Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதி தெரிவில் அமெரிக்கா இந்தியா இடையே பனிப்போர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை ஜனாதிபதி தெரிவில் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது கடும் பனிப்போர் நிலவி வருவதாக அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தீவு இந்துமா சமுத்திரத்தின் மையத்தில் உள்ளமையினால் இந்துமா சமுத்திரத்தின் அச்சாணியாக உள்ளதுடன், இந்துமா சமுத்திரத்தினை மையப்படுத்தி இந்த நூற்றாண்டின் அரசியல் நகரப்போவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய,இலங்கை ஜனாதிபதி தெரிவில் அமெரிக்கா தற்போது நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதுடன்,இந்துமா சமுத்திரத்தின் அச்சாணியான இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க இறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும்,இலங்கையுடன் ஒட்டிப்பிறந்த குழந்தை என்ற வகையில் இந்தியாவின் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் இலங்கையின் ஜனாதிபதி தெரிவில் இந்தியாவின் தலையீடு உள்ளதாகவும் தெரிிவத்துள்ளார்.  

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

https://tamilwin.com/article/war-america-india-srilankan-presidential-election-1657643183

👆👆👆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

இலங்கை ஜனாதிபதி தெரிவில் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது கடும் பனிப்போர் நிலவி வருவதாக அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தீவு இந்துமா சமுத்திரத்தின் மையத்தில் உள்ளமையினால் இந்துமா சமுத்திரத்தின் அச்சாணியாக உள்ளதுடன், இந்துமா சமுத்திரத்தினை மையப்படுத்தி இந்த நூற்றாண்டின் அரசியல் நகரப்போவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய,இலங்கை ஜனாதிபதி தெரிவில் அமெரிக்கா தற்போது நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதுடன்,இந்துமா சமுத்திரத்தின் அச்சாணியான இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க இறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும்,இலங்கையுடன் ஒட்டிப்பிறந்த குழந்தை என்ற வகையில் இந்தியாவின் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் இலங்கையின் ஜனாதிபதி தெரிவில் இந்தியாவின் தலையீடு உள்ளதாகவும் தெரிிவத்துள்ளார்.  

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

https://tamilwin.com/article/war-america-india-srilankan-presidential-election-1657643183

👆👆👆


அமெரிக்கா களம் இறங்கியவுடன்…. இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளான,
இந்தியாவும், சீனாவும்… அமைதியாகி விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:


அமெரிக்கா களம் இறங்கியவுடன்…. இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளான,
இந்தியாவும், சீனாவும்… அமைதியாகி விட்டன.

சில மாதங்களுக்கு முன்பே சொன்னேன், பந்து டெல்லியில் இருந்து வாசிங்டன், பீகிங் போய் விட்டது.

1987 முதல், தமிழர் அழிவில், சிங்களவருக்கு அடி கழுவுவதில் இந்தியா மினக்கெட, சிங்களவர்கள், சீனாவுக்கு போனதால், ஆப்பு இறுகி, பந்து, வாசிங்டன் போய் விட்டது. 🙄

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அமெரிக்கா களம் இறங்கியவுடன்…. இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளான,

பனிப்போர் என்று தானே சொல்கிறார்கள்.

ரணில் தான் அமெரிக்காவின் செல்லபிள்ளையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

பனிப்போர் என்று தானே சொல்கிறார்கள்.

ரணில் தான் அமெரிக்காவின் செல்லபிள்ளையாக இருக்கலாம்.

அதனால் தான் சொல்கிறேன், ரணில் பதவி விலகார்.

மொட்டு கட்சி உறுப்பினர்கள் ரணிலை நிரந்தர ஜனாதிபதி ஆக்கும் ஆதரவு கொடுக்கும் வரை, கோத்தாவுக்கு டுபாயில் இருந்து, அமெரிக்கா செல்லும் விசா தாமதமாகும்.

அதே வேளை, ரணில் ஜனாதிபதியானதும், ஜப்பான் முதல், ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா உதவிகளை அறிவிக்கும்.

இந்தியா  பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அதனால் தான் சொல்கிறேன், ரணில் பதவி விலகார்.

மொட்டு கட்சி உறுப்பினர்கள் ரணிலை நிரந்தர ஜனாதிபதி ஆக்கும் ஆதரவு கொடுக்கும் வரை, கோத்தாவுக்கு டுபாயில் இருந்து, அமெரிக்கா செல்லும் விசா தாமதமாகும்.

அதே வேளை, ரணில் ஜனாதிபதியானதும், ஜப்பான் முதல், ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா உதவிகளை அறிவிக்கும்.

இந்தியா  பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான். 

காத்திருந்து கழுகுக்குக் காலம் கனிந்திருக்கிறது அல்லது கனியவைக்கப்பட்டிருக்கிறது. கழுகு இந்த வாய்பைப் பயன்படுத்தி றாகனையும் அசோகச்சக்கரத்தோடை பிணைத்து ஓரம்கட்டித் தனது மேலாதிக்கத்தை நிறுவுதற்கான நடவடிக்கையில் வெற்றிபெற்றிருக்கிறதாகவேபடுகிறது. இதனால் பயனடைய இருப்பது சிங்கள அரசும், அரசியல்வாதிகளுமே. மீண்டும் தமிழருக்கு நாமமே.  

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

அதனால் தான் சொல்கிறேன், ரணில் பதவி விலகார்.

மொட்டு கட்சி உறுப்பினர்கள் ரணிலை நிரந்தர ஜனாதிபதி ஆக்கும் ஆதரவு கொடுக்கும் வரை, கோத்தாவுக்கு டுபாயில் இருந்து, அமெரிக்கா செல்லும் விசா தாமதமாகும்.

அதே வேளை, ரணில் ஜனாதிபதியானதும், ஜப்பான் முதல், ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா உதவிகளை அறிவிக்கும்.

இந்தியா  பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான். 

சுமந்திரனும் சாணாக்கியனும் ஜேவிபியும் ரணில் ஒரு நாள் கூட பதவியில் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளதைக் கவனிக்கவில்லையோ.. 😉

அப்படி ஏதும் நடைபெற்றால் திரும்பவும் நாடு கலகத்திற்குள் செல்வதைத் தடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. 

சுமந்திரனும் சாணக்கியனும் அமெரிக்காவின் வழிகாட்டுதல்களின்படி செயற்படுபவர்கள். ரணிலும் அப்படியே. 

நிலைமை இவ்வாறு  இருக்கும்போது யார் சனாதிபதியாவது? JVP யின் குமார் குணரட்ணம் ? 

வடக்கு கிழக்கு இந்தியாவுக்கு, மிகுதி அமெரிக்காவிற்கென்றாகிவிட்டது.

 இப்போது உள்ள பிரச்சனை  வடக்கு கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கைத் தக்க வைப்பதுதான். அது எப்படி ? 

1) புலம்பெயர் தமிழ்ச் சமூகம் 

2) கிறீத்துவ சமயக் குரவர்கள். 

(படித்த சிங்களவரிற்கு மேற்கு கேள்வியில்லாமலேயே 10 வருட பல்நுழைவு விசாக்கள் வழங்குவதைக் கவனிக்க. இவர்களை நீண்டகால நோக்கில் பயன்படுத்துவது என்று முடிவாகிவிட்டது) 

நாங்கள் என்ன செய்யப்போகிறோம் 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nochchi said:

காத்திருந்து கழுகுக்குக் காலம் கனிந்திருக்கிறது அல்லது கனியவைக்கப்பட்டிருக்கிறது. கழுகு இந்த வாய்பைப் பயன்படுத்தி றாகனையும் அசோகச்சக்கரத்தோடை பிணைத்து ஓரம்கட்டித் தனது மேலாதிக்கத்தை நிறுவுதற்கான நடவடிக்கையில் வெற்றிபெற்றிருக்கிறதாகவேபடுகிறது. இதனால் பயனடைய இருப்பது சிங்கள அரசும், அரசியல்வாதிகளுமே. மீண்டும் தமிழருக்கு நாமமே.  

நான் அப்படி நினைக்கவில்லை.

இந்தியா, தமிழர் அழிவுகளை கண்டும், காணாமல், சிங்களவர்களையே திருப்திப்படுத்தியது. தமிழர் பேரழிவில் கூட, இதனை அது தவிர்க்க வில்லை. அதன் காரணமாகவே, சீனா உள்ளே புகுந்த பின்னர் திரு, திரு என்று முழித்தது.

அதன் ஆகக்கூடிய பெரியண்ணர் வேலையே, பலாலிக்கு பிளேன் விட்டது தான். அதுவும் கொரோனாவுடன் நின்று போனது.

இன்று அமெரிக்கா, ராஜபக்சே சகோதர்களை, பிடிக்க வேண்டிய இடத்தில், முரட்டுப்பிடி பிடித்து விட்டது. 

ரணிலை வைத்து, IMF நிபந்தனை என்று சொல்லி, பாதுகாப்பு படைகளை குறைக்க போகிறார்கள். பல அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள்.

இராணுவம் குறைய, தமிழர்களின் போராடும் பலம் கூடும். சிங்களவர்களுக்கு தமிழர்கள் தமது நியாயத்தினை சொல்ல, அதுவும் தென்பகுதியில் சொல்ல பெரு வாய்ப்பு உண்டாகும்.

அதன் மூலமே நமது தீர்வுகாண ஆதரவு கிட்டும்.

அதேவேளை இன்றய அமெரிக்க தூதுவர் சொன்ன சிறப்பான கருத்து: ஒரு நாட்டின், அரசியல் உறுதிப்பாடும், பொருளாதார உறுதிப்பாடும் ஒன்றை ஒன்று சார்ந்தது. பொருளாதாரம் ஒரு நாட்டின் உயிராயின், அரசியல் (உறுதிப்பாடு) உடல். அரசியல் (உறுதிப்பாடு) இல்லாவிடில், பொருளாதாரம் என்பது உடலில்லாத உயிர், அதாவது ஆவி. அதுபோல உயிர் (பொருளாதாரம்) இல்லாவிடில், (அரசியல்) உடல் பிணம்.

ஆகவே, நாட்டுக்கு தோதான, அரசியல் உறுதிப்பாடு தரக்கூடிய அரசியல் அமைப்பினை கொண்டு வரும்போது , (சிறப்பான உடல்) புலம்பெயர் இலங்கையர் நம்பிக்கையுடன் வந்து முதலீடு செய்ய, பொருளாதார உறுதிப்பாடும் (உன்னதமான உயிர்) வந்து சேரும்.

ஆகவே, பெரும் கடனுடன், சிங்களவரும் உதவியை வாங்கியே காலத்தினை ஓட்ட முடியாது. கடனிலும் பார்க்க உழைத்த பணமே மேன்மையானது.

ஆகவே, அவர்கள், தமிழர்களை அரவணைக்காவிடில், விடிவு இல்லை. மேலும், தமிழர் தனியே செல்வதை தடுக்கவும் முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

அதனால் தான் சொல்கிறேன், ரணில் பதவி விலகார்.

மொட்டு கட்சி உறுப்பினர்கள் ரணிலை நிரந்தர ஜனாதிபதி ஆக்கும் ஆதரவு கொடுக்கும் வரை, கோத்தாவுக்கு டுபாயில் இருந்து, அமெரிக்கா செல்லும் விசா தாமதமாகும்.

அதே வேளை, ரணில் ஜனாதிபதியானதும், ஜப்பான் முதல், ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா உதவிகளை அறிவிக்கும்.

இந்தியா  பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான். 

ஒரு மாதத்துக்கு ரணில் ஜனாதிபதியாக வந்தாலும் மிகுதிக் காலத்துக்கு 2/3 பெரும்பான்மை வேண்டுமே?

எனது கணிப்பின்படி மிகுந்த குளறுபடி ஏற்பட்டு நிலமையை கட்டுப்படுத்த இந்திய ராணுவம் இறங்கலாம்.

40 minutes ago, Nathamuni said:

மொட்டு கட்சி உறுப்பினர்கள் ரணிலை நிரந்தர ஜனாதிபதி ஆக்கும் ஆதரவு கொடுக்கும் வரை, கோத்தாவுக்கு டுபாயில் இருந்து, அமெரிக்கா செல்லும் விசா தாமதமாகும்.

இனி கோத்தா எங்கே இருந்தா என்ன?

யார் கவலைப்படப் போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நான் அப்படி நினைக்கவில்லை.

இந்தியா, தமிழர் அழிவுகளை கண்டும், காணாமல், சிங்களவர்களையே திருப்திப்படுத்தியது. தமிழர் பேரழிவில் கூட, இதனை அது தவிர்க்க வில்லை. அதன் காரணமாகவே, சீனா உள்ளே புகுந்த பின்னர் திரு, திரு என்று முழித்தது.

அதன் ஆகக்கூடிய பெரியண்ணர் வேலையே, பலாலிக்கு பிளேன் விட்டது தான். அதுவும் கொரோனாவுடன் நின்று போனது.

இன்று அமெரிக்கா, ராஜபக்சே சகோதர்களை, பிடிக்க வேண்டிய இடத்தில், முரட்டுப்பிடி பிடித்து விட்டது. 

ரணிலை வைத்து, IMF நிபந்தனை என்று சொல்லி, பாதுகாப்பு படைகளை குறைக்க போகிறார்கள். பல அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள்.

இராணுவம் குறைய, தமிழர்களின் போராடும் பலம் கூடும். சிங்களவர்களுக்கு தமிழர்கள் தமது நியாயத்தினை சொல்ல, அதுவும் தென்பகுதியில் சொல்ல பெரு வாய்ப்பு உண்டாகும்.

அதன் மூலமே நமது தீர்வுகாண ஆதரவு கிட்டும்.

அதேவேளை இன்றய அமெரிக்க தூதுவர் சொன்ன சிறப்பான கருத்து: ஒரு நாட்டின், அரசியல் உறுதிப்பாடும், பொருளாதார உறுதிப்பாடும் ஒன்றை ஒன்று சார்ந்தது. பொருளாதாரம் ஒரு நாட்டின் உயிராயின், அரசியல் (உறுதிப்பாடு) உடல். அரசியல் (உறுதிப்பாடு) இல்லாவிடில், பொருளாதாரம் என்பது உடலில்லாத உயிர், அதாவது ஆவி. அதுபோல உயிர் (பொருளாதாரம்) இல்லாவிடில், (அரசியல்) உடல் பிணம்.

ஆகவே, நாட்டுக்கு தோதான, அரசியல் உறுதிப்பாடு தரக்கூடிய அரசியல் அமைப்பினை கொண்டு வரும்போது , (சிறப்பான உடல்) புலம்பெயர் இலங்கையர் நம்பிக்கையுடன் வந்து முதலீடு செய்ய, பொருளாதார உறுதிப்பாடும் (உன்னதமான உயிர்) வந்து சேரும்.

ஆகவே, பெரும் கடனுடன், சிங்களவரும் உதவியை வாங்கியே காலத்தினை ஓட்ட முடியாது. கடனிலும் பார்க்க உழைத்த பணமே மேன்மையானது.

ஆகவே, அவர்கள், தமிழர்களை அரவணைக்காவிடில், விடிவு இல்லை. மேலும், தமிழர் தனியே செல்வதை தடுக்கவும் முடியாது.

உங்கள் கூற்று மெய்யாகுமாயின் மகிழ்ச்சியே. ஆனால், பௌத்த தீவிரவாதம் மற்றும் விமல் போன்றோரது தடைகளைத் தாண்டி நகருமா என்பதும் சிந்தனைக்குரியதென நினைக்கின்றேன்.

நன்றி
 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு மாதத்துக்கு ரணில் ஜனாதிபதியாக வந்தாலும் மிகுதிக் காலத்துக்கு 2/3 பெரும்பான்மை வேண்டுமே?

எனது கணிப்பின்படி மிகுந்த குளறுபடி ஏற்பட்டு நிலமையை கட்டுப்படுத்த இந்திய ராணுவம் இறங்கலாம்.

ரணிலை தேர்வு செய்தது மொட்டு கட்சி. அவரை வேண்டாம் என்றால், போவதுக்கு முன்னர், அவரை இறக்கி, இன்னோரு மொட்டு கட்சி காரரை பிரதமராக்கி, அவர் அடுத்த ஜனாதிபதியாக வரும் வழியை செய்திருக்கலாம் அல்லவா.

ஆகவே, ரணில், 2/3 பலம் (2/3 அல்ல என்று நினைக்கிறேன், பலர் போட்டியிடுவதால், simple majority என்று நினைக்கிறேன்), மொட்டு கட்சி, அவரது வாக்கு, கூட்டமைப்பு, மலையக வாக்குகள், சில முஸ்லீம் வாக்குகள் விழும் என்பது எனது கணிப்பு.

சிறுபான்மை வாக்குகளின் காரணம் இந்தியா, மேற்கு.

மறுபுறம், சஜித், அனுர குமார, சரத் யாருமே பாராளுமன்றில் பலம் இல்லாதவர்கள். ஆகவே வேலைக்காகாதவர்கள்.

பலர் சொல்லும் முக்கிய விசயம்: போராட்டகாரர்கள், ரணிலும் விலக வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர். மே 9 அன்று, ரணில் பதவிக்கு வந்த போது, தமது பிரச்சனைக்கு தீர்வு வரும் என்று வீடு சென்றவர்கள், அது நடக்கவில்லை என்றே மீண்டும் வீதிக்கு வந்தார்கள். ஆனால் அவர்கள் இம்முறை, கோத்தா இருக்கும் வரை உதவிகள் வரப்போவதில்லை என்பதால் தெளிவாக இருந்தார்கள்.

ஆக ரணில் ஜனாதிபதியாகியதும், உதவிகள் அறிவிக்கப்பட்டால், எதிர்ப்புக்கள் குறையலாம். 

 

19 minutes ago, ஈழப்பிரியன் said:

இனி கோத்தா எங்கே இருந்தா என்ன?

யார் கவலைப்படப் போகிறார்கள்?

கோத்தாவில் இனி விடயம் இல்லை. மகிந்தாவை மறந்து விட்டீர்கள் போலும். ரணிலுக்கான மொட்டு கட்சி ஆதரவு வருவது, மகிந்தா மூலமாக.

ஏனெனில், மகிந்தா & கம்பெனியின் பாதுகாப்பு உறுதி கொடுக்க கூடியவர் ரணில் மட்டுமே. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nochchi said:

ஆனால், பௌத்த தீவிரவாதம் மற்றும் விமல் போன்றோரது தடைகளைத் தாண்டி நகருமா என்பதும் சிந்தனைக்குரியதென நினைக்கின்றேன்.

விமல் போன்றோருக்கு இனி அரசியல் இல்லை.

இன்று கிரிக்கெட் சங்காவுக்கு ஒருவர் அனுப்பிய திறந்த கடிதம் பார்த்தேன்.

இனவாதம் நாட்டினை அழிக்கும் என்று புரிந்த உங்களை போன்றவர்கள், வெளியே வந்து, இளைஞர்களுக்கு தலைமை தாங்கி நாட்டினை காப்பாத்துங்கள் என்று சொல்கிறது.

நல்லதை நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.