Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவிடம் இருந்து ஒட்சிசன் கேட்டது இலங்கை! - வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஒட்சிசனை உடனடியாக வழங்குவதற்கு சீனாவின் உதவியை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பிலுள்ள சீனத் தூதர் சீ ஷென்ஹொன்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இது குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான தொடர்ச்சியான ஆதரவுக்கு சீன அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, சீனாவின் உறுதியான உதவிக்கு வெளிவிவகார அமைச்சர் தனது பாராட்டை தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதில் சீனாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை சீனத் தூதர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த கலந்துரையாடல் கோவிட் -19 ஒத்துழைப்பு, பொருளாதார மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் சீனா மற்றும் இலங்கை இடையே பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்திருந்தன.

இதில், சென்னையில் இருந்து 40 தொன் மருத்துவ ஒட்சிசனை ஏற்றிவந்த கப்பல், நேற்று இரவு இலங்கையை வந்தடைந்து விட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம், தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.  

https://tamilwin.com/article/sri-lanka-heard-oxygen-from-china-1629578895?itm_source=parsely-detail

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஒட்சிசனை உடனடியாக வழங்குவதற்கு சீனாவின் உதவியை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐயா ஏன் இந்தியாவை கேக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

இது ஓட்ஸிசன் பிரச்சனை!  இந்தியாவிடம் இருந்தும் பெற்றுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய படிப்பு பரீட்சை எல்லாம் வைக்கும் சொறீலங்காவுக்கு.. ஒக்சிசனை பிரித்தெடுத்து தயாரிக்கக் கூட வக்கில்லை. அந்தளவுக்கு வெறும் ஏட்டுச் சுரைக்காய் படிப்பு தான் அங்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, பெருமாள் said:

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஒட்சிசனை உடனடியாக வழங்குவதற்கு சீனாவின் உதவியை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேட்காமலே உதவி செய்தவனிட்டையே உதவி கேட்க வேண்டியிருக்கு எண்டால்.....????????
நாட்டின்ரை நிலமை படு மோசம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கேட்காமலே உதவி செய்தவனிட்டையே உதவி கேட்க வேண்டியிருக்கு எண்டால்.....????????
நாட்டின்ரை நிலமை படு மோசம்

அவயின்டை நாட்டிலையே உதுதான் பிரச்சின...பஸ்சு ரெய்னிலேயே கோக்கான் மாதிரி தூக்கித் தியிறவை..

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா ஏன் இந்தியாவை கேக்கவில்லை?

இந்தியாவும் அனுப்பியுள்ளது அண்ணை ஆனால் போதாமல் போகும் போல இருக்கு இறப்பு 7200 ஐ தொட்டு இருக்கிறது இது இன்னும் அதிகரிக்கும் போல் தெரிகிறது 

6 hours ago, nedukkalapoovan said:

பெரிய படிப்பு பரீட்சை எல்லாம் வைக்கும் சொறீலங்காவுக்கு.. ஒக்சிசனை பிரித்தெடுத்து தயாரிக்கக் கூட வக்கில்லை. அந்தளவுக்கு வெறும் ஏட்டுச் சுரைக்காய் படிப்பு தான் அங்கு. 

இஞ்ச பிரித்தெடுக்கிற நேரத்தில் கொரோனா பிரிச்சு மேஞ்சிடும் எல்லோரையும்  பிறகு நீங்க ஆழ்ந்த அனுதாபத்தை சொல்லி கடந்திடுவீங்க 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இஞ்ச பிரித்தெடுக்கிற நேரத்தில் கொரோனா பிரிச்சு மேஞ்சிடும் எல்லோரையும்  பிறகு நீங்க ஆழ்ந்த அனுதாபத்தை சொல்லி கடந்திடுவீங்க 

கதையோட கதையாய்.......போடாமல் கிடப்பில கிடந்த மில்லியன்கணக்கான அஸ்ராசெனிக்கா ஊசியளை உக்கிரேனுக்கு  ஓசியாய் ஜேர்மன்காரன் குடுத்து தள்ளீட்டான் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

கதையோட கதையாய்.......போடாமல் கிடப்பில கிடந்த மில்லியன்கணக்கான அஸ்ராசெனிக்கா ஊசியளை உக்கிரேனுக்கு  ஓசியாய் ஜேர்மன்காரன் குடுத்து தள்ளீட்டான் 

நல்ல மனசுக்காரன் சாமி உங்க நாட்டுக்காரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்ல மனசுக்காரன் சாமி உங்க நாட்டுக்காரன்

இஞ்சத்தையான் சனம் வேண்டாம் எண்டு சொன்ன ஊசியள் எண்டதை நீங்கள் கவனத்திலை எடுக்கோணும் கண்டியளோ. 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இஞ்சத்தையான் சனம் வேண்டாம் எண்டு சொன்ன ஊசியள் எண்டதை நீங்கள் கவனத்திலை எடுக்கோணும் கண்டியளோ. 😁

இல்லாதவனுக்கு எது கொடுத்தாலும் அதன் நிகர் வேறு சாமி சாப்பிட்டு கிடந்தவனுக்கு சாப்பிடாமல் கிடந்தவனுக்கும்ம் ஏற்படும் பசியே வேறல்லவா

இஞ்ச கூடத்தான் ஒரு ஊசியும் போடமாட்டோம் என ஒரு குறுப்பு இருக்கிறது தானே

தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லாதவனுக்கு எது கொடுத்தாலும் அதன் நிகர் வேறு சாமி சாப்பிட்டு கிடந்தவனுக்கு சாப்பிடாமல் கிடந்தவனுக்கும்ம் ஏற்படும் பசியே வேறல்லவா

இஞ்ச கூடத்தான் ஒரு ஊசியும் போடமாட்டோம் என ஒரு குறுப்பு இருக்கிறது தானே

தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நான் அறிந்ததின் படி எனது ஊரில் பல வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு விட்டதாம். அதில் எனது சொந்தங்கள் உட்பட...

இதில்  இன்னொரு சம்பவம் எனது ஊரில் (my family 😎)

ஊரடங்கு சட்டத்தையும் மீறி   ஐம்பது பேருடன் திருமணம் நடந்த வீட்டில் போலிசார் புகுந்ததால் மணமக்கள்,மாமா மாமிமார் தவிர்த்து அனைவரும் சிதறி தப்பியோட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலை… 2000 ஊசிப் போத்தல், வைத்திருந்த பெட்டி ஒன்று களவு போயிட்டுதாம் என்று கதை அடிபடுகுது.

என்னத்தை களவு எடுக்கிறதெண்டு, விவஸ்தையே இல்லாமல் போச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையிலை… 2000 ஊசிப் போத்தல், வைத்திருந்த பெட்டி ஒன்று களவு போயிட்டுதாம் என்று கதை அடிபடுகுது.

என்னத்தை களவு எடுக்கிறதெண்டு, விவஸ்தையே இல்லாமல் போச்சு. 

இதுதான் இப்ப பொன் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.