Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரி பண்ணையை அகற்றாவிட்டால் நாம் பண்ணை அமைப்போம்’ - சிவாஜிலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி - பூநகரி பகுதியிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைப்போமென,    வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

யாழில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  பூநகரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை இன்னும் அகற்றப்படவில்லை எனவும் ஆகவே, இன்றிலிருந்து இன்னும் 2 வாரங்களுக்குள் அந்தப் பண்ணையை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறினால், தாங்களும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் சட்டவிரோதமான பண்ணைகளை  நிறுவுவோமெனவும் எச்சரித்தார்.

"அதன் பின்னர் வரும் விளைவுகளை சந்திக்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். மேலும் சீனா இதனூடாக கடலை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது என்பதனை இந்தியா உள்ளிட்ட  நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

Tamilmirror Online || ’பூநகரி பண்ணையை அகற்றாவிட்டால் நாம் பண்ணை அமைப்போம்’

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பல தொழில் சார் விடையங்களை நீங்கள் எப்பவோ தொடங்கியிருக்கலாம்.ஆனால் தீர்வு என்று சொல்லி வாக்கு சேகரிப்பில் கவனம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

இப்படியான பல தொழில் சார் விடையங்களை நீங்கள் எப்பவோ தொடங்கியிருக்கலாம்.ஆனால் தீர்வு என்று சொல்லி வாக்கு சேகரிப்பில் கவனம்.

இவர்கள் மக்கள் நலனில், பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியிருந்தால் அரசாங்கத்துக்கு இவ்வளவு ஒநாய்க்கூட்டம் சேர்ந்து மந்தையை பிரிச்சு மேஞ்சிருக்காது. தமிழரின் ஒரே சக்தியாக இருந்திருப்பினம். இப்போ மந்தையுமில்லை போன மந்தையை கூட்டிச்சேர்க்க வாய்ப்புமில்லை வாயால கூவிக்கொண்டிருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

இப்படியான பல தொழில் சார் விடையங்களை நீங்கள் எப்பவோ தொடங்கியிருக்கலாம்.ஆனால் தீர்வு என்று சொல்லி வாக்கு சேகரிப்பில் கவனம்.

இப்போது மட்டும் என்ன இந்தியாவுக்கு தங்கள் ஆதரவை காட்டுவதற்கு தான் பண்ணைகளை  நிறுவுவோமென இந்த எச்சரிக்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, satan said:

இவர்கள் மக்கள் நலனில், பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியிருந்தால் அரசாங்கத்துக்கு இவ்வளவு ஒநாய்க்கூட்டம் சேர்ந்து மந்தையை பிரிச்சு மேஞ்சிருக்காது. தமிழரின் ஒரே சக்தியாக இருந்திருப்பினம். இப்போ மந்தையுமில்லை போன மந்தையை கூட்டிச்சேர்க்க வாய்ப்புமில்லை வாயால கூவிக்கொண்டிருக்கினம்.

அவர்கள் முள்ளிவாய்க்கால் முடிவின் மூலம்/பின்னர் ஒரு முகமாக ஒருமித்து நின்றிருக்க வேண்டும்.படித்த பாடங்களை வைத்து ஒட்டு மொத்த தமிழினத்திற்கும்  ஒற்றுமை முக்கியம் என சொல்லியிருக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் பேத அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒருங்கிணைக்கவும் ஒற்றுமையாக்கவும் தடியை கையிலெடுக்க ஆக்களும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தன் நலன் சார்ந்து இவர்களை பயன்படுத்திவிட்டு, சிங்களவனோடு கொஞ்சி, குலாவிக்கொண்டு இவர்களையே  காட்டிக்கொடுக்கும். சொரணை கெட்டவர்கள் பிறகும் இந்தியாவே நமக்கு பாதுகாப்பு என்று கூவிக்கொண்டு திரிவார்கள். இந்தியா தன்னைத்தான் காப்பாற்ற முடியாமல் இவர்களை உசுப்புது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மக்களுக்காக நீங்கள் இதுவரை அமைத்த பண்ணைகளின் அல்லது தொழிற்சாலைகளின் விபரங்களை அறிய ஆவல்

  • கருத்துக்கள உறவுகள்

சீனா  கொடுப்புக்குள் நமட்டு சிரிப்பு உவக்கும் கதையாக இருக்கிறது.

சீன சிரிப்பது இவர்களை பற்றி அல்ல, கிந்தியவை பற்றி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.