Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை

December 11, 2021
 

 

spacer.png
இலங்கை ராணுவம் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில் மனித உரிமை மீறலுக்காக 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008/2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே இவ்வாறு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு ள்ளது. மேலும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றின் மீது கவனத்தை ஈர்க்கவும் பொறுப்பை மேம்படுத்தவும் அதிகாரங்களை பயன்படுத்துவது மூலம் அந்த உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாக இது தொடா்பில் அமெரிக்கா தொிவித்துள்ளது

 

https://globaltamilnews.net/2021/170233

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கொலை, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்தது அமெரிக்கா

பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவருக்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகளை விதித்துள்ளது.
Navy-Sampath-700x375.jpg

இலங்கை கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2008 முதல் 2009 வரை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது.

இலங்கை கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி குறித்த காலப் பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை படுகொலை செய்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து சுனில் ரத்நாயக்கவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடை விதித்துள்ளது.

மேலும் இலங்கையில் நடந்த மொத்த மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு ஆதரவாக அமெரிக்க எடுக்கும் நடவடிக்கையே இந்த தடை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என்ற உறுதிப்பாட்டினையும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் வழங்கியுள்ளார்.

மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வருடம் பொது மன்னிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1255876

  • கருத்துக்கள உறவுகள்

11 பேரை 8 பேரை கொன்றவங்களுக்கு மட்டுமல்ல.. நூற்றுக்கணக்கில் கொன்றுவங்களுக்கு ஆயிரக்கணக்கில் கொன்றவங்களுக்கு ஏன் இன்னும் தடை போடவில்லை..??!

செம்மணி புதைகுழிகளின் சூத்திரதாரியான.. சரத் பொன்சேகாவுக்கும் குடும்பத்திற்கும்.. முற்றாகத் தடை விதிக்கனும். 

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்போனால் தமிழரை கொன்று குவித்த சிங்கள அரசுகள், இராணுவம், ஊக்குவித்த புத்த சங்கத்தினர் இப்படி பல அடங்கும். குறைந்தது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட கட்டளைத்தளபதி, பாதுகாப்பு அமைச்சர் எந்த தடையுமில்லாமல் பாதுகாப்பாய் உலகம் சுத்துறார்கள். தமக்கு இட்ட கட்டளையை செயற்படுத்தியவர்களுக்கு தடை, தண்டனை அனுபவிக்க வேண்டியவர் தான் அரசியல் சுகம் அனுபவிக்க, தன் கட்டளையை செயற்படுத்தியவர்கள் தண்டனை அனுபவிப்பதை  ஏற்காமல்,  தானும் சிறை செல்லாமல் தடுப்பதற்கு சட்டத்தை மாற்றி, அவர்களுக்கு விடுதலையும், பதவியும் கொடுத்து கேள்விக்கே இடமில்லாமல் செய்து தப்பிக்கொண்டார். இவர்களோ தளபதிகளை தண்டித்தால் தாங்களும் சிக்கிக்கொள்வோம் என்பதற்காக சில சுலோகங்களை பிடித்துக்கொண்டு "மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும்"   நடிக்கிறார்கள் அவ்வளவே!                          

  • கருத்துக்கள உறவுகள்

சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க   ....இவருக்கு அமேரிக்கா தடை விதித்தால் தான் என்ன இல்லை என்றால் தான் என்ன....நிச்சயமாக இவரிடம் பாஸ்போர்ட்டே இருக்காது ...பிறகு ஏன் தடை...சாப்பிடவே பணம் இருக்காது....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையோட பேரம் படியல்ல  போல tw_lol:

13 hours ago, putthan said:

சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க   ....இவருக்கு அமேரிக்கா தடை விதித்தால் தான் என்ன இல்லை என்றால் தான் என்ன....நிச்சயமாக இவரிடம் பாஸ்போர்ட்டே இருக்காது ...பிறகு ஏன் தடை...சாப்பிடவே பணம் இருக்காது....

8 தமிழர்களை கொன்றமையால் கோத்தாவும் சிங்கள தேசியவாதிகளும் வெகுமதிகளை அள்ளிக் கொடுத்து கோடீஸ்வரனாக்கி இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

8 தமிழர்களை கொன்றமையால் கோத்தாவும் சிங்கள தேசியவாதிகளும் வெகுமதிகளை அள்ளிக் கொடுத்து கோடீஸ்வரனாக்கி இருப்பார்கள்.

இருக்கும் இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.