Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் எனும் நான் - நிழலி

Featured Replies

நான் எனும் நான்
------------

நான் இன்னும்
எனக்கும் நானே
சொல்லாத வார்த்தைகள்
என்னிடம் உள்ளன
அந்த வார்த்தைகளின் அடியில்
தேங்கி கிடக்கின்றது
பெருங் காடென விரியும்
துரோகம்

நான் எனக்கு
எழுதாத சொற்கள் 
நிறைய உள்ளன
அதன் உச்சரிப்புகளில்
மறைந்து கிடக்கின்றன
நான் பலரை தூற்ற நினைத்த
வசவுகள்

நான் பார்க்க விரும்பாத
பல பக்கங்கள் உள்ளன
அதன் வரிகளில் 
நிறைந்து கிடக்கின்றன
இரக்கமற்ற நினைவுகளும்
ஈரம் காய்ந்த என்
உணர்வுகளும்

நான் கேட்க மறுக்கும்
பாடல்கள் உள்ளன
தன் வரிகளில் 
கண்ணீரையும்
துரோகங்களையும்
காட்டாறு எனப் பாயும்
தோல்விகளின் வரிகளையும்
சுமந்த படி

நான் பார்க்க விரும்பாத
ஒரு முகம் எனக்குள்ளது
அதன் அத்தனை கண்களிலும்
வழிகின்றது ஊழிப்
பெருங்கடலும்
பெருங் காமமும்

இன்னும் முழுமை பெறாத
விம்பம் ஒன்று எனக்கு
உள்ளது
தினமும் செதுக்கியும்
சிதைத்தும்
ரணப்படுத்தியும்
முழுமை பெற்றும்
உடைந்தும் உடையாமலும்
தளம்பிக் கொண்டு...

- நிழலி

December 11,2021

  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லோருக்குள்ளும் ஒரு ஊத்தையனும் நல்லவனும் இருப்பதாக எஸ்.பொ எழுதியது நினைவில் வந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

நிழலியானந்தா என்று சும்மாவா சொல்கிறோம்....😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

மனிதவாழ்வின் பருவமாற்றம் மனிதர்களின் எழுத்துகள் ஊடாகவும் பிரதிபிலிப்பதை பலியாக்கிவிடாதீர்களையா!  தன்னிலையூடாக மற்றையோரை சிந்திக்கவைத்தலும் ஒருவகை. அதுவே ஒரு படைப்பாளனின் திறனும் ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எங்களை வடித்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் முற்றுப்பெறாத சிற்பங்களாக உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் நாங்கள் விலங்குகள், பல்லாயிரம் ஆண்டுகால தொடர் சங்கிலி அவ்வளவு சீக்கிரம் அறாது தானே!

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

தோழர் அடுத்து பிரம்மத்தை எட்டிப்பார்க்கும் சமாதி நிலைதான்..👌

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் அடுத்து பிரம்மத்தை எட்டிப்பார்க்கும் சமாதி நிலைதான்..👌

நான் நினைக்கேல்ல தோழர், அவர் கார் கழுவுறதற்கே இங்குதான் போறவர்......பிரமத்துக்கு போறதற்கு  இடையில்  வழுக்கி விழுந்திடுவார்......!   😂

Win A Wash | 106.9 The Wolf

  • தொடங்கியவர்

 

On 11/12/2021 at 04:27, கிருபன் said:

 

எல்லோருக்குள்ளும் ஒரு ஊத்தையனும் நல்லவனும் இருப்பதாக எஸ்.பொ எழுதியது நினைவில் வந்தது!

உண்மை... எல்லா ஊத்தைகளையும் கவிதையில் கொண்டு வந்தால் 200 வரிகளுக்கும் மேலாகிவிடும் என்பதால் மிச்சசொச்சம் ஒன்றையும் எழுதவில்லை

 

On 11/12/2021 at 04:59, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

இப்பவெல்லாம் பழுத்த அனுபவசாலிகள் மீதுதான் இளைஞிகளுக்கு ஆர்வம் அதிகமாம் என்று வேதாளமுனி சொல்கின்றார்.

 

On 11/12/2021 at 06:38, Nathamuni said:

நிழலியானந்தா என்று சும்மாவா சொல்கிறோம்....😁

என் சிஷ்யனாக சேரும் எண்ணம் உள்ளதா? 

 

On 11/12/2021 at 08:58, nochchi said:

மனிதவாழ்வின் பருவமாற்றம் மனிதர்களின் எழுத்துகள் ஊடாகவும் பிரதிபிலிப்பதை பலியாக்கிவிடாதீர்களையா!  தன்னிலையூடாக மற்றையோரை சிந்திக்கவைத்தலும் ஒருவகை. அதுவே ஒரு படைப்பாளனின் திறனும் ஆகும். 

உண்மை நொச்சி,

எம்மை ஓரளவுக்காவது உணரத் தொடங்குவதற்கே பாதி ஆயுளுக்கும் மேல் ஆகின்றது. எம் பிம்பம் எதுவென்று நாம் அறியும் போது தான் மற்றவர்கள் பற்றி நாம் வைத்திருக்கும் கணிப்பீடுகள் எல்லாம் மாறுகின்றது. தன்னையே சரியாக உணரமுடியுது இல்லை, இதுக்குள் எப்படி நாம் மற்றவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கின்றோம் என்ற கேள்வி எழுகின்றது.

On 11/12/2021 at 10:18, nunavilan said:

நாம் எங்களை வடித்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் முற்றுப்பெறாத சிற்பங்களாக உள்ளோம்.

அப்படி முற்றுப் பெறும் போது, நாம் இந்தவுலகில் இருக்க மாட்டோம்.

On 11/12/2021 at 11:35, ஏராளன் said:

அடிப்படையில் நாங்கள் விலங்குகள், பல்லாயிரம் ஆண்டுகால தொடர் சங்கிலி அவ்வளவு சீக்கிரம் அறாது தானே!

உண்மையில் ஏனைய விலங்குகள் தம்மைப் பற்றிய போலி விம்பங்களைக் கொண்டு இருப்பதில்லை. ஆனால் மனுசர் நாம் தான் எல்லா போலிகளையும் சுமந்து கொண்டு எம் முகத்தையே நாம் மறந்து விடுகின்றோம்.

On 12/12/2021 at 01:13, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் அடுத்து பிரம்மத்தை எட்டிப்பார்க்கும் சமாதி நிலைதான்..👌

பிரம்மமும் அ-பிரமும் எல்லாம் இருப்பது நாம் வாழும் வாழ்வில் தானே. சமாதி அடைந்த பின் எதுவுமில்லை.

On 12/12/2021 at 04:08, suvy said:

நான் நினைக்கேல்ல தோழர், அவர் கார் கழுவுறதற்கே இங்குதான் போறவர்......பிரமத்துக்கு போறதற்கு  இடையில்  வழுக்கி விழுந்திடுவார்......!   😂

Win A Wash | 106.9 The Wolf

அன்றைக்கு போன பின் அந்தப் பக்கம் போக மனிசி விடுகிறார் இல்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

 

உண்மை... எல்லா ஊத்தைகளையும் கவிதையில் கொண்டு வந்தால் 200 வரிகளுக்கும் மேலாகிவிடும் என்பதால் மிச்சசொச்சம் ஒன்றையும் எழுதவில்லை

 

இப்பவெல்லாம் பழுத்த அனுபவசாலிகள் மீதுதான் இளைஞிகளுக்கு ஆர்வம் அதிகமாம் என்று வேதாளமுனி சொல்கின்றார்.

 

என் சிஷ்யனாக சேரும் எண்ணம் உள்ளதா? 

 

உண்மை நொச்சி,

எம்மை ஓரளவுக்காவது உணரத் தொடங்குவதற்கே பாதி ஆயுளுக்கும் மேல் ஆகின்றது. எம் பிம்பம் எதுவென்று நாம் அறியும் போது தான் மற்றவர்கள் பற்றி நாம் வைத்திருக்கும் கணிப்பீடுகள் எல்லாம் மாறுகின்றது. தன்னையே சரியாக உணரமுடியுது இல்லை, இதுக்குள் எப்படி நாம் மற்றவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கின்றோம் என்ற கேள்வி எழுகின்றது.

அப்படி முற்றுப் பெறும் போது, நாம் இந்தவுலகில் இருக்க மாட்டோம்.

உண்மையில் ஏனைய விலங்குகள் தம்மைப் பற்றிய போலி விம்பங்களைக் கொண்டு இருப்பதில்லை. ஆனால் மனுசர் நாம் தான் எல்லா போலிகளையும் சுமந்து கொண்டு எம் முகத்தையே நாம் மறந்து விடுகின்றோம்.

பிரம்மமும் அ-பிரமும் எல்லாம் இருப்பது நாம் வாழும் வாழ்வில் தானே. சமாதி அடைந்த பின் எதுவுமில்லை.

அன்றைக்கு போன பின் அந்தப் பக்கம் போக மனிசி விடுகிறார் இல்லை.🤣

இதை எல்லாம் வீட்ல சொல்லலாமா....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.