Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்

Peiris-750x375.jpg

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் உலக தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதியாக அரசு சார்பற்ற அமைப்புக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அந்தவகையில் 2021 ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் இருந்து நாடு திரும்பியதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பர் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய கவுன்சில், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியன தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1245154

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் ஆயுதங்களை கீழே போட்டால் தான் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று நிபந்தனை வைத்தார்கள்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தடைகளை நீக்கிவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடலாமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடைசெய்யப்படாத அமைப்புகள் எண்டால் எதை  குடுத்தாலும்  சந்தோசப்படுற அமைப்பாய்த்தான் இருக்கும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இயங்கும் எந்த அமைப்பும் நம்பகத்தன்மை உள்ள அமைப்பாய் தெரியவில்லை.
இவர்களை யார் தெரிவுசெய்கிறார்கள், மக்களின் கருத்து உள்வாங்கப்படுகிறதா என்ற கேள்விக்கே  விடையில்லை. யாராலோ திணிக்கப்படும் இணக்க அரசியலுக்குள் விழுந்து தமது சுய லாபத்தை மட்டுமே காப்பாற்றக்கூடிய அமைப்புகளாய் தான் இயங்குகின்றார்கள்.
அரசாங்கத்தோடு போச்சுக்களில் ஈடு படவேண்டிய சூழ்நிலை வந்தால் எல்லா அமைப்பும் ஒரு அணி சேர்ந்து ஒரே அம்சங்கள் கொண்ட அடிப்படை கோரிக்கைகள், திட்டங்கள் வைத்துக்கொண்டே பேச்சுவார்த்தைக்கு போகவேண்டும் அதில் தாயகத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒரு அங்கமாக செயல் படவேண்டும்.
இது சாத்தியமா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய கவுன்சில், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியன தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களோடு இல்லையென்றால், யாரோடு பேசப்போகிறார்கள்? இவர்களுக்கு விழுந்து, விழுந்து வக்காலத்து வாங்கும் ஒரு சில தனி நபர்களுடனா? அல்லது யாருமே பேச்சுக்கு போகாததால் அடித்து விடுகிறாரோ?

12 hours ago, nunavilan said:

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை மறைமுகமாய் பேசப்போகினம் போல! உப்பிடி எத்தினை பேசுவினம்? வெளிநாட்டுக்கொன்று, ஐ. நா . வுக்கொன்று, வடக்கிற்கொன்று, தெற்கிற்கொன்று  என பலவேடம் பாத்தாச்சு. எங்களை சுத்த அறளையள் என்று சிங்களவன் கணக்கு போட்டுள்ளான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

இவர்களோடு இல்லையென்றால், யாரோடு பேசப்போகிறார்கள்? இவர்களுக்கு விழுந்து, விழுந்து வக்காலத்து வாங்கும் ஒரு சில தனி நபர்களுடனா? அல்லது யாருமே பேச்சுக்கு போகாததால் அடித்து விடுகிறாரோ?

ஒருவேளை மறைமுகமாய் பேசப்போகினம் போல! உப்பிடி எத்தினை பேசுவினம்? வெளிநாட்டுக்கொன்று, ஐ. நா . வுக்கொன்று, வடக்கிற்கொன்று, தெற்கிற்கொன்று  என பலவேடம் பாத்தாச்சு. எங்களை சுத்த அறளையள் என்று சிங்களவன் கணக்கு போட்டுள்ளான்.

முன்னுக்கு பின் முரணாக கருத்து சொல்வதில்  சிங்களவருக்கு நிகராக யாரும் உள்ளதாக நான் அறியவில்லை.

11 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஒரு காலத்தில் ஆயுதங்களை கீழே போட்டால் தான் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று நிபந்தனை வைத்தார்கள்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தடைகளை நீக்கிவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடலாமே.

தடையை வைத்து சிங்கள மக்களை குசிப்படுத்தும் சிங்கள இனவாதிகளிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

தடையை வைத்து சிங்கள மக்களை குசிப்படுத்தும் சிங்கள இனவாதிகளிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்??

வேண்டும் போது தடை விதிப்பு, வேண்டாத போது தடை எடுப்பு. ஹா..... ஹா.... சிங்களவன் மகா புத்திசாலி இல்லாவிட்டாலும் நாங்கள் இருக்கிறோம் சொல்லிக்கொடுக்க!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

வேண்டும் போது தடை விதிப்பு, வேண்டாத போது தடை எடுப்பு. ஹா..... ஹா.... சிங்களவன் மகா புத்திசாலி இல்லாவிட்டாலும் நாங்கள் இருக்கிறோம் சொல்லிக்கொடுக்க!

1000 க்கு மேலான வருடங்களாக எட்டப்பர்கள் இருந்த வண்ணமே உள்ளது தான் எமது இனத்தின் சாபக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

இனத்தின் சாபக்கேடு.

இன உணர்வு இல்லாவிடினும் நீதி, நியாயம், தர்மம் கூட இல்லாதவர்களாயிருப்பதாலே அவர்களால் அப்படி செயற்பட முடிகிறது. அநிஞாயத்தை நிஞாயப்படுத்தவும், தலையில் வைத்து கொண்டாவும் முடிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

முன்னுக்கு பின் முரணாக கருத்து சொல்வதில்  சிங்களவருக்கு நிகராக யாரும் உள்ளதாக நான் அறியவில்லை.

தடையை வைத்து சிங்கள மக்களை குசிப்படுத்தும் சிங்கள இனவாதிகளிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்??

நிச்சயம் மாற்றம் ஏற்படும் கால ஓட்டத்தில்.

புதிய தலைமுறைகளின் வருகை, மற்றும் தமிழ் மக்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றாலும் சர்வதேச அளவில் விரிந்து, பரந்து கால் பதித்துள்ளமை சிங்களவர் மனப்பான்மையில் மாற்றத்தை கொண்டு வரும்.

22 hours ago, Sasi_varnam said:

வெளிநாடுகளில் இயங்கும் எந்த அமைப்பும் நம்பகத்தன்மை உள்ள அமைப்பாய் தெரியவில்லை.
இவர்களை யார் தெரிவுசெய்கிறார்கள், மக்களின் கருத்து உள்வாங்கப்படுகிறதா என்ற கேள்விக்கே  விடையில்லை. யாராலோ திணிக்கப்படும் இணக்க அரசியலுக்குள் விழுந்து தமது சுய லாபத்தை மட்டுமே காப்பாற்றக்கூடிய அமைப்புகளாய் தான் இயங்குகின்றார்கள்.
அரசாங்கத்தோடு போச்சுக்களில் ஈடு படவேண்டிய சூழ்நிலை வந்தால் எல்லா அமைப்பும் ஒரு அணி சேர்ந்து ஒரே அம்சங்கள் கொண்ட அடிப்படை கோரிக்கைகள், திட்டங்கள் வைத்துக்கொண்டே பேச்சுவார்த்தைக்கு போகவேண்டும் அதில் தாயகத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒரு அங்கமாக செயல் படவேண்டும்.
இது சாத்தியமா தெரியவில்லை.

பல கட்சிகள் போல பல அமைப்புக்கள் உள்ளமை ஒரு மோசமான நிலையாக பார்க்கபடத்தேவை இல்லை. அவரவர் தமக்கு பிடித்தமான, நம்பிக்கை உள்ள அமைப்பில் ஈடுபாடு, அக்கறை கொள்ளலாம். அல்லது புதிய அமைப்பையும் உருவாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப யாரோடு கதைக்கப் போயினம்.. ஒட்டுக்குழு பினாமிகளோடா. அவை எதுக்கும் தலையாட்டுவினம். அவை ஊரில செய்ததே தலையாட்டு தொழில் தானே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

அப்ப யாரோடு கதைக்கப் போயினம்.. ஒட்டுக்குழு பினாமிகளோடா. அவை எதுக்கும் தலையாட்டுவினம். அவை ஊரில செய்ததே தலையாட்டு தொழில் தானே. 

அதே.....! சொந்தநாட்டில் சோரம்போனதுகளை வைத்து தமிழரை ஏமாற்றுவதுபோல், புலம்பெயர் தேசத்திலும் களமிறக்கப்பட்டவர்களை ஒரு அமைப்பாக, ஏதோ ஒரு பெயரில் அழைத்து பேசலாம். என்ன பேசப்போகினம்? கூடியிருந்து கதைபேசி, கூத்தடித்துவிட்டு சிங்களம் ஒரு அறிக்கை விடும், இவர்களும் ஆமாம் போடுவினம். தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டாச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.