Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

large.7084530f-bba3-4f5a-89c5-74d8ff7411c5.jpg.8b71b33e463445f7b01e38edc64a0ece.jpg

எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான்..!

****************************

பஸ்ஸில் ஏறிய தாயிடம் 

பிள்ளைக்கு எத்தின வயதென

கேட்டார் நடத்துனர். 

தாய் சொன்னாள் நான்கென்று

பிள்ளை சொன்னான் ஆறென்று

மெதுவாக..

அதட்டினாள் பிள்ளையை

நாலென்று சொல்லு. 

 

சினிமாவுக்கு கூட்டிச்சென்றார்

தந்தை..

எட்டு வயதுக்கு மேல் டிக்கட்

எடுக்க வேண்டுமென்றார்கள்.

 

இவனுக்கு ஏழு வயதென்றார்

 இல்லையப்பா.. 

ஒன்பதென்றான் பிள்ளை 

அதற்கு அதட்டி ஏதேதோ 

சொன்னார் அப்பா

 

 இப்போது  மதுபான கடையில்

பிள்ளை நிற்க்கிறான் 

 இருபது வயதுக்கு மேல்தான்

  வாங்கலாம் என்றார் 

கடைக்காரர்

இருபத்தி இரண்டென்றான் 

பிள்ளை..

பதினெட்டு வயதிலும் 

நாலைக் கூட்டினேன்

அம்மா,அப்பா குறைத்த 

வயதுகள் என்றான். 

 

தாயோ தலை தலையென

 அடித்து அழுதாள்- எனிமேல்

பட்டணிகிடந்தாலும்

பொய்யில்லா வாழ்வே

புனிதமானதென்றாள்

போன பஸ்சிற்கு கை

காட்டிய படியே.

பொய்யென்ற விதைதன்னை

பிள்ளைகள் மனதில் நட்டால்

கஞ்சா,களவு, சூது போதை

வீட்டுக்கே உதவாத

பெரு விருட்சமாகும்.

பெற்றோரே எச்சரிக்கை.

அன்புடன் -பசுவூர்க்கோபி.

Edited by பசுவூர்க்கோபி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படிப்பினைக்கவி வரிகள். நன்றிகளும் பாராட்டுக்களும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பசுவூர்க்கோபி said:

 

large.7084530f-bba3-4f5a-89c5-74d8ff7411c5.jpg.8b71b33e463445f7b01e38edc64a0ece.jpg

எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான்..!

****************************

பஸ்ஸில் ஏறிய தாயிடம் 

பிள்ளைக்கு எத்தின வயதென

கேட்டார் நடத்துனர். 

தாய் சொன்னாள் நான்கென்று

பிள்ளை சொன்னான் ஆறென்று

மெதுவாக..

அதட்டினாள் பிள்ளையை

நாலென்று சொல்லு. 

 

சினிமாவுக்கு கூட்டிச்சென்றார்

தந்தை..

எட்டு வயதுக்கு மேல் டிக்கட்

எடுக்க வேண்டுமென்றார்கள்.

 

இவனுக்கு ஏழு வயதென்றார்

 இல்லையப்பா.. 

ஒன்பதென்றான் பிள்ளை 

அதற்கு அதட்டி ஏதேதோ 

சொன்னார் அப்பா

 

 இப்போது  மதுபான கடையில்

பிள்ளை நிற்க்கிறான் 

 இருபது வயதுக்கு மேல்தான்

  வாங்கலாம் என்றார் 

கடைக்காரர்

இருபத்தி இரண்டென்றான் 

பிள்ளை..

பதினெட்டு வயதிலும் 

நாலைக் கூட்டினேன்

அம்மா,அப்பா குறைத்த 

வயதுகள் என்றான். 

 

தாயோ தலை தலையென

 அடித்து அழுதாள்- எனிமேல்

பட்டணிகிடந்தாலும்

பொய்யில்லா வாழ்வே

புனிதமானதென்றாள்

போன பஸ்சிற்கு கை

காட்டிய படியே.

பொய்யென்ற விதைதன்னை

பிள்ளைகள் மனதில் நட்டால்

கஞ்சா,களவு, சூது போதை

வீட்டுக்கே உதவாத

பெரு விருட்சமாகும்.

பெற்றோரே எச்சரிக்க.

அன்புடன் -பசுவூர்க்கோபி.

நல்லதொரு அறிவுரை கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

  • கருத்துக்கள உறவுகள்

பசுவூர்க்கோபி என்றால் கவிதைதான் கருத்தில் வரும். எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் கவிதைக்கு வாழ்த்துக்கள். 

 

காரியம் தடைபட்டால் நன்மை கெடும்.!

காரணம் வெளிபட்டால் உண்மை சுடும்.!  -   யெயகாந்தன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

நல்ல படிப்பினைக்கவி வரிகள். நன்றிகளும் பாராட்டுக்களும் 

உளமார்ந்த  நன்றி  அக்கா

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பசுவூர்க்கோபி said:

உளமார்ந்த  நன்றி  அக்கா

பசுவூர்க்கோபியை நான் ஆண் என்று இதுவரை எண்ணியிருந்தேன். இல்லைப் பெண் என்று அறியத்தந்த சோதரி நிலாமதிக்கு நன்றிகள்!! இவர் ௐளவைக் கிழவியின் மரபில் வந்தவராக இருக்குமோ.? கவிதைகள் அப்படிப் பாச்சல் எடுக்கின்றன.🤗

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

பசுவூர்க்கோபியை நான் ஆண் என்று இதுவரை எண்ணியிருந்தேன். இல்லைப் பெண் என்று அறியத்தந்த சோதரி நிலாமதிக்கு நன்றிகள்!! இவர் ௐளவைக் கிழவியின் மரபில் வந்தவராக இருக்குமோ.? கவிதைகள் அப்படிப் பாச்சல் எடுக்கின்றன.🤗

என்ன சொல்ல வருகிறீர்கள் பஞ் அண்ணா ?  சும்மா கலாய்க்கிறீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2022 at 06:10, பசுவூர்க்கோபி said:

தாயோ தலை தலையென

 அடித்து அழுதாள்- எனிமேல்

பட்டணிகிடந்தாலும்

பொய்யில்லா வாழ்வே

புனிதமானதென்றாள்

போன பஸ்சிற்கு கை

காட்டிய படியே.

நான் நம்ப மாட்டேன்.

3 minutes ago, நிலாமதி said:

என்ன சொல்ல வருகிறீர்கள் பஞ் அண்ணா ?

எனக்கும் தான் தலையை சுத்துது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

பசுவூர்க்கோபியை நான் ஆண் என்று இதுவரை எண்ணியிருந்தேன். இல்லைப் பெண் என்று அறியத்தந்த சோதரி நிலாமதிக்கு நன்றிகள்!! இவர் ௐளவைக் கிழவியின் மரபில் வந்தவராக இருக்குமோ.? கவிதைகள் அப்படிப் பாச்சல் எடுக்கின்றன.🤗

உங்களின்  பஞ்  டயலாக்குக்கு நன்றிகள்.
அன்புடன் ஐ.கோவிந்தநாதன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2022 at 17:18, Paanch said:

பசுவூர்க்கோபி என்றால் கவிதைதான் கருத்தில் வரும். எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் கவிதைக்கு வாழ்த்துக்கள். 

 

காரியம் தடைபட்டால் நன்மை கெடும்.!

காரணம் வெளிபட்டால் உண்மை சுடும்.!  -   யெயகாந்தன்.

எனது ஆக்கத்திற்கு ஊக்கம் தந்துள்ளீர்கள் நன்றிகள்.

On 12/1/2022 at 17:03, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு அறிவுரை கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

அன்புடன் நன்றிகள் தோழர்.

  • கருத்துக்கள உறவுகள்

பொய்சொல்லல் கூடாது 

சொல்லிக்கொண்டே வந்தால் 

பின்னால் வருந்த நேரிடும்.....!

நல்ல படிப்பினை கோபி......!  👏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

என்ன சொல்ல வருகிறீர்கள் பஞ் அண்ணா ?  சும்மா கலாய்க்கிறீர்களா ?

1 hour ago, பசுவூர்க்கோபி said:

உங்களின்  பஞ்  டயலாக்குக்கு நன்றிகள்.
அன்புடன் ஐ.கோவிந்தநாதன்.

பார்த்தீர்களா சோதரி நிலாமதி! நான் சற்று கவனக்குறைவுடன், கலாய்க்கவும்தான் அப்படி ஊட்டம் இட்டேன். ஆனாலும் கறுப்பாடு வெளிவந்துவிட்டது. இனி பசுவூர்க்கோபி அவர்கள் தயக்கமின்றி தனது சுயவிபரத்தில் 'ஆண்' (Gender:Male) என்று, யாவரும் அறியப் போடலாம்.🤗 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Paanch said:

பார்த்தீர்களா சோதரி நிலாமதி! நான் சற்று கவனக்குறைவுடன், கலாய்க்கவும்தான் அப்படி ஊட்டம் இட்டேன். ஆனாலும் கறுப்பாடு வெளிவந்துவிட்டது. இனி பசுவூர்க்கோபி அவர்கள் தயக்கமின்றி தனது சுயவிபரத்தில் 'ஆண்' (Gender:Male) என்று, யாவரும் அறியப் போடலாம்.🤗 

 நன்றி பாஞ்.. நானும் கலாய்க்கிறீர்கள் என தான் எண்ணினேன். .உங்கள் தபால் பெட்டி ஏன் பூட்டி இருக்கு ?  யாழ் கள வாழ்த்து சொல்லும் போது "ஆலமரம் போல "என எடுத்துக் காட்டி சிறப்பாக எழுதி இருந்தீர்கள் உங்களை பாராடட   நினைத்தேன் . பெட்டியின் பூடடை திறந்து விடுங்கள். நன்றி     

பொய் சொல்லாதே, களவு செய்யாதே அப்படி செய்தால், கடவுள் கோபித்து தண்டனை கொடுப்பார், சாமி கண்ணைக் குத்திவிடும், சாத்தான் பிடிச்சு போடும் என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் இருந்து தான் குழந்தைகள் பொய் பழக ஆரம்பிக்கின்றனர். இப்படிச் சொல்லிக் கொடுக்க எவரும் இல்லை என்பதால் தான் மிச்ச மிருகங்கள் ஒளிவு மறைவின்றி உண்மையாக இருக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

பொய் சொல்லாதே, களவு செய்யாதே அப்படி செய்தால், கடவுள் கோபித்து தண்டனை கொடுப்பார், சாமி கண்ணைக் குத்திவிடும், சாத்தான் பிடிச்சு போடும் என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் இருந்து தான் குழந்தைகள் பொய் பழக ஆரம்பிக்கின்றனர். இப்படிச் சொல்லிக் கொடுக்க எவரும் இல்லை என்பதால் தான் மிச்ச மிருகங்கள் ஒளிவு மறைவின்றி உண்மையாக இருக்கின்றன.

நன்றிகள் நிழலி 

22 hours ago, suvy said:

பொய்சொல்லல் கூடாது 

சொல்லிக்கொண்டே வந்தால் 

பின்னால் வருந்த நேரிடும்.....!

நல்ல படிப்பினை கோபி......!  👏

நன்றிகள்  அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.