Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் எதிர் பார்ப்பினை நிறைவேற்றவுள்ள... பிரதமருக்கு டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

மக்களின் எதிர் பார்ப்பினை, நிறைவேற்றவுள்ள... பிரதமருக்கு டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

திருகோணமலை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு பி.சி.ஆர். இயந்திரத்தின் அவசியம் தொடர்பாக, குறித்த மாவட்டத்தினைச் சேர்ந்த சமூக தலைவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி ஆகியோருடன் கலந்துலையாடியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலை, வவுனியா போன்ற மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பி.சி.ஆர். இயந்திரங்கள் வழங்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாதிப்புக்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஏழு பிரதேசங்களுக்கான பி.சி.ஆர். இயந்திரங்கள் சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்திற்கும் ஒரு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலை மாவட்டத்தில் நிலவி வருகின்ற கொறோனா அச்சுறுத்தலையும், அந்த மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்டு, பிரதமரினால்  திருகோணமலைக்கு ஒரு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும், குறித்த மாவட்ட மக்களின் சார்பாக பிரதமருக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும்.“ குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1222959

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பிரதமரினால்  திருகோணமலைக்கு ஒரு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும், குறித்த மாவட்ட மக்களின் சார்பாக பிரதமருக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும்.“ குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலைப் பாராளுமன்றப் பிரதிநிதி சம்பந்தன் அவர்கள் அமைச்சர் டக்ளசுக்கு எப்போது நன்றிகளைத் தெரிவிப்பார்.....???? 🤔

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் மட்டக்களப்புக்கு என்று அனுப்பப்பட்ட இருதய சத்திரசிகிச்சை உபகரணத்தை பின் களுத்துறைக்கு அனுப்பி வைத்தார்கள். சாணக்கியனும் நன்றி சொல்லி முடியுறத்துக்குள்ள மாத்தீட்டானுங்கள்.

எங்கட உந்த எஜமானுக்கு வாலாட்டிற கூட்டம்.. குறைஞ்சது நடந்து முடிஞ்சாப்பிறம் வாலாட்டலாமே. நடக்க முதலே எதுக்கு இவ்வளவு பெரிய வாலாட்டல். 

இவங்களால் தான்.. சிங்கள அரசுக்கு வடக்குக் கிழக்கிற்கு செய்யனுன்ன அவசியத்தை இல்லாமல் செய்திட்டுது. ஏன்னா செய்யாமலே வாலாட்ட எழும்பு பொறுக்கிகள் உள்ளன என்று அவனுக்குத் தெரியும், அப்ப ஏமாற்றாமல் என்ன செய்வான்..??!

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2021 at 05:45, தமிழ் சிறி said:

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

மக்களின் எதிர் பார்ப்பினை, நிறைவேற்றவுள்ள... பிரதமருக்கு டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

திருகோணமலை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு பி.சி.ஆர். இயந்திரத்தின் அவசியம் தொடர்பாக, குறித்த மாவட்டத்தினைச் சேர்ந்த சமூக தலைவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி ஆகியோருடன் கலந்துலையாடியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலை, வவுனியா போன்ற மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பி.சி.ஆர். இயந்திரங்கள் வழங்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாதிப்புக்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஏழு பிரதேசங்களுக்கான பி.சி.ஆர். இயந்திரங்கள் சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்திற்கும் ஒரு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலை மாவட்டத்தில் நிலவி வருகின்ற கொறோனா அச்சுறுத்தலையும், அந்த மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்டு, பிரதமரினால்  திருகோணமலைக்கு ஒரு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும், குறித்த மாவட்ட மக்களின் சார்பாக பிரதமருக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும்.“ குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1222959

இந்த இயந்திரம் அரசாங்கம் வழங்க வில்லை. யாரோ தனியார் கொடுத்ததை தாங்கள் கொடுத்ததாக படம் காட்டுகிறார்கள். இன்னுமொரு செய்தியில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் தெளபீக்கின் வேண்டுகோளுக்கு இணங்க தனியார் ஒருவரால் வழங்கப்பட்டதாக உள்ளது. இதிலை டக்கியின்ரை லொள்ளு தாங்கமுடியலை.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும்  செய்வதை தன் தோள்மேல் போட்டு தட்டிக்கொள்வதிலும், படத்துக்கு பல்லிளிச்சுக்கொண்டு போஸ் கொடுப்பதும், எஜமானை புகழ்வதிலும் இந்த அமைச்சருக்கு நிகர் இவரும் இவர் போன்றவர்களுமே. அனிஞாயத்துக்கு இல்லாத ஒன்றை எடுத்து வைத்து புகழ்ந்து இன்பம் காணுவது.  இருக்கட்டும், முடிந்தால் கிழக்கில் பண்ணையாளர் பிரச்சனையை தீர்த்து வைக்கட்டும் பாப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2021 at 16:20, Paanch said:

திருகோணமலைப் பாராளுமன்றப் பிரதிநிதி சம்பந்தன் அவர்கள் அமைச்சர் டக்ளசுக்கு எப்போது நன்றிகளைத் தெரிவிப்பார்.....???? 🤔

சம்பந்தர் தானே முதலில் கோரிக்கை வைத்தவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.