Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு... மரணச் சான்றிதழுடன் 100,000 ரூபாய் இழப்பீடு: ராஜபக்ஷ அரசாங்கம் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு... மரணச் சான்றிதழுடன் 100,000 ரூபாய் இழப்பீடு: ராஜபக்ஷ அரசாங்கம் அறிவிப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தமக்கு உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும் என்றும் இழப்பீடும் தேவையில்லை என்றும் தெரிவித்தே அவர்கள் தொடர்ந்தும் பல வருடங்களாக போராடி வருகின்றனர்.

https://athavannews.com/2022/1271959

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது கோத்தாவின்ரை மகனைக் கடத்திப்போட்டு ஒரு லட்சம் ரூபா குடுத்தால்நல்லா இருக்கும்

கைது செய்து கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுப்பது நாம் அவர்களைக் கொன்றுவிட்டோம் என்பதை ஒப்புக் கொள்வதாக இருக்காதா ? இதை வைத்து அரசியல் ரீதியான அழுத்தங்களைச் சிங்கள அரசு மீது பிரயோகிக்க முடியுமல்லவா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாதவூரான் said:

யாராவது கோத்தாவின்ரை மகனைக் கடத்திப்போட்டு ஒரு லட்சம் ரூபா குடுத்தால்நல்லா இருக்கும்

பருத்தித் துறையில்.... ஒரு கிடாய் ஆடு, 
75´000 ரூபாய்க்கு விற்ற விளம்பரம் ஒன்றை கண்டேன்.
தமிழன் உயிர்.. ஆட்டின் பெறுமதிக்கு, 
கிட்டத்தட்ட  சமன் என்று, சிங்களம் கணித்திருக்குது.

எல்லாம் எங்கள் அரசியல் வாதிகளால் வந்த வினை.
போர் முடிந்த கையுடன்... சிங்களத்துக்கு  அவகாசம் கொடுக்காமல்,
சர்வ தேச அளவில், பிரச்சினையை  கொண்டு போயிருக்க வேண்டும்.
அதை விட்டுட்டு.. சர்வதேசம் வேண்டாம், 
உள்நாட்டில் பேசி தீர்த்துக் கொள்கின்றோம் என்று சொன்ன கூத்தமைப்பு அல்லவா.

13 minutes ago, இணையவன் said:

கைது செய்து கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுப்பது நாம் அவர்களைக் கொன்றுவிட்டோம் என்பதை ஒப்புக் கொள்வதாக இருக்காதா ? இதை வைத்து அரசியல் ரீதியான அழுத்தங்களைச் சிங்கள அரசு மீது பிரயோகிக்க முடியுமல்லவா ?

கோத்தா.... சென்ற வருடம்... ஐ.நா. சபையிலேயே,
காணாமல் போனவர்களுக்கு... 
மரண சான்றிதழ் வேணுமென்றால் தருகிறோம் என்று சொல்லி விட்டு வந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போனோரின் குடும்பங்கள் மரணச் சான்றிதழையோ அல்லது இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை – அம்பிகா சற்குணநாதன்

காணாமல்போனோரின் குடும்பங்கள் மரணச் சான்றிதழையோ அல்லது இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையுமே கோருகின்றார்கள் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அரசாங்கம் எந்தவொரு தரப்பினரையும் பொறுப்புக்கூறச் செய்வதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையும் குழிதோண்டிப் புதைப்பதற்கே முயற்சிக்கின்றார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே என்றும் இது அவமரியாதை செய்யும் வகையிலான மிகமோசமான செயல் என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/காணாமல்போனோரின்-குடும்ப/

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

காணாமல்போனோரின் குடும்பங்கள் மரணச் சான்றிதழையோ அல்லது இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை – அம்பிகா சற்குணநாதன்

காணாமல்போனோரின் குடும்பங்கள் மரணச் சான்றிதழையோ அல்லது இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையுமே கோருகின்றார்கள் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அரசாங்கம் எந்தவொரு தரப்பினரையும் பொறுப்புக்கூறச் செய்வதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையும் குழிதோண்டிப் புதைப்பதற்கே முயற்சிக்கின்றார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே என்றும் இது அவமரியாதை செய்யும் வகையிலான மிகமோசமான செயல் என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/காணாமல்போனோரின்-குடும்ப/

 

ஐ ...கிருபண்ணையின் அம்பிகா அன்றி இறங்கிட்டாவு 
இனியென்ன மண்ணோடு மண்ணாக மக்கிப்போன ஆட்களையும் தோண்டி உயிரோடு கொண்டு வந்து 
தேடும் உறவுகள் முன் நிறுத்தியபின் தான் அடுத்த வேலையே  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

ஐ ...கிருபண்ணையின் அம்பிகா அன்றி இறங்கிட்டாவு 
இனியென்ன மண்ணோடு மண்ணாக மக்கிப்போன ஆட்களையும் தோண்டி உயிரோடு கொண்டு வந்து 
தேடும் உறவுகள் முன் நிறுத்தியபின் தான் அடுத்த வேலையே  

யாழில் அம்பிகா சற்குணநாதனின் செய்திகளை இணைக்கும்போது அக்னி நினைவுக்கு வருவதையும் தடுக்கமுடியவில்லை. மனித உரிமைகளுக்காகப் போராடும் அம்பிகா ஆன்ரியின் மேல் ஏன் இத்தனை கடுப்பு?🤔

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

மனித உரிமைகளுக்காகப் போராடும் அம்பிகா ஆன்ரியின் மேல் ஏன் இத்தனை கடுப்பு?

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளராக இருந்த பொழுதே அம்பிகா அன்ரி இப்படி மனிதஉரிமைகளுக்காக போராடவில்லையே ...இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது மனிதஉரிமைகள் மீது அதீத திடீர்  பாசம்,  எல்லாவற்றுக்கும் காரணம் தேசிய பட்டியலில் உள்ளேவந்து ஆயுள் பூராக  நோகாமல் நோம்பு கும்பிட  ஒரு ப.உ கதிரை. இதுவே எம் கடுப்பிற்கு காரணம்    

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வாதவூரான் said:

யாராவது கோத்தாவின்ரை மகனைக் கடத்திப்போட்டு ஒரு லட்சம் ரூபா குடுத்தால்நல்லா இருக்கும்

இன்றைய உலகில் எது வேண்டுமானாலும் எப்பவும் நிகழலாம். விதி நினைத்தால் யாரால் மாற்ற முடியும்? பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேரும். எத்தனை பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு ஆதரவின்றி தவிக்கிறார்கள், அவர்கள் விடும் கண்ணீர் சும்மா விடாது. ஏழை அழுத கண்ணீர் ஏழு தலைமுறைக்கு தொடருமாம். உள்ளதே ஒன்று, அதுக்கு ஒன்று, ஏழு தலைமுறை அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பல லட்சம் ரூபாய்களை  ஆயத்தமாக வைத்திருக்கிறேன்.  எத்தனை சிங்கள குடும்பங்கள் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள  ஆயத்தம்? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

நானும் பல லட்சம் ரூபாய்களை  ஆயத்தமாக வைத்திருக்கிறேன்.  எத்தனை சிங்கள குடும்பங்கள் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள  ஆயத்தம்? 

😏

புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

புரியவில்லை?

கடத்திக் காணாமல் ஆக்கிய பின்னர் காசைக் கொடுப்போம். 

என் நாஞ்சொல்றது 

😉

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ .....  கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் சிங்களவர்களே என்று நஷ்ட ஈடு பெறப்போபவர்கள் சிங்களவரே என்கிறீர்களா? போரால் பாதிக்கப்பட்டவர்கள், வீடிழந்தவர்கள், அபிவிருத்திக்குரியவர்கள் என்று சர்வதேசம் அளித்த பணத்தையெல்லாம் அள்ளிக்கொட்டி அவர்களும் சும்மா இருந்து மகிந்தா நாமம் பாடி, இப்போ ஒப்பாரி வைக்கிறார்கள். அது சரி, தெருவில் அலையும் நம் உறவுகளை எப்படி வீட்டுக்கு அனுப்புவார்? அல்லது நீங்கள் சிங்களவரை கடத்தி காணாமலாக்கி விட்டு பணத்தை கொடுக்கப்போகிறீர்கள் என்கிறீர்களா? ஒன்றும் புரியவில்லை. அதுக்கும் ஒரு தகுதி வேண்டுமய்யா. முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியில பாக்க தெரியுமாம். இப்ப சொன்னது யார் என்று மட்டுறுத்தனர்  வரமுதல்  நான் தலை மறைவு. கேட்டால் பழமொழி என்று சொல்லுங்கோ! 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

கே .குமணன்

எங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? எங்களின் உறவுகளின் பெறுமதியினை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள் நாங்கள் எனவே இலங்கை அரசிற்கு ஒரு இலட்சம் இல்லை அதேபோன்று பத்து மடங்கு பணத்தினை நாங்கள் தருகின்றோம். உங்களிடம் கையளித்த உறவுகளை மீட்டுத்தாருங்கள் என முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று  (16) முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க  தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் மேற்கொண்ட ஊடக சந்திப்பின் ஊடாக இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போனோரின் குடும்பங்களைப் மீள்வாழ்வளிப்பதற்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசின் இந்த அறிவித்தலுக்கு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பினை தெரிவித்து இவ்வாறு தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.

IMG_0012.png

2016 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க காணாமல் போனோர் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம் காணாமல் போனோர் தொடர்பாக சரியான விசாரணைகளை நடாத்திய பின்னர் இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தால் கண்டறிப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டு காணக்கிடைக்கவில்லை எனும் சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் போன நபரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் 100,000 ரூபாவை செலுத்துவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இது ஓ எம் பி அலுவலகம் ஊடாக அரசு மேற்கொள்ளும் சர்வதேசத்தை ஏமாற்றும் இன்னுமொரு நடவடிக்கை நாங்கள் இலங்கை இராணுவத்தினரிடம் எங்களது உயிர்களை உறவுகளை ஒப்படைத்திருக்கிறோம் ஒப்படைத்த உறவுகளை இவர்கள் என்ன செய்தார்கள் ? இவர்களது அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி எங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என்று சொல்லி இவர்கள் தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? எங்களின் உறவுகளின் பெறுமதியினை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள் நாங்கள் ,நாங்கள் இந்த ஒருலட்சத்தை வாங்குவதற்காக இத்தனை நாட்களாக நீதிகேட்டு வீதியில் இறங்கி போராடவில்லை எமக்கு  ஒரு இலட்சம் வேண்டாம். நாங்கள் இதனைவிட பத்து மடங்கு  அல்லது இருபது மடங்கு பணத்தினை உங்களுக்கு  தருகின்றோம் நாங்கள் கையளித்த உறவுகளை அவர்கள் தேடிக்கண்டறிந்து எங்களிடம் கையளிக்கட்டும்.

அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக அவர்கள்  வழங்கும் நட்டஈடு ஒரு இலட்சத்தினையோ மரண சன்றிதழையோ,காணாமப்படவில்லை என்ற சான்றிதழையோ நாங்கள் பெற்றுக்கொள்ள தயாராக இல்லை  உள்நாட்டு பொறிமுறையூடாக இந்த நாட்டில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக  நீதி கிடைக்காது என்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம். அதனால்தான் சர்வதேசமூடாக நாங்கள் நீதியை கோரி நிற்கின்றோம் எங்களுக்கான நீதி என்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அரசை நிறுத்தி  அங்கு இடம்பெறும் விசாரணையூடாக கிடைக்கவேண்டும்.

உறவுகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 

 

https://www.virakesari.lk/article/124280

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

,நாங்கள் இந்த ஒருலட்சத்தை வாங்குவதற்காக இத்தனை நாட்களாக நீதிகேட்டு வீதியில் இறங்கி போராடவில்லை எமக்கு  ஒரு இலட்சம் வேண்டாம். நாங்கள் இதனைவிட பத்து மடங்கு  அல்லது இருபது மடங்கு பணத்தினை உங்களுக்கு  தருகின்றோம் நாங்கள் கையளித்த உறவுகளை அவர்கள் தேடிக்கண்டறிந்து எங்களிடம் கையளிக்கட்டும்.

இதைக்கேட்ட கோத்தா ஒருதடவை தன் முட்டாள்த்தனத்தை எண்ணி வருந்தியிருப்பார். ச்சா ..... கொலைசெய்யாமல் அவர்களை வைத்திருந்திருந்தால் இப்போ டொலராக கேட்டு வாங்கியிருக்கலாமேயென்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.