Jump to content

டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோப்பை

பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO

இந்த வருடம் அக்டோபர் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

டி20 உலகக் கோப்பையில் எத்தனை அணிகள் கலந்து கொள்கின்றன?

இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அதில் 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிப் போட்டியின் வழியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளன.

நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2ஆக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் 1-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.

மீதமுள்ள இலங்கை, மேற்கு இந்திய தீவுகள், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் ஒன்றோடு ஒன்று மோதும்.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?

டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் ஏழு இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சூப்பர் - 12 போட்டிகள் எப்போது தொடங்குகின்றன?

தொடரின் முதல் போட்டி இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சூப்பர் - 12 போட்டிகள் அக்டோபர் 22ஆம் தேதியிலிருந்து நடைபெறுகின்றன.

முதல் போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெறுகிறது.

இந்த இரு அணிகளும் 2021 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

 

2021ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2021ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது

டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் சில முக்கிய போட்டிகள்

23 அக்டோபர் - இந்தியா Vs பாகிஸ்தான்

27 அக்டோபர் - இந்தியா Vs குரூப் 1 ரன்னர் அப்

30 அக்டோபர் - இந்தியா Vs தென் ஆப்ரிக்கா

நவம்பர் 2 - இந்தியா Vs வங்கதேசம்

நவம்பர் 6 - இந்தியா Vs குரூப் 2 வின்னர்

டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் எப்போது நடைபெறும்?

தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி சிட்னியில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

இரண்டாம் அரையிறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

https://www.bbc.com/tamil/sport-61789349

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது?

@கிருபன் இப்பவிருந்தே கேள்விக் கொத்துகளை தயாரிக்கும் வேலையை தொடங்குங்கள்.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

@கிருபன் இப்பவிருந்தே கேள்விக் கொத்துகளை தயாரிக்கும் வேலையை தொடங்குங்கள்.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

அதெல்லாம் ஏற்கனவே தயாரித்து வைத்தபடிதான் இருக்கிறது பிரியன்.......அந்த போனவருட ஷீட்டில் கேள்விகளை மட்டும் வைத்துக்கொண்டு பதில்களை அழித்துவிட்டால் போதும் என்று நினைக்கின்றேன்........!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

@கிருபன் இப்பவிருந்தே கேள்விக் கொத்துகளை தயாரிக்கும் வேலையை தொடங்குங்கள்.

ஆகஸ்ட் மாதம் முடியப் பார்க்கலாம்!  இலையான் அடிப்பவர், ஈ ஓட்டுபவர் என்று 10 பேராவது வந்தால் உண்டு😀

3 hours ago, suvy said:

அதெல்லாம் ஏற்கனவே தயாரித்து வைத்தபடிதான் இருக்கிறது பிரியன்.......அந்த போனவருட ஷீட்டில் கேள்விகளை மட்டும் வைத்துக்கொண்டு பதில்களை அழித்துவிட்டால் போதும் என்று நினைக்கின்றேன்........!  😂

இந்த முறை Google form பாவிக்கலாமா என்று யோசிக்கின்றேன்🤔🫠

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆகஸ்ட் மாதம் முடியப் பார்க்கலாம்!  இலையான் அடிப்பவர், ஈ ஓட்டுபவர் என்று 10 பேராவது வந்தால் உண்டு😀

குறைந்தது 15 பேராவது வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஆகஸ்ட் மாதம் முடியப் பார்க்கலாம்!  இலையான் அடிப்பவர், ஈ ஓட்டுபவர் என்று 10 பேராவது வந்தால் உண்டு😀

இந்த முறை Google form பாவிக்கலாமா என்று யோசிக்கின்றேன்🤔🫠

ஆர் வந்தாலும் வழமை போல் வெல்லப்போவது என்னவோ நான் தானே.

3 hours ago, ஈழப்பிரியன் said:

குறைந்தது 15 பேராவது வருவார்கள்.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஆர் வந்தாலும் வழமை போல் வெல்லப்போவது என்னவோ நான் தானே.

 

இப்ப இருந்தே கோவில் குளமாக திரிந்து நேர்த்தி வையுங்க.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை  டி20 : கடைசி அணிகளாக நுழைந்த ஜிம்பாப்வே, நெதர்லாந்து!

zimbabwe-and-netherlands-qualify.webp

எட்டாவது டி20 உலகக்கோப்பை போட்டியில் கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்துள்ளன.
2022 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 2021 போட்டியின் முடிவின்படி ‘டாப் 11’ அணிகளான இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகியவை நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய நான்கு நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் நடந்த தகுதி சுற்று மூலம் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி பெற்றன. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்தன. ஜிம்பாப்வேயில் நடந்த தகுதி சுற்றில் இந்த இரு அணிகளும் அரை இறுதியில் வெற்றி பெற்றதால் வாய்ப்பை பெற்றன. ஜிம்பாப்வே அணி 27 ரன்னில் பப்புவா நியூ கினியாவையும், நெதர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவையும் வீழ்த்தியது.
உலகக் கோப்பையில் விளையாடும் 16 நாடுகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக இரண்டாவது சுற்றில் (சூப்பர்-12) விளையாடும்.
முதல் சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய 8 அணிகள் விளையாடும்.இதில் இருந்து 4 நாடுகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.
கிரிக்கெட் உலகில் பரம வைரிகளாகக் கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடந்த உலகக் கோப்பையைப் போன்று இந்த முறையும் ஒரே குரூப்பில்உள்ளன. அக்டோபர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

https://minnambalam.com/t20-world-cup-netherland-zimbabwe-enters-lastly/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி தொடங்கட்டும் நானும் ஒரு நாள் முதல்வரா வருவன்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2022 at 15:33, ஈழப்பிரியன் said:

@கிருபன் இப்பவிருந்தே கேள்விக் கொத்துகளை தயாரிக்கும் வேலையை தொடங்குங்கள்.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் பெரிய‌ த‌லைக‌ளை கொஞ்ச‌ நாளாக‌ யாழில் காண‌ வில்லை

 

கொஞ்ச‌ப் பேர் க‌ல‌ந்து கொண்டா போட்டி சூடு பிடிக்காது , என்னையும் ந‌ம்பி ஒரு ஜீவ‌ன் இருக்கு க‌ண்டிப்பாய் அவ‌ரையும் கூட்டிட்டு வ‌ருவேன் 😁😍🙏 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் பெரிய‌ த‌லைக‌ளை கொஞ்ச‌ நாளாக‌ யாழில் காண‌ வில்லை

 

கொஞ்ச‌ப் பேர் க‌ல‌ந்து கொண்டா போட்டி சூடு பிடிக்காது , என்னையும் ந‌ம்பி ஒரு ஜீவ‌ன் இருக்கு க‌ண்டிப்பாய் அவ‌ரையும் கூட்டிட்டு வ‌ருவேன் 😁😍🙏 

ஆகா பையா கண்டு ரொம்ப நாளாச்சு.

கிருபன் ஆயத்தமாகிக் கொண்டே இருக்கிறார்.

பையா அடிக்கடி இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலக கோப்பை 2022 அக்டோபரில் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

டி20 உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது. போட்டியின் முதல் பந்தயம் அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப்பந்தயம் நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறும்.

இந்த டி20 உலக கோப்பை தொடர்பான முக்கிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

2022 டி20 உலக கோப்பையில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன?

இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. முழு போட்டியும் குரூப் ஸ்டேஜ் மற்றும் சூப்பர்-12 என பிரிக்கப்பட்டுள்ளது.

முதலில் க்ரூப் ஸ்டேஜ் பற்றிப்பேசலாம். இந்த சுற்றில் இரண்டு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

ஏ பிரிவில் இலங்கை, நமீபியா மற்றும் இரண்டு தகுதிச் சுற்று அணிகள் உள்ளன. மறுபுறம், மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து மற்றும் இரண்டு தகுதிச் சுற்று அணிகள் B பிரிவில் உள்ளன.

இந்த இரு பிரிவிலும் முதல்-2 இடங்களை பிடிக்கும் அணிக்கு சூப்பர்-12ல் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

இப்போது சூப்பர்-12 நிலை பற்றி பேசலாம். இப்போட்டியின் சூப்பர்-12 சுற்றில் ஏற்கனவே 8 அணிகள் இடம்பிடித்துள்ளன. 2021 டி20 உலகக் கோப்பையின் டாப்-8 அணிகள் இவைதான்.

இந்த அணிகள் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம்.

இப்போது சூப்பர்-12ல், இந்த 8 அணிகளைத் தவிர, குரூப் ஏ மற்றும் குரூப் பி-யின் டாப்-2 அணிகளும் சேர்க்கப்படும். சூப்பர்-12 இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

குரூப்-1ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், குரூப் ஏ வெற்றியாளர் மற்றும் குரூப் 'பி'யில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணியும் இருக்கும்.

குரூப்-2ல், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், குரூப் பி வெற்றியாளர் மற்றும் குரூப் 'ஏ'யில் இரண்டாம் இடத்தைப்பெறும் அணியும் இருக்கும்.

2022 டி20 உலக கோப்பை போட்டி எங்கு நடைபெறவுள்ளது?

இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவில் மொத்தம் ஏழு இடங்களில் போட்டிகள் நடைபெறும்.

முதல் சுற்றின் ஆறு பந்தயங்கள் ஜிலாங் நகரில் உள்ள கார்டினியா பார்க்கில் நடைபெறும். அதே நேரத்தில், போபார்ட்டின் பெலரீவ் ஓவல் மைதானத்தில் மொத்தம் ஒன்பது பந்தயங்கள் நடைபெறும், இதில் முதல் சுற்றின் ஆறு மற்றும் சூப்பர் 12 கட்டத்தின் மூன்று போட்டிகள் விளையாடப்படும்.

இது தவிர, மீதமுள்ள சூப்பர் 12 போட்டிகள் இந்த மைதானங்களில் நடைபெறும்:

• தி கப்பா, பிரிஸ்பேன்

• பெர்த் ஸ்டேடியம், பெர்த்

• அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

• சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

• மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்

 

டி20 உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO

 

படக்குறிப்பு,

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

2022 டி20 உலக கோப்பையில் சூப்பர்-12 பந்தயங்கள் எப்போது தொடங்கும்?

போட்டியின் முதல் பந்தயம் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குரூப் ஸ்டேஜ் போட்டி. சூப்பர்-12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கும்.

இந்த கட்டத்தின் முதல் பந்தயத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2021 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின என்பது நினைவுகூரத்தக்கது. இரண்டாவது பந்தயம் அக்டோபர் 22 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

2022 டி20 உலக கோப்பையில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எப்போது நடக்கின்றன ?

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் முதல் பந்தயம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியாவின் முக்கியமான போட்டிகள் பின்வருமாறு:

• 23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான்

• 27 அக்டோபர்: இந்தியா vs குரூப் 1 ரன்னர் அப்

• 30 அக்டோபர்: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

• நவம்பர் 2: இந்தியா vs வங்கதேசம்

• நவம்பர் 6: இந்தியா vs குரூப்-2 வெற்றியாளர்

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி எப்போது ?

முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 9ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப்பந்தயம் நவம்பர் 13 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையின் புதிய வெற்றியாளரை கிரிக்கெட் உலகம் பெறும்.

2021 டி20 உலக கோப்பையின் முடிவு என்ன?

 

டி20 உலகக் கோப்பை 2022

பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO

 

படக்குறிப்பு,

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

கடந்த ஆண்டு ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் 'பூவா தலையா'வை இழந்த நியூசிலாந்து அணி, கேப்டன் கேன் வில்லியம்சனின் 85 ரன்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் மட்டை வீசிய ஆஸ்திரேலியா 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. டேவிட் வார்னர் 53 ரன் எடுத்தார். மிட்செல் மார்ஷ் அவுட்டாகாமல் 77 ரன் குவித்தார்.

இந்த போட்டியில் இந்தியாவால் அரையிறுதிக்கு கூட தகுதிபெற முடியவில்லை.

டி20 உலக கோப்பையை யார் எப்போது வென்றார்கள்?

முதல் டி20 உலகக் கோப்பை போட்டி 2007 செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்ட இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே அப்போது ஒரே குழுவில் இருந்தன.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப்பந்தயம் ஜோஹேனஸ்பெர்கில் நடைபெற்றது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணியால் 19.3 ஓவர்களில் 152 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதுவரை வெற்றி வாகை சூடிய நாடுகள்:

• T20 உலகக் கோப்பை 2007- இந்தியா

• T20 உலகக் கோப்பை 2009- பாகிஸ்தான்

• T20 உலகக் கோப்பை 2010- இங்கிலாந்து

• டி20 உலகக் கோப்பை 2012- வெஸ்ட் இண்டீஸ்

• T20 உலகக் கோப்பை 2014- இலங்கை

• டி20 உலகக் கோப்பை 2016- வெஸ்ட் இண்டீஸ்

• T20 உலகக் கோப்பை 2021- ஆஸ்திரேலியா

https://www.bbc.com/tamil/sport-62634261

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.