Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – மாவை

 
 
 
 
 

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என முன்னாள் யாழ் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தை வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ”பயங்கரவாத தடை சட்டத்தை நாங்கள் இப்போது தொடர்ச்சியாக நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆனாலும் நாங்கள் ஏற்கனவே எதிர்த்து குரல் எழுப்பியிருக்கின்றோம். அதற்கு எதிராக வாக்களித்து இருக்கின்றோம். அவ்வாறான சூழ்நிலைகள் இருந்தாலும் இப்பொழுது இயக்க ரீதியாக எங்கள் மத்தியில் இயக்கத்தை முன்னெடுத்திருக்கின்றோம்.

நாங்கள் இப்போது தீர்மானம் எடுத்திருப்பது எங்களுடைய நிலம் நாங்கள் எங்களை ஆழ வேண்டுமாக இருந்தால் எங்கள் மண்ணிலே நில உரிமை அடிப்படையாக இருக்க வேண்டும். அது இருக்கிறதா?  ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல முனைகளில் மகாவலி, தொல்பொருளியல் அடிப்படையில் பௌத்த மயமாக்குவது, சிங்கள மயமாக்குவது, சிங்களவர்களை குடியேற்றுவது , அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களுடைய நிலங்கள் பறிக்கப்படுவது அதனைவிட பறிக்கப்படுவதற்கு சமமாகவும், அதற்கு அப்பாலும் இராணுவங்கள் இலட்சக்கணக்காக வடக்கு கிழக்கு மாகாணங்களில்  இருப்பவர்கள். பல ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுடைய பிரதேசங்களில் கைப்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. இவற்றையெல்லாம் நாங்கள் மதிப்பீடு செய்யப்போகின்றோம்.

 

https://athavannews.com/2022/1269637

 

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் கடற் கரையில் தாட்டுக்கிடந்த வெடிபொருள்  நிரப்பியபடகு மாவையற்றைதானாம்...சொன்னால் நம்புங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

முல்லைத்தீவில் கடற் கரையில் தாட்டுக்கிடந்த வெடிபொருள்  நிரப்பியபடகு மாவையற்றைதானாம்...சொன்னால் நம்புங்கோ..

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – மாவை

அவர் ரொம்ப  தெளிவாக

நிதானமாக

பக்குவமாக

கோடிட்டு

போராட்டத்துக்கு முன்னுக்கே ....

ஐனநா(ட)யகம் என  சொல்லியுள்ளாரே???

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

முல்லைத்தீவில் கடற் கரையில் தாட்டுக்கிடந்த வெடிபொருள்  நிரப்பியபடகு மாவையற்றைதானாம்...சொன்னால் நம்புங்கோ..

கள்ளன் சொல்லவேயில்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தத்தில பொட்டு வைச்சா மகனின்ர நெத்தியிலெயோ வைக்கப்போறார். இலலைத்தானே...😏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, nunavilan said:

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – மாவை

கடவுளே இப்பவாவது கண்ணை திறந்தாயே......
இனி மக்களுக்கு மகிழ்ச்சி வெள்ளம் தான்....

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:
 

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – மாவை.

 

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்

புலம் பெயர் தேசத்திலும்… போராட்டம் ஆரம்பிக்கப் போகுதாம்.

இன்னுமா…. இந்த ஊர், இவங்களை நம்பிக் கொண்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

புலம் பெயர் தேசத்திலும்… போராட்டம் ஆரம்பிக்கப் போகுதாம்.

இன்னுமா…. இந்த ஊர், இவங்களை நம்பிக் கொண்டிருக்கு.

முதலமைச்சர் வேட்பாளர் மாவை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் வேட்பாளர் மாவை.

மாவை தமிழரசு கட்சியின், பெரிய் தூண்.
அவரின் மகன்… அக் கட்சியின் போக்கு பிடிக்காமல் விலகி விட்டாராம். 😂
மகன் மானஸ்தன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

மாவை தமிழரசு கட்சியின், பெரிய் தூண்.
அவரின் மகன்… அக் கட்சியின் போக்கு பிடிக்காமல் விலகி விட்டாராம். 😂
மகன் மானஸ்தன். 🤣

அவரும் முதலமைச்சரா வாறத்துக்கு துடித்தவர் அடக்கிவிட்டார்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

அவரும் முதலமைச்சரா வாறத்துக்கு துடித்தவர் அடக்கிவிட்டார்கள் போல.

மாவையார்…. தனது மகனையும் அரசியலில் இறக்க திட்டமிட்டவர்.
கடந்த தேர்தல் முடிவுகள்…. யாழ். மத்திய கல்லூரியில் அறிவிக்கப் பட்ட போது….
சுமந்திரனின்…. “ஜில்லாலங்கடி” வேலையை பார்த்து, ஜுனியர் மாவை பொங்கி எழ…
சுமந்திரனின் பாதுகாப்புக்கு நின்ற ஆமிக்காரன், ஜுனியர் மாவைக்கு அடித்துப் போட்டான்.
அதோடை… சின்னவர், அரசியலுக்கு… முழுக்கு போட்டு விட்டார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மாவையார்…. தனது மகனையும் அரசியலில் இறக்க திட்டமிட்டவர்.
கடந்த தேர்தல் முடிவுகள்…. யாழ். மத்திய கல்லூரியில் அறிவிக்கப் பட்ட போது….
சுமந்திரனின்…. “ஜில்லாலங்கடி” வேலையை பார்த்து, ஜுனியர் மாவை பொங்கி எழ…
சுமந்திரனின் பாதுகாப்புக்கு நின்ற ஆமிக்காரன், ஜுனியர் மாவைக்கு அடித்துப் போட்டான்.
அதோடை… சின்னவர், அரசியலுக்கு… முழுக்கு போட்டு விட்டார். 🤣

அவருதான் ...இப்ப ரவிராஜ் முன்னாள் எம்பியின் மருமகனாகிவிட்டாரே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.