg

கடற்புலி லெப் கேணல் சிறிராமின் கையால் பெற்றுக்கொள்ளும் போது

 

263383_116931005072482_4128910_n.jpg

 

318386_132969350135314_1599369041_n.jpg

 

318353_132969380135311_2036498628_n.jpg

 

294348_132969413468641_23788276_n.jpg

 

306313_132969453468637_48093793_n.jpg

 

 

 

308339_132969483468634_535008314_n.jpg

 

309104_132969516801964_126413371_n.jpg

 

312372_132969556801960_108767730_n.jpg

 

315486_132969590135290_2087652655_n.jpg

 

puthuvai.jpg

 

anton_094.jpg

 

304723_132969493468633_1000516629_n.jpg

 

pasted image 0 (53).png

 

pasted image 0 (66).png

 

pasted image 0 (65).png

 

299574_132969616801954_1888238263_n.jpg

 

47227832_110694266629661_5891103973577850880_n.jpg

 

dcp69749784946.jpg

 

DB136AF0-7F8F-4B66-B656-13DD38257E42.jpeg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.