Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் விடுதலைப் புலிகளை விடுவிக்க, தன்பாலின உறவை அனுமதிக்க 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி பரிந்துரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் விடுதலைப் புலிகளை விடுவிக்க, தன்பாலின உறவை அனுமதிக்க 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி பரிந்துரை

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து
29 ஜூன் 2022, 13:19 GMT
புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்
 

முன்னாள் விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய 'ஒரே நாடு - ஒரே சட்டம்' குழு பரிந்துரை

பட மூலாதாரம்,PMD

இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ''ஒரே நாடு - ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது.

கொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால், இந்த அறிக்கை, ஜனாதிபதியிடம் இன்று (29) முற்பகல் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் ''ஒரே நாடு - ஒரே சட்டம்" என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்று, இலங்கைக்கு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குவதற்கு ஜனாதிபதியினால், 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 மற்றும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆகிய தேதிகளில் அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

தொழில் வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புக்கள், மதக் குழுக்கள், பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் 1,200ற்கும் அதிகமான சாட்சிகளை உள்ளடக்கிய, 43 பரிந்துரைகளுடனான 8 அத்தியாயங்களை கொண்டு, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்ட நிலையில், அந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பிரதான பரிந்துரைகள் குறித்து, பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

இலங்கையில் தன்பாலின உறவு கொள்ளுதல் மற்றும் தனிபாலின திருமணம் ஆகியவற்றிற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்பாலின உறவு கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ''ஒரே நாடு - ஒரு சட்டம்" ஜனாதிபதி செயலணி, தமது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

எனினும், தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என பரிந்துரை செய்துள்ள ஜனாதிபதி செயலணி, அவ்வாறு தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கினால், அது தன்பாலின உறவுகளை ஊக்குவிக்க வலிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் மற்றும் ராணுவத்தினரை, உரிய புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

செயலணி

பட மூலாதாரம்,PMD

யுத்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தம்மால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதகமான பதிலை வழங்கியதாக, ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி பரிந்துரைத்தவை என்னென்ன?

1.அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளின் தேர்தல்களுக்கு பயன்படுத்தும் நிதி, எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து, கணக்காய்வு செய்வதற்கு புதிய சட்டமொன்று எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட வேண்டும்.

2. நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாக, குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களின் வழக்கு விசாரணைகள் நிறைவு பெறும் வரை, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சு பொறுப்புக்களை அவர்களுக்கு வழங்காத வகையில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்;. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக, மக்களே தெரிவு செய்யும் பட்சத்தில், அவர்களை உறுப்பினர் பதவியில் மாத்திரம் இருக்க அனுமதி வழங்க முடியும்.

3. அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்பிலான கணக்காய்வுகளை நடத்துவதற்கு, கணக்காய்வு ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட வேண்டும்.

4. மதங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மத மாற்று நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

5. தன்பாலின உறவு கொள்வது தவறு என குற்றவியல் கோவை சட்டத்தின் 365 ''அ" சரத்தில் உள்ளது. அந்த சரத்தை, குற்றவியல் கோவை சட்டத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

6. திருநங்கை சமூகத்தின் பாலினம், சமூக அந்தஸ்த்து ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையிலான அடையாள சான்றிதழ் ஒன்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் திருநங்கை சமூகம், சட்டத்திற்கு அமைவாக தற்போது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேணடும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

7. திருநங்கை சமூகத்தின் நலத்திட்டத்திற்கு, அரச தலையீட்டில் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும்.

8. யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள ராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலி தரப்பினரை சமூகமயப்படுத்தும், புனர்வாழ்வு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு, அவர்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். (இந்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள், சமூகமயப்படுத்தலின் போது, சமூகத்தில் வாழக்கூடியவர்கள் என்பதை புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது உறுதிப்படுத்தியதன் பின்னரே விடுவிக்க வேண்டும்)

 

விடுதலைப் புலிகள் கொடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

9. நீதிமன்ற நடவடிக்கைகளை ஒளி மற்றும் ஒலி வடிவில் பதிவு செய்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. மொழி, இனம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அனுமதி வழங்கக்கூடாது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கு காலவகாசம் வழங்கி, கட்சிகளின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு கட்சிகளின் பெயர்களை மாற்றாத பட்சத்தில், கட்சியை தடை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

11. நீதிமன்ற அவமதிப்பு குறித்த தண்டனைக்கான காலம் உள்ளிட்ட விடயங்களை நிர்ணயம் செய்யும் வகையிலான புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும்.

12. கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (இலங்கையில் சில குழந்தைகள் மதம் சார்ந்த கல்வியை மாத்திரம் கற்பதை தவிர்த்து, 16 வயது வரை கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, பாடசாலை கட்டாய கல்வி அவசியம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்விக்கு மேலதிகமாக வேறு கல்விகளை கற்க முடியும்)

13. விற்பனை நிலையங்களில் ஹலால் பொருட்களுக்கு வேறு பிரிவொன்றை ஆரம்பிக்க வேண்டும். (2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான கண்காணிப்பு குழுவொன்றினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.)

14. பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும்.

15. ஜாதியை வெளிப்படுத்தி, ஊடகங்களில் விளம்பரம் பிரசுரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

16. விசேட தேவையுடையவர்களின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்திற்கு அமைவானதாக, விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும். விசேட தேவையுடைவர்களுக்கான தற்போது காணப்படுகின்ற பிரத்தியேக பாடசாலைகளை தவிர்த்து, அவர்களை ஏனைய மாணவர்களுடன் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

17. ஆதிவாசி சமூகத்தின் கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வன பாதுகாப்பு கட்டளை சட்டம் திருத்தப்பட வேண்டும். (ஆதிவாசிகள் வனப் பகுதிக்கு சென்றால், தற்போது கைது செய்வதற்கான அதிகாரம் பாதுகாப்பு பிரிவிற்கு உள்ளது). இந்த கட்டளை சட்டம் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆதிவாசிகளுக்கான அதிகார சபையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

18. கைதிகளுக்கான சுகாதாரம், இடவசதி, உணவு போன்ற விடயங்களை உறுதி செய்து, ஐக்கிய நாடுகள் சபையின் கைதிகள் தொடர்பிலான சட்டத்தை பின்பற்றி, சிறைச்சாலைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

19. தந்தை சொத்துக்களை தமது பிள்ளைகளுக்கு கையளிக்காது உயிரிழக்கும் பட்சத்தில், அந்த சொத்து மூத்த ஆண் பிள்ளைக்கு சேரும் என்ற சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, மூத்த பிள்ளைக்கு சொத்துக்கள் சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

புர்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

20. தனது கணவர் உயிரிழக்கும் பட்சத்தில், இஸ்லாமிய பெண்களுக்கு 4 மாதங்கள், 10 நாட்களுக்கு வழங்கப்படும் விடுமுறை தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு, மத வேறுபாடுகள், கணவர் அல்லது மனைவி என்ற வேறுபாடுகள் இன்றி, ஒரு மாத கால விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருடமொன்றில் வழங்கப்படும் விடுமுறைகளில் இந்த விடுமுறை உள்வாங்கப்பட வேண்டும்.

21. மீண்டும் இணைந்து வாழ முடியாது என இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவிப்பார்களாயின், அவர்களுக்கு விவாகரத்தை வழங்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. (தவறான நடத்தை மற்றும் பாலியல் பிரச்சினைகளுக்கு மாத்திரமே தற்போது விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகின்றது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.)

22. தேசவழமை சட்டம், முஸ்லிம் சட்டம், மலைநாட்டு சட்டம் ஆகியன முழுமையாக நீக்கப்பட்டு, பொது சட்டத்தின் கீழ், அந்த சட்டங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

''ஒரே நாடு - ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியினால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவை, நாடாளுமன்றத்தில் சமர்பித்து, அதற்கான அனுமதிகளை பெற இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலணி தெரிவிக்கின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61983001

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

19. தந்தை சொத்துக்களை தமது பிள்ளைகளுக்கு கையளிக்காது உயிரிழக்கும் பட்சத்தில், அந்த சொத்து மூத்த ஆண் பிள்ளைக்கு சேரும் என்ற சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, மூத்த பிள்ளைக்கு சொத்துக்கள் சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

எழுதப்படாத சொத்துக்கள் மூத்த ஆண் அல்லது பெண் பிள்ளைக்கு சேர வேண்டும்? 🤔 என்ன கொடுமை சார் இது. அப்போ மற்றைய பிள்ளைகள் தெருவில் பிச்சை எடுப்பதா?  டச்சு காலத்து சட்டங்கள் எல்லாம் தற்காலத்துக்கு ஏற்றவகையில் மாற்றப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல்,

இலங்கையில் உள்ள பல புத்தபிக்குகளுக்கு அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும் சட்டம்.  

 

முறையற்று செயற்பட்ட பிக்குகள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Monk-Arrested.jpg

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

19. தந்தை சொத்துக்களை தமது பிள்ளைகளுக்கு கையளிக்காது உயிரிழக்கும் பட்சத்தில், அந்த சொத்து மூத்த ஆண் பிள்ளைக்கு சேரும் என்ற சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, மூத்த பிள்ளைக்கு சொத்துக்கள் சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நான் நினைத்திருந்தேன் பிள்ளைகளுக்கு சமமாக பகிரப்படும் என்றும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் சொத்துக்கள் இருக்குமாயின் அது நீதிமன்றிற்கு போய்(உயில் இல்லாத பட்சத்தில்), அதன் உத்தவரவின் படி பிரிக்கப்படும். இந்த காலகட்டத்தில் பத்திரிக்கையில் கூட இது பற்றி அறிவிக்கப்படும், ஏனெனில் வேறு யாராவது உரிமை கோரி வரக்கூடும், அப்படி வந்தால் அவர்களுக்கும் பிரிக்கப்பட்டு நீதி சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவை இருப்பதாக..

இவர்கள் என்ன வேற மாதிரி சொல்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் நினைத்திருந்தேன் பிள்ளைகளுக்கு சமமாக பகிரப்படும் என்றும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் சொத்துக்கள் இருக்குமாயின் அது நீதிமன்றிற்கு போய்(உயில் இல்லாத பட்சத்தில்), அதன் உத்தவரவின் படி பிரிக்கப்படும். இந்த காலகட்டத்தில் பத்திரிக்கையில் கூட இது பற்றி அறிவிக்கப்படும், ஏனெனில் வேறு யாராவது உரிமை கோரி வரக்கூடும், அப்படி வந்தால் அவர்களுக்கும் பிரிக்கப்பட்டு நீதி சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவை இருப்பதாக..

இவர்கள் என்ன வேற மாதிரி சொல்கிறார்கள்

உங்கள் குடும்பத்தில் மூத்தவர் ஆண்பிள்ளையா? இல்லையென்றால் உங்களில் மூத்தவருக்குத்தான் தந்தையின் சொத்தென்று வரப்போகிறது. நீங்கள்தான் மூத்தவரென்றால் சந்தோசமாகக் காலாட்டிக்கொண்டிருக்கலாம். 

 

எத்குக்கும் உயிலை எழுதி வைக்கச் சொல்லுங்கோ. எதுக்கு தேவையில்லாத பிரச்சினையெல்லாம்? என்ன நான் சொல்லுறது?

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முஸ்லிம்கள் அரசுக்கு கண்டனம்: ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகள் சர்ச்சையானது ஏன்?

  • யூ.எல். மப்ரூக்
  • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

முன்னாள் விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய 'ஒரே நாடு - ஒரே சட்டம்' குழு பரிந்துரை

பட மூலாதாரம்,PMD

இலங்கையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேற்று முன்தினம் (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், தமது செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையினை கையளித்தார்.

எட்டு அத்தியாயங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் 43 பரிந்துரைகள் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்தே 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி உருவாக்கப்பட்டதாகவும் குறித்த அறிக்கை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியோர் குறிப்பிடுகின்றனர்.

'பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும்' என, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி பரிந்துரைத்துள்ளமையின் மூலம், முஸ்லிம் பெண்கள் - 'புர்கா' அணிவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோன்று, 'அரசப் பணியில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களுக்கு, அவர்களின் கணவரை இழந்தால் வழங்கப்படும் 'இத்தா' காலத்துக்குரிய 4 மாதங்கள் 10 நாட்களைக் கொண்ட விடுமுறை இல்லாமலாக்கப்பட வேண்டும்' எனவும் - ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமது கணவர் மரணித்தால் அல்லது விவாகரத்துச் செய்தால் - முஸ்லிம் பெண்கள் 4 மாதம் 10 நாட்கள் அந்நிய ஆண்களுடனான தொடர்புகளைத் தவிர்த்து வீட்டில் இருப்பர். அரசுப் பணியில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களுக்கு இதற்கான விடுமுறை தற்போது வழங்கப்படுகிறது.

செயலணியின் முன்னாள் உறுப்பினர் கருத்து

இந்த நிலையில், 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, அந்த செயலணியின் முன்னாள் உறுப்பினர் அஸீஸ் நிஸாருத்தீன், "இந்த நாட்டில் அரை நிர்வாணமாக ஆடை அணிவதற்கு இருக்கும் உரிமை, தமது உடலை முழுமையாக மறைப்பவர்களுக்கும் உள்ளது" என்கிறார். "அரை நிர்வாணமாக ஆடை அணிபவர்களை சட்டம் எதுவும் கேட்காதபோது, புர்கா அணிவதை மட்டும் ஏன் தடைசெய்ய வேண்டும்" என அவர் கேள்வியெழுப்பியதோடு, "புர்கா என்பது தனி மனித உரிமை" எனவும் குறிப்பிடுகின்றார்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியிலிருந்து கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அஸீஸ் நிஸாருத்தீன் ராஜிநாமா செய்தார்.

"அரசுப் பணியில் இருக்கும் முஸ்லிம் பெண்களுக்கான 'இத்தா' கால விடுமுறையை இல்லாமல் செய்வதற்கான பரிந்துரையானது, 100% இனவாத ரீதியில் எடுக்கப்பட்ட முடிவாகும். முஸ்லிம்களை குறிவைத்து பாதக முடிவுகள் இந்த செயலணியில் எடுக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து, செயலணிக்குள்ளேயே நான் பேசியிருந்தேன். சிறுபான்மை சமூகமொன்றை இலக்கு வைத்து, இவ்வாறு நடப்பது, இந்த நாட்டில் மேலும் இனமுறுகலை ஏற்படுத்தும் எனவும் கூறியிருந்தேன்" எனவும் நிஸாருத்தீன் குறிப்பிட்டார்.

 

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி: இனவாத ரீதியிலான முடிவுகள் என முஸ்லிம்கள் கண்டனம்

 

படக்குறிப்பு,

அஸீஸ் நிஸாருத்தீன்

"தேசவழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் கண்டியச் சட்டம் ஆகியவற்றை இல்லாமலாக்க வேண்டுமென 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி பரிந்துரைத்துள்ள போதும், கண்டிய சட்டத்துக்குரிய மக்களிடம் எந்தவித கருத்துக்களும் கேட்கப்படவில்லை. இதனை நான் சுட்டிக்காட்டியதோடு, அந்த மக்களிடம் கருத்துக்களைப் பெறும் பணியை எம்மிடம் ஒப்படைக்குமாறும் கேட்டிருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை".

"பௌத்தர்களின் மிக பிரதான ஆலயமான - கண்டி தலதா மாளிகையின் 'தியவதன நிலமே' (பரிபாலகர்) பதவிக்குரிய நபர் வாக்கெடுப்பின் மூலமாகவே தெரிவு செய்யப்படுவார். குறிப்பிட்ட சில அதிகாரிகள் மற்றும் நபர்களுக்கு அதற்கான வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக கண்டி பிரதேச செயலாளர் பதவியை (இது அரச பதவி) வகிக்கும் நபர், 'தியவதன நிலமே' பதவிக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியும். அதேவேளை, அந்த வாக்களிப்பில் பெண்கள் கலந்து கொள்ள முடியாது என, அவர்களின் பாரம்பரியம் கூறுகிறது. அந்த உரிமை பெண்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்காகவே, கண்டி பிரதேச செயலாளர் பதவிக்கு இதுவரை எந்தவொரு பெண்ணையும் அரசு இதுவரை நியமித்ததில்லை. இதனை 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி கவனத்தில் எடுத்திருக்க வேண்டும், ஆனால் அதனைச் செய்யவில்லை" என்கிறார் அஸீஸ் நிஸாருத்தீன்.

"ஒரே நாடு ஒரே சட்டம் எனும் எண்ணக்கருவானது, 'நாட்டில் சட்டத்தை எல்லோருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவதை' நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, சமூகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறித்தெடுக்கும் வகையில் அமையக் கூடாது. ஏழைக்கும் - பணக்காரனுக்கும் இடையில் ஏற்படும் பிரச்னையின் போது, சட்டத்தைச் சாதகமாக்கி பணக்காரன் வெற்றி பெற்று விடுகிறான். அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டமொன்றின் போது, வீதியை கறுப்பு நிறம் பூசி சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, அதனைச் செய்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தார்கள். ஒரு தடவை நாடாளுமன்றத்தில் நடந்த கைகலப்பின் போது, அங்கிருந்த பெறுமதியான ஒலிவாங்கி (மைக்) ஒன்றை எம்.பி ஒருவர் வேண்டுமேன்றே உடைத்தார். ஆனால், அவரை சட்டம் கண்டு கொள்ளவில்லை. இந்தப் பாகுபாட்டை இல்லாமல் செய்வதே 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் நோக்கமாக இருக்க வேண்டும்."

"முஸ்லிம் நாடான கத்தாரிடம், இலங்கையின் எரிபொருள் துறை அமைச்சர் உதவி கோரி சென்றுள்ள சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையானது புத்திசாலித்தனமற்ற செயற்பாடு" எனவும் நிஸாருத்தீன் குறிப்பிட்டார்.

உரிமைகளைப் பறிப்பதை அனுமதிக்க முடியாது

இந்த அறிக்கை குறித்து மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின் கருத்து தெரிவிக்கையில், "இத்தா கடமையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் சில கருத்து வேறுபாடுகள் எமக்கு உள்ளபோதும், முஸ்லிம் பெண்களுக்கு அரசு வழங்கியுள்ள 'இத்தா' விடுமுறை எனும் உரிமையை பறித்தெடுப்பதை அனுமதிக்க முடியாது" என்றார்.

 

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி: இனவாத ரீதியிலான முடிவுகள் என முஸ்லிம்கள் கண்டனம்

 

படக்குறிப்பு,

எம்.எப்.எம். ரஸ்மின்

"தொப்பி அணிவதற்கான உரிமை மறுக்கப்பட்டபோது, பிரிட்டன் வரை சென்று போராடி, எங்கள் மூதாதையர் அதனை வென்றெடுத்தார்கள். இந்த நிலையில், எங்கள் சமூகத்தின் உரிமைகளை, ஒரு செயலணியின் மூலம் பறித்தெடுப்பதை அனுமதிக்க முடியாது."

"புர்கா அணிவது தொடர்பிலும் எமக்கு மாற்றுக் கருத்து உள்ளது. 'இஸ்லாத்தில் முகத்திரை இல்லை' என்பது எமது நிலைப்பாடாகும். அதனை அணிகின்றவர்களுக்கு இது தொடர்பான விளங்கங்களை வழங்கி, அவர்களாகவே அதனைக் கழற்றும்படி செய்ய வேண்டுமே தவிர, வேறுயாரும் அதனை வலுக்கட்டாயமாக தடைசெய்ய முடியாது" என்றும் அவர் கூறினார்.

முஸ்லிம் நாடுகளின் உதவிகளைத் தடுத்து விடும்

முஸ்லிம் கவுன்சில் ஆஃப் சிறிலங்கா அமைப்பின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "முகத்தை மறைப்பதைத் தடைசெய்தல் மற்றும் இத்தா கால விடுமுறையை இல்லாமல் செய்தல் போன்றவை முஸ்லிம்களுக்கு எதிரான பரிந்துரைகளாகும்" என்றார்.

"முஸ்லிம்களின் மூதாதையர்கள் இந்த நாட்டின் ஆட்சியாளர்களுடன் பேசி, முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே மேற்படி உரிமைகள் முஸ்லிம்களுக்குக் கிடைத்தன. அவற்றினை இல்லாமலாக்குவதென்பது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிப்பதாகவே அமையும். எனவே, ஒரே நாடு ஒரே சட்டம் முன்வைத்துள்ள இவ்வாறான பரிந்துரைகளை அரசாங்கம் கவனத்தில் எடுக்காது என நம்புகிறோம்" என்றார்.

 

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி: இனவாத ரீதியிலான முடிவுகள் என முஸ்லிம்கள் கண்டனம்

பட மூலாதாரம்,AMEEN/FB

 

படக்குறிப்பு,

என்.எம். அமீன்

"நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், முஸ்லிம் நாடுகளின் உதவிகள் தற்போது தேவையாக உள்ளது. கத்தாருக்கு எரிபொருள் துறை அமைச்சர் சென்றுள்ளார், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விரைவில் ஜனாதிபதி செல்லவுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் இந்தப் பரிந்துரைகள் வந்திருக்கக் கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளால்தான் முஸ்லிம் நாடுகளின் உதவிகளை இலங்கையினால் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

'ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி' என்பது என்ன?

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்கிற எண்ணக்கருவை இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, சட்டமூலம் ஒன்றைத் தயாரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவினால், 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி உருவாக்கப்பட்டது.

இந்த செயலணியின் தலைவராக சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு 6 சிங்களவர்கள், 4 முஸ்லிம்கள், 3 தமிழர்கள் என, 13 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

பின்னர் இந்த செயலணி மீதும், ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் மீதும் அதிருப்தி கொண்டு, 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியிலிருந்து மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தனர்.

1,200க்கும் அதிகமான சாட்சியங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது, 8 அத்தியாயங்களையும், 43 பரிந்துரைகளையும் கொண்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62005962

ஒருசிலவற்றைத் தவிர்த்து இந்த அறிக்கையில் பல நல்ல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினருக்குச் சம உரிமை வழங்கக் கூடிய பல விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

தேச வழமைச் சட்டத்தை நீக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. 

இது எமக்கு நன்மையா தீமையா ? 

5 minutes ago, Kapithan said:

தேச வழமைச் சட்டத்தை நீக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. 

இது எமக்கு நன்மையா தீமையா ? 

ஒல்லாந்தர் காலத்தில் இருந்த சட்டங்கள் இன்று அவசியமற்றவை. பொதுவான சட்டங்களே போதுமானவை.

 

https://ta.wikipedia.org/wiki/தேசவழமைச்_சட்டம் :

தேச வழமைச் சட்டத்தின்படி சொத்துடைமைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை முதுசம், சீதனம், தேடிய தேட்டம் ஆகியனவாகும். முதுசொம் என்பது கணவர் வழிவந்த மரபுரிமைச் சொத்தாகும். சீதனம் என்பது மனைவியின் தாய் வழி வந்த மரபுரிமைச் சொத்தாகும். தேடிய தேட்டம் என்பது கணவனும் மனைவியும் தங்கள் மண வாழ்வின் போது தேடிக் கொண்ட சொத்துக்களாகும். ஒரு குடும்பத்தின் புதல்வியர் தாயின் சீதனச் சொத்தையும், புதல்வர் தந்தையின் முதுசொச் சொத்தையும் அடைவர். தேடிய தேட்டமானது புதல்வரிடையேயும் புதல்வியரிடையேயும் சரி சமமாகப் பிரிக்கப்படுகின்றது. இவ்விதம் பரம்பரைச் சொத்தானது கணவனுடனும் மனைவியுடனும் தனித்தனியாக பேணப்படுகிறது.

ஒரு விதவை மறுமணம் செய்யுமிடத்து அவருடைய சீதனச் சொத்தானது அவருடைய இருமண புதல்வியருக்கும் பங்கிடப்படுகின்றது. மனைவியை இழந்தவர் மறுமணம் செய்யுமிடத்து அவருடைய இறந்த மனைவியின் சீதனச் சொத்துக்களை அம்மனைவியின் பெண்பிள்ளைகளுக்கும், தனது முதுச சொத்துக்களில் பாதியை அம்மனைவியின் ஆண் பிள்ளைகளுக்கும், தேடிய தேட்டத்தில் பாதியை அம்மனைவியின் எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தல் அவசியமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

தேச வழமைச் சட்டத்தை நீக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. 

இது எமக்கு நன்மையா தீமையா ? 

இப்போதைய நியில் ஆபத்தானது.

ஏற்கனவே சொன்ன அடிபடை தந்தை, தாய் வழி, மற்றும் தந்தை தாயின் சூத்து என்பதை கோண்டு இருந்தாலும்,  தேசவளமையும் நடைமுறையில்  மாற்றம் அடைந்தது.

முதலில் சாதிக்கு உள்ளேயே வாங்குதல் விற்றல் , அது மருவி அயலவர், அவர்களின் உற்றார் உறவினர், அதுவும் அயல் ஊர் என்று பரவி, இப்பொது தமிழர் என்பதில் வாந்தி நிற்கிறது.

உண்மையில், கிராம புறங்களில், இது காணி  சொந்தம் கொண்ட சாதியினர் மற்ற சாதியினர் (காசு இருந்தாலும்) வாங்குவதை தடுப்பதத்திற்கு சட்ட பூர்வமாக உதவுகிறது.

இதை நான் அப்பின்மையில் தென்மராட்சி பகுதிகளில் நடை பெறுவதாக கேள்விப்பட்டேன்.   இது உண்மையில, அந்த சட்டத்தை துர்பிரோயோகம் செய்வது.

பிரச்னை, சிங்கலவர் அரச ஆதரவோடு காணி எடுப்பதத்திற்கு, இந்த சட்டம் முக்கிய தடுப்பு.  இதை மனதில் கொண்டு தான் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மாக்கள் இதை நீக்குகிறது .  

மாகாண சாமையோ அல்லது வேறு எதுவோ என்று ஓர் நிர்வாக அமைப்பு இருந்து, காணி அதிகாரம் வடகிழக்குக்கு நிரந்தரமாக  இருக்கும் என்றால், தேசவளமையை முற்றாக ஒழிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இப்போதைய நியில் ஆபத்தானது.

ஏற்கனவே சொன்ன அடிபடை தந்தை, தாய் வழி, மற்றும் தந்தை தாயின் சூத்து என்பதை கோண்டு இருந்தாலும்,  தேசவளமையும் நடைமுறையில்  மாற்றம் அடைந்தது.

முதலில் சாதிக்கு உள்ளேயே வாங்குதல் விற்றல் , அது மருவி அயலவர், அவர்களின் உற்றார் உறவினர், அதுவும் அயல் ஊர் என்று பரவி, இப்பொது தமிழர் என்பதில் வாந்தி நிற்கிறது.

உண்மையில், கிராம புறங்களில், இது காணி  சொந்தம் கொண்ட சாதியினர் மற்ற சாதியினர் (காசு இருந்தாலும்) வாங்குவதை தடுப்பதத்திற்கு சட்ட பூர்வமாக உதவுகிறது.

இதை நான் அப்பின்மையில் தென்மராட்சி பகுதிகளில் நடை பெறுவதாக கேள்விப்பட்டேன்.   இது உண்மையில, அந்த சட்டத்தை துர்பிரோயோகம் செய்வது.

பிரச்னை, சிங்கலவர் அரச ஆதரவோடு காணி எடுப்பதத்திற்கு, இந்த சட்டம் முக்கிய தடுப்பு.  இதை மனதில் கொண்டு தான் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மாக்கள் இதை நீக்குகிறது .  

மாகாண சாமையோ அல்லது வேறு எதுவோ என்று ஓர் நிர்வாக அமைப்பு இருந்து, காணி அதிகாரம் வடகிழக்குக்கு நிரந்தரமாக  இருக்கும் என்றால், தேசவளமையை முற்றாக ஒழிக்கலாம்.

இதுதான்  விடயம். 

👍

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

இப்போதைய நியில் ஆபத்தானது.

ஏற்கனவே சொன்ன அடிபடை தந்தை, தாய் வழி, மற்றும் தந்தை தாயின் சூத்து என்பதை கோண்டு இருந்தாலும்,  தேசவளமையும் நடைமுறையில்  மாற்றம் அடைந்தது.

முதலில் சாதிக்கு உள்ளேயே வாங்குதல் விற்றல் , அது மருவி அயலவர், அவர்களின் உற்றார் உறவினர், அதுவும் அயல் ஊர் என்று பரவி, இப்பொது தமிழர் என்பதில் வாந்தி நிற்கிறது.

உண்மையில், கிராம புறங்களில், இது காணி  சொந்தம் கொண்ட சாதியினர் மற்ற சாதியினர் (காசு இருந்தாலும்) வாங்குவதை தடுப்பதத்திற்கு சட்ட பூர்வமாக உதவுகிறது.

இதை நான் அப்பின்மையில் தென்மராட்சி பகுதிகளில் நடை பெறுவதாக கேள்விப்பட்டேன்.   இது உண்மையில, அந்த சட்டத்தை துர்பிரோயோகம் செய்வது.

பிரச்னை, சிங்கலவர் அரச ஆதரவோடு காணி எடுப்பதத்திற்கு, இந்த சட்டம் முக்கிய தடுப்பு.  இதை மனதில் கொண்டு தான் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மாக்கள் இதை நீக்குகிறது .  

மாகாண சாமையோ அல்லது வேறு எதுவோ என்று ஓர் நிர்வாக அமைப்பு இருந்து, காணி அதிகாரம் வடகிழக்குக்கு நிரந்தரமாக  இருக்கும் என்றால், தேசவளமையை முற்றாக ஒழிக்கலாம்.

நல்ல கருத்து கடஞ்சா.

ஆனால் எழுத்து பிழை (நானும் விடுவேன்) - கவனியுங்கள்.

சொத்து….ஒற்றை எழுத்தில் என்னமோ ஆகிவிட்டது🤣.

11 hours ago, Kapithan said:

தேச வழமைச் சட்டத்தை நீக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. 

இது எமக்கு நன்மையா தீமையா ? 

ஒரு phd ஆராய்ச்சிக்குரிய தலைப்பு.

கடஞ்சா சொன்னது போல் எமது கையில் காணி அதிகாரம் இருந்தால் எஈக்கலாம்.

இல்லாத இன்றைய நிலையில் ஒரு சிறிய பாதுகாப்பு. ஆனால் அதுவும் அதே விலையை அயலவர் கொடுக்க தயாராக இருக்க மட்டுமே.

ஆனால் இந்த நடைமுறை மட்டுமே தேசவழமை அல்ல. அது ஒரு domicile சம்பந்தபட்ட சட்டமும் கூட. தியரி படி யாழுக்கு வெளியேயும் யாழ்பாணத்தவரின் சொத்துரிமையை கட்டுபடுத்தும் என்றும் சிலர் வாதிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

நல்ல கருத்து கடஞ்சா.

ஆனால் எழுத்து பிழை (நானும் விடுவேன்) - கவனியுங்கள்.

சொத்து….ஒற்றை எழுத்தில் என்னமோ ஆகிவிட்டது🤣.

ஒரு phd ஆராய்ச்சிக்குரிய தலைப்பு.

கடஞ்சா சொன்னது போல் எமது கையில் காணி அதிகாரம் இருந்தால் எஈக்கலாம்.

இல்லாத இன்றைய நிலையில் ஒரு சிறிய பாதுகாப்பு. ஆனால் அதுவும் அதே விலையை அயலவர் கொடுக்க தயாராக இருக்க மட்டுமே.

ஆனால் இந்த நடைமுறை மட்டுமே தேசவழமை அல்ல. அது ஒரு domicile சம்பந்தபட்ட சட்டமும் கூட. தியரி படி யாழுக்கு வெளியேயும் யாழ்பாணத்தவரின் சொத்துரிமையை கட்டுபடுத்தும் என்றும் சிலர் வாதிடுகிறார்கள்.

விடயம் தெரிந்த நீங்கள் ஏன் இதை விவரமாக எழுதக்கூடாது ? 

எல்லோருக்கும் உதவுமே? 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

விடயம் தெரிந்த நீங்கள் ஏன் இதை விவரமாக எழுதக்கூடாது ? 

எல்லோருக்கும் உதவுமே? 

நன்றி.

நான் இலங்கையில் சட்டம் படிக்கவில்லை. இலங்கை சட்டம் பற்றி எழுதுவது இங்கிலாந்து சட்டத்தில் ஒப்பிட கூடிய அடிப்படைகள் மற்றும் வாசித்து அறிந்த (தேடிய தேட்டம்🤣) தகவல்களை கொண்டு மட்டுமே.

நானே தெளிவுறாமல் எழுதுவது சரியாக படவில்லை.

ஒரு திட்டம் உள்ளது. அதுக்கு இன்னும் ஒரு 7 வருடத்தில் இலங்கை போய் 3-6 வருடங்கள் மினகெட வேண்டி வரும். பார்ப்போம். தேவைப என நினைக்கும் தரவுகளை சிறுக சேர்க்க தொடங்கியும் உள்ளேன்.

அதற்குள் விடயதானமே “வாழும் சட்டம்” என்பதில் இருந்து “சட்ட வரலாறு” என்றாகி கூடப்போகலாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நன்றி.

நான் இலங்கையில் சட்டம் படிக்கவில்லை. இலங்கை சட்டம் பற்றி எழுதுவது இங்கிலாந்து சட்டத்தில் ஒப்பிட கூடிய அடிப்படைகள் மற்றும் வாசித்து அறிந்த (தேடிய தேட்டம்🤣) தகவல்களை கொண்டு மட்டுமே.

நானே தெளிவுறாமல் எழுதுவது சரியாக படவில்லை.

ஒரு திட்டம் உள்ளது. அதுக்கு இன்னும் ஒரு 7 வருடத்தில் இலங்கை போய் 3-6 வருடங்கள் மினகெட வேண்டி வரும். பார்ப்போம். தேவைப என நினைக்கும் தரவுகளை சிறுக சேர்க்க தொடங்கியும் உள்ளேன்.

அதற்குள் விடயதானமே “வாழும் சட்டம்” என்பதில் இருந்து “சட்ட வரலாறு” என்றாகி கூடப்போகலாம்🤣.

முயற்சி  வெற்றிபெற வாழ்த்துக்கள்  கோசான். 👍

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

உண்மையில், கிராம புறங்களில், இது காணி  சொந்தம் கொண்ட சாதியினர் மற்ற சாதியினர் (காசு இருந்தாலும்) வாங்குவதை தடுப்பதத்திற்கு சட்ட பூர்வமாக உதவுகிறது.

இதை நான் அப்பின்மையில் தென்மராட்சி பகுதிகளில் நடை பெறுவதாக கேள்விப்பட்டேன்.   இது உண்மையில, அந்த சட்டத்தை துர்பிரோயோகம் செய்வது

இரண்டு வருடங்களிற்கு முன்பு, தனிப்பட்ட விடயம் ஒன்றிற்காக வக்கீல் ஒருவருடன் கதைத்த பொழுது, இந்த தேச வழமை சட்டம் தற்போதைய நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட/காணாமல் போன குடும்ப தலைவனின் குடும்பத்திற்கு நன்மை தரவில்லை என்றார்.. ஆனால் அது இருப்பதுதான் நல்லது என்கிறீர்கள்.. உண்மையில் இந்த தேச வழமை சட்டம் எனக்கு விளங்காத ஒன்று.. 

On 30/6/2022 at 17:18, ரஞ்சித் said:

 

எத்குக்கும் உயிலை எழுதி வைக்கச் சொல்லுங்கோ. எதுக்கு தேவையில்லாத பிரச்சினையெல்லாம்? என்ன நான் சொல்லுறது?

ஒரு பிரச்சனையும் இல்லை, எழுதிடலாம்.. 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

தற்போதைய நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட/காணாமல் போன குடும்ப தலைவனின் குடும்பத்திற்கு நன்மை தரவில்லை என்றார்.. ஆனால் அது இருப்பதுதான் நல்லது என்கிறீர்கள்

1. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தேசவழமை சட்டத்தால் ஏற்படும் பிரச்சனை , 

2. மற்றது சாதி அடிப்படையில்  வாங்குவதை தடுப்பது (முக்கியமாக )

தேசவழமை சட்டத்தை எடுத்தாலும், 2 கட்டாயம் இருக்கும். இதை சொத்துக்கள் விற்கும் முறையை (அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு பகிரங்கமாக அறிவித்தலில் இருக்க வேண்டும்) சட்ட அடிப்படியில் மாற்ற வேண்டும் (swiss model மிகவும் வெளிப்டையானதும், விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி விலைப்படுவதை  தடுக்க முடியாது, விற்க வருமாயின் உண்மையான விற்கவேண்டிய தேவை உள்ளவர்களே விற்க முனைவதை மிக நேர்த்தியாக உறுதிப்படுத்த முனைவது சுவிஸ் model).

அதனால், இப்போதைய நிலையில் (அல்லது எப்போதும்) தேச வமை சட்டத்தை  சட்டத்தை நீக்கி 2 ஐ நிவர்த்தி செய்ய முடியாது.

1 க்கு சிறப்பு சட்டம் தேவை, தேச வமை இருப்பது (என்னை பொறுத்தவரையில்) 1க்கு இன்னும் பாதுகாப்பு இப்போதைய நிலையில். 


1இல் தற்செயலாக பிள்ளைகளோ அல்லது உறவுகளோ நோய்வாய்ப்பட்டு, வசதி இல்லாமல் இருந்தால், உரியவருக்கு போய் சேரும் என்றால் தாமதிப்பதில் disproportionate ஆக எவரையும் பாதிக்காது. 14 வருடங்கள் சொத்துக்களை உரிமையா கோராமல்  இருப்பது மிக நீண்ட காலம் அல்ல, அதுவும் காணாமல் போன நிலையில். 

மற்றது, காணாமல் போனவர்கள் பிரச்னை தீர்க்கப்படவில்லை.  

1 விடயத்தில், எப்போதும் சொத்துக்களை ஆறுதலாக, நிதானமாக அணுகுவதே நல்லது. உரியவருக்கு சேரும் வாய்ப்புகள் மிக அதிகமாகும்.  
  
நீங்கள் இதை சொல்லத்தான் தெரிகிறது, உரிமை கோரப்படாத  அரச நில சொத்துக்களை அல்லாத சொத்துக்களை  (சிங்களவருக்கு ) எடுப்பதற்கும் வசதியாக இருக்கும் நோக்கில் மாற்றப்படுகிறதோ என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kadancha said:

 

1 விடயத்தில், எப்போதும் சொத்துக்களை ஆறுதலாக, நிதானமாக அணுகுவதே நல்லது. உரியவருக்கு சேரும் வாய்ப்புகள் மிக அதிகமாகும்.  
  
நீங்கள் இதை சொல்லத்தான் தெரிகிறது, உரிமை கோரப்படாத  அரச நில சொத்துக்களை அல்லாத சொத்துக்களை  (சிங்களவருக்கு ) எடுப்பதற்கும் வசதியாக இருக்கும் நோக்கில் மாற்றப்படுகிறதோ என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

நன்றி கடஞ்சா!

2வது நிலை இலகுவில் மாறப்போவதில்லை. ஆனாலும் நகரப்புறங்களில் கொஞ்ச மாற்றம் உள்ளது.

1வது நிலை. காணியினை விற்று வாழ்வாதாரத்தை கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கும் இதனால் ஏதும் பிரச்சனைகள் இருக்கலாம் என்பதால்  இந்த சட்டத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார நிலைக்கு ஏற்ப அணுகுவதே சரி என சில சமயங்களில் நினைக்க தோன்றுகிறது.  

2018/2019ல் நான் குறிப்பிட்ட வக்கீல் கூறியபொழுதுதான் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஆனாலும் அதன் உள் நோக்கம் இந்த மாதிரி சிங்களவருக்கு வசதியாகத்தான் இது மாற்றப்படுகிறது என அப்பொழுது நினைக்கவில்லை. இப்பொழுது அதற்கான சாத்தியங்கள் இருப்பதை அறியமுடிகிறது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.