Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பைபிள்: காணாமல் போன 300 ஆண்டுகள் பழைய தமிழின் முதல் பைபிள்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பைபிள்: காணாமல் போன 300 ஆண்டுகள் பழைய தமிழின் முதல் பைபிள்.!

IMG-20220702-080812.jpg

சென்னை: 2005ல் காணாமல் போன 300 ஆண்டுகள் பழமையான தமிழின் முதல் பைபிளை தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிற்கு கிறிஸ்துவம் வந்த 1700ம் ஆண்டுகளில் பைபிள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. பைபிள் படிக்க வேண்டும் என்றால் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது.

இதனால் இந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்பும் நோக்கத்தோடு வந்த கிறித்துவ துறவிகளுக்கு அது பெரிய சிக்கலான விஷயமாக மாறியது. அப்போதுதான் 1714ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி இந்தியாவில் முதல் பைபிள் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மொழி பெயர்ப்பு

tranquebar_3-1200x675.jpg

           தரங்கம்பாடி கோட்டை 

இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்காமல் உலகின் பழமையான மொழியான தமிழில் அந்த பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது. அதன்பின்பே மற்ற மொழிகளுக்கு பைபிள் சென்றது. ஜெர்மனியில் இருந்து பார்தோலோமாஸ் செய்ங்கெங்பால்க்தான் இந்தியாவிற்கு கிறித்துவத்தை பரப்ப வந்த முதல் கிறிஸ்துவ துறவி ஆவார். 1706ம் ஆண்டு வாட்ச் இவர் தரங்கேபார் என்று தமிழ்நாட்டு பகுதிக்கு வந்தார். அதுதான் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி ஆகும். இங்கு வந்தவருக்கு பெரிதாக வரவேற்பு அளிக்கப்படவில்லை.

இந்துக்கள் அச்சம்

இந்துக்கள் இடையே இவரின் வருகை கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. அதுவும் இவரின் ஆங்கில மொழி, இவர் பைபிளை ஆங்கிலத்திலும், ஜெர்மனியிலும் படித்து பரப்ப நினைத்தது பெரும் விமர்சனங்களை சந்தித்து. இதன் காரணமாக உடனே இவர் தமிழ் படிக்கும் முடிவை எடுத்தார். சில ஆண்டுகள் தமிழ் படித்தவர், அதில் புலமையும் பெற்று, ஜான் எர்னஸ்ட் என்பவர் உதவியுடன் புதிய ஏற்பாடு பைபிளை அவர் மொழி பெயர்த்தார்.

எப்படி செய்தார்?

Palm-leaf_manuscript.jpg

பனை ஓலையில், ஆணிகள் மூலம் இந்த பைபிள் எழுதப்பட்டது. அதன்பின் பிரிண்ட் முறை மூலம் இது பிரிண்ட் புத்தமாக வெளியிடப்பட்டது. இதற்காக ஜெர்மனியில் இருந்து இவர் பிரிண்டர்களை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்ததும் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு போராட்டத்திற்கு பின் 1711ல் பைபிள் முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்திய மொழியில் பெயர்க்கப்பட்ட முதல் பைபிளாக தமிழ் புதிய ஏற்பாடு பைபிள் மாறியது.

lithography-printing-press.jpg

எங்கு இருந்தது?

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பல ஆண்டுகளாக இந்த பைபிள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கடந்த 2005ம் ஆண்டு சரஸ்வதி நூலகத்தில் இருந்து பைபிள் காணாமல் போனது. அந்த பைபிள் எங்கே போனது என்ற கேள்வி மக்கள் இடையே எழுந்தது. போலீசாரும் இதை பற்றி விசாரித்து வந்தனர். ஆனால் எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. அதன்பின் அப்படியே இந்த பைபிள் குறித்த செய்தி எதுவும் கிடைக்காமல்.. தேடலும் நின்று போனது. இந்த நிலையில்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது இந்த பைபிள் புத்தகம் கிடைத்துள்ளது.

Thanjavur.png

லண்டன் போனது

தமிழ்நாடு சிஐடி போலீசின் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த பைபிள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லண்டலில் இருக்கும் மன்னர் குடும்ப சொத்துக்களில் இந்த பைபிள் உள்ளது. இதை விரைவில் மீட்க சிஐடி பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த பைபிள் லண்டன் சென்றது எப்படி? இதை திருடி சென்றது யார்? என்று சிஐடி பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

https://tamil.oneindia.com/news/chennai/how-did-300-years-old-tamil-first-bible-go-missing-how-did-cbcid-find-it-out-464580.html

டிஸ்கி

தமிழ்நாட்டில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு போகாமல் இருந்தால்தான் அதிசயம்..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

லண்டன் போனது

தமிழ்நாடு சிஐடி போலீசின் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த பைபிள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லண்டலில் இருக்கும் மன்னர் குடும்ப சொத்துக்களில் இந்த பைபிள் உள்ளது. 

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

DNA யில் உள்ளதை மாத்த ஏலுமே..😉

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2022 at 05:50, தமிழ் சிறி said:

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

எதுக்கும் எப்படி இலண்டன் போனது எண்ட விசாரணை முடியும் வரைக்கும் பொறுப்பது நல்லம்.

தமிழ்நாட்டில் இருந்து களவு போனதில் நிச்சயம் தமிழரின் பங்கு இல்லாமல் இருக்க முடியாது.

பிறகு இப்ப எழுதியதை எடிட் பண்ணவும் முடியாது🤣.

On 2/7/2022 at 05:57, Kapithan said:

DNA யில் உள்ளதை மாத்த ஏலுமே..😉

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

எதுக்கும் எப்படி இலண்டன் போனது எண்ட விசாரணை முடியும் வரைக்கும் பொறுப்பது நல்லம்.

தமிழ்நாட்டில் இருந்து களவு போனதில் நிச்சயம் தமிழரின் பங்கு இல்லாமல் இருக்க முடியாது.

பிறகு இப்ப எழுதியதை எடிட் பண்ணவும் முடியாது🤣.

 

ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில்….
ஆட்டையை போட்டுக் கொண்டு போன பொருட்களுக்கும்
தமிழன் காரணம் என்று.. நீங்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂

உங்களுக்கு… நிறைய வெள்ளை பெயின்ற் வாளி, தேவைப்படும் போல இருக்கே…. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

காசை காட்டினால், தோலிருக்க, சுளை புடுங்கிகள் இருக்கும் போது, சீனாக்காரன், கம்பந்தோட்டைக்கு வந்துட்டான் என்று இந்தியர்கள் அரற்றுவதில் என்ன பயன்? 🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, Nathamuni said:

காசை காட்டினால், தோலிருக்க, சுளை புடுங்கிகள் இருக்கும் போது, சீனாக்காரன், கம்பந்தோட்டைக்கு வந்துட்டான் என்று இந்தியர்கள் அரற்றுவதில் என்ன பயன்? 🤪

கிந்தியன் தன்ர வீரத்த யாழ்பாணத்தில தான் காட்டேலும்......ஏலுமெண்டால் காந்தி சிலைய ஹபறணவில வைக்கட்டும் பாப்பம்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கிந்தியன் தன்ர வீரத்த யாழ்பாணத்தில தான் காட்டேலும்......ஏலுமெண்டால் காந்தி சிலைய ஹபறணவில வைக்கட்டும் பாப்பம்?

காந்தி மைண்ட் வாய்ஸ்: சும்மா… சிவனே எண்டு இருக்கிற என்னை, ஏன்(டா) வம்பிலை மாட்டி விடுறீங்க. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தமிழ் சிறி said:

காந்தி மைண்ட் வாய்ஸ்: சும்மா… சிவனே எண்டு இருக்கிற என்னை, ஏன்(டா) வம்பிலை மாட்டி விடுறீங்க. 😂

ஹிந்தியன்களுக்கு மண்டையிலை துவக்கு சோங்கால போட்டும் ரோஷம் வரேல்லை. காந்தி  சிலைக்கு ஏதாவது செய்தாலாவது ரோசம் மானம் வருதோ எண்டு பாக்கிறன் 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஹிந்தியன்களுக்கு மண்டையிலை துவக்கு சோங்கால போட்டும் ரோஷம் வரேல்லை. காந்தி  சிலைக்கு ஏதாவது செய்தாலாவது ரோசம் மானம் வருதோ எண்டு பாக்கிறன் 😁

இவரும் காந்தி, அவரும் காந்தி…. 😁
அப்ப ஏன், இவருக்கு  துவக்காலை அடிக்கும் போது… ரோசம் வரவில்லை. 😂
சம் திங்… றோங். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, தமிழ் சிறி said:

இவரும் காந்தி, அவரும் காந்தி…. 😁
அப்ப ஏன், இவருக்கு  துவக்காலை அடிக்கும் போது… ரோசம் வரவில்லை. 😂
சம் திங்… றோங். 🤣

டூப்ளிக்கற் காந்திக்கு ரோஷ நரம்பை இறைவன் படைக்கவில்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில்….
ஆட்டையை போட்டுக் கொண்டு போன பொருட்களுக்கும்
தமிழன் காரணம் என்று.. நீங்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂

உங்களுக்கு… நிறைய வெள்ளை பெயின்ற் வாளி, தேவைப்படும் போல இருக்கே…. 🤣

களவெண்டால் அதில் சம்பந்த பட்ட எல்லாரும் கள்ளர்தான்.

கடைசியில் பொருளை அடைபவன், களவெடுக்க சொன்னவன் கள்ளந்தான். ஆனால் அவன் மட்டும் அல்ல,  தனது நாட்டில் இருந்து பொருளை லவட்டுபவனும் கள்ளனே.

கோவிலில் வெள்ளைகாரன் கோட்டு சூட்டுடனா வந்து சிலை திருடுகிறான். இல்லை நாம் திருடி அவனுக்கு கொடுக்கிறோம்.

ஆகவே டி என் ஏ பழுது எம்மிடமும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.