Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஞ்சன் ராமநாயக்கவின் துரிதப்படுத்துமாறு... பதில் ஜனாதிபதி ரணில், நீதியமைச்சருக்கு... அறிவுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் உயர்நீதிமன்றத்தில் முன்னிலை

ரஞ்சன் ராமநாயக்கவின் துரிதப்படுத்துமாறு... பதில் ஜனாதிபதி ரணில், நீதியமைச்சருக்கு... அறிவுறுத்தல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய பதில் ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செயன்முறை அவசரமாக எடுக்கப்படவுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் இரு வாரங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1291319

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை... துரிதப் படுத்தும் படி,
ஏன்.. ரணிலிடம் கோரிக்கை விடவில்லை.

அவை... தமக்கு, சம்பந்தம் இல்லாத விடயம் என நினைத்து விட்டார்களா.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எமது எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை... துரிதப் படுத்தும் படி,
ஏன்.. ரணிலிடம் கோரிக்கை விடவில்லை.

அவை... தமக்கு, சம்பந்தம் இல்லாத விடயம் என நினைத்து விட்டார்களா.  

ரணிலோடு சேர்ந்து நல்லாட்சி.. புதிய அரசியலமைப்பு.. ஒத்த நாடு.. என்றெல்லாம்.. கதை விட்டவரை காணேல்ல. ஆள் மூச். கோமாளிகளையும் கொலைகாரர்களையும் வாக்குப் போட்டு தெரிவு செய்யும் கேடு கெட்ட நிலை தமிழர்களிடமும் காணப்படுகிறதே. 

எமது அரசியல்வியாதிகள்.. தங்கள் சொந்த வருமானத்துக்கு வழிதேடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்.. மக்களாவது மண்ணாங்கட்டியாவது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எமது எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை... துரிதப் படுத்தும் படி,
ஏன்.. ரணிலிடம் கோரிக்கை விடவில்லை.

அவை... தமக்கு, சம்பந்தம் இல்லாத விடயம் என நினைத்து விட்டார்களா.  

அவர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அதன்பிறகு ரணிலோடு டீல் போடுவினம், நிட்சயம் நாம் நினைப்பதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணத்துப்பூச்சிகளை வெளியே (சுதந்திரமாக)  பறக்க விடுவதில் ரணிலுக்குத்தான் எத்தனை அவசரம் ? 

😉

3 hours ago, தமிழ் சிறி said:

எமது எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை... துரிதப் படுத்தும் படி,
ஏன்.. ரணிலிடம் கோரிக்கை விடவில்லை.

அவை... தமக்கு, சம்பந்தம் இல்லாத விடயம் என நினைத்து விட்டார்களா.  

நாம் இன்னும் சிறிது  பொறுமை காக்க வேண்டும்  என நினைக்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு... பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து, அரசாங்கம் பரிசீலனை.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

அவரது விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அவருடைய நாடாளுமன்ற உறுப்புரிமையும் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1291341

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

அவரது விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவர்களுடைய அறிக்கைகளும் இவர்களும். நல்லாட்சி அரசில் சிறை செல்ல வேண்டியவரை தடுத்து அரசியல் கதிரை ஏற்றி துரத்தியடித்த பெருமை இவரைச் சாரும். நல்லாட்சி ஒன்றும் ராஜபக்ஸ்சாக்களை தண்டிக்க முனையவில்லை, மாறாக சர்வதேச இறுக்கத்திலிருந்து அவர்களை விடுவித்து,  அவர்கள் தங்களுக்கு கொடுக்கும் அரசியல் அடாவடி, கெடுபிடிகளில் இருந்து  அவர்களை தள்ளி இருக்க செய்யவும், தங்களை தற்காத்துக்கொள்ளவும் வேண்டிய சில மென்மையான நடவடிக்கையாக நினைத்தனர். அவ்வாறு செய்தால் சிங்கள மக்கள் தங்களை எதிர்க்க மாட்டார்கள் என்றும் நினைத்திருப்பார்கள் ஆனா தமிழரை வென்ற வீரர் என்கிற மக்களின் உணர்வுகளை கிளறி தப்பித்துக்கொண்டார்கள் அவர்கள். இன்று மக்களின் தேவை வேறு, தெரிவும் வேறு. அதை நிறைவேற்றினால் இவர்களின் கனவு நனவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சன் ராமநாயக்கவின்  ( ????) துரிதப்படுத்துமாறு... பதில் ஜனாதிபதி ரணில், நீதியமைச்சருக்கு... அறிவுறுத்தல்

செய்தி தலைப்பை பார்த்து ஒரு கணம் திகைத்து போனேன் 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி கோத்தாவின் சிந்தனை, பதில் ஜனாதிபதி ரணிலின் செயற்பாடு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

ரஞ்சன் ராமநாயக்கவின்  ( ????) துரிதப்படுத்துமாறு... பதில் ஜனாதிபதி ரணில், நீதியமைச்சருக்கு... அறிவுறுத்தல்

செய்தி தலைப்பை பார்த்து ஒரு கணம் திகைத்து போனேன் 

“விடுதலையை” என்று வந்திருக்க வேண்டும்.  நீங்கள் கூறிய பின்பு தான்… கவனித்தேன். 
இனி… என்னால், மாற்றுவதற்குரிய கால அவகாசம் கடந்து விட்டது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.