Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாருக்கு ஞானசார தேரர் திடீர் விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில்மோட்டை பகுதிக்கு, நேற்று  (22) மாலை, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.   

கோயில்மோட்டை பகுதியில், சுமார் 40 வருடங்களாக, அப்பகுதி மக்கள்   விவசாயம் செய்து வரும் நிலையில், குறித்த அரச காணியை, தங்களுக்கு வழங்க வேண்டுமென, கோவில்மோட்டை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் என பல போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், வடமாகாண ஆளுநர், குறித்த காணியை கோயில்மோட்டை விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரிக்கைவிடுத்திருந்தார். 

எனினும், குறித்த காணி, தங்களுக்கு வேண்டுமென்று, மடு தேவாலய பரிபாலன சபையினர் கோரி வந்ததுடன், குறித்த காணியை பெற்றுக்கொள்வதற்கான பல்வேறுநடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலில், நேற்று (22) மாலை,  கொரோனா இல்லாத இலங்கை உருவாக வேண்டும் என  வேண்டி இடம்பெற்ற விசேட பூஜையில் பங்கேற்பதற்காக,  பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், மன்னாருக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னாருக்கு வந்த அவரை, இடைவழியில் வழிமறித்த கோயில்மோட்டை விவசாயிகள், தங்களின் காணிப் பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன் அடிப்படையில், கோயில்மோட்டை வயல் காணிக்கு, கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர்நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

அதை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஞானசார தேரர், தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதை விட, மக்களின்பசியை தீர்ப்பதே முக்கியம் என்றார்.

குறித்த காணியை கோயில்மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தன்னால் இயன்ற நடவடிக்கை எடுப்பதாகவும், அவர் உறுதியளித்தார்.

Tamilmirror Online || மன்னாருக்கு ஞானசார தேரர் திடீர் விஜயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவாலயங்களுக்கு காணிகள் தேவையில்லை: மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் - மன்னாரில் ஞானசார தேரர் தெரிவிப்பு

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை(22) மாலை பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.   

 

மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதியில் சுமார் 40 வருடங்களாக கோவில் மோட்டை பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்தனர்.

e63126fa-a7dd-4438-9db1-cd5deeddf0e7.jpg

இந்தநிலையில் குறித்த அரச காணியை தங்களுக்கு வழங்கவேண்டும் என கோவில் மோட்டை விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டதோடு, பல போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தநிலையில், வட மாகாண ஆளுநர் குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். 

 

எனினும் குறித்த காணி தங்களுக்கு வேண்டும் என மடு தேவாலய பரிபாலனசபையினர் கோரி வந்ததுடன் குறித்த காணியை பெற்றுக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

c59352ac-ea19-4da7-b7d0-b85abc6787e8.jpg

இந்நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் 'கொரோனா இல்லாத இலங்கை உருவாக வேண்டும்' என இடம்பெற்ற விசேட பூஜையில் பங்கேற்க பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

cecc9832-7003-4961-858c-82bd2d8d201d.jpg

மன்னார் வந்த நிலையில் இடைவழியில் வழி மறித்த கோயில் மோட்டை விவசாயிகள் தங்களின் காணி பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கோயில் மோட்டை வயல் காணிக்கு பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

98526817-4a7c-44be-a290-a765705dd6dc.jpg

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,

88a61aca-0a9b-435e-98c4-df843e9c967f.jpg

தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதை விட மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் என தெரிவித்ததுடன், குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தன்னால் இயன்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

தேவாலயங்களுக்கு காணிகள் தேவையில்லை: மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் - மன்னாரில் ஞானசார தேரர் தெரிவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரரும், மறவன் புலவு சச்சிதானந்தனும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறார்கள். அவர்களுடைய எஜமான் ஒருவரே.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

தேரரை பிடிக்காது என்றாலும் தேரரின் கருத்து பிடிச்சிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, valavan said:

தேரரை பிடிக்காது என்றாலும் தேரரின் கருத்து பிடிச்சிருக்கு.

இந்தக் கருத்து மட்டும்தானே 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

e63126fa-a7dd-4438-9db1-cd5deeddf0e7.jpg

 

தேரர்மார் இருக்கிற சோபாவுக்கு பட்டு வேட்டி,நூல் வேட்டியெல்லாம்   விரிச்சிருக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

மன்னாருக்கு வந்த அவரை, இடைவழியில் வழிமறித்த கோயில்மோட்டை விவசாயிகள், தங்களின் காணிப் பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

தமிழ் அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை… தேரரை பிடித்து, செய்ய வேண்டி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை… தேரரை பிடித்து, செய்ய வேண்டி இருக்கு.

பாட்டும் நானே பாவமும் நானே, எல்லாம் அவன் செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்க! இராணுவமும், இந்த தேர்களும் பிடித்து விகாரை அமைக்கும் காணிகள் மட்டும் யாரதாம்? அதிபற்றியும் கதைக்கலாமே? இனஅழிப்பு, தேவாலய குண்டு வெடிப்பு அனர்த்தங்களை நீத்துப்போகச் செய்ய ஆளாளுக்கு குற்றப்பத்திரிகை தயார்படுத்துகினம். இப்போ சில வாரங்களுக்கு முன் தான் செய்தி வந்தது, ஏதோ ஒரு தேவாலயத்துக்கு சொந்தமான காணி வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது அதில் இந்துக்களும் அடங்கும் என்று. அதை மறைப்பதற்கு இயலாதவர்கள் செய்யும் பிரச்சாரம். தம்மால் நல்லது செய்ய முடியாவிட்டால் பொல்லாதார், நல்லதை மறைத்து தீமையாக காட்டி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது. இது ஆத்தாதவன் செய்யும் செயல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.