Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றம் தற்காலிகமாக தள்ளிவைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை பாராளுமன்றை ஜனாதிபதி 18/01/2022 வரை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளார் (prorogued). 
 

நன்றி @Nathamuni

https://www.dailymirror.lk/breaking_news/Parliament-prorogued/108-226724

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் வீதிக்கு வருமா...? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

இராணுவம் வீதிக்கு வருமா...? 

நாடே வந்திட்டாம்….🤣

(சரத்குமார் வடிவேலு “தெருவுக்கா போறேள்” பகிடியை நினைத்துப்பார்க்கவும்🤣).

சீரியசாக - நீங்கள் சொன்ன மாரி எதோ விரும்பாத விசயத்தை அமல்படுத்துற பிளானோ?

ஆனால் ஒவ்வொரு வருடமும் கூட்டத்தொடர் முடிவதும், அடுத்து ஜனாதிபதி உரையுடன் தொடர்வதும் வழமைதான்.

Extra ordinary gazette தான் யோசிக்க வைக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

இராணுவம் வீதிக்கு வருமா...? 

அநேகமா அதுதான் அடுத்த வழி அவ்வளவு சீக்கிரமா எடுக்க மாட்டார்கள் பக்கத்தில் இருக்கும் பரதேசி கூட்டம் பிச்சை எடுத்தாவது இலங்கா புரியை காப்பாற்றுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றம், விடேச வர்த்தமானி மூலம் ஒத்திவைப்பு!

December 13, 2021

spacer.png

நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2021/170327

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஆனால் ஒவ்வொரு வருடமும் கூட்டத்தொடர் முடிவதும், அடுத்து ஜனாதிபதி உரையுடன் தொடர்வதும் வழமைதான்.

இதுதான் நடந்ததாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இதுதான் நடந்ததாக தெரிகிறது.

இதென்னடா இது... உங்கள் கருத்துக்கே, கமெண்டு போட்டுரசிக்கிறீர்கள் போல...😁

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

இதென்னடா இது... உங்கள் கருத்துக்கே, கமெண்டு போட்டுரசிக்கிறீர்கள் போல...😁

என்னத்தை சொல்ல நாதம், ஒராள் கிளப்பின புரளியால நானும் இலங்கையில் எதோ அரசியல் மாற்றம் நடக்குதோ என நினைத்தேன். 

ஆனாலும் அப்பவே டவுட் தட்டியது (புரளி கிளப்பினவரின் track record அப்படி 😜).

ஆனாலும் உறவுகளுக்கு உண்மையை சொல்ல வேண்டும்தானே அதுதான் என்னை நானே கோர்ட் பண்ணும் படி ஆகிற்று.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

என்னத்தை சொல்ல நாதம், ஒராள் கிளப்பின புரளியால நானும் இலங்கையில் எதோ அரசியல் மாற்றம் நடக்குதோ என நினைத்தேன். 

ஆனாலும் அப்பவே டவுட் தட்டியது (புரளி கிளப்பினவரின் track record அப்படி 😜).

ஆனாலும் உறவுகளுக்கு உண்மையை சொல்ல வேண்டும்தானே அதுதான் என்னை நானே கோர்ட் பண்ணும் படி ஆகிற்று.

கணக்கப் பயப்பிடாதீங்கோ பங்கு.....

கோத்தாலாந்தில (Gotland) எல்லாம் புட்டுக்கப் போகுது, என்ன, கொஞ்சம் முன்ன பின்ன ஆகலாம்.....

அதால..... அங்கை போட்டு வைச்சிறுக்கற.... காசுகளை..... மெதுவா எடுங்கோ..... பதறாமல்...... நீங்கள் பதறினது அதுக்குத் தான் எண்டு தெரியும்.....

கணக்கவே, சிக்கிட்டுது? 🤧

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

கணக்கப் பலம்பாதைங்கோ பங்கு.....

கோத்தாலாந்தில (Gotland) எல்லாம் புட்டுக்கப் போகுது, என்ன, கொஞ்சம் முன்ன பின்ன ஆகலாம்.....

அதால..... அங்கை போட்டு வைச்சிறுக்கற.... காசுகளை..... மெதுவா எடுங்கோ..... பதறாமல்...... நீங்கள் பதறினது அதுக்குத் தான் எண்டு தெரியும்.....

கணக்கவே, சிக்கிட்டுது? 🤧

🤣 கொய்யா…இவர் கொடுத்தது மேலாலயே கூவுறார்ய்யா….🤣

கண்டினியு, கண்டினியு….

இப்படியாச்சும் சனம் எங்கள பெரிய பிஸ்தாக்கள் எண்டு நினைக்கட்டும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

🤣 கொய்யா…இவர் கொடுத்தது மேலாலயே கூவுறார்ய்யா….🤣

கண்டினியு, கண்டினியு….

இப்படியாச்சும் சனம் எங்கள பெரிய பிஸ்தாக்கள் எண்டு நினைக்கட்டும்🤣.

என்ன சொன்னாலும்... நீங்கள் பேக்காய் எண்டு எனக்குத் தெரியும். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்ற அமர்வை முடித்துவிட்டு திடீரென சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ - ஏன்?

4 மணி நேரங்களுக்கு முன்னர்
ராஜபக்ச

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை அமைச்சரவை ஒரு முக்கிய முடிவை எடுக்கவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, திடீரென வெளிநாட்டு பயணமொன்றில் ஈடுபட்டுள்ளார்.

தனிப்பட்ட பயணமாக இன்று அதிகாலை ஜனாதிபதி, சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இலங்கை அமெரிக்க டாலர் பற்றாக்குறை காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்த தருணத்தில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பிலான முக்கிய அமைச்சரவை கூட்டம் இன்று (13) இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கோட்டபாய ராஜபக்ஷ ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிடவில்லை.

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பதானது, கடந்த நவம்பர் மாதம் வரை 1587 மில்லியன் அமெரிக்க டாலர் என ராஜாங்க அமைச்சர் ஷெஹென் சேமசிங்க, நாடாளுமன்ற உரையின் போது தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.

வாகன இறக்குமதி உள்ளிட்ட பல பொருட்களுக்கான இறக்குமதிகள் தடை செய்யப்பட்டுள்ளதுடன், செலவீனத்தை குறைத்துக்கொள்வதற்காக அடுத்த வருடம் அரச சேவைக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்வதில்லை என்ற அறிவிப்பையும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவது தொடர்பில் இன்று ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவிருந்தது.

இலங்கை வாகன இறக்குமதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

எனினும், தீர்மானமிக்க முடிவொன்றை எட்டுவதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி நாட்டை விட்டு திடீரென புறப்பட்டு சென்றுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபபக்ஷ, தனக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களை பயன்படுத்தி, விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, நாடாளுமன்ற அமர்வுகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளை அடுத்த மாதம் 11ம் தேதி கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையிலேயே, ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Parliament

பட மூலாதாரம்,PARLIAMENT

இதன்படி, நாடாளுமன்ற அமர்வுகளை ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளார்.

எதிர்வரும் 18ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில், நாடாளுமன்றம் மீண்டும் ஆரம்பமாகும்.

நாடாளுமன்றத்தின் அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஒய்வு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன, தொடர்ந்தும் அதே பதவியில் இருப்பார்.

நாடாளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நாடாளுமன்ற செயற்குழுக்களின் நடவடிக்கைகளும் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் அந்த செயற்குழுக்களுக்கான நியமனங்கள் புதிதாக இடம்பெற வேண்டும்.

நாடாளுமன்ற அமர்வுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னணியிலேயே, அவர் சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபப், முக்கிய  சீன அதிகாரிகலைச் சந்திக்கப்போனதாக ஒரு தகவல் . அதனை உறுதிசெய்ய முடியவில்லை. 🧐

  • கருத்துக்கள உறவுகள்

இனி அரசவையில் ராஜபக்க்ஷேக்களை தவிர யாரும் அங்கம் வகிக்க முடியாது என்கிற நிலையும் வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.