Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலுவையில் ஒரு கோடிக்கு மேல் சுகாதார அமைச்சர் கெஹலியவின் வீட்டு மின் கட்டணம் - உடனடியாக செலுத்துமாறு மின்சார சபை கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்  வாசஸ்தலத்தின் மின் கட்டணமான ஒரு கோடியே 20 இலட்சத்து  56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை (12,056,803.38) உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், அமைச்சர் கெஹலியவின் குறித்த வீட்டின் மின் கட்டணம் செலுத்தப்படாது இருந்து வந்துள்ளதாகவும், அதன் பிரகாரமே  இவ்வளவு பாரிய தொகை கட்டணமாக சேர்ந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தகைய மிகப் பெரும் தொகை மின் கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில், அதனை செலுத்தச் சொல்வற்காக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கடந்த 2021 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கள விஜயம் ஒன்றினை, அமைச்சர் கெஹலியவின் வீட்டுக்கு முன்னெடுத்துள்ளனர்.  

இதன்போது அமைச்சர் கெஹலிய அங்கிருக்கவில்லை எனவும், அவரது மனைவியை சந்தித்து மின் கட்டணத்தின் விபரப் பட்டியலையும் கையளித்து அதனை செலுத்துமாறு அதிகாரிகள்  அறிவித்துள்ளனர்.

எனினும் அதன் பின்னரும் அந்த கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கும் இலங்கை மின்சார சபை,  கடந்த  2022 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

எனினும் நேற்று வரை அக்கட்டணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை என இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிலுவையில் ஒரு கோடிக்கு மேல் சுகாதார அமைச்சர் கெஹலியவின் வீட்டு மின் கட்டணம் - உடனடியாக செலுத்துமாறு மின்சார சபை கடிதம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

(எம்.எப்.எம்.பஸீர்)

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்  வாசஸ்தலத்தின் மின் கட்டணமான ஒரு கோடியே 20 இலட்சத்து  56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை (12,056,803.38) உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், அமைச்சர் கெஹலியவின் குறித்த வீட்டின் மின் கட்டணம் செலுத்தப்படாது இருந்து வந்துள்ளதாகவும், அதன் பிரகாரமே  இவ்வளவு பாரிய தொகை கட்டணமாக சேர்ந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தகைய மிகப் பெரும் தொகை மின் கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில், அதனை செலுத்தச் சொல்வற்காக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கடந்த 2021 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கள விஜயம் ஒன்றினை, அமைச்சர் கெஹலியவின் வீட்டுக்கு முன்னெடுத்துள்ளனர்.  

இதன்போது அமைச்சர் கெஹலிய அங்கிருக்கவில்லை எனவும், அவரது மனைவியை சந்தித்து மின் கட்டணத்தின் விபரப் பட்டியலையும் கையளித்து அதனை செலுத்துமாறு அதிகாரிகள்  அறிவித்துள்ளனர்.

எனினும் அதன் பின்னரும் அந்த கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கும் இலங்கை மின்சார சபை,  கடந்த  2022 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

எனினும் நேற்று வரை அக்கட்டணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை என இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிலுவையில் ஒரு கோடிக்கு மேல் சுகாதார அமைச்சர் கெஹலியவின் வீட்டு மின் கட்டணம் - உடனடியாக செலுத்துமாறு மின்சார சபை கடிதம் | Virakesari.lk

அப்ப எப்பிடி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு டீசல் காசு கட்டுவது?!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இதன்போது அமைச்சர் கெஹலிய அங்கிருக்கவில்லை எனவும், அவரது மனைவியை சந்தித்து மின் கட்டணத்தின் விபரப் பட்டியலையும் கையளித்து அதனை செலுத்துமாறு அதிகாரிகள்  அறிவித்துள்ளனர்.

சம்சாரம் அது மின்சாரம். மின்சார பில்லை சம்சாரத்திடம் கொடுத்தால்... பணம் கிடைக்குமா....!! 😲

திருநெல்வேலிக்கே அல்வாவா.?? 😋 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

(எம்.எப்.எம்.பஸீர்)

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்  வாசஸ்தலத்தின் மின் கட்டணமான ஒரு கோடியே 20 இலட்சத்து  56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை (12,056,803.38) உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், அமைச்சர் கெஹலியவின் குறித்த வீட்டின் மின் கட்டணம் செலுத்தப்படாது இருந்து வந்துள்ளதாகவும், அதன் பிரகாரமே  இவ்வளவு பாரிய தொகை கட்டணமாக சேர்ந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தகைய மிகப் பெரும் தொகை மின் கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில், அதனை செலுத்தச் சொல்வற்காக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கடந்த 2021 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கள விஜயம் ஒன்றினை, அமைச்சர் கெஹலியவின் வீட்டுக்கு முன்னெடுத்துள்ளனர்.  

இதன்போது அமைச்சர் கெஹலிய அங்கிருக்கவில்லை எனவும், அவரது மனைவியை சந்தித்து மின் கட்டணத்தின் விபரப் பட்டியலையும் கையளித்து அதனை செலுத்துமாறு அதிகாரிகள்  அறிவித்துள்ளனர்.

எனினும் அதன் பின்னரும் அந்த கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கும் இலங்கை மின்சார சபை,  கடந்த  2022 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

எனினும் நேற்று வரை அக்கட்டணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை என இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிலுவையில் ஒரு கோடிக்கு மேல் சுகாதார அமைச்சர் கெஹலியவின் வீட்டு மின் கட்டணம் - உடனடியாக செலுத்துமாறு மின்சார சபை கடிதம் | Virakesari.lk

ஏழு வருடமாக…. ஒரு முக்கிய அமைச்சர் மின்சார கட்டணம் கட்டாமல் இருக்க…
தொடர்ந்தும் மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கும் மின்சார சபையை என்னவென்பது.

வீட்டிற்கு வழங்கும் மின்சாரத்தை… நீதிமன்ற அனுமதியுடன் துண்டித்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு வங்குரோத்து அடையாமல் என்ன செய்யும்? சட்டங்களும் கட்டளைகளும் ஏழை மக்களுக்கே! இவர்கள் ஏன் அநியாயத்துக்கு அரசுக்கு முண்டு கொடுக்கிறார்கள் என்பது இப்போ தெளிவாக தெரிகிறது. அப்படியே விமல் வீர வன்சா மற்றும் ஏனைய அரசியல்வாதிகளின்  மின் கட்டண நிலுவையையும் சரி பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லட்ஷணத்தில நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வேற!இன்னும் எங்கெங்க கடன் நிலுவையில் இருக்கோ? இனித்தான் ஒவ்வொன்றாய் ஒவ்வொருவரின் நிலுவையும் வெளியில வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

ஏழு வருடமாக…. ஒரு முக்கிய அமைச்சர் மின்சார கட்டணம் கட்டாமல் இருக்க…
தொடர்ந்தும் மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கும் மின்சார சபையை என்னவென்பது.

வீட்டிற்கு வழங்கும் மின்சாரத்தை… நீதிமன்ற அனுமதியுடன் துண்டித்து விடுங்கள்.

2000ரூபாவிற்கு அதிகமாக இருந்தாலே சிவப்பு கடதாசி வருகிறது வீட்டுக்கு அடுத்த தடவை மின் துண்டிப்பு என இலங்கை சட்ட டிசைன் அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

2000ரூபாவிற்கு அதிகமாக இருந்தாலே சிவப்பு கடதாசி வருகிறது வீட்டுக்கு அடுத்த தடவை மின் துண்டிப்பு என இலங்கை சட்ட டிசைன் அப்படி.

அது சாதாரண மக்களுக்கான சட்ட வரைபு! அதிலும் ஒரு மாதத்தில் இரண்டு தடவை வசூலித்ததும் இல்லாமல், நிலுவை என துண்டு அனுப்பிய சந்தர்ப்பங்களையும்  கடந்து வந்துள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.