Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மக்களுக்கு... உதவிட, நன்கொடை வழங்குங்கள் – ஸ்டாலின் வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை இரத்து செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இலங்கை மக்களுக்கு... உதவிட, நன்கொடை வழங்குங்கள் – ஸ்டாலின் வேண்டுகோள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதல்வர். மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழகத்தில் இருந்து உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்க மத்திய அரசின் அனுமதி தற்போது கிடைத்துள்ளது.

எனவே மனிதாபிமான அடிப்படையில்இ இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1279831

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா ராசா,

அங்க முப்பது வருசத்துக்கும் மேலாக அகதியா இருக்கிற சனத்துக்கு ஏதும் செய்ய வழி இருக்கா எண்டு முதலில பாருங்கோ. புண்ணியமாப் போகும். 

அப்பிடி ஏதும் அனுப்பிறதெண்டா உங்கட அப்பர் மரினா கடற்கரையில போட்டிருந்த ஏசி ரெண்ட இஞ்ச அனுப்புங்கோ. இஞ்ச ஒரே வெக்கையா இருக்கு. 😏

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்காக உதவுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

spacer.png
 

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ வேண்டிய நேரம் இது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை மக்களுக்கு உதவ முதற்கட்டமாகத் தமிழ்நாட்டிலிருந்து 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

அதுபோன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தான் சார்ந்த குடும்பத்தின் சார்பாக இலங்கைக்கு ரூ. 50 லட்சம் கொடுப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் இன்று (மே 3) திமுக தலைவர் ஸ்டாலின், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

அதுபோன்று இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு முதல்வர் என்ற முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இலங்கைக்கு உதவ வேண்டிய நேரம் இது. நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம்.

A. மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்:-

1. மின்னணு பரிவர்த்தனை: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html

வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

வங்கி கிளை : தலைமைச் செயலக கிளை, சென்னை – 600 009.

சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070

IFSC குறியீடு : IOBA0001172

CMPRF பான் எண் : AAAGC0038F

SWIFT குறியீடு : IOBAINBB001 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை. (வெளிநாட்டு பங்களிப்புகளுக்கு).

ECS மூலம் ஆன்லைனில் தொகையை அனுப்பும் பங்களிப்பாளர்கள், அவர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கும் அதிகாரப்பூர்வ ரசீதை அனுப்புவதற்கும் பின்வரும் விவரங்களை தயவுசெய்து வழங்கவும்:-

பங்களிப்பாளரின் பெயர் :

பங்களிப்பு தொகை :

வங்கி மற்றும் கிளை :

பணம் அனுப்பும் தேதி :

பரிவர்த்தனை குறிப்பு எண் :

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

மின்னஞ்சல் முகவரி :

தொலைபேசி எண் / கைபேசி எண். :

UPI-VPA id : tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, Paytm, Amazon Pay, Mobikwik etc. போன்ற பல்வேறு மொபைல் செயலிகள்.

B. காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்:

அரசு இணைச் செயலாளர் & பொருளாளர்,

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி,

நிதி(மு.பொ.நி.நி) துறை,

தலைமைச் செயலகம், சென்னை 600 009,

தமிழ்நாடு, இந்தியா.

என்ற முகவரிக்குக் காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ அனுப்பிவைக்கலாம். அனுப்பி வைக்கப்பட வேண்டிய இவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்கலாம்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-G ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

https://minnambalam.com/politics/2022/05/03/27/MK-Stalin-reques-To-help-Sri-Lanka

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் தளபதி காசு  பார்த்திடுவார்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

இலங்கைக்காக உதவுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின்னார் தமிழ்மக்கள் சாப்பாடு தண்ணியில்லாமல் கஷ்டப்பட்டார்களே அப்போது ஈரநெஞ்சு இல்லயா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்காக உதவுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இப்ப இவரு அவையோடை சம்பந்தி  ஆகிட்டாரு போல...நம்ம சனதைப் பற்றி மூச்சே விடுதில்லை..இன்னும் காணி பூமி வாங்கிற ஐடியா இருக்கோ..!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு; அமைச்சர் எச்சரிக்கை..

IMG-20220508-121824.jpg

இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒன்றிய அரசின் அனுமதியுடன் அந்நாட்டிற்கு நிவாரணப் பொருட்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திராவில் இருந்து உயர் ரக பொன்னி அரிசிய கிலோ 33 ரூபாய் 50 காசுக்கு கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், ஒன்றிய அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசியை வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது என்பதால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, இந்திய உணவுக் கழக அரிசியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்யவுள்ள உயர்ரக அரிசியோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது என கூறியுள்ள அவர், மேலும், இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த உண்மைகள் முழுமையாகத் தெரிந்திருந்தும் அவதூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

https://news7tamil.live/slander-against-rice-sent-to-sri-lanka-minister-warns.html

டிஸ்கி

33 ரூபாய்க்கு உயர்ரக பொன்னி அரிசியா.? எப்படியும் அங்கே உள்ளவர்கள் இணையத்தில் போட்டோ போட்டுவிடுவினம். அப்போ தெரியும் பொருளின் தரம்..👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.