Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்

August 14, 2021

spacer.png

 

செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு படுகொலையானவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.  வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்றைய தினம் காலை சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினார். 

குறித்த அஞ்சலிக்கு காவல்துறையினா் ர்,  இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதிலும் , அவற்றினையும் மீறி படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி விமான படையினர் மேற்கொண்ட விமான குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர்.

22-1.jpeg?resize=1024%2C76622-2.jpeg?resize=1024%2C766

 

 

https://globaltamilnews.net/2021/164666

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்..!

முல்லைத்தீவு - வள்ளிபுனம், சொஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு, இலங்கை வான்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூர விமானத்தாக்குதலால் அப்பாவி மாணவிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

VideoCapture_20210814-101043.jpg

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட  அப்பாவி மாணவிகளின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று(14.08.2021) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

VideoCapture_20210814-101106.jpg

குறித்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவியர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, பூத்தூவி, சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன.

VideoCapture_20210814-101039.jpg

மேலும், இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture_20210814-101111.jpg
VideoCapture_20210814-101153.jpg
VideoCapture_20210814-101124.jpg

 

 

https://www.virakesari.lk/article/111293

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் மழலைகளே 

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

பூத்துக் குலுங்க வேண்டியவர்கள் பிடுங்கி எறியப்பட்டார்கள். ஒவ்வொருநாளும்  இழப்புநாள் எங்கள் மண்ணில். 

 சிவாஜிலிங்கம் கழிப்பறைக்கும் இராணுவம் காவல் போலுள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.