Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர் மெலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய அமைப்பு குறித்த பாதீட்டை எதிர்க்கும். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். புதிய விடயம் அல்ல. ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது. அது மிக விரைவில் வெளிவரும்.
ஊழல் செய்து தனிபர் உழைப்பதற்கான ஓர் இடமாக மாறியுள்ளது. இதனை மக்கள் மிக விரைவிலே உணர தொடங்குவார்கள். அந்த கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு ஒருநாளும் முடிவுக்கு வர முடியாது. ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடும் நிலைதான் இருக்கின்றது என்றால் அது ஒருபோதும் மக்களிற்கு சார்பான விடயமாக மாறப்போவதில்லை.
Gajendrakumar-Ponnambalam-300x227.jpg
அந்த மாநகர சபை ஊடாக எத்தனையோ விடயங்களை சரிப்படுத்தியிருக்கலாம். இன்று உலக வங்கி கோடி டொலர் கணக்கில் உதவிகளை செய்துவருகின்ற நிலையில், அந்த உதவிகளை சிறிலங்கா அரசும் ஏனைய தரப்புக்களும் ஊழல் மற்றும் வேறு காரணங்களிற்காகவும் சரியான ஆய்வுகளை செய்யாமல் க்கின்ற இடத்தில், மாநகர சபை அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி நவீன நகரமாக மாற்றியமைப்பதற்கு இந்த நிதிகளை பயன்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்.
மாநகர சபை எல்லைக்குள் இருக்கின்ற மத்திய அரசு செய்யக்கூடிய வேலைகளைக்கூட சரியான முறையில் நிபுணத்துவம் இன்றி ஆய்வுகள் செய்யாமல் வெறுமனே கண் துடைப்புக்காக செய்ததாக இல்லாமல், உண்மையி்ல் ஆக்கபூர்வமான அபிவிருத்தியாக மாற்றியமைக்கக்கூடிய கண்காணிப்பாக செயற்பட்டிருக்க வேண்டும்.
இன்று மழைவந்தால் கோடிக்கணக்கில் அதனை சீர் செய்வதற்காக நிதியை செலவு செய்கின்றார்கள். ஆனால் வெள்ளம் அப்படியே நிக்கின்றது. ஏனேனில், ஏற்றம் தாழ்வு தொடர்பில் எந்தவித கணிப்பும் இல்லாது, வெறுமனே வீதியில் வாய்க்காலை கட்டியிருக்கின்றார்கள்.
இவ்வாறான மிக மோசமான மோசடிகள் எல்லாமே, மாநகர சபைக்குள் மாத்திரமல்ல, உள்ளுராட்சி சபைகளிற்குள்ளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களில் தேசிய சிந்தனை இல்லாமல், வெறுமனே உழைக்கின்ற சிந்தனையோடு செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 

https://thinakkural.lk/article/155627

 

இவர் பாராட்டிய ஒரு விடயம் ஏதும் உள்ளதா? எல்லாக் கட்சிகளுடனும் முரண், எல்லாவற்றிலும் ஒரு குறை....

39 minutes ago, நிழலி said:

இவர் பாராட்டிய ஒரு விடயம் ஏதும் உள்ளதா? எல்லாக் கட்சிகளுடனும் முரண், எல்லாவற்றிலும் ஒரு குறை....

கஜேந்தரகுமாரும் தமிழர் தானே. பிறகேன் யோசிக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கஜாவின் அலப்பறைகள் ஆரம்பம் 
இன்னும் எங்க ஆதரவான சக்திகளை காணோம்  

  • கருத்துக்கள உறவுகள்

 

தங்களது சுயநலனுக்காய்  மணியை எப்படியாவது தோக்கடிக்க நினைக்கிற சைக்கிள் , கூட்டமைப்பினரை விட டக்கி, அங்கஜன் எவ்வளவோ மேல் 

 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

 

தங்களது சுயநலனுக்காய்  மணியை எப்படியாவது தோக்கடிக்க நினைக்கிற சைக்கிள் , கூட்டமைப்பினரை விட டக்கி, அங்கஜன் எவ்வளவோ மேல் 

 

உண்மைதான் ஊழல் மோசடி மலை விழுங்கிகளுக்கு முண்டு கொடுக்கும் இவர்கள் எவ்வளவோ மேல்..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

உண்மைதான் ஊழல் மோசடி மலை விழுங்கிகளுக்கு முண்டு கொடுக்கும் இவர்கள் எவ்வளவோ மேல்..

ஏன் என்றால் இவர்கள் ஊழலே செய்யாத சுத்த தங்கங்கள் தானே 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஏன் என்றால் இவர்கள் ஊழலே செய்யாத சுத்த தங்கங்கள் தானே 

ஆமாம் சனாதிபதி பிரதமர் முதற்கொண்டு டக்கி வரை செய்யாத ஊழலா…

அதன் பிரதிபலனை இன்று நாடே அனுபவிக்கின்றது

கடைசியில் பாதிப்பு அப்பாவி மக்கள் தான்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

ஆமாம் சனாதிபதி பிரதமர் முதற்கொண்டு டக்கி வரை செய்யாத ஊழலா…

அதன் பிரதிபலனை இன்று நாடே அனுபவிக்கின்றது

எல்லாரும் ஊழல்வாதிகள் ...நான் சொல்ல வருவது மணியை நோக்கி கையை காட்டும் முன் நான் சுத்தமானவரா என்று கஜன் தன்னை தானே கிள்ளி பார்க்க வேண்டும் ...மணி ,டக்கி ஊழல் செய்தாலும் மக்களுக்கு தங்களுக்கு முடிந்ததை செய்கிறார்கள் ...இவர்கள் மாதிரி மக்களை துண்டற பேய் காட்டவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

கஜன் செய்த ஊழல் என்ன?

25 minutes ago, ரதி said:

எல்லாரும் ஊழல்வாதிகள் ...நான் சொல்ல வருவது மணியை நோக்கி கையை காட்டும் முன் நான் சுத்தமானவரா என்று கஜன் தன்னை தானே கிள்ளி பார்க்க வேண்டும் ...மணி ,டக்கி ஊழல் செய்தாலும் மக்களுக்கு தங்களுக்கு முடிந்ததை செய்கிறார்கள் ...இவர்கள் மாதிரி மக்களை துண்டற பேய் காட்டவில்லை 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

கஜன் செய்த ஊழல் என்ன?

 

சந்தர்ப்பமே தராமல் கேள்விகேட்டால்  என்ன செய்வார்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

கஜன் செய்த ஊழல் என்ன?

 

மணி செய்த ஊழல் என்ன என்று முதலில் நீங்கள் சொல்லுங்கோ 
எப்படியாவது பாதீட்டை தோக்கடித்து மணியை  வீட்டுக்கு அனுப்ப பாத்தினம் ...முடியல்ல என்டவுடன் ஒப்பாரி ...தேசியம் என்று கத்துறது மகிந்தாவை கண்டவுடன் கையை கட்டிக் கொண்டு நிக்கிறது ...இவர்களை விட டக்கி எவ்வளவோ மேல் ...தான் இப்படி தான் இருப்பேன் என்று சொல்லி அதே பாதையில் தொடர்ந்தும் பயணிக்கிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மணி செய்த ஊழல் என்ன என்று முதலில் நீங்கள் சொல்லுங்கோ 
எப்படியாவது பாதீட்டை தோக்கடித்து மணியை  வீட்டுக்கு அனுப்ப பாத்தினம் ...முடியல்ல என்டவுடன் ஒப்பாரி ...தேசியம் என்று கத்துறது மகிந்தாவை கண்டவுடன் கையை கட்டிக் கொண்டு நிக்கிறது ...இவர்களை விட டக்கி எவ்வளவோ மேல் ...தான் இப்படி தான் இருப்பேன் என்று சொல்லி அதே பாதையில் தொடர்ந்தும் பயணிக்கிறார் 

சளாப்பாதீர்கள், மணி ஊழல் செய்தவர் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

ஆனால் மணியை ஊழல் செய்தவர் என்று குறுப்பிட்டதும் இல்லாது

5 hours ago, ரதி said:

எல்லாரும் ஊழல்வாதிகள் ...நான் சொல்ல வருவது மணியை நோக்கி கையை காட்டும் முன் நான் சுத்தமானவரா என்று கஜன் தன்னை தானே கிள்ளி பார்க்க வேண்டும் ...மணி ,டக்கி ஊழல் செய்தாலும் மக்களுக்கு தங்களுக்கு முடிந்ததை செய்கிறார்கள் ...இவர்கள் மாதிரி மக்களை துண்டற பேய் காட்டவில்லை 

கஜனையும் ஊழல் செய்தவர் என்று நீங்கள் கூறிவிட்டு இப்போது ஓடுகிறீர்கள்.

5 hours ago, ரதி said:

எல்லாரும் ஊழல்வாதிகள் ...நான் சொல்ல வருவது மணியை நோக்கி கையை காட்டும் முன் நான் சுத்தமானவரா என்று கஜன் தன்னை தானே கிள்ளி பார்க்க வேண்டும் ...மணி ,டக்கி ஊழல் செய்தாலும் மக்களுக்கு தங்களுக்கு முடிந்ததை செய்கிறார்கள் ...இவர்கள் மாதிரி மக்களை துண்டற பேய் காட்டவில்லை 

என்ன எழுதுவது என்று புரியாமலே எழுதுகிறீர்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

கஜனையும் ஊழல் செய்தவர் என்று நீங்கள் கூறிவிட்டு இப்போது ஓடுகிறீர்கள்.

பாவம் மீரா அப்பாவியாக இருக்கிறாரே! அனுபவம் புதுசு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.