Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது- இந்திய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது- இந்திய ஊடகம்

 

இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருவதாக பல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என தி பிரின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து தி பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது.
கடந்த மாதம் இலங்கை சர்ச்சைக்குரிய 1.4 பில்லியன் திட்டமான கொழும்பு துறைமுகநகர திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
இதற்கு சீனா நிதியுதவி வழங்குகின்றது.
ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்துயுர் கொடுக்கும் நோக்கத்துடன் காணப்பட்ட புதுடில்லி, தற்போது இந்தியாவை சமநிலையில் வைத்திருப்பதை கைவிட்டுவிட்டு சீனாவின் பக்கம் சாய்வது குறித்த உறுதியான நிலைப்பாட்டை கொழும்பு எடுத்துள்ளதாக கருதுகின்றது என பல வட்டாரங்கள் தெரிவித்தன.
Gotabaya-with-Modi-300x169.jpg
கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றம் சர்ச்சைக்குரிய கொழும்புதுறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு திட்டத்தை நிறைவேற்றியது.
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும், கொழும்பு துறைமுகநகரம் இலங்கைக்குள் ஒரு சீன மாகாணமாக மாறலாம் என்ற கரிசனைகளிற்கு மத்தியிலும் இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றியது.
உத்தேச புதிய கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு பரந்துபட்ட அதிகாரங்களை கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது.மேலும் இலங்கையின் மாநகரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் சட்டமூலங்கள் கொழும்பு துறைமுக நகரை கட்டுப்படுத்தாது.
இதன்காரணமாக இது ஜனநாயக ரீதியில் செயற்படாது என்ற கரிசனைகள் காணப்படுகின்றன.
கொழும்புதுறைமுகநகரம் காரணமாகவும்,- அம்பாந்தோட்டை துறைமுகநகரத்திற்கு என்ன நடந்தது என்பதன் காரணமாகவும்( கொழும்பு 99 வருட குத்தகையை மேலும் நீடிக்க தீர்மானித்துள்ளது என்ற ஊகங்களிற்கு மத்தியில்)இலங்கை முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது என தெரிவித்த ஒரு வட்டாரம் இந்தியாவிற்கு இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம், இந்திய அரசாங்கங்களிற்கும் சவால்கள் ஏற்படலாம் என தெரிவித்தது.
இந்தியா இலங்கை உறவுகள் கடந்த பெப்ரவரியில் இலங்கை முத்தரப்பு கொழும்பு துறைமுக கிழக்குகொள்கலன் முனைய அபிவிருத்தி திட்டத்தை கைவிட்டதை தொடர்ந்து வீழ்ச்சியடைய ஆரம்பித்தன.
port-city5-300x200.jpg
 
அதற்கு பதில் இலங்கை இந்தியாவிற்கு மேற்குகொள்கலன் முனையத்தை வழங்கியது – அரசாங்கங்களிற்கு இடையிலான உடன்படிக்கை போலயில்லாமல் தனியார் உடன்பாடு போன்று இது வழங்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் ராஜபக்ச சகோதாரர்களிற்கும் இடையிலான ஆரம்ப காலநட்புறவு தற்போது மறையத்தொடங்கியுள்ளது என்பது தெளிவான விடயம் என தெரிவித்த தகவல் அறிந்த வட்டாரங்கள் இந்தியாவிற்கு முதலிடம் என்ற இலங்கையின் கொள்கை வேகமாக காணாமல்போகின்றது என தெரிவித்தன.
இதுசீனா இலங்கையை இந்தியாவிலிருந்து விலக்கிகொண்டு சென்றுள்ளதால் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது பிரசன்னத்தை பேணலாம் என சீன கருதுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை அடானி குழுமம் அபிவிருத்தி செய்துவரும் மேற்கு கொள்கலன் முனையத்தை இலங்கையில் கால்பதிப்பதற்கு இந்தியா நம்பியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:
அதேவேளை அடானி குழுமம் அபிவிருத்தி செய்துவரும் மேற்கு கொள்கலன் முனையத்தை இலங்கையில் கால்பதிப்பதற்கு இந்தியா நம்பியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வட்டாரங்கள் கடும் வட்டாரங்கள் போல 
அழுகிப்போன நாறல் மீனை இன்னும் மோந்து கொண்டு திரியும் வட்டாரம், இதனை தூக்கிக்கொண்டு கோத்தாவிடம் வந்தால் ஒரு  தென்னிலங்கை  ஆர்ப்பாட்டம் போதும் பின்னங்கால் பிடரியிலடிபட ஓடுவினம்   

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை அழித்தவர்களே எமக்கான தீர்வினை முன்வைக்கப்போவதில்லை. தமிழர்களின் உண்மையான காவலர்கள் புலிகள்தான் என்பது கூத்தமைப்பிற்கும் இந்தியாவுக்கும் மேற்குலகிற்கும் தெரிகிறதோ இல்லையோ கோத்தாவுக்கும் மகிந்தவுக்கும் நன்றாகவே தெரியும். ஆகவேதான் புலிகள் அற்ற வெளியில் துரித சிங்கள மயமாக்கலில் அவன் இறங்கியிருக்கிறான். இந்தியா எனும் பிச்சைக்கார நரிகளின் ஊளையினை அவன் கணக்கிலெடுக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தட்டிக்கழிக்க வேண்டியதில்லை

இனி தீர்வை  தமிழருடன் செய்துவிட்டு இலங்கையிடம்  கொடுக்க  வைக்க  எமது தலைவர்கள்  இதை  பயன்படுத்தவேண்டும்???

  • கருத்துக்கள உறவுகள்

கிரேப் வாட்டர் கணக்கா அடிச்சு விடுகினம்..

 

  • கருத்துக்கள உறவுகள்

70 வருடமாக பக்கத்திலிருந்தே ஒன்றும் செய்ய முடியாத இந்தியா இனி என்னதை கிழிக்கப்போகிறது.....

தமிழகத்தில் பிரிவினை கேட் கிறார்கள் என வட இந்தியர்களை உசுப்பேத்தி அரசியல் செய்ய வேண்டிது தான்.....மிச்சம் ....
இதில வல்லரசு கனவு வேற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.