Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை!

FZS4-750x360.jpg

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு எதிர்வரும் மாநகர சபை அமர்வில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினரும் தமிழீழ விடுதலை   உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

இலங்கை   தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப்  போராட்டத்தின் ஓரங்கமாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)   நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக இன்று  அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காரைதீவு உள்ளிட்ட  பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

தில் குறித்த தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஒவ்வொருவரும் தத்தமது  கையொப்பங்களை இட்டு  இப்போராட்டத்தில் இணைந்து கொண்டு உங்களினதும்  உங்கள் சந்ததியின் பாதுகாப்புக்காகவும் பாடுபட முன்வர வேண்டும்.

இந்த நாட்டில் கொடூரமான தடைச்சட்டமாக பயங்கரவாத தடைச்சட்டம் இருப்பதை நாம் அறிவோம்.அந்த வகையில் தற்போது இலங்கை   தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டமானது மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே  இந்த சட்டத்தை முற்றாக எமது நாட்டில் இருந்து அகற்றுவதற்கு தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் அனைவரும் முன்வர வேண்டும்.அத்துடன் நாம் அங்கம் வகிக்கின்ற கல்முனை மாநகர  சபையில் கூட எதிர்வரும் மாதாந்த அமர்வில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு   பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளோம்.

எமது மாநகர சபைக்கு தமிழர்கள் தரப்பில் தார்மீக ஆதரவினை வழங்கி வருகின்றோம்.அந்த வகையில் முழு மாநகர உறுப்பினர்களும் இப்பிரேரணைக்கு தத்தமது ஆதரவினை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1268049

  • கருத்துக்கள உறவுகள்

உலக வங்கி போன்றவற்றில் கடன் எடுப்பதாயின் இந்த சட்டங்கள் முழுதாக நீக்கப்படணும் நாடு போற போக்குக்கு உலக வங்கி காலில் விழத்தான் வேணும் சிங்கள இனவாத அரசே அந்த சட்டத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை சுத்துமாத்து சுமத்திரன் க்கு சிங்கள அரசே பச்சை கொடி காட்டி இருக்கும் அதான் இவ்வழக்காலமும் இல்லாமல் பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக கையெழுத்தாம் பிரேரணை என்று பலமாய் சவுண்டு விடுகினம் ஏதோ இவர்கள் போராடித்தான் சட்டம் நீக்கப்ட்டது போல் காட்ட இவ்வளவு உருட்டு பிரட்டு உண்மையில் எடுக்கணும் என்று நினைத்தால் சுத்துமாத்து தனக்கு கிளைமர் குண்டு வைத்தார்கள் என்று முன்னாள் அங்கவீன போராளிகள் அந்த 20 பேரையும் விடுதலை செய்வாரா அந்த வழக்கை கைவிட்டு அந்த 20 போராளி குடும்பங்களுக்கும் நிம்மதி கொடுப்பாரா ?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பெருமாள் said:

உலக வங்கி போன்றவற்றில் கடன் எடுப்பதாயின் இந்த சட்டங்கள் முழுதாக நீக்கப்படணும் நாடு போற போக்குக்கு உலக வங்கி காலில் விழத்தான் வேணும் சிங்கள இனவாத அரசே அந்த சட்டத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை சுத்துமாத்து சுமத்திரன் க்கு சிங்கள அரசே பச்சை கொடி காட்டி இருக்கும் அதான் இவ்வழக்காலமும் இல்லாமல் பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக கையெழுத்தாம் பிரேரணை என்று பலமாய் சவுண்டு விடுகினம் ஏதோ இவர்கள் போராடித்தான் சட்டம் நீக்கப்ட்டது போல் காட்ட இவ்வளவு உருட்டு பிரட்டு உண்மையில் எடுக்கணும் என்று நினைத்தால் சுத்துமாத்து தனக்கு கிளைமர் குண்டு வைத்தார்கள் என்று முன்னாள் அங்கவீன போராளிகள் அந்த 20 பேரையும் விடுதலை செய்வாரா அந்த வழக்கை கைவிட்டு அந்த 20 போராளி குடும்பங்களுக்கும் நிம்மதி கொடுப்பாரா ?

சுமந்திரனின், புத்தி ஏன்... நெடுக, குறுக்குவழியிலை போகுதோ.... 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின், புத்தி ஏன்... நெடுக, குறுக்குவழியிலை போகுதோ.... 

அவருக்கு நேர் என்றால் 'ஒவ்வாமை' யாம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

உலக வங்கி போன்றவற்றில் கடன் எடுப்பதாயின் இந்த சட்டங்கள் முழுதாக நீக்கப்படணும் நாடு போற போக்குக்கு உலக வங்கி காலில் விழத்தான் வேணும் சிங்கள இனவாத அரசே அந்த சட்டத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை சுத்துமாத்து சுமத்திரன் க்கு சிங்கள அரசே பச்சை கொடி காட்டி இருக்கும் அதான் இவ்வழக்காலமும் இல்லாமல் பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக கையெழுத்தாம் பிரேரணை என்று பலமாய் சவுண்டு விடுகினம் ஏதோ இவர்கள் போராடித்தான் சட்டம் நீக்கப்ட்டது போல் காட்ட இவ்வளவு உருட்டு பிரட்டு உண்மையில் எடுக்கணும் என்று நினைத்தால் சுத்துமாத்து தனக்கு கிளைமர் குண்டு வைத்தார்கள் என்று முன்னாள் அங்கவீன போராளிகள் அந்த 20 பேரையும் விடுதலை செய்வாரா அந்த வழக்கை கைவிட்டு அந்த 20 போராளி குடும்பங்களுக்கும் நிம்மதி கொடுப்பாரா ?

2015 இல் கைக்கு வந்ததை விட்டுவிட்டு இப்போ பெயருக்காக புலம்புகிறார்கள்.

2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின், புத்தி ஏன்... நெடுக, குறுக்குவழியிலை போகுதோ.... 

வக்கீல் என்றால் அப்படி தான் யோசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத சட்டமானது... உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும் – கல்முனை மாநகர முதல்வர்

பயங்கரவாத சட்டமானது    உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும்.மனித குலத்திற்கு தேவையற்றதாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை பகுதியில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன்   தலைமையில்  இடம்பெற்ற  கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ”இந்த கையெழுத்து போராட்டமானது இலங்கையில் காணப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாமல் செய்வதற்காகவே ஆகும்.1979 ஆண்டு பயங்கரவாத சட்டமானது இலங்கையில்   உருவாக்கப்பட்டது.

அது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும்.ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட மனித உரிமை பட்டயத்தில் கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் எதிராக கூறப்பட்ட சட்டமாகும்.மனித குலத்திற்கு தேவையற்றதாகும்.

இயற்கை நீதி விதி கோட்பாட்டிற்கு எதிரான ஒரு சட்டம்.இந்த சட்டத்தின் ஊடாக ஒருவர் கைது செய்யப்பட்டால் தன்னுடைய கருத்தை சொல்வதற்கு எந்த வாய்ப்பும் அவருக்கு கிடையாது” என குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1268182

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2022 at 23:57, பெருமாள் said:

உலக வங்கி போன்றவற்றில் கடன் எடுப்பதாயின் இந்த சட்டங்கள் முழுதாக நீக்கப்படணும் நாடு போற போக்குக்கு உலக வங்கி காலில் விழத்தான் வேணும் சிங்கள இனவாத அரசே அந்த சட்டத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை சுத்துமாத்து சுமத்திரன் க்கு சிங்கள அரசே பச்சை கொடி காட்டி இருக்கும் அதான் இவ்வழக்காலமும் இல்லாமல் பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக கையெழுத்தாம் பிரேரணை என்று பலமாய் சவுண்டு விடுகினம் ஏதோ இவர்கள் போராடித்தான் சட்டம் நீக்கப்ட்டது போல் காட்ட இவ்வளவு உருட்டு பிரட்டு உண்மையில் எடுக்கணும் என்று நினைத்தால் சுத்துமாத்து தனக்கு கிளைமர் குண்டு வைத்தார்கள் என்று முன்னாள் அங்கவீன போராளிகள் அந்த 20 பேரையும் விடுதலை செய்வாரா அந்த வழக்கை கைவிட்டு அந்த 20 போராளி குடும்பங்களுக்கும் நிம்மதி கொடுப்பாரா ?

சோழியன் குடுமி சும்மா ஆடாது

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

சோழியன் குடுமி சும்மா ஆடாது

தங்களிடம் பெட்டி  வாங்குபவர்கள் மறுபடியும் வந்தால் சிங்களத்துக்கு நல்லது யாராவது எதிராளி வந்து மனிதஉரிமை அது இது என்று குடைச்சல் கொடுத்தால் முன்னைய காலம்கள் போல் பரராஜசிங்கத்தை போட்டதை போல் போட முடியாது அதனால் சிங்களத்தின் ஆசிர்வாதத்துடன் கையெழுத்து அதை பார்த்து பயந்து பயங்கரவாத தடை  சட்டத்தை எடுத்தார்கள் மறுபடியும் சிங்கள அடிவருடிகள் சம்  சும்  சைக்கிள் எல்லாமே வந்து தமிழர் அரசியலை சகதியாக்குவினம் இந்த சூட்சுமம் அங்குள்ள மக்கள் அறியமாட்டார்கள் இங்குள்ள சும் விசிறிகளும் பல்லில் ரத்தம் வடிய சிரிப்பார்கள் அவர்களுக்கு சீதன காணி  வீடுகளுக்கு சும் உத்தரவாதம் கொடுத்து இருப்பார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.