Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, shanthy said:

சிலர் வாயால் பலரின் வாழ்க்கை தொலைந்து போயிட்டுது. ஆனால் அதுகள் தாங்கள் கூவித்தான் விடியுதெண்டு நினைக்கினம். 

அப்படித்தான் கதை திரைக்கதை வசனம் போகுது ....

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எங்களுடைய அழுதங்களால், 100 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

உங்களுடைய அழுத்தத்தினால் இலங்கையில் ஒரு கொசுகூட சாகாது என்று உலகத்துக்கே தெரியும் அப்படியிருந்தும் அலப்பறைக்கு ஒன்றும் குறைச்சல் இல்ல.

உங்கள் வாய் சவடால்களால் விடுதலை செய்யவென வாசல்வரை கொண்டுவந்த அரசியல் கைதிகளை திரும்ப உள்ளே கொண்டு போனாலும் போய்விடுவான் சிங்களவன்.

ஒரு பக்கம் சீன விவகாரத்தால் சர்வதேச நெருக்கடி, உள்ளூர் அரசியல் நெருக்கடியென ராஜபக்ச குடும்பம் அரசியலில் என்றுமில்லாதவாறு பெரும் எதிர்ப்பை இன்று சிங்களவர்களிடம் எதிர்நோக்கியுள்ளது. அவர்களுக்கெதிராக சிங்கள மக்கள் மட்டுமல்ல, அவர்கள் கட்சிக்குள்ளேயே வெறுப்புணர்வுகள் ஆரம்பித்துவிட்டன.

இன்னொரு தேர்தலில் மட்டுமல்ல இனிவரும் தேர்தல்களிலும் சிங்களவர்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை என்று சிங்களவர்களே பேசிக்கொள்கிறார்களாம், அதுதான் எதிர்கால அரசியலுக்காக சிறுபான்மையினருடன் மென்மைபோக்கை கடைபிடித்து வாக்கு அரசியல் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.

அதுதான் சிலமாதங்கள் முன்னாடி இலங்கை சிறைகளில் அரசியல்கைதிகள் என்று எவருமே இல்லையென்று சொன்ன ராஜபக்ச அரச வாய்கள் இன்று அவர்களை விடுதலை செய்கின்றோம் என்று அதே வாயால் சொல்கிறது.

எதுவாக இருந்தால் என்ன, 2009 க்கு முன்னர் எங்கே இருந்தார்கள் என்று தெரியாதவர்கள் எல்லாம் இன்று எமது பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு ஏசி கார்களிலும் அரச பங்களாக்களிலும் வாழும்போது , மண்ணுக்காக போராடபோன ஒரேயொரு குற்றத்திற்காக வயசையும் வாழ்க்கையையும் மூட்டை பூச்சிகளுடனும் மட்டமான உணவுடனும் சிறைகளில் கழிததுவிட்ட எம் போராளிகள் வீடு திரும்பினால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

இங்கள் வாய் சவடால்களால் விடுதலை செய்யவென வாசல்வரை கொண்டுவந்த அரசியல் கைதிகளை திரும்ப உள்ளே கொண்டு போனாலும் போய்விடுவான் சிங்களவன்.

 வாசலில் திரும்பவும் கைதான அனுபவங்களும் ஏற்கனவே நடந்திருக்கிறது. புதிய குற்றச்சாட்டுகள் போடவும் சட்டம் இருக்கிறது. 

3 hours ago, குமாரசாமி said:

சாந்தி அக்கா! நீங்கள் ஏதோ சொல்லவாறியள் எண்டு விளங்குது. ஆனால் என்னெண்டுதான் எனக்கு விளங்கேல்லை? 🙃

சிலருக்கு விளங்கப்படுத்த முடியாது. பிறகு கருத்தாடும் விடயத்துக்கு அப்பால் உள்ள ஒன்றைக் கொண்டு வந்து ஏலுமெண்டால் இதுக்கு பதில் சொல்லு? என நிப்பினம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அப்படித்தான் கதை திரைக்கதை வசனம் போகுது ....

 

ஓ....கடவுளே, இதிலும்...  அரசியல் செய்வார்களா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஓ....கடவுளே, இதிலும்...  அரசியல் செய்வார்களா? 

ஈழமக்களின் வேதனையில் அரசியல் செய்வது இவர்களுக்கு கைவந்த கலை. இதை அறுபது வருடங்களாக செவ்வனே செய்து வருபவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

ஒரு பக்கம் சீன விவகாரத்தால் சர்வதேச நெருக்கடி, உள்ளூர் அரசியல் நெருக்கடியென ராஜபக்ச குடும்பம் அரசியலில் என்றுமில்லாதவாறு பெரும் எதிர்ப்பை இன்று சிங்களவர்களிடம் எதிர்நோக்கியுள்ளது. அவர்களுக்கெதிராக சிங்கள மக்கள் மட்டுமல்ல, அவர்கள் கட்சிக்குள்ளேயே வெறுப்புணர்வுகள் ஆரம்பித்துவிட்டன.

இன்னொரு தேர்தலில் மட்டுமல்ல இனிவரும் தேர்தல்களிலும் சிங்களவர்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை என்று சிங்களவர்களே பேசிக்கொள்கிறார்களாம், அதுதான் எதிர்கால அரசியலுக்காக சிறுபான்மையினருடன் மென்மைபோக்கை கடைபிடித்து வாக்கு அரசியல் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.

நூறு வீதம் உண்மை. நான் ஜனாதிபதியானால் காட்டுக்கு சென்று புலிகளுடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்துவேன் என்று கதிரை ஏறினவர், மக்களுக்கு  காட்டுக்குள்ளேயே திதி கொடுத்தார். 

வரவர சுமந்திரன் டக்கியின் தரத்துக்கு வாரார். சுரேன் ராகவனுக்கும்  சுமந்திரனுக்கும் இடையில் பழைய கறள் உண்டு. ஆளுநர் பதவியிலிருந்து இறங்கிய கையோடு அவரை த. தே. கூட்டமைப்புக்குள் புகுத்தி விளையாட கோத்தா திட்டம் போட்டார். ஏற்கெனவே மஹிந்தவால் களம் இறப்பட்டவர் சுமந்திரன். இந்த விளையாட்டு தனக்கு சாதகமாக அமையாது என்பது சுமந்திரனுக்கு நன்கு தெரிந்தபடியால் சுரேனை களத்தில் இறங்க சுமந்திரன் அனுமதிக்கவில்லை. யார் வந்தாலும், இருந்தாலும் விளையாட்டை நடத்துவது, நிர்ணயிப்பது எல்லாம் சிங்களமே. இவர்கள் வெறும் களம் இறக்கப்பட்ட  ஆட்டக்காரரே. இது புரியாமல் இருவரும் மோதிக்கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாமலின் அறிவிப்பு நம்பிக்கை தருகின்றது; அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர்

 
namal.jpg
 27 Views

இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலானது தமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எமது உறவுகள் மீதான குற்றத்தண்டனைக்கும் அதிகமான காலத்தை சிறையில் கழித்த பின்பும் அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது முறையல்ல என்பதையும் தெரிந்தோ தெரியாமலோ சந்தர்ப்பச் கூழ்நிலைகளால் செய்திருக்கக் கூடிய செயற்பாடுகளுக்காக அவர்களது பாதி வாழ்க்கை வீணடிக்கப்பட்டு விட்டது என்பதையும் ஏற்றுக் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியேனும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதற்தடவையாக ஆளும் அரசாங்கத்தின் பொறுப்புமிகு அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது எமது உறவுகளின் துரித விடுதலைக்கான நல்லெண்ண சமிக்ஞை என்றே நம்புகிறோம். அது மட்டுமன்றி ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் எதிர்த் தரப்பு உறுப்பினர்களும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் வேண்டுகோளையும் அதற்கு சாதகமாக பதிலளித்த நீதி அமைச்சரின் கருத்தையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கைதிகளின் விடுதலை விவகாரத்தை ஆதரித்திருந்தமை முக்கியமான விடயம்.

நிச்சமயமாக நீண்ட நெடுங்காலம் சிறையில் வாடும் எமது பிள்ளைகளின் உண்மை நிலையினை சகோதர சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்திருக்கின்றமையானது எமது உறவுகளின் விடுதலைக்கு தீர்வினை தருகின்ற முதற் புள்ளி என்றே கருதுகின்றோம். இது எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.ilakku.org/?p=53199

 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.